Monday, July 25, 2005

வெல்லத் தான் வேண்டுமா?

சமரசம் இதழில் அடிக்கடி இதயங்களை வெல்வது தான் நமது நோக்கமே தவிர வாதத்தில் வெல்வதல்ல என எழுதுவார்கள். இஸ்லாத்துக்கெதிரானப் பிரச்சாரங்களுக்கு நமது வலைப்பதிவர்கள் உரிய பதில்களை அளிக்க தங்கள் நேரத்தையும், உழைப்பையும் செலவிடுகிறார்கள். அவர்களது பதில்களில் அவர்களது பொது அறிவையும், இஸ்லாமிய அறிவையும் அறிய முடிகிறது. எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு இவ்வுலகத்திலும், மறுமையிலும் அனைத்து சிறப்புகளையும் அருள துஆ செய்கிறேன்.

அவ்வாறு இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு உரிய பதில் அளித்து முடித்த பின்னும், அவதூறாக தொடரும் பிரச்சாரங்களுக்கு நமது நேரத்தையும், உழைப்பையும் செலவிட வேண்டுமா? என்பதையும் நாம் யோசித்து பார்க்க வேண்டும்.

நபி முஹமது(ஸல்) அவர்களிடமே இறைவன், தூதுத்துவத்தை மக்களுக்கு விளக்குவதோடு அவர்களது பணி முடிந்ததாக கூறுகிறான். இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்களில், நாத்திகப்பிரச்சாரம், கிறித்துவப் பிரச்சாரம், இந்துத்துத்துவ பிரச்சாரம் என பல பிரச்சாரங்களும் ஒரே நேரத்தில் இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளதை உணர முடிகிறது.

இவர்களுக்கு நாம் பதில் அளித்த பின்னும் தொடர்ந்து வரும் தாக்குதல்களுக்கும், நம் நேரத்தையும் உழைப்பையும் செலவளிக்கத் தேவையில்லை. இஸ்லாமிய மகளிர் தொடர்பான விவாதங்களுக்கும் இது பொருந்தும். இறைவனின் சட்டத்துக்கான காரணங்கள், குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளது தவிர நாம் கூறும் காரணங்கள் எல்லா நேரங்களிலும் பொருத்தமாக இருப்பதில்லை. உரிய காரணங்களை இறைவனே அறிவான். சில சட்டங்களை நாம் ஏற்க வேண்டும். இறைவன் அவற்றை நம் நன்மைக்கே வகுத்துள்ளான் என நம்ப வேண்டும். அவ்வளவு தான்.

என் கருத்தை யாரும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். அதனை மீண்டும் சுருக்கித் தருகிறேன். நாம் இஸ்லாத்திற்கெதிரான பிரச்சாரங்களுக்கு விரிவான அளவில் உரிய பதில் அளித்த பின்னும் தொடரும் பிரச்சாரங்களுக்கு பதில் அளிக்க நம் நேரத்தையும், உழைப்பயும் செலவளிக்க வேண்டியதில்லை.

Sunday, July 24, 2005

ஆர். எஸ். எஸ் காரர்கள் பயன்படுத்தும் சொல்

சமீபத்தில் எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. சில மாதங்களாக இரு தரப்பினருக்கு இடையே நடக்கும் கருத்து மோதலின் தொடர்ச்சியே இந்த மின் அஞ்சல். அந்த மின் அஞ்சலில் எதிர் தரப்பினரைக் குறிப்பிட 'மொட்டையன்' என்ற சொல்லை ஒருவர் பயன்படுத்தி உள்ளார். முஸ்லிம்கள் கத்னா செய்யப்பட்டதைக் குறிப்பிட ஆர். எஸ். எஸ் காரர்களும், தமிழ் நாட்டில் இந்து முன்னணியினரும் பயன்படுத்தும் சொல் அது. எனவே, அந்த சொல்லை தவிர்த்து கொள்ளுமாறு அந்த மின் அஞ்சலை எழுதியவரிடம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், சமூக ஒற்றுமையைக் கருதி இந்த கருத்து மோதலை உடனடியாக நிறுத்துமாறு இரு தரப்பினரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, July 21, 2005

இந்திய முஸ்லிகளின் தேசியப்பற்று

கடந்த புதன்கிழமை(19-07-2005)வாஷிங்டனில் நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு கூறியுள்ளார்.






"இஸ்லாமிய நம்பிக்கைகளைக் கடைபிடிக்கும் 150 மில்லியன் முஸ்லிம்கள் பிரஜைகள் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்திய முஸ்லிகளின் தேசியப்பற்று பற்றி சொல்ல வேண்டுமானால் இத்தனை முஸ்லிம்களில் ஒரே ஒருவர் கூட அல்-காய்தாவோ அல்லது பிற தீவிரவாத அமைப்புகளிலோ சார்ந்து இல்லை என்பதை இங்கே இறுமாப்புடன் சொல்லிக் கொள்கிறேன்."

ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய இந்த உரையை CNN உள்பட அனைத்து டிவி சேனல்களும் ஒளிபரப்பிய போது செய்தியாளர்கள் அவையில் பலத்த கரகோஷம் எழும்பியது.

ஆனால், தினமலம் உள்பட சில தமிழ் பத்திரிக்கைகள், பிரதமர் பேசிய முழு உரையையும் குறிப்பிட்டுவிட்டு மேற்கண்ட வரிகளை மட்டும் கத்திரி போட்டுள்ளது ஏனோ?