Monday, January 12, 2009

இஸ்லாமிய நிறுவனத்தின் புதிய நூல்கள்

இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்டின்

புதிய நூல்கள் வெளியீடு

கி. வீரமணியின் பொங்கல் வாழ்த்து

திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி அவர்களின்

பொங்கல் வாழ்த்து

Saturday, January 10, 2009

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை



வெளிநாடு வாழ் இந்தியர்கள் 50 லட்சம் பேருக்கு வாக்குரிமை


மத்திய அரசு ஆலோசனை



சென்னை, ஜன. 10-

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டின் நிறைவு விழா நேற்று நடந்தது. மாநாட்டில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: எந்த நாட்டுக்குச் சென்றாலும் நமது கலாசாரம், பண்பாட்டை மறக்கக் கூடாது. வெளிநாடுகளுக்கு செல்வோரில் பலர், தங்கள் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்த பிறகு நமது கலாசாரத்தை இழந்து விடுமோ என்ற பயத்தில், தாய்நாடு திரும்புகின்றனர். இந்திய கலாசாரத்தை மேம்படுத்த திரைப்படங்கள், விழாக்கள், நடன நிகழ்ச்சிகள் போன்றவற்றை மத்திய கலாசார மேம்பாட்டு மையம் தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்வாறு கனிமொழி பேசினார். மத்திய அமைச்சர் வயலார் ரவி, நிருபர்களிடம் கூறியதாவது: மாநாட்டில் 40 நாடுகளில் இருந்து 1,500 பேர் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக மலேசியாவில் இருந்து 270 பேரும், அமெரிக்காவில் இருந்து 127 பேரும் பங்கேற்றனர். சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் பிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் 5 தலைமுறைகளாக வெளிநாட்டிலேயே வாழும் இந்தியர்களுக்கும், இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள 50 லட்சம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் ஓட்டுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்து, இந்தியாவில் வாக்குச் சீட்டில் பெயர் இருந்தால் அவர்கள் வாக்களிக்கலாம். ஆனால் தபால் மூலமாக வாக்களிக்க முடியாது. வேலைக்காக அரபு நாடுகளுக்கு செல்ல ஏஜென்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் நிலை இந்தியாவில் அதிகம் நடக்கிறது. இதுகுறித்து இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய ஏற்கனவே ஒருமுறை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வரும் பிப்ரவரியில் மீண்டும் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. தவறு செய்யும் ஏஜென்ட்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு வயலார் ரவி கூறினார்.

நன்றி: தமிழ் முரசு நாளிதழ் 10 ஜனவரி 2009

Thursday, January 08, 2009

புத்தகக் கண்காட்சியில் பொங்கல் திருவிழா


சென்னை சங்கமம் 2009


சென்னை: அனைவரையும் ஈர்த்துள்ள சென்னை சங்கமம் நிகழ்ச்சி தங்கு தடையின்றி நடைபெற முதல்வர் கருணாநிதி ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.

தமிழக கிராமிய கலைகளை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில்,குறிப்பாக சென்னை நகர மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், தமிழ் மையம் அமைப்பும், தமிழக சுற்றுலா துறையும் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக சென்னை சங்கமம் என்ற கலை நிகழ்ச்சியை சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி, ஜனவரி 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடத்தப்படுகிறது. சென்னை நகரில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள், அரங்கங்கள், பூங்காக்களில் நடைபெறவுள்ளது.

முதல்வர் கருணாநிதி சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கவுள்ளார்.

இதுகுறித்து கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்துவதற்காக விளம்பரதாரர்கள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. நிதி நெருக்கடியும் இருந்தது.

சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு முதல்வர் கருணாநிதி தொடக்கத்தில் இருந்தே எத்தனையோ உதவிகளை செய்திருக்கிறார். ஆனால், இந்த ஆண்டு ஏற்பட்ட நிலையை கருத்தில் கொண்டு, இந்நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் தடையின்றி நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தன் சொந்தப் பணத்தில் இருந்து, ரூ.1 கோடியை அவர் கொடுத்துள்ளார்.

ஆண்டுதோறும் இதில் இருந்து கிடைக்கும் வருவாய், சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சியை யாரையும் நம்பி நடத்தாமல், சுதந்திரமாக, எந்த தடையுமின்றி நடைபெற நிதி பிரச்சினை காரணமாக இருக்கக்கூடாது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

அதேபோல இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும் ரூ.1 கோடி நிதி அளித்துள்ளது. இவற்றையெல்லாம் வைத்து ஒரு நிரந்தர நிதி உருவாக்கப்படும்.

சங்ககால உணவுகள்:
இந்த ஆண்டில், சென்னை சங்கமம் மேலும் சிறப்புடன் நடத்தப்படுகிறது. ஜனவரி 10ம் தேதி நடக்கும் நிகழ்ச்சிக்கு மத்திய மந்திரிகள் அம்பிகா சோனி, வயலார் ரவி போன்றோர் வருகிறார்கள். இந்த ஆண்டில் உணவுத் திருவிழா சிறப்பாக நடத்தப்படும்.

இதில், சங்ககாலத்தில் சாப்பிடப்பட்ட கம்பு, சோளம் உள்ளிட்ட உணவு வகைகளும் கிடைக்கும். நெல்லை இருட்டுக் கடை அல்வா, கள்ளிடைக்குறிச்சி முறுக்கு போன்ற பல்வேறு பிரபல உணவு வகைகளும் கிடைக்கும்.

வரும் 13-ந் தேதி, தி.நகர் நைட் என்ற பெயரில் தியாகராயநகர் வெங்கட்நாராயணா சாலை நெடுகிலும் இரவு முழுவதும் கலை விழா நடக்கும். இதற்கு சவுத் உஸ்மான் சாலை வியாபாரிகள் உதவியுள்ளனர். அங்கு பழ விழாவும் முன்னதாக நடைபெறும்.

கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில், சென்னை சங்கமம் நடைபெறும் அனைத்து நாள்களிலும் வழுக்குமரம் ஏறுதல், உரி அடித்தல் போன்ற கிராமிய விளையாட்டுகள் நடைபெறும்.

இந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் 1,400 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இதில், தமிழகம் தவிர ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள் என்றார் கனிமொழி.

செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ் மையம் அமைப்பாளர் ஜகத் கஸ்பார், வரலாற்றறிஞர் ஸ்ரீராம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

கவிதை பாட வாருங்கள்....:
இதற்கிடையே நிகழ்ச்சி அமைப்பாளர் கவிஞர் யுகபாரதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில்:

இளங்கவிஞர்களை கண்டெடுத்து ஊக்கப்படுத்தும் வகையில் கவிதை பாட வாருங்கள் என்ற தலைப்பில் அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியருக்கான கவிதைப் போட்டியை கவிஞர் கனிமொழி அறிவித்துள்ளார்.

இதற்கு, கவிதைகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 13.1.2009 ஆகும். கவிதைகளை, தமிழ்சங்கமம், 31, பொன்னி, குமாரசாமி ராஜாசாலை, சென்னை-28 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

இதில் சிறந்த கவிதைகளை, கவிக்கோ அப்துல்ரகுமான் தலைமையில் பேராசிரியர்கள் அடங்கிய குழு தெரிவு செய்யும். அந்த கவிதைகளை தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் மாணவர்கள் வாசிக்க, முதல் பரிசு ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசு-ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசு-ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இத்துடன் மேலும் 10 கவிஞர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, January 07, 2009

நாங்கள் ஹமாஸுடன் இருக்கிறோம்!

ஹமாஸ் ஒரு போராளிக்குழு மட்டுமல்ல‌. பாலஸ்தீனத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தவர்கள். அவர்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் அங்கீகரிக்காததனால் அவர்கள் பாலஸ்தீன ஆட்சியாளர்கள் இல்லை என்று ஆகி விடாது. காஸா பகுதியை யூத இனவெறி இஸ்ரேல் படைகள் ஆக்கிரமிப்பதையும், அங்கு குழந்தைகள், பெண்கள் உட்பட அப்பாவிப் பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இறப்பதையும் தொலைக்காட்சியிலும், இணையத்திலும் பார்த்து நம் நெஞ்சு கொதிக்கிறது. பாலஸ்தீன மக்களே! நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். ஹாமாஸ் படைகளே! நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இறைவன் நமக்கு உதவுவான்.

Tuesday, January 06, 2009

கீழைக்காற்றுவின் புதிய நூல்கள் வெளியீடு

கீழைக்காற்றுவின் புதிய நூல்கள்

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு