Wednesday, December 26, 2007

தற்கால இஸ்லாமியச் சிந்தனை

தற்கால இஸ்லாமியச் சிந்தனை - எம். எஸ். எம். அனஸ்


நூல் அறிமுகம்

நூல்: தற்கால இஸ்லாமியச் சிந்னை
(முதன்மையான செல்நெறிகள் பற்றிய அறிமுகமும் விமர்சனமும்)
ஆசிரியர்: எம்.எஸ்.எம். அனஸ்
வெளியீடு: அடையாளம்
முகவரி: 1205/1 கருப்பூர் சலை
புத்தாநத்தம் - 621 310
தமிழ் நாடு
இந்தியா
தொலைப்பேசி: 04332 273444
மின் அஞ்சல்: info@adaiyalam.com
பக்கங்கள்: 400 விலை: ரூ. 275
பின்னட்டைக் குறிப்பு:
இஸ்லாத்தின் நவீனத்துவ சிந்தனையின் தாக்கம் இஸ்லாமியச் சிந்தனை மரபிலும், பண்பாட்டிலும் நிகழ்ந்த திருப்புமுனையின் வரலாறாகும்.
ஒரு கட்டளைப் படிமநிலை நகர்வு இங்கு நடந்தேறியுள்ளது. புரட்சிகர சிந்தனைகளை அது வெளிப்படுத்தியது. அது கருத்து மோதல்களின் களமாக இருந்தது. இம்மாற்றங்களையும் அதற்குக் காரணமான அடித்தளச் சிந்தனைகளையும் அக்கால வரலாற்றினூடாக இந்நூல் ஆராய்கின்றது. மறுபுறமாக புத்துயிர்ப்புவாதம் எழுச்சி பெறுகின்றது. நவீனத்துவத்திற்கு அது சவாலாக இருப்பதுடன் தீவிர கருத்தியலின் ஊற்றுக்கண்களையும் அது திறக்கிறது. தற்கால அரசியல் இஸ்லாத்தின் தோற்றத்தினை ஆராய்வதனூடாக புத்துயிர்ப்புவாதத்தின் மையக் கருத்துகளும் இந்நூலில் பரிசீலிக்கப்படுகின்றன. தற்கால இஸ்லாமியச் சிந்தனையின் பிரதான செல்நெறி இவ்விரு சிந்தனை இயக்கங்களின் சமய, சமூக, அரசியல், கருத்தியல்களின் விளக்கங்களையும் மோதல்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை விளக்குகிறது இந்நூல்.
நூலாசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் (1949): இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் மற்றும் உளவியல் துறையின் தலைவர். 'பல்கலை', 'ஆய்வு', ஆகிய இதழ்களின் ஆசிரியர். பல ஆய்வுக் கட்டுரைகளையும் 'மெய்யியல்-கிரேக்க மெய்யியல் முதல் தற்காலம் வரை இஸ்லாத்தின் தோற்றம், சமூக அறிவியல் - ஒரு முறையியல் நோக்கு' ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

இந்நூலில் ஆராயப்படும் இஸ்லாமியச் சிந்தனையாளர்கள்:

1. இப்னு தைமிய்யா
2. முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்
3. ஷாஹ் வலியுல்லாஹ்
4. சர் செய்யித் அக்மத்கான்
5. ஜமாலுத்தீன் அல்-ஆஃப்கானி
6. ஷெய்க் முஹம்மத் அப்து
7. அல்லாமா முஹம்மத் இக்பால்
8. அபுல் கலாம் ஆஸாத்
9. அபுல் அஃலா மௌதூதி
10. ஹசன் அல்-பன்னா
11. குலாம் அக்மத் பர்வேஸ்
12. அலி ஷரீஅத்தி

இலங்கை

13. அஹ்மத் ஒறாபி பாஷா
14. எம்.சி. சித்திலெப்பை
15. எ.எம்.ஏ. அஸீஸ்
16. அப்துல் ஹமீத் அல்-பக்றி

Tuesday, December 18, 2007

மலேசிய அரசுக்கு நன்றி!

31 இந்தியர்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டை திரும்பப் பெற்ற மலேசிய அரசுக்கு நன்றி!

Monday, November 26, 2007

மலேஷிய தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு

மலேஷியாவில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு, மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் பேரணி நடத்தியுள்ளனர். இவர்கள் அனைவரும் அந்நாட்டு குடிமக்கள். இவர்கள் மீது மலேஷிய காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரபு நாடுகளில், அரபு கிறித்துவர்களுக்கு வழிபாட்டுரிமை உட்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, மலேஷியாவில் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் மலேஷிய அரசு சம உரிமை வழங்க முன்வர வேண்டும். இனவெறிக் கொள்கையைக் கடைபிடிக்கக்கூடாது. ஒரு காலத்தில் இன வெறியை கடைபிடித்த தென் ஆப்ரிக்கா மீது, இந்தியா பொருளாதார தடை விதித்தது. அது போல, தமிழர்கள் மீது இனவெறியுடன் செயல்படும் இலங்கை, மலேஷியா ஆகிய நாடுகள் மீது இந்தியா ஏன் பொருளாதாரத் தடை விதிக்கக் கூடாது?

Thursday, November 15, 2007

மக்கள் உரிமைக்கு கேள்வி

சாதி அமைப்புகளுடன் சமூக ஒப்பந்தம் சாத்தியமா?
மக்கள் உரிமைக்கு கேள்வி
தமுமுகவின் மக்கள் உரிமை வார இதழின் 9 - 15 நவம்பர் 2007 தேதியிட்ட பதிப்பில் 'குஜராத் இனப்படுகொலை' தொடர்பாக வாசகர் கேட்ட ஒரு கேள்விக்கு அளித்துள்ள பதிலில், முஸ்லிம்கள் அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது போல், சாதிய அமைப்புகளுடன் சமூக ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும் என எழுதியுள்ளனர். இது எந்த வகையில் சாத்தியம் என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பான சில சந்தேகங்களுக்கு 'மக்கள் உரிமை' பதில் அளிக்க வேண்டும்.

1. தமிழ் நாட்டில், அமைப்பு ரீதியாகவே தேவர் சாதியினர் தீண்டாமையை கடைபிடிக்கின்றனர். கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்டோர் தலைவராக வருவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
2. திண்ணியம், மேலவளவு போன்ற ஊர்கள் தேவர் சாதி வெறியின் அடையளமாக உள்ளன.
3. தேவர் சாதியினரில் மிகப்பெரும்பாண்மையினர் இவற்றை ஆதரிக்கின்றனர்.
4. நாடார் சாதியின் செல்வந்தர்களில் பலர் இந்து வெறி அமைப்புகளுக்கு புரவலர்களாக உள்ளனர். அச்சாதியின் ஏழைகள், இந்து வெறி அமைப்புகளில் உறுப்பினர்களாய் உள்ளனர்.
5. இதுவன்றி, முஸ்லிம்களுக்கு பல அமைப்புகள் இருப்பது போல், ஒவ்வொரு சாதிக்கும் பல சங்கங்கள் உள்ளன. எந்த சாதி அமைப்புடன் தமுமுக ஒப்பந்தம் செய்து கொள்ளும்?

இதே பொருளில் எழுதப்பட்ட முந்தைய பதிவுகள்:

Monday, November 12, 2007

தொலைக்காட்சி உலகம் - நூல் அறிமுகம்


தொலைக்காட்சி உலகம் - பவா சமத்துவன்

நூல் அறிமுகம்














Wednesday, September 26, 2007

ஹிஜ்ரா நாட்காட்டி 1428


ஹிஜ்ரா நாட்காட்டி 1428 - உங்கள் ஆய்வுக்காக சில விஷயங்கள்
P.முஹம்மத் சிராஜுதீன்




இஸ்லாமிய சமுதாயமே!

இஸ்லாமிய கடமைகளில் மூன்றாம் இடம் வகிக்கும் கடமையான ரமளான் மாதத்தை அடைவதிலும், ஐந்தாம் கடமையான ஹஜ் மாதத்தை அடைவதிலும் இது வரை இல்லாத புது குழப்பத்தை ஒரு சாரார் ஏற்படுத்தி வருகிறார்கள்?

இவர்கள் பிறையை கண்களால் பார்க்கவே கூடாது என்கிறார்கள்?

இவர்கள் சவுதி அரேபியாவையும் பின்பற்றாமல் முந்திவிடுகிறார்கள்? ஏன் இவர்கள் சில வருட ரமளான் மாதங்களிலும் ஹஜ் மாதங்களிலும் குழப்பத்தை ஏற்படுத்தி சவுதி அரேபியா மக்கள் மாதத்தை துவக்குவதற்கு முன்பாகவே மாதத்தை துவக்குகிறார்கள்?
இவர்கள் குழப்பவாதிகள் ஆகத்தான் இருப்பார்கள்?
இவர்கள் யூதர்களை பின்பற்றுகிறார்கள்?
இவர்கள் அமெரிக்காவின் கைக்கூலிகள்?
1427 ஆண்டுகளாக பிறை விஷயத்தில் ஒரே கருத்தில் இருந்த முஸ்லீம் சமுதாயத்தை இவர்கள் தான் கூறுபோடுகிறார்கள்?

இப்படி பல சந்தேகங்கள் கிளப்பப்பட்டு இஸ்லாத்தில் எல்லாமே குழப்பம் தானோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதை நாம் ஆய்வு செய்து தெளிவு பெற வேண்டியுள்ளதை ஒவ்வொருவரும் நினைவில் கொண்டு இக்கட்டுரையை படிக்கவும்.
தற்போது உலகில் இஸ்லாமியர்கள் என்று கூறுபவர்களில் பலர் மாதங்களை எந்தெந்த முறையில் ஆரம்பிக்கிறார்கள் என்பதையும் அறிய கடமைப்பட்டுள்ளோம்.
தற்போது உலகில் இஸ்லாமியர்கள் என்று கூறுபவர்களில் பலர் மாதங்களை எந்தெந்த முறையில் ஆரம்பிக்கிறார்கள் என்பதையும் அறிய கடமைப்பட்டுள்ளோம்.
1. பிறையை புறக்கண்ணால் கண்டால் அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என ஒரு சாரார் மாதங்களை ஆரம்பிக்கிறார்கள்.2. பிறையை 29 நாள் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் அப்படி பார்க்க முடியவில்லை என்றால் அந்த மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து அடுத்த மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என கூறி ஒரு சாரார் மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.3. எந்த ஊரில் புறக்கண்ணால் பிறை பார்க்கப்பட்டதோ அந்த ஊரைச்சேர்ந்தவர்கள் மட்டும் அதற்கு அடுத்த நாளை முதல் நாளாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என ஒரு சாரார் கூறி மாதங்களை ஆரம்பிக்கிறார்கள்.4. எந்த ஊரில் பிறை புறக்கண்ணால் பார்க்கப்பட்டதோ அந்த ஊரிலிருந்து குறிப்பிட்ட கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதி மக்கள் மட்டும் அடுத்த நாளை முதல் நாளாக அறிவிக்க வேண்டும் என ஒரு சாரார் கூறி மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.5. ஒரு ஊரில் சூரிய அஸ்தமத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் ஏற்பட்டு அது புறக்கண்ணுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அந்த ஊர் காரர்கள் அனைவரும் அடுத்த நாளை புதிய மாதத்தின் முதல் நாளாக எடுத்துக்கொள்ளலாம் என ஒரு சாரார் கூறி மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.6. ஒரு சாரார் சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் சூரிய அஸ்தமத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் ஏற்பட்டு அது புறக்கண்ணுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.7. சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு (The geocentric conjunction occurs before Sunset) சவூதி அரேபியாவின் சூரிய அஸ்தமனத்திற்கு முன் ஏற்பட்டடு, சவூதி அரேபியாவின் சூரிய அஸ்தமனத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் (The Moon sets after the Sun) ஏற்பட்டால் அதற்கு அடுத்த நாள் சந்திர மாதத்தின் புதிய நாள் என ஹிஜ்ரி 1423 ஆம் வருடம் முதல் சவூதி அரசாங்கம் பின்பற்றி வரும் முறையாகும்.8. ஒரு சாரார் சவூதி அரேபியா அரசாங்கம் என்று ரமளான் மாதத்தையும் ஹஜ் மாதத்தையும் அறிவிக்கிறதோ அன்றைய தினம் உலக முஸ்லீம்கள் அனைவரும் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என கூறி சவூதி அரேபியாவை பின்பற்றி வருகிறார்கள்.9. ஒரு சாரார் சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகளை அறிந்து மாதங்களை கணக்கிட்டு அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தையும் ஆரம்பிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.10. ஒரு சாரார் அவர்களுடைய நாட்டில் ஃபஜ்ர் நேரத்திற்கு முன் சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு (அமாவாசை அல்லது geocentric Conjunction occurs before Dawn) நடைபெற்றால் ஃபஜ்ருக்கு பிறகு ஆரம்பிக்கும் நாள் மாதத்தின் முதல் நாள் என முடிவு செய்து பின்பற்றி வருகிறார்கள். லிபியா போன்ற அரபு நாடுகள் இந்த முறையை பின்பற்றிவருகிறார்கள்.இதில் எந்த சாராரின் கூற்று அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தந்த அடிப்படையில் உள்ளது என்பதை நாம் சிந்தித்து ஆராய்ந்து பின்பற்ற கடமைப்பட்டுள்ளோம்.முஸ்லீம்களே! இஸ்லாம் என்பது அறிவுப்பூர்வமான மார்க்கம். நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான கருத்துகள் நிறைந்த மார்க்கம். தன்னை பின்பற்றுபவர்கள் அவனுக்கு இணை வைப்பதையோ, அவனுடைய கட்டளைகளை நிராகரிப்பதையோ அல்லாஹ் திருக்குர்ஆனில் வன்மையாக எச்சரித்துள்ளான். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தராத எச்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பது முஸ்லீம்களாகிய நாம் அறிந்த ஒன்று தான்.முஸ்லீம்களாகிய நாம் முக்கியமான மேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு இஸ்லாமிய அடிப்படையில் மாதங்களை துவக்குவது பற்றி ஆராய கடமைப்பட்டுள்ளோம். முதலில் சந்திரன் மாதங்கள் பற்றிய முக்கிய திருக்குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் நாம் ஆராய்ந்து பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.பிறையை பற்றி நாம் கீழ்கண்ட வினாக்களுக்கு முதலில் பதில் காண வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். 1. நபி(ஸல்) அவர்கள் பிறையை எப்படி பார்க்க சொன்னார்கள்? 2. பிறை எப்போது கண்ணால் பார்க்கிறோமோ அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என்று முடிவு செய்துக்கொள்ள சொன்னார்களா?3. பிறையை பார்க்க சொன்ன நபி(ஸல்) அவர்கள் எப்போதாவது 29 நாள் மஃக்ரிபில் நின்று சஹாபாக்களுடன் பிறை பார்த்தார்கள் என்பதற்கு ஏதாவது ஒரு ஹதீஸை ஆதாரம் காட்ட முடியுமா? தற்போது எந்த ஹதீஸின் அடிப்படையில் மஃக்ரிபில் நின்று பிறை பார்க்கிறார்கள்?4. ஹிலால் என்ற வார்த்தை பிறையின் படித்தரங்களை பார்ப்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தையா அல்லது கண்ணால் சந்திரனை பார்த்தால் அதற்கு அடுத்த நாள் முதல் என்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தையா?5. பிறையை புறக்கண்ணால் பார்த்து தான் மாதத்தை முடிவு செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறியதாக கூறுபவர்கள், நபி(ஸல்) தங்கள் வாழ்நாளில் எப்படி பிறை பார்த்தார்கள் அல்லது எப்படி பார்க்க சொன்னார்கள் என்ற ஆதாரத்தை ஏன் சமர்ப்பிக்க மறுக்கிறார்கள் ? உதாரணமாக தற்போது இவர்களாகவே ஒரு நாளை மாதத்தின் 29 வது நாள் என கூறிகொண்டு அன்று மஃக்ரிப் தொழுகையையும் விட்டு விட்டு பிறையை மேற்கு பக்கம் பார்க்க முயற்சி செய்கிறார்கள். இப்படி 29 வது நாள் மஃக்ரிபிற்கு பிறகு மேற்கு பக்கம் பிறை பார்க்க நபி(ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்ததாக ஓரு ஹதீஸையாவது மக்களுக்கு எடுத்து சொல்லியிருக்கிறார்களா?6. பிறையை கணக்கிடுவது இஸ்லாமிய அடிப்படைக்கு முரணாணது. விஞ்ஞான அடிப்படையில் பிறையை கணக்கிடக் கூடாது என்று கூறுபவர்கள் பிறை விஷயத்தில் எந்த வித விஞ்ஞான கருத்தையும் கூறாமல் வாய் மூடி மவுனியாக இருந்து பிறையை புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்து விட்டு போகாமல் ஏன் கணக்கிட்டு முடிவு செய்பவர்களிடம் வம்பு சண்டைக்கு வருகிறார்கள்? கணக்கு கூடாது என்று கூறும் அவர்கள், ஒரு சாரார் கணக்கிட்டு நாட்களை ஆரம்பிக்கும் போது இன்றைய தினம் சூரிய அஸ்தமனத்திற்கு பின் பிறை உலகில் எங்குமே இருக்காது என விஞ்ஞானம் கூறுகிறது என விஞ்ஞானிகளை அழைத்து டி.வியில் பேட்டி எடுக்க வேண்டிய அவசியம் ஏன்?7. மக்கள் முடிவு செய்வது தான் நோன்பு, மக்கள் முடிவு செய்வது தான் பெருநாள் என கூறி வருபவர்கள், ஒரு கூட்டத்தார் கணக்கின் அடிப்படையில் முடிவு செய்யும் போது அதை ஏன் கிண்டலும் கேலியும் செய்து வருகிறார்கள் ?8. உலகத்திற்கே வழி காட்ட வந்த மார்க்கம் இஸ்லாம் (Universal way of life) என முஸ்லீம்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு அல்லாஹ் தந்த மார்க்கத்தில் (தீனில் - Law of Allah) ஒரு நாட்காட்டியை (Calendar) எதை வைத்து, எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை பற்றி சொல்லாமல் விடப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கும் உலக முஸ்லீம்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.9. ஒரு சில அறிஞர்கள், உலகின் இஸ்லாமிய நாட்காட்டியை கொண்டு நாட்களை கணக்கிடும் முறையே கிடையாது. ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் பிறையை கண்ணால் பார்க்கப்பட்டால் தான் மாதம் ஆரம்பிக்கும். அப்படி என்றால் எப்படி முன் கூட்டியே நாட்காட்டி (Calendar) போடமுடியும்? ஏன்ற கேள்வியை எழுப்பி மக்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் நாட்காட்டி என்று ஒன்று கிடையாது என கூறி வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு ஊருக்கும் வித்தியாசமான நாட்களில் தான் பிறை கண்ணுக்கு தெரியும் அதனால் ஒவ்வொரு ஊருக்கும் வித்தியாசமான கிழமைகளில் தான் இஸ்லாமிய அடிப்பபடையில் மாதம் ஆரம்பிக்கும். அப்படிதான் இஸ்லாம் காட்டித்தந்துள்ளது. வித்தியாசமான நேரங்களில் தொழுகைகளை தொழுகிறோம் தானே அதைபோல் தான் இதுவும் என கூறுபவர்களும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்? வித்தியாசமான நாட்களில் 1428வது வருடத்தின் ரமளான் மாதம் உலகில் ஆரம்பிக்கபட்டுள்ளது எந்ததெந்த நாடுகள் ஆரம்பித்துள்ளார்கள் என்பதற்கு ஒரு சில ஆதாரங்கள்.
OFFICIAL 1st Day of Ramadan in Different Countries. Wednesday, September 12, 2007: Libya (Conjunction before dawn), Nigeria Supreme Council of Islamic Affairs (Claims of sighting/Calculations), China (and on Thursday). Thursday, September 13, 2007: Saudi Arabia South Africa. Friday, September 14, 2006: Bangladesh India Pakistan.
நன்றி: http://www.icoproject.org/icop/ram28.html#obsnew 10. மொத்தத்தில் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் சம்மந்தம் இல்லை என கூறி ஒட்டு மொத்த முஸ்லீம்களையும் சிந்திக்க விடாமல் ஆக்கிவிட்ட ஷைத்தானிய சக்திகளான யூத நஸரானிகளின் பிடியில் சிக்கியிருக்கிற இஸ்லாமிய சமுதாயத்தை இவர்கள் எப்படி காப்பாற்ற போகிறார்கள்? யூத நஸரானிகளின் நாட்காட்டியை பின்பற்றும் முஸ்லீம்களை இஸ்லாமிய சிந்தனையாளர்கள் என கூறிக்கொள்பவர்கள் இஸ்லாமிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தி எப்படி காப்பாற்ற போகிறார்கள் என்ற கேள்விக்கும் முஸ்லீம் சமுதாயம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது?பிறையை புற கண்களால் பார்த்துதான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுபவர்கள்? கண்ணால் பார்த்த தகவலை ஏற்று செயல்படலாம் என்று கூறுகிறவர்களும், மேற்கண்ட கேள்விகளுக்கு விடையளிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் கீழ்கண்ட ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் ஏன் கற்றுத்தந்தார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்? அதில் பிறையை கண்ணால் பார்த்தால் மட்டும் தான் மாதத்தை முடிவு செய்ய தூதர் கற்றுக்கொடுத்துள்ளதாக தானே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு உங்களால் என்ன விளக்கம் கூற முடியும் என்ற கேள்வியையும் சேர்த்து எழுப்புகிறார்கள்? அந்த ஹதீஸை ஆய்வுக்கு எடுக்கும் முன் கீழ்கண்ட வசனங்களை ஆய்வு செய்து பார்ப்போம். (நபியே!) சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். இது உலக மக்களுக்கும், ஹஜ்ஜிற்கும் நாட்களுக்கான தேதியை அறிவிப்பவையாக உள்ளது. (சந்திரன் உங்களுக்கு நாட்களுக்கான தேதியை காட்டும் போது) நீங்கள் வசிக்கும் பகுதியின் பின் புறத்தில் நுழைந்து (தேதியை) பின்பற்றி வருவதில் உங்களுக்கு புண்ணியமில்லை. நீங்கள் முறையான முறையில் (தேதியை) பின்பற்றி வாசல் வழியாக நுழையுங்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:189)மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தேய்ந்து வளரும் அதன் நிலைகள் தான் நாட்களுக்கான தேதிகள் எனவும், அதை வைத்து தான் நீங்கள் ஹஜ்ஜையும் பின்பற்றவேண்டும் என்றும், நீங்கள் வசிக்கும் பகுதிகளில் எது வாசல் என கண்டறிந்து அந்த வாசலின் வழியாகவே நுழைந்து நாட்களை துவங்குங்கள். பின்பக்கத்தில் இருந்து நாட்களை துவக்குவதால் உங்களுக்கு எந்த புண்ணியமும் கிடையாது என்பதை அல்லாஹ் நமக்கு தெளிவாக விளக்கியுள்ளான். நாம் உலகில் வசிக்கும் பகுதியில் எது நுழைவாயில் என முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அங்கிருந்து தான் நாட்கள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பது எல்லாம் அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்தவை தான் என்பதை இன்னும் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஆராய்ந்து பார்க்காமல் உள்ளது மிகவும் வியப்பிற்குரியது. நம்மில் திருக்குர்ஆனை கற்றறிந்த அறிஞர்கள் கூட பிறையை கண்ணால் பார்த்தால் போதுமானது அத்துடன் நமது வேலை முடிந்து விட்டது என நினைத்து வாழ்ந்து வருகிறார்கள். உண்மை அப்படி இல்லை. பிறையை அறியும் முன் ஒரு நாள் எங்கிருந்து எப்படி எப்போது ஆரம்பமாகிறது என்பதை அறிந்தால் தான் பிறையின் மூலம் மாதத்தை ஆரம்பிப்பதில் உள்ள குழப்பத்தை உலகில் தீர்த்து நாட்காட்டியை வடிவமைக்க முடியும். திருக்குர்ஆனில் அல்லாஹ் 10 வது அத்தியாத்தில் 5 வது வசனத்தில் அவன்தான் சூரியனைச் வெளிச்சத்தை ஏற்படுத்தும் விளக்காகவும், விளக்கின் ஒளியை பெற்று பிரகாசிக்க கூடியதாக சந்திரனையும் ஆக்கினான். (எண்ணில் அடங்கா) ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான். 36வது அத்தியாயம் 39 வசனத்தில் . . இன்னும் உலர்ந்து வளைந்த பேரீத்த பாளையை போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல படித்தரங்களை விதித்திருக்கின்றோம்.அதை (பிறையை) அறிவதைக் கொண்டு நோன்பை துவக்குங்கள். அதை (பிறையை) அறிவதை கொண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கு அதை அறிவதில் சந்தேகம் ஏற்பட்டால் மாதத்தை முப்பதாக முழுமைப் படுத்துங்கள். என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புஹாரிநபி (ஸல்) அவர்கள் பிறையின் வடிவத்தை ஆய்வு செய்து பார்த்து மாதத்தின் தேதிகளை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று தான் மேற்கூறிய வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் தெளிவு படுத்துகிறன்றார்கள் என்பது ஆய்வின் முடிவாகும். பிறையின் வடிவத்தை தினமும் நபி(ஸல்) அவர்களும், அல்லாஹ்வும் கற்றுதந்த அடிப்படையில் நாம் ஆய்வு செய்து வந்தால் ஒரு சில மாதங்களை முன் கூட்டியே சந்தேகம் இல்லாமல் ஆரம்பிக்க முடியும். தவிர்க்க முடியாத சில காலங்களில் புழுதிப்புயல், வானமண்டலம் தூசி படிதல், அடைமழை தொடர்ந்து ஒரு சில மாதங்களில் பெய்து வரும் நிலை, நேர்கோட்டிற்கு வந்து புதிய மன்ஸில் உருவாகும் நேரம் இவற்றை போன்ற காரணங்களால் ஒரு சில காலங்களில் அவர்களுக்கு ஒரு மாதத்தை கூட முன் கூட்டியே கணக்கிடும் முறையில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. அப்படி சிக்கல் ஏற்படும் போது அடுத்து தெளிவான சந்திரனின் நிலைகளை வைத்து மன்ஸில்களை ஆய்வு செய்து பார்த்து நாட்களுக்கான தேதியை கண்டுபிடித்து சரிசெய்து கொள்ளவேண்டும் என்பது தான் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதருடைய கட்டளை என்பதை நாம் அறிய முடிகிறது. நபி(ஸல்) அவர்களிடம் சூரிய சந்திர ஓட்டங்களை முன் கூட்டியே கணக்கிட்டு நாட்காட்டி தயார் செய்யும் கணக்கு அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு சில ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) வந்து மாதம் இன்றுடன் முடிந்து விட்டது என்பதை அறிவித்து சென்றதை பார்க்க முடிகிறது. இவ்வுலகில் வாழும் மனிதனின் கண்ணால் பார்த்து மட்டும் தான் செயல்பட வேண்டும் என்பது தான் கட்டாயம் என்றால் ஜிப்ரீல் (அலை) வந்து மாத முடிவை அறிவித்து நபி(ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டது கூடுமா? (பார்க்க ஹதீஸ் CD நஸயீ 2104) ஏன்ற கேள்விக்கு பிறையை கண்ணால் பார்த்து தான் மாதத்தை துவங்க வேண்டும் என கூறுபவர்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். இதை உறுதிபடுத்த கீழ் கண்ட வசனங்களை நாம் ஆய்வு செய்ய கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் மன்ஸில்களை முன்கூட்டியே கணக்கிட்டு நாட்காட்டியை பின்பற்றுவதை பற்றி என்ன கற்றுத்தருகிறார்கள் என்பதை நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம். பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம். உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம். அல்குர்ஆன் 17:12அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும், காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும். 6:96நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு) வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. 27:86சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. 55:5.மாதம் என்பது சில சமயங்களில் 29 ஆகவும், சிலசமயங்களில் 30 ஆகவும் இருக்கும் என தங்கள் விரல்களை கொண்டு காட்டிவிட்டு, நாம் உம்மி சமுதாயமாக இருப்பதினால் நாம் கணக்கிட்டு எழுதும் முறையை அறியாமல் இருக்கிறோம். என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியில் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். புகாரி 1913, 1780 முஸ்லீம் 1806, நஸஈ 2111, அபூதாவூத் 1975, அஹ்மத் 4776.மேற்கண்ட வசனங்கள் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் சிந்திக்கும் போது இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கணக்கிடுட்டு மாதங்களை துவக்க முடியும் என்று கூறியுள்ளதற்கு பல ஆதாரங்கள் இருப்பது மறுக்க முடியாத உண்மை. தற்போது நாம் ஹிஜ்ரி 1428 ம் வருட ஷஃபான் மாதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு ஆராய கடமைப்பட்டுள்ளோம். இந்த மாதம் திங்கள்கிழமை (13.08.2007) அன்று ஆரம்பமானது. அன்று இரவு, முதல் நாளுக்குரிய தேதியை பிறை அறிவித்ததோடு, பிறை உரிய மன்ஸிலில் இருந்ததை கண்களால் பார்க்க முடிந்தது. இதை முன்கூட்டியே கணக்கின் மூலமும் அறிய முடிந்தது. 1428 ஷஃபான் மாதத்தின் 29வது நாளும் திங்கள்கிழமை தான் (10.09.2007). சந்திர மாத அடிப்படையில் 1 ஆம் தேதி என்ன கிழமை வருகிறதோ அதே கிழமைதான் 29 ஆம் நாளும் வரும் என்பதை நினைவில் கொள்ளவும். ஷஃபான் மாதத்தின் 29 ஆம் நாளுக்குரிய மன்ஸிலில் பிறை இருந்ததை ஃபஜ்ர் தொழுதுவிட்டு, அல்லாஹ்வின் தூதர் சொன்ன ருஃயத் என்ற அடிப்படையில் அஹில்லாக்களை ஆய்வு செய்து பிறையை கணக்கிடுபவர்கள் அனைவரும் அந்த நாளுக்குரிய பிறை மன்ஸிலை பார்த்தனர்.29 வது நாள் ஃபஜ்ர் தொழுத பிறகு பிறையை கிழக்கு பக்கம் கண்ணால் பார்த்து விட்டாலே மாதம் 30 நாள் தான் என எந்த சந்தேகமே இல்லாமல் முடிவாகிவிடும். ஏன் என்றால் சூரியனுக்கு முன்னால் சந்திரன் உதித்து விட்டதால் தான் பிறையின் மன்ஸிலை அன்று பார்க்க முடிந்தது. சந்திரனின் ஒட்டம் மூலம் மாதத்திற்கு 29 மன்ஸில்களில் 30 மன்ஸில்களோ ஏற்படும். அவை ஒவ்வொன்றும் தேதி. 1428 ஷஃபான் மாதத்தில் சந்திரனுக்கு 30 மன்ஸில்கள் இருந்தது என்பது நிரூபிக்கபட்டுள்ள உண்மையாகும். இந்த கணக்ககை நாங்கள் முன் கூட்டியே அறிவித்திருந்தும் அதை அறிந்து மாதத்தை ஆரம்பிக்காதவர்களுக்கு அல்லாஹ்வின் விசாரனை மன்றத்தில் மறுமையில் நாங்கள் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்வோம். அதற்கு இடையே அல்லாஹ்வின் அத்தாட்சியாக பௌர்னமி தினத்தில் சந்திரகிரகணம் ஏற்பட்டது. சந்திரகிரகணம் என்பது முழு நிலவு (பௌர்னமி) என்று ஏற்படுகிறதோ அன்று தான் நிகழும். இதை விஞ்ஞானிகள் அனைவரும் அறிவர். மேலும் பௌர்னமி 1428 வருடத்தின் ஷஃபான் மாதத்தில் 16வது மன்ஸிலாக ஏற்பட்டது. அந்த நிகழ்வு எதை குறிப்படுகிறது என்றால் 1428 வது வருட ஷஃபான் மாதம் கட்டாயமாக 30 நாட்களை கொண்டே முடியும் என்பதை உறுதி செய்தது. அல்லாஹ் திருக்குர்ஆனில் 36:39 வசனததில் உலர்ந்து வளைந்த பேரீத்தம் பாளையை போல் ஆகும் வரை சந்தினுக்கு பல படித்தரங்களை ஏற்படுத்தியுள்ளோம் என கூறுகின்றான். அந்த கடைசி நிலை செவ்வாய்கிழமை (11.09.2007) அன்று ஏற்பட்டது. அல்லாஹ் தன் அத்தாட்சியாக அன்றைய தினத்திலும் சூரிய கிரகணத்தை ஏற்பட செய்து சந்தேகத்திற்கு இடமில்லாமல் அன்று தான் மாதத்தின் கடைசி நாள் என்பதற்கு படிப்பினையும் ஏற்படுத்தி தந்தான். சூரிய கிரகணம் என்றாலே சூர்pயன் சந்திரன் பூமி மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது தான் ஏற்படும். இது சந்திரனின் கடைசி மன்ஸிலாகும். மாதம் 29 நாட்களில் முடிந்தால் இது 29 நாளில் ஏற்படும். மாதம் 30 நாட்களில் முடிந்தால் இது 30 வது நாள் ஏற்படும். சூரிய கிரகணம் அன்று சூரியனை நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை மறைப்பது சந்திரன் தான். அந்த நேரத்தில் தான் சூரியனை சந்திரன் தாண்டி அடுத்த மாதத்திற்கான புதிய சுற்றை துவக்கும்.
எனவே யாரெல்லாம் புதன் கிழமை (12.09.2007) அன்று ஹிஜ்ரி 1428 ரமளான் மாதத்தை துவக்கினார்ளோ அவர்கள் சரியான நாளில் துவக்கினார்கள் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. புதன் கிழமை அன்று உலகின் கீழ்கண்ட பகுதிகளில் ரமளான் முதல் நாளின் மன்ஸிலை கண்ணால் பார்த்துள்ளதற்கு ஆதாரமும் உள்ளது.South Africa: Seen: ICOP member Dr. Abdurrazak Ebrahim said: "The Ramadaan Hilaal was sighted from Rustenburg (near Johannesburg) this Wednesday evening, the end of the 29th of Shabaan 1428 AH. Cape Town had inclement weather.USA Seen: Mr. Muhammed Billah from (NY) said: "This is to tell you that I was praying Maghrib in Jamaica Muslim Center, NY (Telephone: 718-739-3182) on that day Maghrib salat delayed for 20 minutes because some brothers with Imam went to see the Hilla, after salat two Brothers (Br. Aftab Mannan and Br. Delwar Hussain) they are regular mussullies of this Mosque claimed that they saw the Hillal on Wednesday, September 12, 2007 after sunset."Goolam Tegally (MCW member) from Port Louis, Mauritius, reported: SeenHilal for Ramadhan was sighted here in Mauritius to-day Wed 12 Sep 2007 at 18:22 (U.T. +4). Sky was clear but the setting Sun was marred by clouds. The very thin crescent was first observed with 10x binoculars then with naked eye. We were 4 people to have observed the Hilal. Thanks:
http://www.icoproject.org/icop/ram28.html#obsnew
http://www.moonsighting.com/
The Astronomical New Moon is on Thursday, October 11, 2007 at 5:00 GMT (i.e., 1:00 am EDT, or October 10, 10:00 pm PDT). It will not be visible on October 11 anywhere in the world, except Southern tip of South America and Polynesian Islands in the South Pacific. On October 12, it will be visible in New Zealand Australia, Indonesia, South Asia, Africa and Africas. In North America on October 12, it can be seen with some difficulty.நன்றி: http://www.moonsighting.com/
அந்த தளத்தில் விஞ்ஞான அடிப்படையில் புதிய பிறை பிறக்கும் நிகழ்வு வியாழக்கிழமை உலக நேரம் 5.00 மணிக்கு நடைபெறுகிறது. (பூமி சந்திரன் சூரியன் மூன்றும் நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு) அன்றைய தினமே தென் அமேரிக்கா பாலினோஸியா போன்ற இடங்களில் பிறையின் 30 வது நாளுக்கான மன்ஸிலை பார்க்க முடியும் என கூறியுள்ளது. எனவே அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை (12.10.2007) அன்று ஹிஜ்ரி 1428 ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும். ஆகவே அனைவரும் சரியான நாளில் வருகிற ஷவ்வால் மாதத்தை ஒன்றாக ஆரம்பிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். நபி (ஸல்) அவர்கள் கண்ணால் பிறையிள் தேய்ந்து வளரும் மன்ஸில்களின் நிலைகளுடன் சேர்த்து தான் பார்க்க சொன்னார்கள் என்பது ஆய்வில் நாம் தெரிந்த மறுக்க முடியாத உண்மை. எனவே உலகில் விஞ்ஞானிகள் அனைவரிடம் கேட்டாலும் இன்றைய தினம் பிறை மன்ஸில் உண்டாகிவிட்டது என்பதை மறுக்காமல் கூறுவார்கள். மேலும் ஒரு சிலர் மார்க்கத்தில் பிறை சம்மந்தமான திருக்குர்ஆன் வசனங்களை ஆராய்ந்து பார்க்காமல், தவறாக புரிந்து கொண்டு முன்கூட்டியே கணக்கிட்டு மாதத்தை துவக்குவதை இஸ்லாம் தடை செய்துள்ளது என இறையச்சத்தின் காரணமாக பயந்து கண்ணால் பார்க்காமல் மாதத்தை ஆரம்பிக்கவே கூடாது என கூறி வருகின்றனர். முன்கூட்டியே கணக்கை அறிந்து கொள்ளளும் முறையை இஸ்லாம் எங்கும் தடை செய்யவில்லை. மாறாக அல்லாஹ் திருக்குர்ஆனின் 10 வது அத்தியாயம் 5 வது வசனம் வருடங்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்வதற்காகத்தான் மாறி மாறி வரும் படித்தரங்களை சந்திரனுக்கு ஏற்படுத்தியிருக்கிறேன் என அல்லாஹ் கூறகின்றான். அதுவும் ஒரு வருடம் என கூறாமல் வருடங்கள் என பன்மையில் கூறியிருப்பது முன் கூட்டியே மாதங்களையும் ஆண்டுகளையும் அறிந்து கொள்ளும் முறை இஸ்லாம் அங்கீகரித்துள்ள ஒன்று தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இஸ்லாமிய நாட்காட்டி (Calendar) ஏற்படுத்த முடியுமா? முடியாதா? உலகில் கிருஸ்தவர்களும், யுதர்களும் தங்களுக்காக ஏற்படுத்திக்கொண்டுள்ள நாட்காட்டி (Calendar) யைத்தான் நாம் பின்பற்றியே ஆக வேண்டுமா? இஸ்லாம் ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 என வரையறுத்துள்ளது. வருடத்திற்கு 12 மாதம் தான் என 9:36-37 வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான். கிறிஸ்துவ மாதம் 28,29,30,31என நான்கு தேதிகளில் முடிகிறது. இதை இஸ்லாமியர்கள் பின்பற்ற முடியுமா? பின்பற்றினால் முஸ்லீம்களின் நிலை என்ன? என்பதை எல்லாம் 9:36-37 வசனங்களை ஆய்வு செய்து படித்து தெளிவான ஒரு முடிவுக்கு வந்தால் இஸ்லாமிய நாட்காட்டியின் (Calendar) அவசியம் சமுதாயத்திற்கு புரியும். ஆகவே நம் அனைவருக்கும் அல்லாஹ் நேர்வழி காட்ட பிரார்த்திக்கும் உங்கள் சகோதரன்,

P. Mohamed Sirajudeen
C/o: Islamic Research Center. விபரம் வேண்டுவோர் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு முகவரி: 160/101, North main road, Eruvadi - 627 103.இமெயில்: eruvadi@gmail.com தொலைபேசி: 04637 320777

Monday, September 03, 2007

இணையத்தில் அந்-நஜாத் மாத இதழ்



மாதந்தோறும் அந்நஜாத்தில் வரும் கருத்தோவியங்களை இனி இணையத்திலும் பார்வையிடலாம். தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யலாம். பதிவிறக்கம் செய்து அச்சிடலாம். மக்களிடையே சிறு வெளியீடுகளாக பரப்பலாம்.


இணையத்தில் அந்-நஜாத் மாத இதழ்

Sunday, September 02, 2007

ஜெயிக்கப் போவது யாரு?

கவிதை: கே. எம். முஹம்மத்
நன்றி: சமரசம் 16 - 31 ஆகஸ்டு 2007

ஹெச்.ஜி. ரசூலை நீக்கியது சரியா?

கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் இஸ்லாமிய விரோத எழுத்துக்களை விமர்சித்து நான் பல பதிவுகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அவரை தக்கலை ஜமாஅத், குடும்பத்துடன் ஊர்விலக்கம் செய்ததையும், குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவை மதவிலக்கம் செய்ததையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நபி முஹமது (ஸல்) அவர்களை எதிரிகள் ஊர்விலக்கம் செய்தனர். ஆனால் இஸ்லாமிய ஆட்சியை நிறுவிய நபி முஹமது (ஸல்) அவர்கள் நயவஞ்சகர்களையோ, இஸ்லாத்துக்கு விரோதமாக நடந்தவர்களையோ ஊர்விலக்கமோ, மதவிலக்கமோ செய்ததாக நாம் ஹதீஸ்களில் காண முடியவில்லை. தமிழ் நாட்டில் முஸ்லிம்களிடம் முன்னெப்போதையும் விட அதிகமாக பல கொள்கைப் பிரிவுகள், அமைப்பு பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. தொழுகையில் நெஞ்சில் கை கட்டுவது, அத்தஹிய்யாத் இருப்பில் விரலசைப்பது போன்றவற்றை ஏற்காத பள்ளிவாசல் நிர்வாகிகள், அறிவிப்பு பலகைகளை தொங்கவிட்டு முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். தன்னை ஒரு ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ளும் கவிஞர் ஹெச்.ஜி. ரசூல், ஜமாஅத் நிர்வாகியாகக் குழுவில் இருந்த போது மாற்றுக் கொள்கையுடையவர்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறியவிரும்புகிறோம். இந்தியா ஒரு பன்மைக் கலாச்சார நாடு. முஸ்லிம்களிடையே நிலவும் கருத்து மாறுபாடுகளை சகிக்காத முஸ்லிம்கள் மாற்று மதத்தினரிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? இந்தக் கோணத்தில் தமிழ் நாட்டில் வாழும் முஸ்லிம் அறிஞர்களும், பொதுமக்களும் சிந்திக்க வேண்டும். நான்கு மத்ஹப்களையும் மதிக்கிறோம் என்று கூறிக் கொள்ளூம் ஜமாஅத்துல் உலமா பேரவையினரும், சுன்னத்துல் ஜமாஅத் பேரவையினரும் குர் ஆன், ஹதீஸ் வழியில் செயல்படுபவர்களை மட்டும் காழ்ப்புணர்வுடன் பார்ப்பது ஏன்? இவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். ஹெச்.ஜி. ரசூலின் எழுத்துக்களில் 'இஸ்லாத்தில் குடி கலாச்சாரம்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையை விட, குர் ஆனில் இறைவனின் கூற்றுடன் முஹமது நபியின் கூற்றும் கலந்துள்ளது என்று எழுதியதும், குர் ஆனின் மாற்றுப் பிரதியாக ரஷாத் கலீஃபாவின் குர் ஆன் மொழிபெயர்ப்பைக் குறிப்பிட்டதும் தான் இஸ்லாமிய விரோதமானவை. இதனைப் புரிந்து கொள்ள குமரிமாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவையினருக்குப் போதிய படிப்பில்லை. யார் மீதும் மதவிலக்கமோ அல்லது ஊர் விலக்கமோ செயல்படுத்தக் கூடாது. இது போன்ற வழிகாட்டும் குறிப்பை தமிழ் நாடு வக்ஃப் வாரியம், அனைத்து ஊர் ஜமாஅத்தார்களுக்கும், அனைத்து மாவட்ட ஜமாஅத்துல் உலமா அமைப்புகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும்.

தஸ்லிமா நஸ்ரினை தாக்கியது சரியா?

ஆந்திராவில் ஆபாச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினை ஆந்திராவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் தாக்கியுள்ளனர். இச்செயல் முஸ்லிம்களின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆர்.எஸ்.எஸ், சிவ சேனா ஆகிய வன்முறையாளர்களின் வழிமுறைக்கும் அமைதி மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றும் நமக்கும் வேறுபாடு உள்ளது. நாம் ஒருபோதும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. தஸ்லிமா நஸ்ரினுக்கு நம் எதிர்ப்பை சட்டரீதியான வழிகளில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். இது போன்ற வன்முறை வழிகளைக் கையாளக் கூடாது. வன்முறையாளர்களை நம் ஆலிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு கண்டிக்க முன்வர வேண்டும்.

தாவூத் ஷா இஸ்லாமியப் பெரியாரா?

'இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா' என்ற நூலை டாக்டர் அய்யூப் எழுதி நவமணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் தாவூத்ஷாவின் புகழ் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக இந்நூலாசிரியர் எழுதுகிறார். ஓர் அறிஞனின் பணியை மக்கள் ஏற்றுக் கொள்வது இறைவனின் நாட்டம் என்பதை இந்நூலாசிரியர் அறியவில்லை போலும். நான் இந்நூலைப் படித்த வரை இவர் இஸ்லாமியப் பெரியார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளக் இயலவில்லை.

1. தாவூத் ஷா தர்கா வழிபாட்டை விமர்சிக்கிறார். ஆனால் கோயில்களுக்கு நிதியுதவி செய்கிறார். கோயில் நிர்வாகிகள் தரும் மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். கம்பராமாயணச் சொற்பொழிவு செய்கிறார்.

2. பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுடன் தாவூத்ஷா நெருங்கிய தொடர்புடையவர் என்று நூலாசிரியர் பல இடங்களில் எழுதுகிறார். பெரியாரை அவர் சந்தித்த ஒரு நிகழ்வோ, பெரியாருடன் அவர் கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டமோ அல்லது ஒரு மாநாடோ சான்றுடன் எழுதப்படவில்லை.

3. தாவூத்ஷா தன் குடும்பத்தினர் காதணி விழா, சுன்னத் செய்யும் விழா போன்றவற்றை நடத்த அனுமதிக்கிறார். அவற்றில் கலந்து கொண்ட உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து பத்திரிக்கை விளம்பரம் வெளியிடுகிறார்.

4. இரு காதியானி அறிஞர்களுடன் இவருக்குள்ள தொடர்பு காரணமாக 'காதியானி' என விமர்சிக்கப் படுகிறார். இவரை இலண்டனுக்கு அழைத்துச் செல்பவர் ஒரு காதியானி. இவரது ஓராண்டுக் கால லண்டன் வாழ்க்கையைப் பற்றி இந்நூலில் எந்தக் குறிப்பும் இல்லை. இது நூலைப் படிக்கும் நம்க்கும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இறைவனே அறிந்தவன்.

5. தாவூத் ஷா ஆபாச நூல்கள் எழுதுகிறார். தன் பத்திரிக்கைகளில் ஆபாசத் தொடர்கதைகளை எழுதுகிறார்.

குர் ஆனுக்கு தமிழில் மொழிபெயர்ப்பு வெளியிடுவதையும், ஜும் ஆவில் தமிழில் உரையாற்றுவதையும் அக்கால ஆலிம்கள் எதிர்த்ததையும், அவற்றுக்கு எதிராக தாவூத்ஷா போராடியாதையும் இந்நூலின் வழியாக அறிய முடிகிறது. இப்போது இந்நிலை பெருமளவில் மாறியுள்ளது. இந்த மாற்றங்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுதும் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த மாற்றத்துக்கும் தாவூத்ஷாவே காரணம் என்று நூலாசிரியர் கூறுவதை ஒப்புக் கொள்ளமுடியாது.

மவ்லவி பி.ஜெவை கைது செய்தது சரியா?

மவ்லவி பி.ஜெவை மலேசிய காவல் துறை கைது செய்தது சரியா?
மலேசியாவில் மவ்லவி பி.ஜெவும், பாக்கரும் மலேசிய காவல் துறையால் கைது செய்யப்பட்ட செய்தியை இணையத்தில் படித்தேன். இது கண்டனத்துக்குரிய செயல். மவ்லவி பி.ஜெ. அவர்களின் ஜகாத் கொள்கை, சஹாபக்களின் மீதான விமர்சனம், உடன் பொதுப்பணியாற்றியவர்களிடம் இருந்து பிரியும் போது அவர்களது நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பது போன்றவை எனக்கு உடன்பாடில்லை. அதற்காக மலேசியாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஓர் ஆலிம் கைது செய்யப்படுவதை நாம் ஆதரிக்க முடியாது. மலேசியாவில் வேறு மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர் கைது செய்யப்பட்டிருந்தாலும் நாம் கண்டனம் செய்யவேன்டும். மலேசியாவில் வாழும் தமிழர்களில் முஸ்லிம்களை விட இந்துக்களே அதிகம். அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள இந்து முண்ணனி, இந்து மக்கள் கட்சி, ஆர்.எஸ்.எஸ் பாணியில் பல அமைப்புகளை நடத்துகின்றனர். அவர்களுக்கு பல இணையத் தளங்களும், வலைப்பதிவுகளும் உள்ளன. அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு தமிழ் நாட்டில் இருந்து இந்து வெறி பேச்சாளர்கள் வருகின்றனர். இவர்களை எல்லாம் மலேசிய காவல் துறை கைது செய்வது கிடையாது. ஆனால் மவ்லவி பி.ஜெ அவர்களை மட்டும் கைது செய்ததை, தமிழ் முஸ்லிம்கள் மீது மலேசிய காவல் துறையின் காழ்ப்புணர்வாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?

Thursday, August 23, 2007

அல்லாஹ்வே இடிகளை விழச் செய்து அதைக் கொண்டு தான் நாடியவரைத் தாக்குகின்றான்

இன்றைய தினத்தில் யாஹு தளத்தில் வந்த ஒரு செய்தி திருகுர்ஆனின் பார்வையில்....

http://in.tamil.yahoo.com/News/Regional/0708/22/1070822006_1.htm

(நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர். அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு "எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்" எனக் கூறினர். ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது. அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள். அதையும் நாம் மன்னித்தோம்;. இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம். (அல்குர்ஆன்: 4:153)

அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்;) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்;(இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2:19)

இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது. (அல்குர்ஆன்: 2:55)

மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸபீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 13:13)

ஸமூது (கூட்டத்தாருக்கோ) நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காண்பித்தோம், ஆயினும், அவர்கள் நேர்வழியைக் காட்டிலும் குருட்டுத்தனத்தையே நேசித்தார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(பாவத்)தின் காரணமாக, இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. (அல்குர்ஆன்: 41:17)

ஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், "ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!. (அல்குர்ஆன்: 41:13)

Saturday, June 09, 2007

ஆரியக் கூத்து - அ. மார்க்ஸ்

நூல்: அந்தனர் வரலாறு எனும் ஆரியக் கூத்து
ஆசிரியர்: அ. மார்க்ஸ்
எதிர் வெளியீடு
305 காவல் நிலையம் சாலை
பொள்ளாச்சி - 642 001
தொலைப்பேசி: 04259 - 226012, 9865005084
மின் அஞ்சல்: ethirveliyedu@sify.com

பக்கங்கள்: 116 விலை: ரூ 60


பின்னட்டைக் குறிப்பு:
கால்டுவெலின் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து வெளி அகழ்வுகள் வெளிப்படுத்திய உண்மைகளும் சென்ற நூற்றாண்டில் தமிழக அரசியலை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியல் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் இன்றைய இந்துத்துவ எழுச்சியைப் பின்புலமாகக் கொண்டு வரலாற்றைப் புரட்டுகின்றனர். 'தமிழக அந்தனர் வரலாறு' என்கிற பெயரில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர்.

ஆரியப் பிரச்சினை, திராவிட மற்றும் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பங்கள் குறித்த நவீனமான வரலாற்றுச் சிந்தனைகளின் அடிப்படையில் அந்தனப் புரட்டுகளை தோலுரிக்கிறார் அ. மார்க்ஸ். வெறும் விவாத நோக்கிலான நூலாகவன்றி வரலாற்று உண்மைகள் பற்றிய சம காலக் கருத்துகளின் தொகுப்பாகவும் இது அமைந்துள்ளது.

புதிய தமிழகத்தை ஆதரிப்போம்!

வரும் மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் புதிய தமிழகம் வேட்பாளருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். தி.மு.க தன் வாக்குறுதிப்படி முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டை நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் நாள் தோறும் வாக்குறுதி கொடுத்து முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார். பா.ஜ.கவுக்கு எதிரணி என்ற அடிப்படையில் தான் நாம் தி.மு.கவுக்கு அதரவளித்தோமே தவிர தி.மு.கவுக்கான நம் ஆதரவு நிரந்தரமானதல்ல. மதுரையிலும், கரூரிலும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட திமுகவினருக்கு உரிய பாடம் கற்பிப்போம். இத்தேர்தலில், தி.மு.க ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளரை டெபாஸிட் இழக்கச் செய்வோம். மக்களவைத் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகே ஜெயலலிதா தன் மக்கள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற்றார் என்பதை நினைவில் வையுங்கள். சட்டமன்றத்தில் காங்கிரஸ் ஒரு நல்ல எதிர்கட்சியாகச் செயல்படவில்லை. மாறாக ஆளுங்கட்சிக்குப் போட்டியாக காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜால்ரா தட்டுகிறார்கள். இந்த ஒரு காரணத்துக்காகவே நாம் காங்கிரஸுக்கு வாக்களிக்க கூடாது.

கோவை சிறைவாசிகளின் விடுதலையிலும் முதலமைச்சர் அக்கறை காட்டவில்லை. எதிர் கட்சித் தலைவியான, ஜெயலலிதா முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை. கோவை சிறைவாசிகளின் விடுதலைக்கு எதிராக உள்ளார்.

பா.ஜ.கவைப் பற்றி நாம் எதுவும் பேசத்தேவையில்லை. விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் நாம் இறைவனிடம் பாதுகாப்பு தேட வேண்டியது தான். விஜயகாந்த்தின் தே.மு.தி.கவுக்கு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பற்றியும், கோவை சிறைவாசிகள் விடுதலை பற்றியும் என்ன நிலைப்பாடு என்பது நமக்குத் தெரியவில்லை. எனவே, நாம் 1. காங்கிரஸ் (தி.மு.க) 2. அ.இ.அ.தி.மு.க 3. பா.ஜ.க 4. தே.மு.தி.க ஆகிய கட்சிகளூக்கு வாக்களிக்க முடியாது.

முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பதற்கும், கோவை சிறைவாசிகள் விடுதலைக்கும் ஆதரவளிக்கும் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளருக்கு முஸ்லிம் அமைப்புகள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.

Monday, May 14, 2007

எடுக்கப்படாத கருத்துக் கணிப்பு






தினகரன் எடுத்த கருத்துக் கணிப்பில், யார் கலைஞரின் வாரிசாக வர வேண்டும் என்று கேட்டதற்கு 2% பேர் மட்டுமே மு.க. அழகிரி பெயரைச் சொன்னார்களாம். அதற்காக மதுரை தினகரன் அலுவலகத்தில் வேலை பார்த்த, மூன்று பேரை உயிருடன் எரித்துக் கொன்று விட்டார்கள் அவரது ஆதரவாளர்கள். இப்போது நாம் மதுரைக்குச் சென்று, மோடியின் அடுத்த வாரிசாக யார் வரவேண்டும் என்று கேட்டால் 90% பேர் மு.க. அழகிரியின் பெயரைச் சொல்வார்கள்.

Wednesday, May 02, 2007

மலாய் இனவெறியை கண்டிப்போம்!

மலேஷியாவின் தலைநகாரான கோலாலம்பூரில் வசிக்கும் சுமார் 70 ஆயிரம் சீன முஸ்லிம்கள், தங்களின் தாய்மொழியான மாண்டரின் மொழியில் குத்பா பிரசங்கமும், மார்க்க உரையும் ஆற்றும் வகையில் தனி பள்ளிவாசல் கட்ட முயற்சித்தனர். பள்ளிவாசல் கட்ட மலேஷிய அரசிடம் நிலம் ஒதுக்குமாறு கோரினர். இதற்கு மலேஷிய அரசு அமைப்பான இஸ்லாமிய விவகாரத்துறை அனுமதி மறுத்து விட்டது. மலேஷிய அரசு சீன அடையாளத்தை இஸ்லாத்திற்கு விரோதமாக சித்தரிக்கின்றது. இது மலேஷிய ஆலிம்களின் அறியாமையா? அல்லது இனவெறியா? மலேஷியாவுக்கு இஸ்லாத்தைக் கொண்டுவந்தவர்கள் தமிழ் முஸ்லிம்களே. அந்த பாரம்பரியம் இருப்பதால் தமிழ் முஸ்லிம்களிடம் மலாய் இனவெறி பலிக்கவில்லை. அதனால் தலைநகர் கோலாலம்பூரில் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலும் தமிழ் முஸ்லிம்களுக்கு தனி பள்ளிவாசல்கள் உள்ளன. முஸ்லிம்களுக்கு கேடு செய்த முன்னாள் தாய்லாந்து பிரதமர் தக்ஷின் தாய்லாந்து தலைநகரில் தமிழ் முஸ்லிம்களுக்கு தனிப் பள்ளிவாசல் கட்ட அனுமதி கொடுத்தான். மலேஷியா சீன முஸ்லிம்களுக்கு தனி பள்ளிவாசல் கட்ட அனுமதி மறுக்கிறது. தாய்லாந்தில் மலேஷிய வம்சாவளி இஸ்லாமியப் போராளிகளுக்கு ஆயுத உதவி அளிக்கும் மலேஷிய அரசு, சொந்த நாட்டில் சீன முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குகிறது. இஸ்லாத்தின் பெயரால் இனவெறியா? ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மலேஷிய அரசுக்கு நம் கண்டனத்தை பகிரங்கமாகத் தெரிவிப்போம். இஸ்லாத்தின் பெயரால் அரபுநாடுகளில் காணப்படும் அரபு தேசியவெறியையும், இந்தியாவில் காணப்படும் உருது மொழிவெறியையும் அம்பலப்படுத்துவோம்.

Sunday, April 22, 2007

அகிலத்திற்கோர் அருட்கொடை

அகிலத்திற்கோர் அருட்கொடை

உலகத் தலைவராக விளங்கும் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள அன்பையும் பாசத்தையும் வளர்க்கவும், அவர்களின் சிறப்பையும் மேன்மையையும் உணர்ந்து செயல்படவும் ஒரே வழி, அவர்களுடைய தூய வரலாற்றைப் படிப்பதேயாகும். அவர்களுடைய வரலாற்றைப் படிப்பதன் மூலம், நேர்மையாளர் எவருக்கும் அண்ணலாரைப் பின்பற்ற வேண்டும் என்ற உணர்வு தானாகவே தோன்றிவிடும். அடுத்தவர் தூண்ட வேண்டியதில்லை.

அண்ணலாரைப் பற்றிப் படிப்பதில் கவனமும் ஆழமும் இருக்க வேண்டும். திரும்பத் திரும்ப படிக்க வேண்டும். ஒரு முறை படிக்கும்போது அண்ணலாரின் சிறப்பும் மேன்மையும் உயர்வாக வெளிப்படும். திரும்பத் திரும்பப் படிக்கும் போது அண்ணலார் மீது பற்றுதல் ஏற்படும். நெஞ்சில் நெருக்கம் அதிகமாகும்.

நூல்: அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி(ஸல்)
ஆசிரியர்: டாக்டர். இனாயத்துல்லாஹ் சுப்ஹானீ
தமிழாக்கம்: மௌலவி. அப்துல் ஹமீத் ஆமீர் உமரீ
வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
முகவரி: 138 பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை - 600 012
தொலைப்பேசி: +91 44 2662 4401
தொலை நகல்: +91 44 2662 0682
மின் அஞ்சல்: iftchennai12@gmail.com
இணையத் தளம்: http://www.iftchennai.org

விலை: ரூ.150
பக்கங்கள் 464 (கெட்டி அட்டையுடன்)

Saturday, March 24, 2007

ராமதாஸ் ஒரு மோசடித் தலைவர் - வெற்றிகொண்டான்

சமீப காலமாக டாக்டர் ராமதாஸ் தி.மு.க. அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஒரே கூட்டணியில் இருந்து கொண்டே அரசைத் தாக்குவது, தி.மு.க. தரப்பில் பெரும் அதிருப்தியை உண்டு பண்ணியிருக்கிறது. ராமதாஸின் இந்தத் ‘தாக்குதல்’ அரசியலைக் கடுமையாக விமர்சிக்கிறார் தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளர் வெற்றிகொண்டான்.

‘‘டாக்டர் ராமதாஸ் வில்லன் அரசாங்கம் நடத்தி வருகிறார். இது அவருக்குப் பழக்கப்பட்டதுதான். ஏற்கெனவே பாண்டிச்சேரியில் இப்படிச் செய்து பழக்கமிருக்கிறது. இப்போது தமிழகத்தில் கைவரிசையைக் காட்டத் துவங்கியிருக்கிறார். தன்னையும், தன்னுடைய மகனையும், அரசியலில் வைத்துக் கொண்டு தி.மு.க. ஆட்சியை மிரட்டும் வேலையில் சமீபகாலமாக ஈடுபட்டு வருகிறார்.

இப்படி தி.மு.க. அரசைத் தாக்குவதற்குக் காரணம், தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்ற எண்ணம்தான். தன்னை முன்னிலைப்படுத்தி ‘கலைஞர் இடத்தை’ப் பிடித்து விடலாம் என்று நினைக்கிறார். ஆனால் கலைஞர் இடத்தைக் கடவுளாலேயே கூட பிடிக்க முடியாது. கடவுளே கலைஞரின் வீட்டு வாயில்படியில் நிற்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு சத்ய சாய்பாபாவே சாட்சி. கலைஞரை யாரேனும் குறைசொல்லக் கருதினால், தன்னுடைய நாட்டு மக்களை அவமானப்படுத்தியதாக அர்த்தம். யாரையும், எவனையும் நம்பி ஆட்சி நடத்தத் தேவையில்லை. நாடு என் தலைவர் பக்கம் நிற்கிறது. மக்கள் என் தலைவர் பக்கம் நிற்கிறார்கள்.

சாதாரணமாக இவர்களுக்கெல்லாம் கலைஞர் பதில் சொல்லத் தேவையில்லை. ஆனால், கூட்டணி தர்மத்துக்காக தலைவர் அவர்களுக்குப் பதில் சொல்கிறார். நான் கலைஞரைக் கேட்டுக் கொள்கிறேன். பெரியார்தான் ஐயா. இடையில் வருகிற எந்த தலைவனையும் ‘ஐயா’ என்று அழைக்கக் கூடாது. பெரியாரை ஐயா என்ற அழைத்த வாயால் இந்த மாதிரி ஆட்களையெல்லாம் ஐயா என்று சொல்வது அசிங்கம். கலைஞருக்கு எத்தனை பெருந்தன்மை. தன்னைவிட வயதில் சிறியவரான ராமதாஸை, மருத்துவர் ஐயா என்று மேடைதோறும் கூறுகிறார். அந்த மரியாதையைக் கூட தக்க வைத்துக்கொள்ள ராமதாஸ§க்குத் தெரியவில்லை.

இவர் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கூட்டணியைப் பற்றி வெளிப்படையாக விமர்சிப்பதுதான் இவரது வாடிக்கை. அரசியல் நாகரிகம் தெரியாதவர். ஆட்சியில் குறைகள் இருந்தால், முதல்வரை நேரில் சந்தித்துச் சொன்னால், அதைக் களைந்துவிடப் போகிறார். ஆனால், அப்படிச் செய்யாமல் பத்திரிகைகளுக்கு அறிக்கைகள் கொடுப்பது ஏன்?

பிரச்னைகளை வளர்க்க வேண்டுமென்பதற்குத்தானே! என்னுடைய கோட்டை என்று இறுமாப்புடன் கூறிவந்த ராமதாஸ§க்கு, விருத்தாச்சலத்தில் ஒரு நடிகர் கொடுத்த அடியிலிருந்து இன்னும் மீளாமல் ஏதோதோ உளறிக் கொண்டு இருக்கிறார். இப்படியெல்லாம் பேசுவது, அறிக்கை விடுவது எல்லாம் ராமதாஸின் தலைக்கனத்தின் அறிகுறி.

ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் தலைவராக டாக்டர் ராமதாஸை எந்தக் காலத்திலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவருடைய மகன் டாக்டர் அன்புமணி கூட மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எங்கள் கட்சியிடம் இருந்த ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டைக் கூட கலைஞர் அவர் மகனுக்காக விட்டுக் கொடுத்தார். இது எவ்வளவு பெரும்தன்மை! அதையெல்லாம் கொஞ்சமாவது ராமதாஸ் நினைத்துப் பார்த்ததுண்டா?

நானும் ராமதாஸ் மீது நிறைய குற்றச்சாட்டுகளைச் சொல்ல முடியும். எந்த அறிவாளியையும் தன் பக்கத்தில் வைத்துக்கொள்ள ராமதாஸ் விரும்பியதில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன், பேராசிரியர் தீரன். இவர்களெல்லாம் உதாரணங்கள். ‘ராமதாஸ§க்கு எங்களால் கப்பம் கட்ட முடியவில்லை’ என்று இவர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்களே சொல்லியிருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காகச் செயல்படுகிற தலைவன் என்றார். இப்படி மோசடியான தலைவர் யாரும் இருக்க முடியாது.

தானே பாண்டிச்சேரி முதல்வர், தானே தமிழ்நாட்டு முதலமைச்சர், தானே இந்தியாவின் பிரதமர் இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு ராமதாஸ் தூங்குகிறார். எந்த நேரத்தில் யாருக்கு நண்பன், யாருக்கு விரோதி என்று அடையாளம் காணமுடியாத ஒரு நபர் இந்தியாவில் இருக்கிறாரென்றால் அது ராமதாஸ்தான்.

நேருவை, இந்திராவைக் கடந்து வந்தவர் கலைஞர். ஜெயப்பிரகாஷ் நாராயணனைக் காப்பாற்றிய தலைவர். இந்த மாதிரி சின்ன ஆட்களுக்கெல்லாம் அவர் பதில் சொல்லத் தேவையில்லை. ஒரு விஷயத்தை இங்கே சொல்றேன். எங்களை மாதிரி தோற்றவர்களும் யாருமில்லை. எங்களை மாதிரி ஜெயித்தவர்களும் யாரும் இல்லை. உயர்வு, தாழ்வு எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம். அதனால் இதெல்லாம் எங்களுக்கு சாதாரண விஷயம்.

நொடிக்கு நொடி சுய மரியாதை பேசி வரும் ராமதாஸ், தன்னையும் தன் மகனையும், ஐயா, சின்ன ‘ஐயா’ என்று அழைப்பதைத்தான் விரும்புகிறார். இதையெல்லாம் மாற்றிவிட்டு கலைஞரையும் தி.மு.க.வையும் விமர்சனம் செய்யட்டும். என்னைப் பொறுத்த வரை கூட்டணியில் இருந்து கொண்டு அந்தக் கட்சியையும், ஆட்சியையும் விமர்சனம் செய்யும் ராமதாஸ், ஒரு பிளாக் மெயில் அரசியல்வாதி. தி.மு.க. என்பது ஒரு பனங்காட்டு நரி. அது ராமதாஸ் போன்றவர்களின் சலசலப்புக்கு அஞ்சாது’’ என்று சொல்லி முடிக்கும்போது வெற்றிகொண்டானின் கண்களில் உண்மையான தி.மு.க. தொண்டனின் சீற்றம்.

நேர்காணல்: திருவேங்கிமலை சரவணன்
நன்றி: குமுதம் 28 மார்ச் 2007

Wednesday, March 21, 2007

இந்திய மரபும் பார்ப்பன திரிபும்

நூல்: இந்திய மரபும் பார்ப்பன திரிபும்
பேராசிரியர் பெரியார் தாசன் உரையின் எழுத்து வடிவம்
வெளியீடு: கீழைக்காற்று வெளியீட்டகம்
10 அவுலியா தெரு
எல்லீசு சாலை
சென்னை - 600 002
40 பக்கங்கள்
விலை ரூ. 12

"இந்துத் தத்துவ மரபு என்பது பார்ப்பன மரபு. இந்தியத் தத்துவ மரபு தமிழர், தெலுங்கர், மராத்தி, குஜராத்தி... மக்களின் மரபு. இது பார்ப்பன மரபு அல்ல.

வாழ்க்கை நெறியாகவும், சிந்தனையின் தெளிவாகவும் விளங்குவதே தத்துவம். இது தான் இந்தியத் தத்துவ மரபு. இந்த அறிவே இல்லாமல் வாழ்வே மாயம்; மண்ணாவதே திண்ணம் என்று பிதற்றுகிறது இந்துத் தத்துவ மரபு"

இந்நூல் 2003ஆம் ஆண்டில் - தஞ்சாவூரில், மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய 'பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், "இந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை; இல்லை; இல்லவே இல்லை!" என்ற தலைப்பில் பேராசிரியர் பெரியார் தாசன் ஆற்றிய கருத்தரங்க உரை.

Tuesday, March 20, 2007

இட ஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை

நூல்: இட ஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை
வெளியீடு: புதிய ஜனநாயகம்
110 என்.எஸ்.கே. சாலை
கோடம்பாக்கம்
சென்னை - 600 034
124 பக்கங்கள்
விலை ரூ. 30

சமூக நீதிக்காரர்களால் உரிமை பாராட்டப்படும் இட ஒதுக்கீடு எப்படி, எப்போது, யாரால் கொண்டு வரப்பட்டது?

எந்த நோக்கங்களுக்காக எந்த அடிப்படையில், எந்த சாதி-வர்க்க நலன்களுக்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது?

இட ஒதுக்கீடு என்பது சமூக விடுதலைக் கோட்பாடா? இது பார்ப்பனியத்தை வீழ்த்துமா?

இட ஒதுக்கீடு தான் பெரியாரியத்தின் உயிராதாரமா?

பார்ப்பனரல்லாத அனைவரும் சூத்திரர்கள்-பிற்பட்டவர்கள் என்பது சரியா?

இட ஒதுக்கீடு விவகாரத்தில் பார்ப்பனர்களுக்கும், சூத்திர ஆதிக்க சாதிகளுக்குமிடையே நடக்கும் சண்டையில் சூத்திர ஆதிக்க சாதிகளை ஆதரிக்க மறுப்பது மறைமுக பார்ப்பனியமா?

-இவற்றுக்கும் இட ஒதுக்கீடு தொடர்பான இதர கேள்விகளுக்கும் விளக்கமளிப்பதோடு, இட ஒதுக்கீடு பற்றிய மார்க்சிய-லெனினியவாதிகளின் நிலைப்பாட்டையும் நடைமுறைச் செயல்பாட்டையும் சுருக்கமாகத் தொகுத்தளிக்கிறது, இந்நூல்.

Sunday, February 25, 2007

யுத்த பூமி லெபனான்

நூல்: யுத்த பூமி லெபனான்
ஆசிரியர்: எஸ். வி. ராஜதுரை
வெளியீடு: அடையாளம்
முகவரி: 1205/1 கருப்பூர் சாலை
புத்தாநத்தம் - 621 310
தொலைப் பேசி: +91 4332 273444
மின் அஞ்சல்: info@adaiyalam.com
பக்கங்கள்: 160
விலை: ரூ. 75

பின்னட்டைக் குறிப்பு

பயங்கரவாதம் - இந்தச் சொல்லுக்கு நூற்றுக்கும் அதிகமான வரையறைகள். அரச பயங்கரவாதம், அரசு எதிர்ப்பு பயங்கரவாதம் அல்லாமல் 'ஜனநாயக மீட்பு நடவடிக்கைகள்' என அமெரிக்கக் கூட்டணி நாடுகள் அவிழ்த்து விடும் உலக பயங்கரவாதம். இந்த நூல், 2006 ஜூலை - ஆகஸ்டில் அமெரிக்க ஆதரவுடன் லெபனானில் இஸ்ரேல் நடத்திய உலக பயங்கரவாதப் போரின் பின்னணியையும், பேரழிவையும், இந்தக் கும்பலுடன் கைகோர்க்க முனையும் இந்தியாவின் நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்துகிறது.