Sunday, February 26, 2006

பெஸ்ட் பேக்கரி வழக்கில் தீர்ப்பு!



செய்தியைத் தெளிவாக படிக்க, படத்தின் மீது கிளிக்கவும்.
நன்றி: தினத்தந்தி (25-02-2006)

Saturday, February 18, 2006

அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்!







கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்). நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.

அல் குர்ஆன்(2:115)



மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். அல் குர்ஆன்(2:45)




வர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துகொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.


அல் குர்ஆன்(7:206)

முஸ்லிம்களுக்கு ஜெயலலிதா செய்த தீங்குகள்

தமிழ் நாட்டுக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது. தமிழ் நாட்டு முஸ்லிம்களும் தங்கள் நிலைப்பாட்டை தீர்மானிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. என் கணிப்பின் படி தமிழ் நாட்டில் பெரும்பாலான முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் அமைப்புகளும், அரசியல் அமைப்புகளைச் சாராத முஸ்லிம்களும் தி.மு.கவை ஆதரிப்பதை விட அ.இ.அ.தி.மு.கவை ஆதரிப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிரான நிலை எடுக்க வேண்டும் என்பதாலேயே த.மு.மு.க, தி.மு.க ஆதரவுடன் செயல் படுகிறதே தவிர அதன் தலைவர்களும் அ.இ.அ.தி.மு.கவை ஆதரிப்பதையே விரும்புகிறார்கள் என்பது அவர்களது மேடைப்பேச்சில் இருந்து தெரிகிறது. அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் பரிசீலனைக்கும், ஜெயலலிதா முஸ்லிம்களிடம் கடந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதையும், இப்போதும் எப்படி நடந்து கொள்கிறார் என்பதையும் நினைவூட்டுவதை என் கடமையாகக் கருதுகிறேன்.


1. பாபர் மசூதியை இடிக்க ஆளனுப்பினார். இராமருக்கு இங்கு கோயில் கட்டாமல் எங்கு கட்டுவது என இந்து வெறியை தூண்டி விட்டார்.

2. குஜராத்தில் மோடி மீண்டும் முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப் பட்டபோது வாழ்த்து தெரிவித்தார். அவரது பதவியேற்பில் கலந்து கொண்டார்.

3. சங்கராச்சாரியார் கைது செய்யப்படுவதற்கு முன்பு வரை இந்து வெறி அமைப்புகளால் பாராட்டப்படும் வண்ணம் முஸ்லிம் விரோத ஆட்சி செலுத்தினார்.

4. மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வந்தார். 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தமிழக மக்கள் அ.இ.அ.தி.மு.கவை தோற்கடித்ததால் திரும்பப் பெறப்பட்ட பல சட்டங்களில் இச்சட்டமும் திரும்பப் பெறப் பட்டது. இதற்காக தமிழ் நாட்டு வாக்காளர்களைத் தான் பாராட்ட வேண்டும்.

5. வாணியம்பாடி இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளராக ஓர் இந்துவை நிறுத்தினார். அப்போது முஸ்லிம் லீக், அ.இ.அ.தி.மு.கவை கண்மூடித் தனமாக ஆதரித்தது.

6. கடந்த சட்டமன்றத் தேர்தலில் த.மு.மு.க, அ.இ.அ.தி.முவை ஆதரிக்க முன் வந்தது. ஆனால், அவர்கள் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை தேர்தல் அறிக்கையில் சேர்க்கச் சொன்னதை, தலித் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என சேர்த்ததாலும், முஸ்லிம்களுக்கு வேட்பாளர் பட்டியலில் போதிய இடம் ஒதுக்காததாலும் அ.இ.அ.தி.மு.கவும் தி.மு.கவும் நேரடியாக மோதும் இடங்களில் தி.மு.கவை ஆதரிக்க முடிவெடுத்தது. இது த.மு.மு.க எடுத்த மிகச் சரியான முடிவு.



7. கோவையில் முஸ்லிம்களுக்கு எதிரான தீவைப்பு போன்ற கலவரத்தின் போதும், குண்டுவெடிப்புகளின் பின்பும் கலைஞரின் தலைமையிலான தி.மு.க அரசின் கையாலாகத தனத்தையும், முஸ்லிம் விரோதப் போக்கையும் நாம் இன்னும் மறக்கவில்லை. ஆனால், அப்போது இந்து வெறி தமிழ் நாட்டில் காலூன்ற எம்.ஜி.ஆரும், அவரின் அ.இ.அ.தி.மு.க அரசும், கட்சியுமே காரணம் என்பதை ஒரு முஸ்லிம் அல்லாத ஆய்வாளார் எழுதிய கட்டுரை பல பத்திரிக்கைகளில் வந்தது. கட்டுரை எழுதியவரின் பெயர் எனக்கு மறந்து விட்டது. ஆனால் அக்கட்டுரையின் மையக்கருத்து எனக்கு ஒருபோதும் மறக்காது.

8. முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதை எதிர்த்து பேசினார். இன்றளவும், முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்கப் படுவதை தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகளைப் போல வெளிப்படையாக ஆதரிக்கவில்லை.

9. முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் இவரது அமைச்சரவை பல ஆண்டுகள் நடந்தது. இவரது அமைச்சரவையில் இடம் பெறும் முஸ்லிமுக்கு இருக்க வேண்டிய தகுதி முஸ்லிம் விரோதப் போக்கு. அன்வர் ராஜா, மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்து சட்டமன்றத்தில் பேசியதை நாம் மறக்க கூடாது.

10. இவரை இப்போது பல முஸ்லிம் அமைப்புகள் ஆதரித்தாலும், ஒருவருமே ஆதரிக்காத போது ஷேக் தாவூது என்பவர் நடத்திய தமிழ் மாநில முஸ்லிம் லீக் என்ற அமைப்பு அ.இ.அ.தி.மு.கவை ஆதரித்தது. அக்கட்சிக்கு ஜெயலலிதா வார்டு மெம்பர் பதவிக்கு கூட இடம் ஒதுக்க வில்லை.

த.மு.மு.க - தவ்ஹீத் ஜமாஅத் ஒற்றுமைகள்













த.மு.மு.கவும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் இப்போது ஒருவருக்கொருவர் பகை பாராட்டினாலும், இரு அமைப்புகளுக்கும், அவற்றின் தலைமைக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. அது ஒன்றும் நன்மையான அடிப்படையில் அல்ல. சமீபத்தில், சுனாமி நிவாரண நிதி வசூலிக்கப் பட்டது போல, தமிழ் நாட்டில் முன்பு கோவை கலவரத்தில் பாதிக்கப் பட்ட முஸ்லிம்களுக்கு நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது. அப்போது, த.மு.மு.கவைத் தவிர அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஜமாஅத்தே இஸ்லாமியிடம் தங்கள் நிதியை அளித்தன. ஆனால், த.மு.மு.க மட்டும் அவ்வாறு செய்யாமல், தனியாக வசூல் செய்தது. அவ்வாறே, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஜமாஅத்தே இஸ்லாமியின் நிவாரன நிதிக்கு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் பணம் அனுப்பிய போது, த.மு.மு.க வேறு அமைப்புக்கு நிதி அனுப்பியது. அப்போது, தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் தமுமுகவிலும் தலைமைப் பொறுப்பில் இருந்தனர். விருப்பு, வெறுப்பு இன்றி சிந்திக்கும் முஸ்லிம்கள் இவ்விரு அமைபினரிடமும் உள்ள பிறரிடம் ஒத்துழையாமை, தனக்கும் தன் அமைப்புக்கும் மட்டுமே பெயர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம், ஆணவம் போன்றவை மூன்றாந்தர தேர்தல் அரசியல் கட்சிகளின் குணங்களே அன்றி இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டவையல்ல என்பதை உணரலாம். நடுநிலையான முஸ்லிம்கள் அனைவரும் இவ்விரு முஸ்லிம் அமைப்புகளும் தங்களிடம் நிதி கேட்டு வரும் போது, இக்குறைகளை அவர்களிடம் துணிந்து சுட்டிக் காட்ட வேண்டும். ஜவாஹிருல்லாஹ், பி.ஜெ ஆகிய இருவரின் வழிகாட்டலை விட நமது தலைவர் முஹமது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலே நமக்கு இவ்வுலகில் வெற்றியையும், மறுவுலகில் ஈடேற்றத்தையும் தரும் என்பதை ரசிகர் மன்ற மனப்பான்மையில் உள்ள இவ்விரு அமைப்புகளில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

Tuesday, February 14, 2006

12 முஸ்லிம் அமைப்புகள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

முஸ்லிம் அமைப்புகள் ஆலோசனை கூட்டம் மைலாப்பூர் பிரசிடண்ட் ஓட்டலில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது தலைமை தாங்கினார்.


தமிழ்நாடு தவுகித் ஜமாத் பொதுச் செயலாளர் எஸ்.எம்.பாக்கர், பிரசிடண்ட் குரூப் தலைவர் பிரசிடண்ட் அபு, தமிழ்நாடு ஜமாத் துல் உலமா சபை தலைவர் அப்துல் காதர், ஜமாத் ஐ இஸ்லாமி மாநில செயலாளர் ஜமாலுதீன், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் உமர் பாரூக், ஜமாத்தே இஸ்லாமி செயலாளர் ஜமாலுதீன், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முகமது அலி, இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் முகமது கான், பொதுச்செயலாளர் தர்வேஷ் ரசாதி, மனித நீதிபாசறை குலாம் முகமது, தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் காஜா மஜித், காஜி சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு, தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இக்கோரிக்கையை ஜெயலலிதா ஏற்கும் பட்சத்தில் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய தேசிய லீக் தலைவர் அகமது தெரிவித்தார்.

நன்றி : மாலைமலர் (09-02-2006)