Tuesday, December 30, 2008

சென்னை புத்தகக் கண்காட்சி 2009

8 ஜனவரி 2009 முதல் 18 ஜனவரி 2009 வரை
நேரம்
வார நாட்கள்: மதியம் 2:30 முதல் 8:30 வரை
விடுமுறை நாட்கள்: காலை 11:00 முதல் இரவு 8:30 வரை
இடம்:
புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய பள்ளி (பச்சையப்பா கல்லூரி எதிரில்)
பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமைந்தகரை, சென்னை-30
Time :
Working Days : 2:30 pm to 8:30 pm
Holidays : 11:00 am to 8:30 pm
Venue :
St.George Anglo Indian School,(opp to Pachayappan college)
Poonamalee High Road,Aminjikarai, Chennai - 30.

Monday, December 08, 2008

இடது சாரி எழுத்தாளர் மாநாடு

தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
11 ஆவது மாநில மாநாடு
இடம்: பத்மராம் அரங்கம், கோடம்பாக்கம், சென்னை
18, 19, 20, 21 டிசம்பர் 2008

தொடர்பு முகவரி:
421, இரண்டாவது தளம், (பாரதி புத்தகாலயம்) அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18.

மின்னஞ்சல் : tnpwa11thstateconference@gmail.com
வலைத்தளம் : http://www.thamuyesa.org/
தொடர்புக்கு : 94440 85385, 94441 40344, 96001 28199, 044-24339024

Wednesday, December 03, 2008

பாபர் மஸ்ஜிதை மீண்டும் கட்டுவோம்!

பாபர் மஸ்ஜிதை மீண்டும் கட்டுவோம்!


நாங்கள் உன்னை மறக்கவில்லை!

இடித்தவர்களை

மன்னிக்கவில்லை!

அதே இட‌த்தில்

மீண்டும் க‌ட்டாம‌ல்

விட‌ப் போவ‌தில்லை!

ச‌ப‌த‌ம் ஏற்கிறோம்!


தொடர்புடைய பழைய பதிவு: பாபரி மஸ்ஜிதும், இடது சாரிகளும்

Tuesday, December 02, 2008

முதல்வருக்கு விடுதலை நாளிதழின் வேண்டுகோள்!

மாண்புமிகு முதல்வர் அவர்களின் முக்கிய கவனத்திற்கு,

மும்பை தாஜ் ஓட்டல், ஒபராய் மற்றும் கஃபே லியோ போல்டு, சத்ரபதி சிவாஜி தொடர்வண்டி நிலையம் ஆகியவைகளில் நடைபெற்ற 60 மணி நேர பயங்கரவாதிகளை எதிர்த்த நடவடிக்கைகள் மீண்டும் தொடரா வண்ணமும், நடந்த நிகழ்வுகளின் சதித் திட்டத்தின் வேர்களைக் கண்டறிந்து அடியோடு ஒழிக்கவும் வேண்டியது கட்சி, ஜாதி, மத, அரசியல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு தேசப் பாதுகாப்பு, சமூகப் பொறுப்புணர்வு இவைகளை மனதிற் கொண்டு அணுக வேண்டிய அவசர அவசியப் பிரச்சினை.

இது நாட்டுக் கண்ணோட்டப் பிரச்சினை; ஓட்டுக் கண்ணோட்டப் பிரச்சினை அல்ல! ஆனால் இங்குள்ள பார்ப்பன, ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ கொள்கையாளர்கள், இந்த சம்பவங்களை ஊதிஊதி, தாங்கள் நடத்தி அம்பலத்துக்கு வந்த இராணுவ ஊடுருவல், மலோகான் மற்றும் பல குண்டு வெடிப்புகளை மக்களை மறக்கச் செய்யவும், மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்கு முன்னணி ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கவும், அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க., தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில் அமைந்து அன்றாடம் சாதனைமேல் சாதனை குவிக்கும் ஆட்சிக்கு எதிராகவும், இஸ்லாமியர்கள் மீது ஒரு நிரந்தர வெறுப்பினை இதர மக்களிடம் ஏற்படுத்திடவும் தங்கள் வசமுள்ள, ஊடகங்கள், இணையதளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், சங்கங்களில் பொது விவாதம் என்ற போர்வையில், ஆட்சிகளுக்கு எதிராக ஒரு பனிப்போர் (Cold War) நடத்திட திட்டமிட்டு வருகின்றனர்!

இவ்வாறு திட்டமிட்டு நடத்தப்பெறும் இதனைக் கண்காணிப்பது மத்திய, மாநில காவல்துறை, குறிப்பாக உளவுத் துறையின் அவசர அவசிய தலையாய முன்னுரிமைக் கடமையாகும்! மக்களிடையே பீதியைக் கிளப்புதல் தவறான பிரச்சாரம் - கூட்டங்கள் நடத்தி விஷமப் பிரச்சாரம் செய்தல் என்பவைகளும் இறையாண்மைக்கு விரோதமல்லவா?

நன்றி: விடுதலை 1 டிசம்பர் 2008