Sunday, April 22, 2007

அகிலத்திற்கோர் அருட்கொடை

அகிலத்திற்கோர் அருட்கொடை

உலகத் தலைவராக விளங்கும் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள அன்பையும் பாசத்தையும் வளர்க்கவும், அவர்களின் சிறப்பையும் மேன்மையையும் உணர்ந்து செயல்படவும் ஒரே வழி, அவர்களுடைய தூய வரலாற்றைப் படிப்பதேயாகும். அவர்களுடைய வரலாற்றைப் படிப்பதன் மூலம், நேர்மையாளர் எவருக்கும் அண்ணலாரைப் பின்பற்ற வேண்டும் என்ற உணர்வு தானாகவே தோன்றிவிடும். அடுத்தவர் தூண்ட வேண்டியதில்லை.

அண்ணலாரைப் பற்றிப் படிப்பதில் கவனமும் ஆழமும் இருக்க வேண்டும். திரும்பத் திரும்ப படிக்க வேண்டும். ஒரு முறை படிக்கும்போது அண்ணலாரின் சிறப்பும் மேன்மையும் உயர்வாக வெளிப்படும். திரும்பத் திரும்பப் படிக்கும் போது அண்ணலார் மீது பற்றுதல் ஏற்படும். நெஞ்சில் நெருக்கம் அதிகமாகும்.

நூல்: அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி(ஸல்)
ஆசிரியர்: டாக்டர். இனாயத்துல்லாஹ் சுப்ஹானீ
தமிழாக்கம்: மௌலவி. அப்துல் ஹமீத் ஆமீர் உமரீ
வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
முகவரி: 138 பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை - 600 012
தொலைப்பேசி: +91 44 2662 4401
தொலை நகல்: +91 44 2662 0682
மின் அஞ்சல்: iftchennai12@gmail.com
இணையத் தளம்: http://www.iftchennai.org

விலை: ரூ.150
பக்கங்கள் 464 (கெட்டி அட்டையுடன்)