Saturday, December 16, 2006

மத நல்லிணக்கம் Vs இறைவனுக்கு இணை வைத்தல்

(தம்)செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள். அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும் மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம். (அல்குர்ஆன்: 18:103-105)

ஏர்வாடி தர்காவில் கோலாகல விழா

ஏர்வாடியில் நடந்த கோலாகல விழாவில் ஒளி வெள்ளத்தில் மிதந்து வந்த சந்தனக்கூடால் பரவசமடைந்த பக்தர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று தர்காவுக்குள் அழைத்து சென்றனர்.

மத நல்லிணக்கத்துக்கு சான்றாக திகழ்ந்து வரும் ஏர்வாடி தர்காவில், பிரசித்தி பெற்ற சந்தனக் கூடு விழா நடந்தது.

வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்த தர்காவின் சுற்றுப்புற பகுதிகளை முத்தரையர் சமூகத்தினர் தாங்கள் கொண்டு வந்த தண்ணீரால் சுத்தம் செய்தனர். சந்தனக் கூடின் அடித்தளத்தை ஆசாரி சமூகத்தினர் உருவாக்கினர்.

அலங்கரிக்கும் பொறுப்பினை ஆதி திராவிடர்கள் ஏற்றனர். ஊர்வலத்தில் வழிகாட்டுவதற்காக பிடிக்கப்படும் தீப்பந்தங்களுக்கான துணிகளை சலவை தொழிலாளர்கள் கொண்டு வந்தனர். அதில் ஊற்றப்பட வேண்டிய எண்ணெய்யை ஆதி திராவிடர்கள் வழங்கினர்.

பல்வேறு சமூகத்தினரின் முதல் மரியாதையை பெற்றுக் கொண்ட சந்தனக்கூடு, சந்தன பேழையை சுமந்து கொண்டு ஒளி வெள்ளத்தில் மிதந்தவாறு தைக்காவிலிருந்து வெளியேறியது.

சேனை கட்டிய குதிரைகள் முன்னே செல்ல, அசைந்தாடி வந்த யானையின் பின்னால் அழகோவியமாய் காட்சியளித்த சந்தனக்கூட்டினை பக்தர்கள் பரவசத்துடன் வணங்கி வரவேற்று தர்காவுக்குள் அழைத்து சென்றனர்.
புனித சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்வினை கண்டு களித்த பின்னர் பக்தர்கள் பிரசாத சந்தனத்தை பெற்றவாறு கலைந்தனர்.
விழாவினை முன்னிட்டு மதுரை, ராமநாதபுரத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முத்துச்சாமி, எஸ்.பி., திருஞானம் ஆகியோர் தர்கா சென்று வழிபாடு நடத்தினர்.

ஏற்பாடுகளை தர்கா இடைக்கால கமிட்டி செயலர் டாக்டர் ஹமீது அப்துல் காதர், கீழக்கரை வடக்கு தெரு ஜமாத் தலைவர் பசீர் மற்றும் தர்கா ஹக்தார்கள் செய்திருந்தனர்.

செய்தி உதவி: ஓசூர்-ஆன்லைன்.காம்

Thursday, December 14, 2006

இராஜாஜியும் மன்மோகன் சிங்கும்

இராஜாஜி, இந்திய விடுதலைக்கு முன் சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்துள்ளார். அப்போது, முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உரிய இடம் கிடைக்க வழிவகுத்தார். முஸ்லிம்களின் கூட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாகவும் பேசினார். ஒரு கட்டத்தில் பள்ளிகளில் 'வந்தே மாதரம்' பாடல் பாடுவதற்கு முஸ்லிம்களிடம் இருந்து எதிர்ப்பு வந்த போது, அப்பாடல் பாடுவதற்கான அரசு உத்திரவை திரும்பப் பெற்றார். (நூல் ஆதாரம்: முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி தமிழ் நாடு மற்றும் சென்னை 1930 - 1947 ஜெ.பி.பி. மோரே, வெளியீடு: அடையாளம்)

இன்று இந்திய பிரதமர், தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில், தேசிய வளர்ச்சிப் பணிகளில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனப் பேசியதற்காக, பா.ஜ.க உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கூச்சல் எழுப்புகின்றனர். 'நாட்டின் வளங்கள் அந்நிய நாட்டு நிறுவனங்களின் வேட்டைக்கு திறந்து விடப்படலாம். ஆனால், இந்நாட்டின் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய பங்கு அளிக்கப் படக்கூடாது' என்பது தான் வந்தேறிகளான சங்பரிவாரங்களின் தேசபக்தியா? ச்சீ! ச்சீ! வெட்கக் கேடு!

நகைமுகன் என்ற தேவர் சாதி வெறியன்

ந‌கைமுகன் என்ற தேவர் சாதி வெறியன் தன்னை ஒரு தீவிர தமிழ் தேசியவாதியாகக் காட்டிக் கொண்டு தமிழ் நாட்டு அரசியலில் அறிமுகமானான். நடிகர் சிவாஜி தனிக் கட்சி தொடங்கிய போது அவருக்கு ஆலோசகராக இருந்தான். டைரக்டர் ராஜேந்தர் தனிகம்பெனி நடத்திய போது அவருடன் சேர்ந்து தமிழ் தேசிய முன்னணி அமைத்து தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டான். அப்போது இவர்களுடன் கோமாளி சுப்ரமணிய சாமியும் சேர்ந்து இருந்தான். பின்னர் சிவசேனாவின் சின்னத்துடன் சேப்பாக்கம் தொகுதியில் கலைஞரை எதிர்த்து போட்டியிட்டான். சென்ற முறை கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டதில் இவனது பங்கும் உண்டு. நகை முகன் திராவிடத் தமிழர் கழகம், தனித் தமிழர் கழகம் என்ற பெயர்களில் அமைப்புகளை நடத்தினான். 'திராவிடன் வீரம்' என்ற பெயரில் பத்திரிக்கை நடத்தினான். சசிகலாவின் கணவன் நடராஜனுக்கு நெருங்கிய நண்பன். அதானல் பெரும்பாலும் அ.இ.அ.தி.மு.கவுடன் கூட்டணி கட்சியாகவும், அல்லது மறைமுக உறவுடனும் இருந்துள்ளான். தற்போது, தனித் தமிழர் சேனா என்ற பெயரில் அமைப்பு நடத்துகிறான். என்ன பெயரே உங்களுக்கு சிவ சேனாவை நினைவு படுத்துகிறதா? இப்போது இவன் இந்து மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறான். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பது இவனது கோரிக்கை. தமிழக அரசு இவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவனது அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும். தமிழக முஸ்லிம்களின் அரசியலில் உறவையும், பகையையும் தீர்மாணிப்பது அவ்வளவு எளிதல்ல. இப்போது புதிய சிக்கல்கள் தோன்றியுள்ளன. தமிழ் நாட்டு முஸ்லிம்கள் தங்கள் அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பங்க் குமாரும் பாட்டாளி மக்கள் கட்சியும்

சென்னையில் பங்க் குமார் என்ற வனிய சாதியைச் சேர்ந்த தாதா, போலீஸாரின் என்கௌண்டரால் கொல்லப்பட்டுள்ளான். இவன் ஆள் கடத்தல் பேர்வழி. சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி அதிக இடங்கள் பெற இவனது ரவுடித்தனமே காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சியினர் பெருமையுடன் ஜெயா டிவிக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்கள். அந்த பேட்டியில், இவன் சென்னை மாநகரத்தில் பா.ம.கவின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்ததாகவும், அதனைப் பொறுக்க முடியாமல் தி.மு.க ஆட்சியாளர்கள் அவனை கொன்று விட்டதாகவும் பாட்டாளி மக்கள் கட்சியினர் கூறுகின்றனர். இதற்காக, தி.மு.க ஆட்சியையே கவிழ்த்து விடப்போவதாக ஒரு வன்னிய சாதிவெறியன் பேட்டி கொடுக்கிறான்.

வெங்கடேசப் பண்ணையார் என்ற நாடார் சாதி ரவுடி ஜெயலலிதா அரசில் என்கௌண்டரில் கொல்லப்பட்டான். கருணாநிதி அவனை பெரிய தியாகி போல் சித்தரித்து, அந்த ரவுடியின் மனைவி ராதிகா செல்விக்கு எம்.பி சீட் கொடுத்தார். அந்த பெண்ணும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்று விட்டார். இது ஆலடி அருணா, ரகுமான் கான் போன்ற தகுதி வாய்ந்த தி.மு.க காரர்களைத் தாண்டி இவருக்கு வழங்கப்பட்ட எம்.பி பதவியாகும்.

டாக்டர் ராமதாஸும் பங்க் குமாரின் மறைவில் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார். வரும் தேர்தல்களில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் பா.ம.கவை கழட்டி விட்டால் தமிழ் நாட்டில் இருந்து துடைத்து குப்பைத் தொட்டியில் வீசி விடலாம். அந்தக் காலம் கனிந்து வருகிறது.

Sunday, December 10, 2006

இந்து மக்கள் கட்சியை தடை செய்!

தமிழக அரசே!
இந்து மக்கள் கட்சியை தடை செய்!
இந்து மக்கள் கட்சி, அர்ஜுன் சம்பத் என்ற இந்து பயங்கரவாதியால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சி. இவர்கள் இந்து முன்னணியில் இருந்து பிரிந்து வந்தவர்கள். இந்து முன்னணியை விட பயங்கரவாதத்தில் விஞ்சியவர்கள். கோவையில் முஸ்லிம்களை உயிருடன் எரித்த மாபாவிகள் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான். அப்போது ஜிகாத் கமிட்டியையும், அல் உம்மாவையும் தடை செய்த தமிழக அரசு இந்து முன்னணியையும், இந்து மக்கள் கட்சியையும் தடை செய்ய வில்லை. இன்று தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரியாரின் சிலைகளை உடைத்தும் சேதப்படுத்தியும் வருகின்றனர். இதனால் பெரியார் தொண்டர்கள் சில இடங்களில் எதிர்வினையாற்றி உள்ளனர். சமூக பதட்டத்தை தோற்றுவித்துள்ள இந்து மக்கள் கட்சியை தமிழக அரசு உடனடியாக தடை செய்து, அக்கட்சியைச் சேர்ந்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அது போல, தமிழ் நாட்டில் இந்து முன்னணி, சிவ சேனா ஆகிய தேச விரோத செயல்களில் ஈடுபடும் வன்முறை அமைப்புகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். பல்வேறு அமைப்புகளில் உள்ள பெரியார் பற்றாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு நெருக்குதல் கொடுத்தால் இதனை எளிதாகச் சாதிக்கலாம்.