Sunday, May 28, 2006

எது உண்மை ?


மதமாற்ற தடைச் சட்டம் 2004ம் ஆண்டிலிருந்தே அமலில் இல்லை - ஜெ, விளக்கம்

சென்னை: "எத்தனை முறை நீங்கள் திரும்பத் திரும்ப சொன்னாலும் மதமாற்ற தடைச் சட்டம் 2004ம் ஆண்டு முதல் தமிழகத்தில் அமலில் இல்லை", என்று ஜெயலலிதா பேசினார்.

சட்டசபையில் அ.தி.மு.க., உறுப்பினர்கள் கூட்டத் தொடர் முழுக்க நீக்கி வைக்கப்பட்டதால் நேற்று தனி ஆளாக ஜெயலலிதா மட்டும் சபையில் பங்கேற்றார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:

ஜெயலலிதா: கவர்னர் உரையில் உண்மைக்கு மாறான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 2004-05ம் ஆண்டில் இந்திய அளவிலான பொருளாதார வளர்ச்சி வீதம் 6.90 சதவீதமாக இருந்தது. தமிழகத்தின் வளர்ச்சி வீதம் 8.73 சதவீதமாக இருந்தது. ஆனால், கவர்னர் உரையில் தமிழகத்தின் வளர்ச்சி வீதம் தேசிய வளர்ச்சி வீதத்தை விட குறைவானது என்று குறிப்பிட்டிருப்பது உண்மைக்கு மாறான தகவல். அதேபோன்று 2005-06ம் ஆண்டில் தேசிய அளவில் வளர்ச்சி வீதம் 8.1 ஆகவும் தமிழகத்தில் 8.46 ஆகவும் இருந்தது. அதுவும் தேசிய சதவீதத்தை விட அதிகம் தான். அதேபோன்று இலவச சைக்கிள் திட்டத்துக்கு மத்திய அரசு 20 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் இரண்டாம் ஆண்டு ஆறு கோடி ரூபாய் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இலவச சைக்கிள் திட்டம் முழுக்க முழுக்க மாநில அரசின் நிதி வருவாயில் இருந்து செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். மாநில அரசுகள் சிறப்பாக செயல்படும் போது மத்திய திட்டக் கமிஷன் அதை பாராட்டி 100 கோடி ரூபாய், 50 கோடி ரூபாய் வழங்குவார்கள். அப்படி வழங்கப்பட்ட தொகையில் இருந்து மாநில அரசு 20 கோடி ரூபாயை செலவழித்தது.

சபாநாயகர்: சீக்கிரம் முடியுங்கள்.

ஜெயலலிதா: எத்தனை முறை குறுக்கீடுகள் இருந்தன.

சபாநாயகர்: உங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரைமணி நேரம் முடியப் போகிறது.

ஜெயலலிதா: நான் கடிகாரத்தை பார்க்கவில்லை. மதமாற்ற தடைச் சட்டத்தைப் பற்றி தேர்தல் நேரத்தில் முதல்வர் கருணாநிதி ஒரு கருத்தைச் சொல்லி அதற்கு நான் விளக்கம் சொல்லி அந்த பிரச்னை அப்போதே முடிந்து விட்டது. ஆனால், தற்போது கவர்னர் உரையில் மீண்டும் அதே விஷயத்தை குறிப்பிட்டுள்ளனர். இது எப்படி இருக்கிறது என்றால் இறந்து போன ஒருவரை புதைத்து அடக்கம் செய்தாகி விட்டது. அவரை மீண்டும் வெளியில் எடுத்து இறந்து விட்டாரா என்று பார்த்து புதைப்பது போல் இருக்கிறது.


முதல்வர் கருணாநிதி: சாவில் சந்தேகம் இருந்தால் தோண்டிப் பார்த்து மீண்டும் புதைப்பதில் தவறில்லை.

சி.ஞானசேகரன்(காங்கிரஸ்): ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தால் அதை சட்டசபையில் வைத்து வாபஸ் பெறுவது தான் நடைமுறை.

ஜெயலலிதா: சட்டசபை அனுமதி பெறப்படாமல் ரத்தான சட்டத்தை மீண்டும் சட்டசபையில் வைத்து ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று 85-ம் ஆண்டே சுப்ரீம் கோர்ட் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.


முதல்வர் கருணாநிதி: சுப்ரீம் கோர்ட்டே சொல்லியிருந்தாலும் சட்டசபையில் வைத்து வாபஸ் பெற்று சந்தேகத்தை போக்குவதில் தவறல்ல.

சி.ஞானசேகரன்: ஆடு, கோழி சட்டத்திற்கு மட்டும் சட்டசபையில் வைத்து வாபஸ் பெற்றீர்களே? அது ஏன்? மதமாற்ற சட்டத்தை ஏன் விட்டுவிட்டீர்கள்?

ஜெயலலிதா: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையே குறை கூறுவது வினோதமாக இருக்கிறது.

முதல்வர்: அப்படியெல்லாம் கற்பனை செய்யக் கூடாது. நான் அப்படி சொல்லவில்லை. இதுமாதிரி சொன்னால் நீங்கள் வகித்த பதவிக்கு அழகல்ல.

ஜெயலலிதா: தேர்தலின் போது மதமாற்ற தடைச் சட்டம் தொடர்ந்து அமலில் இருப்பதாக பிரசாரம் செய்தீர்கள். இப்போது, அதை சமாளிப்பதற்காக ஒரு சட்டத்தை கொண்டு வருகிறீர்கள். சட்டசபை அனுமதி பெறாவிட்டாலும் மதமாற்ற தடைச் சட்டம் ரத்தானது ரத்தானதாகவே இருக்கும்.

பொன்முடி: 85-ம் ஆண்டே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உள்ளது என்று சொன் னீர்கள். அப்படியெல்லாம் மற்ற சட்டங்களை சட்டசபையில் வைத்து வாபஸ் பெற்றது ஏன்? இந்த சட்டத்தை சபையில் வாபஸ் பெறாதது ஏன்?

ஜெயலலிதா: கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் 2004ம் ஆண்டில் இருந்தே அமலில் இல்லை. நீங்கள் எத்தனை முறை சொன்னாலும் அந்த சட்டம் அமலில் இல்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

நன்றி : தினமலர்

Saturday, May 27, 2006

முரண்பாடுகளைத் தெரிந்தது எப்படி?

பிஸ்மில்லாஹ்

அன்புச் சகோதரர் காதர் சுல்தான் (துறைமுகம் ஜித்தா) அவர்கள் கவனத்துக்கு,

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

தாங்களின் 18-05-2006 நாளின் முரண்பாடுகள் ஏன்? ஏதற்கு? என்ற தலைப்பிட்ட ஈ மெயில் செய்திகளையும் அது இயக்கமே சாராத ஒருவராகிய உங்களால் தொகுக்கப்பட்டு இயக்கம் சாராத முக்கியஸ்தர்களுக்கு(?) அனுப்பப் பட்டதையும் கண்டேன். உண்மை நிலையை உணர்ந்து கொண்டேன்.

சகோ.பீ.ஜே. அவர்களை சகோ. முஜீபுர்ரஹ்மான் அவர்கள் விமர்சிக்கிறார் என்று கூறும் உங்களின் நிலைபாடு; நீங்கள் சகோ. முஜீபுர் ரஹ்மான் அவர்களை விமர்சிக்கும் போது உண்மை என்ன பாடுபடுகிறது? என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள்.

PRO P.J. (P.J. யின் ஆதரவு) நிலையை மிக ஆழமாகச் சிந்தித்து வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள் என அறிகிறேன். மேலும் சகோ. முஜீபுர்ரஹ்மான் அவர்களுடன் நெருக்கத்தையும் பிரியத்தையும் வைத்துக் கொண்டு அவரிடம் காணும் குறைகளை நேரில் கூறுவதன் தயக்கம் உங்கள் மீது இயக்கச் சாயம் பட்டுவிடும் என்ற தூர நோக்கு சிந்தனை மிக அற்புதம்.

மேலும் சகோ. முஜீபுர் ரஹ்மான் அவர்களின் தஃவாவினால் பாதிப்படைந்தவர்களில் தாங்களும் ஒருவர் என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறீர்கள். மேலும் சகோ.முஜீபுர் ரஹ்மான் அவர்களுக்கு நான் என்ற அகந்தை கூடிக்கொண்டு வருவதையும் ஒரு சாராரை ஒழிக்க அவர் கையாளும் முயற்சிகளைக் காண்பித்து அவர் எப்படி ஒரு நல்ல இஸ்லாமிய அழைப்பாளராக ஆக முடியும்? ஏன்ற அறிவுப்பூர்வமான கேள்வியை தொடுத்துள்ளது மிக மிக அற்புதம்.

மனங்களைப் புண்படுத்தாத மாசற்ற முரண்பாடுகளை உங்கள் மேலான கவனத்துக்கு தருகிறேன்.

துறைமுக நூலக பொறுப்பாளர் சகோ.சுல்தான் அவர்கள் தஃவா கமிட்டியை உடைக்கப் பார்க்கிறார் என்று அன்று சொன்னவர்கள் இன்று அவர் தஃவா செய்கிறார் அவரையும் தஃவா கமிட்டியில் சேர்க்கவேண்டும் என்ற செய்தியை அமானிதம் பேணி உங்கள் போன்ற இயக்கம் சாராத நல்லவர்கள் தமிழுலகுக்கு நெட்டில் தந்திருக்கும் நேர்த்தியை எண்ணி உங்களின் திறந்த மனமும் பரந்த உள்ளமும் பளிச்செனத் தெரிந்தது.

மேலும் இவ்விஷயத்தில் சகோ.முஜீபுர் ரஹ்மான் அவர்களை சம்மந்தப்படுத்தி இயக்கம் சாராதோருக்கு இனிப்புச் செய்தி வழங்கிய உங்களின் திறமையே திறமை. சகோ. சுல்தான் அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை இயக்கச் சாயம் கொஞ்சம் கூட உங்கள் மீது பட்டுவிடாமல் பக்குவமாகச் சொல்லி நிலைமாறி விட்ட சகோ. முஜீபுர் ரஹ்மான் அவர்களின் தரத்தைப் பட்டியலிட்டிருக்கிறீர்கள்.

விடியல் வெள்ளி கூட்டத்தார் அன்று சென்டருக்கு வரத்தடை. இன்று பயான்களுக்கு கூட்டமில்லாத சகோ. முஜீபுர்ரஹ்மான் அவர்கள் யார் வேண்டுமானாலும் வாருங்கள். கொள்கை ஒரு பிரச்சினையே இல்லை என்றதுடன் விடியல் கூட்டத்தை தஃவா கமிட்டியில் சேர்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கும் அவரின் முரண்பாடு. இந்த சத்தியத்தை உலகுக்கு வெளிக்கொண்டு வந்த எல்லா திறமையும் உங்களையே சாரும்.

சகோ. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களை துறைமுகப் பகுதி தவிர எங்கும் பேச அனுமதி இல்லை என்று அன்று சொன்ன சகோ. முஜீபுர்ரஹ்மான் அவர்கள் இன்று விழுந்தடித்துக் கொண்டு சகோ. கோவை அய்யூப் அவர்கள் சகோ.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் ஆகியோர் நிகழ்ச்சிகளை நான் முன்னின்று நடத்துகிறேன் என்று சகோ. முஜீபுர் ரஹ்மான் அவர்கள் தடம் புரண்டது. இயக்கம் சாராத உங்கள் கண்களில் ஜாக் என்ற இயக்கம் குர்ஆன் ஹதீஸை விட்டுத் தடுமாறியதைச் சரியாக கண்டுபிடித்து தமிழுலகுக்கு தந்த திறமை அற்புதமே.

ஜின்களை வசப்படுத்தக் கிளம்பிய டாக்டர் நுபார் அவர்கள் சகோ. முஜீபுர் ரஹ்மான் அவர்களை வசப்படுத்திய விந்தையையும் சென்டரில் பயான் செய்யும் பொறுப்பைப் பெற்றதையும் விளக்கி முரண்பாட்டின் மொத்த நிலையும் சகோ. முஜீபுர் ரஹ்மான் அவர்களிடம்தான் உள்ளது என்பதை கலை நயத்துடன் இக்குவலயத்துக்குத் தந்த சிறப்பு நிச்சயம் உங்களுக்கே.

தமிழ் வாழ் மக்களால் நடத்தப்படும் மெப்கோ அமைப்பை அன்று விமர்சித்த சகோ. முஜீபுர் ரஹ்மான் அவர்கள் இன்று அவ்வியக்கம் நடத்தும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பரிதாப நிலை. இப்படி முரண்பாடுகளைப் பட்டியலிட்டு உங்கள் இயக்கம் சாரா தன்மையை இப்பூவுலகோர்க்கு எடுத்துக்கூறியிருக்கிறீர்கள். உண்மையிலேயே இயக்கம் சாராத உங்கள் போன்றோர் நிலை பிறரை சிந்திக்கத்தூண்டுகிறது. அத்துடன் ஒவ்வொரு முரண்பாட்டுக்குப் பின்னரும் உண்மை நிலை என்று நீங்கள் தந்திருக்கும் விளக்கம் - மாறாத மக்களும் மாறி விட்ட மனிதரும் என்று கோர்வையாக முரண்பாடுகளைத் தொகுத்தளித்திருக்கிறீர்கள்.

இனி இந்த முரண்பாடுகள் இயக்கம் சாராத அதன் வாடையே பிடிக்காத உங்களுக்கு எப்படி தெரிய வந்தது என்பதைப் பார்ப்போம்.

சகோ. முஹம்மது நவ்ஃபர் அவர்கள் (ஜித்தா) சனாயா இஸ்லாமிக் சென்டரில் உரையாற்றும் போது சகோ. கமாலுத்தீன் மதனீ அவர்கள் சகோ. இக்பால் மதனீ அவர்கள் சகோ.பீ.ஜே.அவர்கள் ஆகியோர் மார்க்கத்துக்கு கடந்த 25 வருடங்களாக ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து அவர்களின் உழைப்பை தியாகத்தை யாரும் கொச்சைப் படுத்தலாகாது என்று கூறியதை சகோ. பீஜே.அவர்களை மாத்திரம் சொன்னது மட்டும் உங்கள் மனதில் பதிந்தது அதியற்புதம்.

அன்புச் சகோ.காதர் சுல்தான் அவர்களே சகோ. பீ.ஜே. அவர்கள் பற்றி சகோ.முஜீபுர் ரஹ்மான் அவர்கள் விமர்சிக்கும் செய்திகள் யாவும் மார்க்க அடிப்படையில் ஆனவையே. மார்க்கத்தில் ஆய்வுகளில் ஏற்படும் குறைகளைச் சுட்டிக் காட்டுவது ஒவ்வொரு மார்க்கம் அறிந்தவரின் கடமையே. பிறருக்கு அஞ்சாது அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும். அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் கற்றறிந்த மார்க்க அறிஞர்களே என்பது வல்ல அல்லாஹ் அருள்மறையில் கூறும் அறிவுரை.

மார்க்கத்தில் விளக்கம் தருகிறேன் என்று கூறிக் கொண்டு தன் சுய விளக்கங்களை குர் ஆன் ஹதீஸூக்கு முரணாகச் சொல்வது யாராக இருந்தாலும் மாற்றுக் கருத்துக்களை விமர்சனங்களை எதிர் நோக்கித்தான் ஆக வேண்டும். இதில் நாம் விமர்சிக்கும் நபர் மார்க்க அறிஞர் மிகச்சிறந்த சிந்தனையாளர் அழைப்பாளர் ஆசிரியர் ஊர்க்காரர் உபகாரம் புரிந்த உறவுக்காரர் எழுத்தாளர் அறிவு ஜீவி ஆற்றல் மிக்கவர் என்றெல்லாம் பார்க்க கூடாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்த அன்ஸாரி நபித்தோழர்கள் ஹூனைன் போர் வெற்றிப் பொருள் பங்கீட்டில் நபி(ஸல்) அவர்களை விமர்சித்தது அதற்கு நபி(ஸல்) அவர்கள் அளித்த விளக்கத்தால் கண்ணீர் வழிந்தோட அன்ஸாரி நபித்தோழர்கள் அண்ணலாரின் அறிவுரையைப் பொருந்திக் கொண்டது- ஏகத்துவத்தை போதித்த ஏந்தல் நபிகளாரை குறைஷிய இணைவைப்பாளர்கள் குதர்க்கமான விமர்சனங்களைக் கொண்டு தூற்றிய போது நபி(ஸல்) அவர்கள் அதனை கையாண்ட முறை அல்லாஹ்வை யூதர்கள் விமர்சித்த போது அல்லாஹ்வின் அணுகுமுறை எப்படியிருந்தது? போன்ற விளக்கங்களை சனாயா சென்டரில் நிகழ்ந்த அதே நிகழ்ச்சியில் சகோ. பிஸ்மில்லாஹ்கான் ஃபைஜி அவர்கள் ஆற்றிய உரை உங்களுக்கு உணர்த்தவில்லையா?

சகோ.பீ.ஜெ.அவர்களைப் பற்றிய புகழாரம் மட்டும்தான் எனக்குப் பிடிக்கும். விமர்சனம் செய்வது பெரும்பாவம் எனக் கருதும் நீங்கள்தான் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றும் இயக்கம் சாராத மக்களுக்கு உபதேசம் செய்திருக்கிறீர்கள். மார்க்க அடிப்படையில் நிகழக்கூடிய தவறுகளை யாரும் சுட்டிக்காட்டுவதாகயிருந்தால் விமர்சிப்பவர் விமர்சனத்துக்குறியவரை நேரில் கண்டு விமர்சனத்தைக்கூறி அவரைத் திருத்தி அவருடைய நன்றியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உங்களின் உத்தியைத்தான் சகோ. முஜீபுர்ரஹ்மான் அவர்கள் கடந்த காலங்களில் கடைபிடித்து வந்திருக்கிறார்கள் என்பதை துறைமுகம் குளோப் கேம்பில் நிகழ்ந்த ஒரு கூட்டத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு மார்க்க விஷயங்களில் இவ்வாறு செயல்படுவதை மாற்றுத் தரப்பு எவ்வாறு எதிர்கொள்கிறது? என்பதை நன்கு உணர்ந்த பின்னரே பொதுமக்கள் மத்தியில் வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததை விளக்கினார்கள்.

இந்த நியாயமான எண்ணம் உங்களின் இயக்கம் சாரா நோக்கத்துக்கு இடையூறாக இருக்கலாம். இருப்பினும் சகோ. பீ.ஜே. அவர்களும் அவரைச் சார்ந்தோரும் யாரைப் பற்றி கீழ்த்தரமாக தரம்தாழ்ந்து விமர்சித்தாலும் பரவாயில்லை. சுகோ.பீ.ஜே. அவர்களை (தனிப்பட்ட முறையில் அல்ல) அவரின் மார்க்க விளக்கங்கள் தவறாக இருப்பின் விமர்சித்தால் உங்கள் போன்ற இயக்கம் சாராதோர் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் குதிப்பது வழக்கமாகி விட்டது.

தாங்களின் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்ட எந்த முரண்பாட்டிலும் மார்க்கத்துக்கு முரணான எந்த செய்தியையும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தந்து இது இப்படி தவறு எனச் சுட்டிக் காட்டினால் ஏற்றுக் கொள்வதில் நியாயமிருக்கிறது. ஆனால் அன்றைய விரோத நோக்கம் என்றென்றும் இருக்க வேண்டும் என்பது மார்க்கத்துக்கு முரணானதாகும்.

இயக்க வெறியில் உழல்பவர்கள் கூறுவது போன்று அன்று வேண்டாதவர்கள் என்றால், என்றும் வேண்டாதவர்கள்தான் என்ற நிலைபாடு மார்க்க அடிப் படையில் முழுக்க முழுக்க தவறாகும். உங்களில் ஒருவர் தன் விசுவாசியான சகோதரருடன் பிணக்கம் கொண்டு 3 நாட்களுக்கு மேல் பேசாதிருக்க வேண்டாம். அவ்விருவரில் (பிணங்கியவர்களில்)எவர் மற்றவருக்கு முதலில் ஸலாம் சொல்லிவிடுகிறாரோ அவரே அவர்களில் சிறந்தவர் என்று நபி மொழிகள் நமக்குணர்த்தும்போது நீங்கள் குறிப்படும் முரண்பாட்டை எப்படி சரி காண்பது?. நம் சகோதர இயக்கத்தவர்களைக் கூட சராசரி முஸ்லீம்களாகப் பார்க்காமல் சண்டைக்காரர்களாகப் பாவிக்க மார்க்கத்தில் ஏதேனும் ஆதாரமுள்ளதா?. சற்று சிந்தியுங்கள்.

மேலும் மார்க்க ஆய்விலுள்ள சகோ.பீ.ஜே. அவர்களின் குறைகளை சென்னையிலுள்ள அவரிடம் சென்று பேசாமல் இங்கு மார்க்கம் அறியாத மாணவர்களிடம் விளக்கம் கூறி குழப்பத்தை ஏற்படுத்துவதாக குமுறியிருக்கிறிர்கள். மார்க்கத்தை அடிமுதல் நுனிவரை முற்றாக விளங்கி இயக்கம் சாராத உங்கள் கண்களுக்கு மார்க்கத்தின் அடிப்படைகளில் ஒன்றாகிய ஹதீஸ்களில் சிலவற்றை ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுடன் மோதுகிறது என்று கூறி மறுத்து வெளியிட்டுள்ள குறுந்தகடுகளை இங்குள்ள பாமர மக்களிடம் அறியாத மக்களிடம் பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைப் பாய்ச்சும் நாசகார வேலையில் ஒருசாரார் ஈடுபட்ட போது உங்களின் இயக்கம் சாரா கண்களில் தென்படாமல் போன மர்மம் என்ன?.

நீதி பேணுதல் பற்றிய அருள்மறையின் வசனம் நன்றாக விளங்கித்தான் குறிப்பிட்டிருக்கிறீர்களா? என்று ஒருமுறை நன்கு சிந்தியுங்கள். எங்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பிற இயக்கத்தார் பேசும் மேடைகளில் பேச மாட்டார்கள் என்ற நிலைபாட்டை மார்க்கத்தில் ஒருபுறம் சொல்லிக் கொண்டு மத்ஹபுகளைப் பின்பற்றும் சாதாரண மார்க்க அறிஞர்களை விடத் தரம்தாழ்ந்து போய்விட்ட நபிவழிக்கு மாற்றமான ஒரு கூட்டத்தார்க்கு நீங்கள் போடும் பக்கவாத்தியம் உங்கள் இயக்கம் சாரா தன்மையையும் நீதி பேணும் மாண்பையும் வல்ல அல்லாஹ் உங்களுக்கு சரிவர உணர்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என எண்ணுகிறேன்.

மார்க்க அடிப்படையிலான சகோ. பீ.ஜே. அவர்களின் குர்ஆன் ஹதீஸூக்கு முரணான கருத்துக்களை நானும் விளக்கி மக்களிடம் எடுத்துக் கூறிவருகிறேன். அதுசம்மந்தமான விளக்கங்கள் உங்களுக்குத் தேவைப் பட்டால் எனது இந்த விளக்கத்துக்குப் பதில் தாருங்கள். முரண்பாடுகளை முறையே குர்ஆன் ஹதீஸ் ஒளியில் பட்டியலிட்டு ஒவ்வொன்றாக உங்கள் மேலான கவனத்துக்கு தருகிறேன்.

ஓர் அன்பான வேண்டுகோள்!
குர்ஆனுடன் மோதும் ஹதீஸை விமர்சிக்கிறேன் என்ற போர்வையில் சகோ. முஜீபுர்ரஹ்மான் அவர்களுடன் தொடர்பு படுத்தி அவரின் தாயார், மனைவி போன்றோரை மிகத் தரம் தாழ்ந்து பேசி தஃவா செய்கிறேன் என்று காழ்ப்புணர்வைத் தீர்த்துக் கொண்டது போல் வேறு யாரையும் பதம் பார்த்து விட வேண்டாம் என்று இயக்கம் சாரா உங்களையும் உங்களின் சகாக்களையும் கேட்டுக் கொள்கிறேன். (இங்குள்ள இயக்கம் சாரா தோழர்கள் அந்த அருவருப்பான விளக்கங்களை மக்கள் மத்தியில் பரப்பாமல் குறுந்தகடுகளை எடிட் செய்தது பாராட்டுக்குரியது.)

வல்ல அல்லாஹ் என்னையும் உங்களையும் நேர்வழி செலுத்தி சத்தியத்தை சரியாக உணர்ந்து அதன்படிச் செயல்பட்டு மறுமையில் சுவனப் பயனையடையும் பாக்கியவான்களாக ஆக்கி அருள் புரிவானாக.(ஆமீன்)

உங்களின் அன்புச் சகோதரன்,

நெல்லை இப்னு கலாம் ரசூல்
ஜித்தா, சவுதி அரேபியா
மொபைல் : 0562405948
மின்னஞ்சல்: haji7a@hotmail.com
வலைப்பதிவு: http://luluwalmarzan.blogspot.com

Wednesday, May 24, 2006

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு - திமுக

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு குறித்து இக்கூட்டத்தொடரிலேயே சட்டத்திருத்தம்


சென்னை : தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள 13வது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று ஆளுநர் பர்னாலா உரை நிகழ்த்தினார்.புதிய சட்டமன்றத்தின் தற்போதைய கூட்டத் தொடரில் பின்வரும் சட்டங்கள் உட்பட பல சட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று ஆளுனர் தன் உரையில் குறிப்பிட்டார்:

    • சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு ஏற்படுத் துவதற்குத் தேவையான சட்டத்திருத்தம்
      கொண்டு வரப்படும்.
    • மத மாற்றத் தடைச் சட்டத்தை முறைப்படி திரும்பப் பெறும்
      சட்ட முன் வடிவை இந்தக் கூட்டத் தொடரில் கொண்டு வரும்.
  • ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்து மதங்களிலும் இருக்கின்ற ஆதி திராவிடர்களுக்கும் கிடைத்திட வழி வகை செய்யப்படும்.

  • தலித்துகளுக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் அரசு உதவி பெறாத, சிறுபான்மையினரதல்லாத சுயநிதிக் கல்வி நிலையங்களில் கட்டாய இடவொதுக்கீட்டுக்குச் சட்டம்
  • ஏழைகளுக்கான இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் சட்டம்,
  • காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவுகளை அமல் செய்ய நடுவணரசை வலியுறுத்தல், (பாசனத்துக்காக மேட்டூரணை ஜூன் 12ல் திறக்கப்படும்.)
  • நுழைவுத் தேர்வினை ரத்து செய்வதைப் பரிசீலிக்க ஒரு ஆணையம் நிறுவப்படும,
  • எல்லா அரசுப் பள்ளிகளுக்கும் கணினி வழங்குதல்,

    ஆதாரம் : MSN INDIA.com (TAMIL)


Monday, May 22, 2006

சொல்வதைத் தெளிவாய்..

சொல்-வார்த்தை மிகவும் சக்தி வாய்ந்தவை. இதன் மூலம் ஒருவரின் உள்ளத்தை கவரவும் செய்யலாம், உலுக்கியும் எடுக்கலாம். வார்த்தைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதன் மூலம் உறவுகளை புதுப்பிக்கவும் வலுப்பெறவும் செய்யலாம். இவ்வார்த்தைப் பரிமாற்றங்களை சுற்றிவளைக்காமல் புரியும்படியாக சொல்வதே சிறந்தது என திருக்குர்ஆன் இவ்வாறு விளக்குகின்றது. சொல்வதை தெளிவாகவும் நேரடியாகவும் சொல்லுங்கள். (33:20)

சில தவறான சொற்பிரயோகத்தின் மூலம் உணர்வுகளை சீண்டி உறவுகளை முறித்துவிடுகின்றனர். எனவே நல்ல சொற்களையே பயன்படுத்த வேண்டும். நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் என்ன பேசவேண்டும் என்பதை இவ்வாறு கூறுகின்றார்கள். பேசினால் நல்லதையே பேசுங்கள், இல்லையெனில் வாய்மூடி மௌனமாக இருங்கள். (புகாரி)

நாம் பயன்படுத்தும் சொற்கள் யாவும் நமது எண்ணங்களையே பிரதிபலிக்கும் என்பதை நாம் நினைவில் நிறுத்தவேண்டும். ஏனெனில் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் செயல்கள்(சொற்களும்தான்)யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமையும். ஒருவரது எண்ணம் சரியாக தெளிவாக இருக்குமானால் அதன் வெளிப்பாடாகிய சொல் செயல் சரியானதாகவும் தெளிவானதாகவும் அமையும்.

நம்மிடையே சகதோழர் ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ ஒரு சிறு தவறை செய்துவிட்டால் நாம் அவரை காரசாரமாக கடிந்து கொள்வதோடு அவர் மனம் புண்படும்படி சில வார்த்தைகளையும் உதிர்த்துவிடுகின்றோம். இதன் பிரதிபலிப்பு அத்தோழரின் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் சிறு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இச்செயல் ஒரு தவறான முன்னுதாரணமாகும். எனவே நம்மின் சகதோழர்களுக்கிடையில் மென்மையான சொற்களை பயன்படுத்துவதோடு அவர்கள்மீது அன்பு கொள்வது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது போன்ற செயல்கள் மூலம் மனம் புண்படுவது தவிர்க்கப்படுவதோடு உள்ளங்கள் ஒன்றுபடுகின்றன. மேலும் அவர் தன்னுடைய கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் போது அவரை இடைமறித்து பேசுவது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையல்லவே, மாறாக அவர் பேசும்போது அவரின் கருத்தை முழுமையாக அவதானிப்பது சாலச் சிறந்தது.

நாம் நம்முடைய இலட்சியத்தை ஏனையோருக்கு எடுத்துச் சொல்லிடும் பணியில் அவர்களின் மனங்களை வெல்லவேண்டும், அதுவே புத்திசாலித்தனமும் கூட. விதண்டாவாதங்களை தவிர்த்துவிடுவது ஒரு அழைப்பாளனின் சிறந்த பண்பாகும். எனவே நம்முடைய கருத்துகள் மக்களை சென்றடைய வேண்டுமானால் நம்மிடமுள்ள தவறான சொற்பிரயோகம், கோபம், பயம் போன்ற ஷைத்தானின் சுவடுகளிலிருந்து வெளியேறி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த ஒழுக்க விழுமியங்களை முழுமையாக பின்பற்றி வாழும் போது வெற்றிபெற்ற முஃமின்களாக நாம் மிளிரலாம்.

- அமீர்

நன்றி: புதுயுகம் சிற்றிதழ் - மே, 2006

தேறுதல் வார்த்தைகள்

நம் அரசியல்வாதிகளிடம் சில நல்ல அணுகுமுறைகளை நாம் எதிர் பார்ப்பது நியாயமானதே!. நம்மை ஆள்பவர்களும், ஆள விரும்புபவர்களும் எப்படி இருக்க வேண்டும் என நாம் தான் தீர்மானிக்க வேண்டும். அரசின் மீதும் கட்சிகளின் மீதும் மக்கள் கட்டுப்பாட்டைச் செலுத்துவதுதான் ஜனநாயகத்தின் சிறப்பு. இன்றைய அரசியல்வாதிகளிடம் காணப்படும் தவறான இயல்புகள் களையப்பட வேண்டும். அவர்களிடம் நல்ல மாற்றங்கள் ஏற்படாமல் போனால், அனைத்து தரப்பு மக்களும் கிளர்ந்தெழுந்து மாற்றத்தை கொணர்ந்தாக வேண்டும்.

இப்போது அரசியல் உலகை பற்றியிருக்கும் ஒரு பெரும் நோய் பதவிப் பித்து. ஒரு தலைவரின் பன்முக ஆளுமையையும், வெகுஜனங்களிடம் அவரது செல்வாக்கையும் முன்னிறுத்தியே ஒரு கட்சி உயிர் வாழ்கின்றது. கொள்கைகளைவிட தனிமனிதத் தலைமையே வெகுவாக கொண்டாடப்படுகின்றது. உலகம் முழுவதும் இந்தப் போக்கு வளர்ந்து வருவதைக் காணமுடிகின்றது.

நேர்மையும், நல்லொழுக்கமும், நிர்வாகத் திறனும், சமூகப் பிரச்சனைகளில் தீர்க்கமான தெளிவும் உள்ளவர்களையே பதவி நாற்காலிகளில் அமர்த்த வேண்டும். தகுதி ஒன்று மட்டுமே அளவுகோலாகக் கொள்ளப்பட வேண்டும்.

நெஞ்சுக்குள் நேர்ந்து கொண்ட இலட்சியத்திற்காகவும், சமூக நலன் சார்ந்த கொள்கைகளுக்காக சரியான களம் தேடி அரசியல்வாதிகள் கட்சி மாறிய காலம் பழைய கதை. எந்த நேரத்தில் எங்கே சேர்ந்து எவ்வளவு சுரண்டலாம் என்ற சிந்தனையில் நாளொரு மேடையும், பொழுதொரு நடிப்புமாக, விதவிதமாக வேடமிடும் பச்சோந்தி கச்சி மாறிகளின் களமாக அரசியல் சிறுமைப்பட்டுக் கிடக்கின்றது.

நல்லவர்களின் கூட்டம் ஒதுங்கிக் கொண்டதால் நரிகளின் ராஜ 'சங்'கீதங்கள் பெருகிவிட்டன. நல்லவர்களுக்கு அரசியலில் இடமில்லை என்று ஒதுங்கி நிற்கும் போக்குத்தான் இன்றைய அனைத்து தீமைகளுக்கும் அடித்தளம். சாக்கடை என்று மூக்கைப் பிடிப்பதால் நாற்றம் போகாது. சுத்தம் செய்வதற்கு நல்லவர்கள் கூட்டம் இன்றே களம் இறங்கியாக வேண்டும். அரசியல் மட்டும் ஆரோக்கியமாக அமைந்துவிட்டால் சமூகத்தின் சகல நோய்களுக்கும் மருந்து தானாக வந்து சேரும்.

அதேவேளை சுத்தம் செய்ய களம் இறங்கும் நல்லவர்கள், எப்போதும் நாங்கள் நல்லவர்களாக இருப்போம் என்ற மனத்துணிவு உடையவர்களாக இருத்தல் அவசியம். காரணம் மிகப் பெரிய மேதைகளைக்கூட தனது சாக்கடையில் சங்கமிக்க வைத்த பெருமையே அரசியலுக்கு அதிகம். குளிக்கப் போய் பின்பு சேற்றைப் பூசிக் கொண்ட கதையாகிவிடக் கூடாது.

- இம்தியாஸ்

நன்றி: புதுயுகம் சிற்றிதழ் - மே, 2006

விஞ்ஞான முன்னேற்றத்தில் முஸ்லிம்கள்

நவீன விஞ்ஞான முன்னேற்றத்தில் முஸ்லிம்களின் பங்கு

அஹ்மத் ஹஸன் ஜுவைல் (பிறப்பு 1946) வேதியியல் அறிஞர். ஃபெம்டோ வேதியியல் துறைக்குச் செய்த பங்களிப்புக்காக 1999ம் ஆண்டின் வேதியியல் துறை நோபல் பரிசு அஹ்மத் ஹஸன் ஜுவைலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மிக மிக நுண்ணிய கால இடைவெளியில், அதாவது ஒரு ஃபெம்டோ வினாடியில் நடைபெறும் வேதிவினைகளை ஆய்வு செய்யும் துறை ஃபெம்டோ வேதியியல் எனப்படுகின்றது. ஒரு வினாடியில் நூறு கோடியில் ஒரு பங்கு. அந்த ஒரு பங்கிலும் பத்து லட்சத்தில் ஒரு பங்கு நேரம் ஒரு ஃபெம்டோ வினாடி என்று சொல்லப்படுகின்றது.எகிப்தில் அலெக்ஸாண்டிரியா அருகில் உள்ள டமன்ஹர் என்ற இடத்தில் பிறந்த அஹ்மத் ஜுவைல் அலெக்ஸாண்டிரியா பல்கலைக் கழகத்திலும், பின்னர் அமெரிக்கா பென்சில்வேனியா பல்கலைக் கழகத்திலும் பட்டம் பெற்றவர். அதிவேக லேசர் நுட்பங்களைப் பயன்படுத்தி அணு நிலையில் நடைபெறும் வினைகளை விளக்கிய அஹ்மத் ஜுவைல் ஃபெம்டோ வேதியியல் துறையின் முன்னோடி.

(நன்றி - தினமணி)
தகவல்: புதுயுகம் சிற்றிதழ் - மே, 2006

பாராட்டுக்குரியது பரதனின் கோரிக்கை

ஜனநாயக முறைப்படி பாலஸ்தீனத்தில் ஹமாஸ் ஆட்சியைப் பிடித்ததும், அந்நாட்டிற்கு இதுவரை செய்து வந்த பொருளாதார உதவியை அமெரிக்காவும், ஐநா கூட்டமைப்பும் நிறுத்தியது. மாறாக ரஷ்யா, ஈரான் மற்றும் கத்தர் தாங்களின் உதவி கரத்தை நீட்ட முன் வந்துள்ளது. இவ்வேளையில் இந்தியா மௌனமாக இருப்பது நியாயமற்றது, பாலஸ்தீன நலனுக்காக இந்திய அரசும் உதவி செய்ய ஓர் நிலையான முடிவை எடுக்க வேண்டும் என சமீபத்தில் கோரிக்கை வைத்தவர் - CPI பொது செயலர் ஏபி பரதன்.

ஆதாரம்: ஏசியன் ஏஜ் மே 9, 2006
தகவல்: புதுயுகம் சிற்றிதழ் - மே, 2006

Saturday, May 20, 2006

முஹம்மது நபியின் திருமணங்கள் (பாகம் 4)

அல்லாஹ்வின் திருப்பெயரால் ..

அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

இதற்கு முன்பு அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களுடைய தியாகத்தின் அடிப்படையில் அமைந்த இரண்டு திருமணங்களைப் பார்த்தோம் அதேஅடிப்படையில் அமைத்த மற்றொரு திருமணம்.

அன்னை ஆயிஷா சித்தீக்கா (ரலி) அன்ஹா அவர்கள்

அண்ணலார் அவர்கள் உயிரோடு வாழ்ந்த காலத்திலும் அவர்கள் மரணித்து விட்டப் பிறகும் இஸ்லாமிய வளர்ச்சிக்காக அபுபக்கர் (ரலி) அவர்கள் எவ்வாறு பாடுபட்டார்கள் என்பது இந்த உலகம் அழியும் காலம் வரையிலும் வரலாற்றின் பொண்ணேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
அபுபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை முதன் முதலில் ஏற்றுக்கொண்ட நற்பேற்றைப் பெற்றவரும், இன்னும் மிகச்சிறந்த இறையச்சம் உடையவரும், இறைத்தூதர் (ஸல்) அவர்களது தூதுத்துவப் பணிக்காலத்தில், மக்கத்துக் குறைஷிகள் சொல்லொண்ணா துயரங்களைத் தந்தபோது, அந்த இக்கட்டான தருணங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து இறைநம்பிக்கையை வெளிப்படுத்தியவரும், இன்னும் தன்னுடைய உயிரை விட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உயிரை மதித்தவரும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உற்ற தின்னைத் தோழரும் ஆவார்கள்.

ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்களையும், அபுபக்கர் (ரலி) அவர்களையும் குறைஷிக் கூட்டம் முகம் நீலம் பூர்த்து விடுமளவுக்கு நையப் புடைத்துவிடுகிறது எந்தளவுக்கெனில் மண்டை உடைந்து இரத்தம் வடிந்து அது அபுபக்கர் (ரலி) அவர்களுடைய முகம் முழுவதையும் மாற்றி விடுகிறது. அவர்கள் இறந்து விட்டார்கள் என்று விட்டு விட்டு ஓடும் நிலை ஏற்பட்டு விடுகிறது இருவரும் இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடக்கும் போது, செய்தி அறிந்து அபுபக்கர் ( ரலி ) அவர்களுடைய தாயார் அவ்விடத்திற்கு விரைந்து வந்து தங்களது மகனை மட்டும் அழைத்துச் சென்று விடுகிறார்கள் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு நினைவு வந்ததும் முதலில் அவர்களுடைய வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தை அய்னா அஷ்ஹாபி எங்கே எனது தோழர் என்பதாகும் இதை செவியுற்ற அவர்களது தாயார் அவர்களின் மீது கோபம் கொள்கிறார்கள் ( அப்பொழுது அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வில்லை ) அவரால் தானே உனக்கு இந்த நிலை என்று கடிந்து கொள்கிறார்கள்.

ஒருமுறை கைபர் யுத்தத்திற்காக நிதி திரட்டும் பொழுது வீட்டில் இருந்த தங்க வெள்ளி நாணயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கைலியில் கட்டி மூட்டையாக சுமந்து கொண்டு வந்து கொடுத்து விடுகிறார்கள் வீட்டில் எதுவும் வைத்திருக்கிறீர்களா ? என்று அண்ணல் அவர்கள் கேட்டதற்கு அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் வைத்து விட்டு மீதி அனைத்தையும் கொண்டு வந்து விட்டேன் எனக் கூறினார்கள்.

உடல், பொருள், உயிர் அனைத்தையும் இஸ்லாமிய வளர்ச்சிக்காக அர்ப்பானித்தவர்கள், முஹம்மது (ஸல்) அவர்களின் மீது உயிரையே வைத்திருந்தவர்கள் தங்களை அவர்களுடைய உறவுக்காரராக ஆக்கிக் கொள்ள விரும்பினார்கள் அதற்கு தங்களது மகள் ஆயிஷா (ரலி) அவர்களை அவர்களுக்கு திருமணம் செய்துவிக்க எண்ணினார்கள் அண்ணலார் அவர்களால் மறுக்க முடியவில்லை தனது தோழருடைய எண்ணத்தை அறிந்து கொண்டு அதற்கொப்ப இணங்குகிறார்கள்.

அன்னையவர்கள் சிறுவயதையுடையவர்களாக இருந்ததால் திருமண ஒப்பந்தம் மட்டும் நடைபெறுகிறது.

அல்லாஹ் சுப்ஹான ஹூவத்தாலா அறிவு ஜீவியாகிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்ளை தனது தந்தையைப் போன்றே இறையச்சமுடையவர்களாகவும், இஸ்லாத்தில் உறுதியான பிடிப்பு (ஈமான்) கொண்டவர்களாக வார்த்தெடுத்து விடுகிறான்.

அன்னையவர்கள் உயிருடன் வாழ்ந்த காலம் வரை அன்றைய ஆட்சியாளர்களால் இஸ்லாத்திற்கு சிறு களங்கமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்கள், அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அன்னையவர்களிடத்தில் ஆலோசனை கேட்கக் கூடியவர்களாகவும் இருந்தனர்.

ஒரு முறை அலி (ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தில் உதுமான் (ரலி) அவர்களை கொலை செய்த கொலைகாரர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் கண்டும் கானாமல் இருந்ததற்காக அரசை எதிர்த்துப் போர் பிரகடனம் செய்தார்கள். பெண்களை திரட்டி அரசை எதிர்த்து ஊர்வலம் சென்றார்கள் .

இன்றும் இஸ்லாமிய பெண்களிடையே மார்க்கப்பற்றுடன் கூடிய சமுதாயப்பற்றும் வளர்ந்ததற்கு அன்னையவர்களுடைய இஸ்லாமிய சமுதாயபட பற்று மிகப் பெரும் முன் மாதிரியாகும்.

அண்ணல் அவர்கள் மரணித்தப் பின் அவர்களுடைய உபதேசங்களையும், அவர்களுடைய அப்பழுக்கற்ற வாழ்க்கையின் ஒவ்வொரு அங்க அசைவுகளையும் மக்களிடத்திலே பல்லாயிரக் கணக்கான அறிவிப்புகளாக அறிவிக்கக் கூடிய நினைவாற்றல் கொண்டவர்களாக இருந்தனர்

அன்பிற்குரிய சகோதரர்களே !

அன்னை ஆயிஷா சித்தீக்கா (ரலி) அவர்களுடன் அண்ணல் அவர்களுக்கு நடந்த இந்த திருமணம் தனது ஆருயிர் தோழருடைய ஆவலை பூர்த்தி செய்யும் விதமாகவே அமைந்தது மாறாக அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் மீது மோகம் கொண்டு தாமாக வழியச்சென்று கேட்டு நடத்திக் கொள்ள வில்லை. இதுவும் ஒரு தியாகத்தின் அடிப்படையில் அமைந்த திருமணமேயாகும்.

மேற்கத்தியர்கள் கூறுவதுபோன்று அண்ணல் அவர்கள் பெண்பித்தராக இருந்திருப்பார்களேயானால் அன்னையவர்களுக்கு அப்பொழுது 9 வயதே ஆகியிருந்தது தாம்பத்ய வாழ்க்கைக்காக இன்னும் ஆறு, ஏழு வருடங்கள் காத்திருக்க வேண்டும், இன்னும் ஆறு, ஏழு வருடங்கள் காத்திருந்து ஒரு கன்னிப்பெண்ணை அடைவதற்கு அன்றே வேறொருக் கன்னிப் பெண்ணை அடையக்கூடிய அனைத்து வழிகளும் மிக இலகுவாகவே இருந்தது என்று இதற்கு முந்தைய கட்டுரையில் எழுதி இருந்தோம்.

மேலும் ஆறு, ஏழு வருடங்கள் காத்திருந்து ஆயிஷா (ரலி) அவர்களை அடைவதற்குரிய சுதந்திர பூமியாக அது இருக்கவில்லை. மாறாக போர்மேகங்கள் சூழ்ந்த அபாயகரமான பூமியாகத் திகழ்ந்தது. அந்த மக்களுடைய வாழ்க்கை ஒவ்வொரு நாள் என்பதை விட அவர்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அபாயகரமானதாக இருந்தது என்றால் மிகையாகாது.

மக்காவிலிருந்து விரட்டியடிக்கப் பட்டவர்கள் மதீனாவில் தங்களுக்கு ஓர் கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டதைக் கண்டு வெகுண்டெழுந்த குறைஷிகள் முழு மதீனாவையும் தாக்கி முஸ்லீம்களை அழித்து ஒழித்து விடுவதற்கு மாபெரும் சதித்திட்டம் தீட்டி கொண்டிருந்தனர், மதீனாவில் முந்தைய வேதங்களை படித்து இறுதி நபி வருகைக்காகக் காத்திருந்த யூதர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய மதீனா வருகைக்குப் பிறகு ஏராளமான யூதர்கள் இஸ்லாத்தைத் தழுவியிருந்தனர். இதனால் சினங்கொண்ட கிருஸ்தவ ரோம, பாரசீக வல்லரசுகள் மதீனாவை தாக்கி தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாபெரும் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர், மதீனாவை சுற்றி நாலாப் புறங்களிலிருந்தும் மதீனாவுக்கு பேராபத்து காத்துக் கொண்டிருந்தது இவ்வாறான பேராபத்துகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்கள் தங்களுடைய எதிர்கால சுகபோகமான வாழ்க்கைக்காக திட்டம் தீட்ட முடியுமா ? போர் கால அபாயம் சூழ்ந்த பூமியில் வாழ்பவர்கள் எதிர் கால சுகபோகத்தை செப்பனிட முடியமா ? என்பது தான் இங்கே கேள்வி, இன்னும் சொல்வதாக இருந்தால் அவர்கள் அடுத்த வேளை சாப்பாட்டிற்குக் கூட உணவை சேமித்து வைக்கக் கூடியவர்களாக இருந்ததில்லை. எவரிடத்திலாவது உணவு கூடுதலாக இருந்தால் அதை அக்கம் பக்கத்து வீட்டாரை அழைத்து வைத்து அப்பொழுதே முடித்து விடுவார்கள். அடுத்த நாளைக்கு எதுவும் இல்லை என்றால் பட்டினியாக கிடந்து விடுவார்கள் அல்லது நோன்பு என்று அறிவித்து விடுவார்கள். இந்த நிலையில் ஆறு, ஏழு வருடங்கள் கழிந்து மெச்சூர் ஆக இருக்கும் ஒருப் பெண்ணுக்காக இன்றே ஆசையை அடித்தளம் அமைக்க மடியுமா ? முடியாது !

ஆனால் இன்று சுகபோக வாழ்க்கை வாழும் மேற்கத்தியர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் என்ன, என்ன வழிகளில் உடல் சுகத்தை அடையமுடியுமோ அவ்வழிகளிலெல்லாம் அடைந்து கொள்கின்றனர், அது அவர்களுக்கு முடிகிறது அதே போல் எதிர்காலத்தில் எவ்வாறு அடைந்து கொள்வது என்றும் திட்டம் தீட்டி அதன்படியும் அடைந்து கொள்கின்றனர்; காரணம் அவர்களுடைய நாட்டிற்கு அண்டை நாடுகள் மூலம் யாதொரு போராபத்தும் ஏற்படுவதில்லை அவர்களுடைய ஆட்சியாளர்கள் தங்களிடம் நேட்டோப் பவரையும் , வீட்டோப் பவரையும் கையில் வைத்துக் கொண்டு தமது அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் கொடுத்து வருவதால் இவர்கள் சுகபோகமான எதிர்கால வாழ்வுக்கு சிறப்பான செப்பனிடுதல் சாத்தியமாகி விடுகிறது , ஆனால் அன்றும் இன்றும் என்றும் உலகில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்;க கூடிய முஸ்லீம்கள் எதிர்கால வாழ்க்கையை செப்பனிட முடியாதவர்களாகவே ஆக்கப் பட்டிருந்தார்கள், இன்றும் உலகம் முழுவதும் இதே நிலை தான்.

இன்று உலகில் ஐம்பத்தைந்திற்கும் மேற்பட்ட நாடுகளை முஸ்லீம்கள் ஆட்சி செய்கிறார்கள் (இஸ்லாம் ஆட்சி செய்ய வில்லை) அவற்றில் ஒரு நாட்டையேனும் சுட்டிக்காட்டி இந்த நாடு அச்சுறுத்தலற்று இயங்குகிறது என்றுக் கூற முடியாத அளவுக்கு எல்லா இஸ்லாமிய நாடுகளும் மேற்கத்தியர்களின் நெருக்குதலில் வாழ்ந்து வருகிறது என்றால் மிகையாகாது.

இது தான் முஸ்லிம்களுடைய அன்றைய, இன்றைய வாழ்க்கையாக இருந்து வருகிறது முஸ்லீம்களுக்கு பாதுகாப்பான நிலையான வாழ்வு மறு உலகில் மட்டுமே அமையும் மறு உலகை நம்பிவாழும் முஸ்லீம்களுக்கு துனியா ஒரு அற்பமே !

அல்லாஹ் கூறுகிறான் : உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? அல்குர்ஆன் 6:32.

அறிவுப் பூர்வமாக சிந்திப்பார்களேயானால் இத்திருமணம் தமது அன்பு தோழர் அவர்கள் தோழர் எனும் அந்தஸ்த்திலிருந்து தம்முடன் இன்னும் நெருங்கிக் கொள்ள எண்ணியதை கருத்தில் கொண்டு அமைந்தவையேயாகும், மாறாக ஆறேழு வருடம் காத்திருந்து அடைந்து கொள்வோம் என்று திட்டம் தீட்டி பலருடைய போட்டிக்கிடையில் தனக்கு வேண்டுமென்று அமைத்துக் கொண்டதல்ல என்பதை மறுமை வாழ்வை நம்பாத உலக வாழ்வின் மீது மோகம் கொண்ட மேற்கத்தியர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

அல்லாஹ் கூறுகிறான் : நிராகரிப்போரிடம் (நபியே!) நீர் கூறுவீராக: ''வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள்;, அன்றியும் (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள்; இன்னும், (நரகமான அவ்விரிப்பு) கெட்ட படுக்கையாகும் அல்குர்ஆன் : 3:12
அல்லாஹ் நாடினால் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடைய தியாகத்தின் அடிப்படையில் அமைந்த அடுத்த திருமணங்களையும் பார்ப்போம்

- அதிரை ஏ.எம்.பாரூக்

முஹம்மது நபியின் திருமணங்கள் (பாகம் 3)

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .

அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் . . .

அண்ணல் நபி (ஸல்) அவர்களை பெண் பித்தர் போன்று சித்திரம் வரைந்து வெளியிட்டது மேற்கத்தியர்களுடைய மததுவேஷத்தை வெளிப்படுத்திற்று, அல்லது அவர்களுடைய அறியாமையை வெளிப்படுத்திற்று என்று அறிந்து கொள்ளலாம், அதனடிப்படையில் அண்ணல் நபியவர்கள் பெண்பித்தராக இருந்திருப்பார்களேயானால் அவர்களது இளமைப்பருவத்தில் அவர்களை விட வயது முதிர்ந்த அன்னை ஹதீஜா ரலி அவர்களோடு வாழ்ந்த காலத்தில் பலபெண்களை மனந்திருப்பார்கள், ஆனால் அன்னையவர்கள் உயிரோடு வாழ்ந்த காலத்தில் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்பதை இதற்கு முந்தைய கட்டுரையில் அன்னை ஹதீஜா (ரலி) அன்ஹா அவர்களுடன் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பாசநேசத்துடன் வாழ்ந்த வாழ்க்கை வரலாறை சுருங்கப்பார்த்தோம், இப்பொழுது அண்ணல் நபி(ஸல்)அவர்களது அடுத்த திருமணங்களை சுருங்கப் பார்ப்போம்.

அன்னை ஸவ்தா (ரலி) அன்ஹா அவர்கள்

ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தழுவியவர்களில் அன்னை ஸவ்தா (ரலி) அவர்களும் ஒருவராவார்கள், மக்காவில் இஸ்லாம் முளைவிட ஆரம்பித்த காலத்தில் முஸ்லிம்கள் இஸ்லாமிய எதிரிகளிடம் சொல்லொனா வசைமொழிகளுக்கும், கொலைவெறி தாக்குதலுக்குட் ஆளான காலகட்டத்தில் முஸ்லிம்கள் மக்காவை விட்டு அபிஸீனியவிற்கு இடப்பெயர்ச்சி ( ஹிஜ்ரத் ) செய்தபோது அதில் அன்னையவர்களும் அவர்களது கனவர் சக்ரான் பின் அம்ர் அவர்களும் இடம்பெற்றனர், அபிஸீனியாவிற்கு சென்று மிகவும் கஷ்டபட்டு குடும்பம் நடத்துகிறார்கள் ஒரு நாட்;டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு அகதிகளாய் வருபவர்களுடைய நிலை எவ்வாறிருக்கும் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை அந்தளவுக்கு சிரமப்பட்டு வாழ்க்கை நடத்துகிறார்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரேக் காரணத்திற்காக.

அன்னையவர்கள் அபிசீனியாவில் வாழ்ந்த நாட்களில் இருமுறை ஒரே அர்த்தத்தை பிரதிபலிக்கும் கணவை கான்கிறார்கள், ஒருநாள் அண்ணல் அவர்கள் அன்னையவர்களது இல்லத்தில் நுழைந்து, அன்னையின் கழுத்தைப் பற்றிப் பிடிப்பது போலக் கனவு கண்டார்கள். இன்னுமொரு சமயத்தில், அன்னையவர்களது மடியில் நிலவு வந்து இறங்குவது போன்றும் கனவு கண்டார்கள். தான் கண்ட கனவினைத் தனது கணவரிடம் எடுத்துரைத்த பொழுது, நான் இறந்தவுடன் நீ இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொள்வாய் என்று அந்த கனவுக்கு அவரது கணவர் விளக்கமளித்தார்கள். இன்னும் எனது மரணம் நெருங்கி விட்டது, எனது மரணத்திற்குப் பின் நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொள்ளுங்கள் என்றும் அறிவுரை பகர்கிறார்கள். கூறிய சில நாட்களிலேயே நோய்வாய்ப்பட்டும் சக்ரான் (ரலி) அவர்கள் மரணமடைந்து விடுகிறார்கள். தனது கணவர் இறந்தவுடன் கைக்குழந்தைகளுடன் மக்காவுகு;கு திரும்பி விடுகிறார்கள்.

அன்னையவர்களின் தோழியர்களில் ஒருவரான கவ்லா பின்த் ஹகீம் (ரலி) என்பவர்கள் அன்றைய மக்களிடத்தில் அதிக நன்மதிப்பை பெற்றவர்களாயிருந்தார்கள், அன்னையவர்கள் கண்ட கணவை அவர்கள் அறிந்திருந்ததால் அவர்களை அண்ணல் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விட முனைப்புடன் செயல்படுகிறார்கள்.

ஒருநாள் கவ்லா (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை சந்தித்து கணவரை இழந்து பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு தனிமையில் மிகவும் சிரமப்படும் அன்னை ஸவ்தா (ரலி) அவர்களது அவல நிலையையும், இன்னும் கதீஜா (ரலி) அவர்கள் இறந்த பின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அடைந்திருக்கும் துன்ப நிலையையும் எடுத்துக் கூறி நீங்கள் கதீஜா (ரலி) அவர்களது நினைவிலேயே இருந்தால் என்னாவது ? நீங்கள் திருமணம் முடித்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறினார்கள்.

என்னை யார் மணந்து கொள்வார்கள், இன்னும் எனது மக்களையும் என்னைப் போலவே யார் கவனித்துக் கொள்வார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள்.

( பெண் பித்தராக அவர்கள் இருந்திருப்பார்களேயானால் குறைந்தபட்சம் தனது மனைவி இறந்த பிறகாவது அடுத்த மனைவியை தேடிக்கொள்ளும் வழியை கண்டறிந்து துணையை அடைந்திருப்பார்கள் மாறாக என்னை யார் மணந்து கொள்வார்கள், இன்னும் எனது மக்களையும் என்னைப் போலவே யார் கவனித்துக் கொள்வார்கள் என்று கேட்கிறார்கள். என்றால் ? அவர்களைப் பற்றின எந்த வரலாற்றுக் கிரந்தத்தை படித்து விட்டு அவ்வாறான ஒரு கேடுகெட்ட சித்திரத்தை வரைந்து தனது மதவெறியை தனித்திருப்பார்கள், அந்த கழிசடைகளுடன் இன்னும் பலரும் இணைந்து அயோக்கியத்தனத்திற்கு ஆதரவளித்திருப்பார்கள் ? என்பதை நடுநிலை சமுதாயம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளது. )

நீங்கள் திருமணம் முடித்துக் கொள்ளச் சம்மதித்தீர்கள் என்று சொன்னால், நான் உங்களுக்காக தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் பெண்ணை அணுகி அவர்களது சம்மதத்தையும் பெற்றுக் கொண்டு திரும்புகின்றேன் என்று கவ்லா (ரலி) அவர்கள் கூறி இறைத்தூதர் (ஸல்) அவர்களது சம்மதத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது சம்மதத்தைப் பெற்றுக் கொண்ட செய்தியை ஸவ்தா (ரலி) அவர்களிடம் கூறுகிறார்கள், அன்னையவர்கள் அபிசீனியாவில் இருமுறை கண்ட கணவையும், அவர்களது கணவர் சக்ரான் (ரலி) அவர்கள் இறப்பெய்வதற்கு முன்பு கணவுக்கு விளக்கமளித்ததுடன் அண்ணல் அவர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியதையும் நினைவு கூர்ந்து திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள்.

திருமணம் நடந்தேறுகிறது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னையவர்களுக்கு 400 திர்ஹம்களை மஹராகக் கொடுத்து மனமுடிக்கிறார்கள்.

அன்பிற்குரிய சகோதரர்களே !
இஸ்லாத்தின் எதிரிகள் கூறுவது போன்று அண்ணல் அவர்கள் ஒரு பெண் பித்தராக இருந்திருப்பார்களேயானால் தனது இரண்டாவது திருமணத்தையேனும் ஒரு கண்ணிப்பெண் மூலம் நடத்தி இருந்திருப்பார்கள், அவ்வாறில்லாமல் குழந்தைகளுடன் கணவனை இழந்த ஓர் விதவையை மனக்கொடை வழங்கி இரண்டாம் தாரமாக மனமுடித்துக் கொள்கிறார்கள்,
இது போன்று ஒரு சமுதாய சீர்திருத்தவாதியை, தீர்க்கதரிசியை உலகில் எவரையேனும் எவராலும் கோடிட்டு காட்ட முடியுமா ? அறவே முடியாது
வாய்கிழிய பேசுவார்கள் அவர்களுடைய சொந்த வாழ்விலே தோல்வியடைவார்கள், அல்லது மனமுடித்துக் கொள்ள மாட்டேன் எனும் பேர்வழிபோல் வேடம் போடுவார்கள், அந்தப் புறத்திலே யாருக்கும் தெரியாமல் சல்லாபிப்பார்கள், இது தான் இன்று நடந்து வருகிறது, அன்றும் நடைமுறையில் இருந்து வந்தது.

தானும் வாழவேண்டும், தன்னைப் போல பிறரும் வாழவேண்டும் இறைவனால் மனித சமுதாயம் படைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வேண்டும் எனும் நன்னோக்கில் விதவைகளுக்கும் தன்னைப் போல் தன் சமுதாயத்தவரும் வாழ்வளிக்க வேண்டும் உதவிக்கரம் நீட்ட வேண்டும்; எனும் அடிப்படையில் கைக்குழந்தைகளுடன் இருக்கும் விதவைக்கு மனக்கொடை வழங்கி வாழ்வுக்கரம் நீட்டிய அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களுடைய விதவை திருமணத்திலிருந்து மொத்த உலக சமுதாயமும் படிப்பினை பெறவேண்டும், அண்ணல் அவர்களுடைய ஒவ்வொரு அசைவுகளிலும் மனித சமுதாயத்திற்கு படிப்பினை உண்டு.
விதவைக்கும், ஏழைக்கும் உதவி செய்பவன் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்தவனைப்போலாவான். அல்லது இரவில் வணங்கி, பகலில் நோன்பு நோற்றவனைப்போலாவான். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி) அவர்கள் நூல்: புகாரி

மேற்கூறிய விதம் அண்ணல் அவர்கள் செய்து காட்டியதால் அவர்களுடைய அவ்வறிவிப்பு பொண்ணெழுத்துக்களில் பொறிக்கப்படுபவையாக உள்ளது, மறுமையை நம்பி இறையச்சத்துடன் வாழும் முஸ்லிம்கள் இன்றும் அவ்வறிவிப்பின் படி விதவைக்கு வாழ்வளிப்பவர்களைக்கண்டு வருகிறோம், அண்ணல் அவர்களுடைய லட்சக் கணக்கான அறிவிப்புகளை இன்றும் எமது முஸ்லிம் சமுதாயம் பொண்மொழிகள் என்றே கூறுவர், காரணம் அவைகள் அனைத்தும் அவர்களது வாழ்வில் நடைமுறை படுத்தியவையாகவே இருக்கும் ஒன்று கூட அவர்களது வாழ்க்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்காது.

அல்லாஹ் நாடினால் மேலும் அண்ணலெம்பெருமானார் (ஸல்) அவர்களுடைய தியாகத்தில் அமைந்த மற்ற திருமணங்களை எழுதுவோம்.

- அதிரை ஏ.எம். பாரூக்

முஹம்மது நபியின் திருமணங்கள் (பாகம் 2)

அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அன்பிற்குரிய சகோதரர்களே !

அண்ணல் நபி (ஸல்) அவர்களை பல கோணலாக சித்தரித்து சித்திரம் வரைந்து வெளியிட்டது மேல்படியார்களுடைய அறியாமையை வெளிப்படுத்திற்று அல்லது, மதத்துவேஷத்தை வெளிப்படுத்திற்று என்று அறிந்து கொள்ளலாம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தீவிரவாதியாக இருந்திருந்திருப்பார்களேயானால் அவர்களுடைய சமகாலத்து எதிரிகளை வெற்றி கொண்ட பொழுது அவர்களுடைய எதிரிகளின் மீது தீவிரவாதத்தை ஏவி இருப்பார்கள் மாறாக மன்னித்து விட்டு விடுகிறார்கள் என்பதை இதற்கு முந்தைய கட்டுரையில் எழுதி இருந்தோம்.

அவர்களுடைய அடுத்த சித்திரம் இரண்டு பெண்களுடன் நேரடியாக சொர்க்கத்திற்குள் நுழைவது போல் சித்தரித்திருந்தனர்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெண்களின் மீது மோகம் கொண்டுதான் பல பெண்களை திருமணம் முடித்தனரா? அல்லது அத்திருமணங்கள் அனைத்தும் தியாகத்தின் அடிப்படையில் அமைந்தவைகளா? என்று பார்ப்போம்.

( முதல் மனைவி ) அன்னை கதீஜா (ரலி) அன்ஹா அவர்கள்

மக்கா நகரிலிருந்து சிரியாவுக்கு சென்று வியாபாரம் செய்யும் முன்னனி நிறுவனங்களில் அன்று அன்னை கதீஜா (ரலி) அவர்களுடைய வியாபார நிறுவனம் முதல் இடத்தை பிடித்திருந்தது. எவ்வாறெனில் 300 க்கும் மேற்பட்ட ஒட்டகக்கூட்டம் வியாபார பொருட்களின் பொதிகளை சுமந்து கொண்டு அணி வகுத்துச்செல்லும். அதுவல்லாமல் அவர்களிடத்திலே விலைமதிப்புள்ள செந்நிற ஒட்டகங்களும் பலநூறு இருந்தன, அவர்களுடைய வியாபார நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்துவதற்கு தகுதியான ஒருவரை அன்னையவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளை அபூதாலிப் அவர்களிடம் வளர்ந்துவரும் முஹம்மது அவர்கள் மக்கா நகரத்தின் ஒட்டுமொத்த சமுதாயத்தினரின் உள்ளத்திலும் அல்அமீன் (நேர்மையாளர்) அஸ்ஸாதிக் (உண்மையாளர்) எனும் நம்பகத் தன்மையுடன் வாழ்ந்து வந்தார்கள். அதனால் முஹம்மது அவர்களை தனது வியாபார நிறுவனத்தை பொறுபேற்று நடத்த தகுதியானவர் எனும் முடிவுக்கு வருகிறார்கள் அதன்படி அபூதாலிப் அவர்களிடம் சொல்லி அனுப்புகிறார்கள், அபூதாலிப் அவர்களும் அண்ணல் அவர்களும் ஆலோசனை செய்து முடிவில் பெரியநிறுவனத்தில் வேலை கிடைத்தமைக்கு படைத்தவனுக்கு இருவரும் நன்றி கூறிக்கொண்டு சம்மதிக்கிறார்கள். அண்ணல் அவர்கள் அன்னை அவர்களின் நிறுவனத்தில் நேர்மையான பணியாளராக பணியாற்றி வருகிறார்கள்.

அன்னையவர்களுடைய முந்தைய கனவர் இறந்து நீண்டநாட்கள் மறுமனம் புரியாமல் இருந்ததாலும் அன்னையவர்கள் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் மிகப்பெரும் வசதி படைத்தவர்கள் என்பதாலும் அன்னை அவர்களோடு சமநிலையில் உள்ளவர்கள் பலர் அவர்களை மனமுடிக்க முனைந்தனர் அன்னை அவர்கள் அதற்கு இனங்காமல் இருந்து வந்தனர்.

அன்னையவர்களிடத்தில் பணியாற்றி வந்த அண்ணல் அவர்களின் நம்பகத்தன்மை, அமாணிதம் பேணல், உண்மை பேசுதல் போன்ற நற்குணங்களின் பால் அன்னையவர்கள் கவரப்படுகிறார்கள் அதனால் தனது வாழ்க்கை துனைவராக்கிக்கொள்ள விரும்பி அண்ணல் அவர்களுக்கு தூது அனுப்புகிறார்கள்,

அண்ணல் அவர்கள் அன்னை அவர்களிடத்தில் பணியாற்றும் போது அவர்களுடைய ஒழுக்கத்தையும், நேர்மையையும் அறிந்திருந்தார்கள் என்பதால் மனமுடித்துக் கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார்கள், திருமணம் நடந்தேறுகிறது, ஒருவருக்கொருவர் புரிந்துணர்வின் மூலம் அவர்களுடைய வாழ்க்கை இன்பகரமாக செல்லுகிறது எந்தளவுக்கென்றால் அன்னையவர்களுடைய மறைவுக்குப்பின் அன்னையவர்களுடன் இணைந்து வாழ்ந்த பசுமையான நினைவுகள் அண்ணல் அவர்களுடைய இறுதிப்பயணம் வரை வாட்டி வதைத்தது என்றால் மிகையாகாது.

அரேபியர் ஒருவருக்கு பல மனைவிகள் இருப்பதையே கவுரவமாக கருதி வாழ்ந்த காலமது. ஒரு பேரீத்தம்பழத்தை பெற்றுக்கொளள முடியாத பரம ஏழையிடத்திலும் கூட பல மனைவியர் இருந்ததாக வரலாறு கூறுகிறது, ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செல்வ சீமாட்டியை மனந்ததன் மூலம் அவர்களும் செல்வ சீமானாவகவே வாழ்ந்தார்கள், அவ்வாறு இருந்தும் அன்னை அவர்களோடு வாழ்ந்த காலத்தில் வேறொரு பெண்ணை மனமுடிக்க வில்லை,

அன்னையவர்கள் ஏற்கனவே மனமுடித்து மூன்று குழந்தைளுக்கு தாயானவர்கள், குறைந்தது அண்ணல் நபி (ஸல்) அவர்களை விட பதினைந்து வயதிற்கு மூத்தவர்களும் கூட, எந்த ஒரு இளைஞனும் தனது முதல் தாரம் கண்ணிப் பெண்ணாக அமைய வேண்டும் என்றே ஆர்வம் கொள்வான், சூழ்நிலை காரணமாக விதவை அமைந்து விட்டாலும் அடுத்தது ஒரு கண்ணிப் பெண்ணை மனமுடிக்க ஆர்வம் ஏற்படும் இதுசகஜம். ஆனாலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அதுமாதிரியான சிந்தனை அன்னையவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்திலும் ஏற்பட வில்லை மரணித்தப்பின்பும் ஏற்படவில்லை அது மட்டுமல்லாமல் அன்று அவர்கள் ஒரு கண்ணிப் பெண்ணை மனமுடித்திருந்தால் அதை அன்னையவர்களும் எதிர்க்கமுடியாது, அன்றைய சமுதாயமும் எதிர்க்க முடியாது காரணம் அன்றைய அரபுலக ஆண்வர்க்கத்தின் கலாச்சாரமே அதுவாகத்தான் இருந்தது.

ஏன் இதை நாம் குறிப்பிடுகிறோம் என்றால் அண்ணல் அவர்களை ஒரு பெண் பித்தர் என்று மத துவேஷிகளால் வர்ணிக்கப்படுவதால் இதை சுட்டிக் காட்டுகிறோம் மேலும் விஷயத்திற்கு வருவோம்.

அன்னை அவர்கள் மரணிக்கும் பொழுது அண்ணல் அவர்கள் 48 வயதை அடைந்திருந்தார்கள்.

நாமும் மனிதர்கள் என்கிற ரீதியில் நம்முடைய அனுபவ ரீதியாக சில விஷயங்களை அறிவுப் பூர்மாக சிந்திப்போம். 25 லிருந்து 48 வயதுக்குட்பட்ட பருவம் என்பது எப்படிப்பட்டதாக இருக்கும் ? இந்த பருவத்தில் அதுவும் அடுத்த மனம் புரிவதற்கு எந்த தடையுமில்லாத காலத்தில் தனது நேசமான ஒரே மனைவியுடன் சந்தோஷமாக வாழ்கிறார்கள் மேற்கத்தியர்கள் கூறுவது போன்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண்பித்தராக இருந்திருப்பார்களென்றால் அன்னையவர்களிடம் குவிந்து கிடந்த செல்வத்தை பயன்படுத்தி பலபெண்களுடன் ஏகபோக வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள் காரணம் அது அவர்களுக்கு சரியான தருனமாகும். இன்று நாம் பார்க்கிறோம் லட்சாதிபதி, கோடீஸ்வரர், மில்லியனர், பில்லியனரிடம் எவ்வளவு தான் மனம் கவர்ந்த ஒரு மனைவி இருந்தாலும், அந்தப்புறத்தில் ஒன்றல்லாமல் பலர் ஆசைநாயகிகளாக இருப்பதை பார்க்கிறோம். பெண்பித்தர் என்று வர்ணிக்கப்படும் ஒருவர் தனது வசதியை பயன்படுத்திக் கொண்டு இப்படித் தான் வாழ்வார்.

ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்

- இடையூறு இல்லாத பலதார மனக் கலாச்சாரம் நடந்து கொண்டிருந்த காலத்தில்
- தான் பெரும் கோடீஸ்வரராக இருந்த நிலையில்
- முறுக்கேரிய நடுநிலை வாலிபப் பருவமாக இருந்த நிலையில்

இத்தனை சாதகமான நிலையிருந்தும் காலச்சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளாமல்; தன்னைவிட வயது முதிர்ந்த மனைவியுடன் பாசநேசமாக வாழ்க்கை நடத்துகிறார்கள், வாலிபம் முழுவதும் அந்த மனைவியுடன் முற்றுப்பெறுகிறது

தான் பிறந்து ஓடியாடி வளர்ந்த வீட்டை விட்டு, பெற்றார், உற்றார் உறவினர்களைப் பிரிந்து எங்கிருந்தோ அமானிதமாக தன்னிடம் வந்து இணைந்து கொண்ட ஒரு ஜீவன் தான் மனைவி என்கிற பிறர் வீட்டு அடைக்கலப்பொருளாகும், இந்த பெண் தியாகியின் மீது ஒவ்வொரு கணவன்மாரும்; எவ்வாறு பாசநேசமாக வாழவேண்டும் என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்னை கதீஜா (ரலி) அவர்களோடு வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து உலகம் படிப்பினை பெறவேண்டும்.

தனக்கு மனைவியாக வருபவள் கண்ணிப் பெண்ணாக இருந்தாலும் சரி, கைவிடப்பட்ட அபலைப் பெண்ணாக இருந்தாலும் சரி, விதவையாக இருந்தாலும் சரி வயதில் மூத்தவளாக இருந்தாலும் சரி ஒருவனுக்கு மனைவி என்று வருபவள் அவனுடைய விதியில் இறைவனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவளாகும். அதனால் எந்நிலையில் ஒருத்தி தனக்கு மனைவியாக வந்தாலும் அவளுக்கு முதலில் தன்னுடைய இதயத்தில் இடமளித்து புரிந்துணர்வுடன் பாசநேசமாக வாழவேண்டும் என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம்மை விட வயது முதிர்ந்தவர்களுடன் தமது இளமைக்காலத்;தை கழித்த தியாக வரலாற்றிலிருந்து படிப்பினை பெறவேண்டும்.

இதனால் தான் அல்லாஹ் தன் திருமறையில் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. 33:21 என்றுக் கூறினான்.

ஒரு மனிதரைப்பற்றி அவருடைய உள் அந்தரங்க வாழ்க்கைகளை அக்குவேறு ஆனிவேறாக மற்றவரை விட அவருடைய மனைவியால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அப்பழுக்கற்ற வாழ்க்கையை அவர்களுடைய மனைவி என்கிற முறையில் அன்னையவர்கள் அதிகம் தெரிந்திருந்ததால் அண்ணல் அவர்களுக்கு இறைச்செய்தி இறங்கியதும் அன்னை அவர்கள் அதிக மகிழ்ச்சி அடைகிறார்கள், மேலும் அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக இதற்கு முந்தைய வேதங்களை கற்றறிந்த தனது உறவுக்காரரிடம் அழைத்துச்சென்று தனது கணவருக்கு இறைச்செய்தி இறங்கிய செய்தியை கூறுகிறார்கள் குர்ஆனுக்கு முந்தைய அனைத்து வேத கிரந்தங்களிலும் ரிக்வேதம் உட்பட முஹம்மது நபி அவர்களுடைய வருகையை உறுதிபடுத்தி இருப்பதை அவர் அறிந்தவர் என்பதால் அண்ணல் நபி அவர்களுக்கு வானவர் ஜிப்ரயீல் அவர்கள் வஹீ அறிவிக்கும் போது நடந்த நிகழ்வுகள், சூழல்களை வைத்து அவரே இறைத்தூதர் என்றும் அவரே இறுதி நபி என்றும் உண்மைபடுத்தி முஹம்மதை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள், நான் தள்ளாடும் முதுமையில் இருக்கிறேன் இன்னும் சிலகாலம் வாழ்வதாக இருந்தால் இவர்களை இந்த மக்கள் நாட்டை விட்டு விரட்டுவதை நான் கான்பேன் என்றும் எச்சரிக்கைப படுத்தி அனுப்பி வைக்கிறார். அவர் பெயர் நவ்பல் இப்னு வரக்கா.

அத்துடன் அன்னையவர்கள் ஈமான்கொண்டு முதல் இறைவிசுவாசியாகி விடுகிறார்கள், இஸ்லாமிய வளர்ச்சிக்காக தங்களுடைய முழுசெல்வத்தையும் தாரைவார்த்து விடுகிறார்கள்.செல்வ சீமாட்டியான அன்னையவர்கள் உயிருடன் வாழ்ந்த காலங்களில் அண்ணல் அவர்களோடு தாங்களும் பலகஸ்டங்களை அனுபவித்துள்ளார்கள் அண்ணல் நபி ( ஸல்) அவர்களின் மீது குறைஷிகள் ஏவிய பொருதார தடைக்கு அன்னை அவர்களும் இலக்கானார்கள், இறைச்செய்தி வந்து கொண்டிருந்த காலங்களில் கூடவே இருந்தார்கள், இடையில் இரண்டு வருடங்கள் இறைச்செய்தி இறங்காமல் இருந்த காலங்களில் அல்லாஹ் நம்மை கைவிட்டு விட்டானோ என்று அண்ணல் அவர்கள் அதிகம் கவலைக்குள்ளான நாட்களில் அண்ணல் அவர்களுக்கு ஆருதல் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். இந்த சம்பவம் அன்னையவர்களுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களிடத்தில் இறங்கும் இறைச்செய்தியின் மீது அதிகம் நம்பிக்கை சேர்த்தது, காரணம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள இறைச்செய்;தி என்று சுயமாக எதையும் கூறக் கூடியவர்களாக இருந்தால் தினமும் ஒரு செய்தியை சொல்லிக் கொண்டிருக்க முடியும், இறங்கிக் கொண்டிருப்பது இறைவேதம் தான் என்பதை மக்களிடத்தில் உறுதி படுத்துவதற்காக இதுவும் இறைவனுடைய ஏற்பாடு தான் என்பதற்கு வேரு அத்தாட்சி தேவை இவ்லை.

பெண் பித்தர் என்று மத துவேஷிகளால் கூறப்படுவது உண்மையானால் அன்னையவர்களோடு வாழ்ந்த 25 – 48 அதாவது 23வருட வாலிப பருவகாலத்தில் பல பெண்களை மனந்திருப்பார்கள். மனந்திருக்க வேண்டும். அவ்வாறு மனந்திருந்தால் எவரும் எதுவும் சொல்ல முடியாது காரணம் பலதாரமனம் என்பது இன்றைய மக்களிடத்தில் மோசமான சிந்தனை இருந்தாலும் அன்றைய மக்களிடத்திலே அது சாதாரணமாகவே கருதப்பட்டது அவ்வாறு சாதாரணமாக கருதபட்டக் காலத்தில், காலத்தின் சூழலை சாதகமாக்கி கொள்ளாமல் தனது நேசமான ஒரு மனைவியுடன் ஒரு இலட்சியத்தோடு குறிப்பிட்ட ஓர் இலக்கை ( ஓரிறை கொள்கையை ) நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். இன்றல்ல, அன்றல்ல, என்றும் இதுபோன்ற திடகாத்திரமான கட்டுப்படுத்தும் மனநிலை உள்ள முஹம்மது நபியை போல ஒரு தலைவர் எவரும் இருக்க முடியாது, இருந்ததாக வரலாறு இவ்லை.

இரண்டு பெண்களுடன் சொர்க்கத்திற்குள் நுழைவது போல் சித்தரித்திருந்த அச்சித்திரம் அவர்களுடைய கேடுகெட்ட கலாச்சாரத்தை பட்டவர்த்தனமாக பறை சாட்டுவதைக் காணலாம்.

பிஞ்சிலே பழுத்து வெம்பி விடும் இளைஞர், இளைஞிகள் அவர்களிடத்திலே மலிந்து கிடப்பதுடன்
பெண்களுடனான உல்லாசம் ஒன்று தான் சொர்க்கம் என்று நினைத்து அதில் வீழ்ந்து அதிலிருந்து எயிட்ஸ் எனும் கோடியநோயை விலைகொடுத்து வாங்கி தானும் சமுதாயத்தில் தீண்ட தகாதவர்களாகி, அதை பிறருக்கும் அறிமுகம் செய்த அவர்களே பெண் பித்தர்கள் என்பதை அவர்கள் பிறருக்காக வறைந்த சித்திரம் அவர்களை பறைசாட்டுகிறது, தனது எதிரிலுள்ளவர்களை குறை கூற உயர்த்தும் விரலுக்கு அடுத்த விரல் தன்னை சுட்டிக் காட்டுவதை சில மேதாவிகள் அறிய மாட்டார்கள், அச்சித்திரம் வரைந்தவனையும், அவனது சமூகத்தினரின் வழி தவறலையும் சுட்டிக்காட்டுவதை அறிவாளிகள் புரிந்து கொள்வார்கள் அச்சித்திரம் முழுக்க, முழுக்க மேற்கத்திய அவர்களின் கேடுகெட்ட மிருகப்புணர்ச்சி கலாச்சாரத்தையே சுட்டிக்காட்டுகிறது. மாறாக உயர்ந்த இஸ்லாமிய கலாச்சாரத்தை அல்ல.

தியாகத்தின் அடிப்படையில் அமைந்த மற்ற திருமணங்களைப பற்றி
அல்லாஹ் நாடினால் மேலும் எழுதுவோம்

- அதிரை ஏ.எம். பாரூக்

Friday, May 19, 2006

முஹம்மது நபியின் திருமணங்கள் (பாகம் 1)

டென்மார்க் கார்ட்டூன் விவகாரத்தை தொடர்ந்து சகோ. அதிரை ஏ.எம்.ஃபாரூக் அவர்களால் மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட நபியவர்களின் திருமணம் பற்றிய கட்டுரைத் தொடரை யுனிகோடில் மாற்றி இங்கு பதிகிறேன்.


அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான். நிராகரிப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை (முஸ்லீம்களை) ஏளனம் செய்கின்றனர். ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்;. அல்குர்ஆன்: 2:212

அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

இதற்கு முன்பு டென்மார்க் தயாரிப்புகளை தவிர்க்கும்படி கட்டுரை வடிவமைத்திருந்தோம், மீண்டும் பிராஸ்ஸ், ஜெர்மனி, நெதர்லேண்ட், நியூஸிலான்ட், நார்வே போன்ற நாடுகளும் இறைத்தூதர் விஷயத்தில் டென்மார்க் அத்துமீறிய செயலுக்கு தாங்களும் தோள்கொடுப்பதாக களமிறங்கியுள்ளனர், அதனால் அவர்களை முழுமனதுடன் மனதால் வெறுத்தொதுக்குவதற்காக மேலும் ஒரு விழிப்புணர்வு கட்டுரை எழுதுகிறோம்.

அமைதியே உருவான அண்ணல் நபி (ஸல்) அவர்களை தீவிரவாதியாக சித்திரிப்பது கண்டு மனம் வெதும்புகிறது, இப்பொழுது இருக்கும் இஸ்லாமிய எதிரிகளை விட அவர்களுடைய சமகாலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய எதிரிகள் கடுமையான தாக்குதல்களை அன்று இஸ்லாத்தில் ஈமான் (நம்பிக்கை) கொண்ட முஸ்லிம்கள் மீது தொடுத்தனர்.

அண்ணலார் மீது பொருளாதாரத் தடை

இஸ்லாத்தின் ஆரம்ப நிலையில் எத்தனை பேர் முஸ்லீமானார்களோ, அவர்கள் அனைவரும் அபூதாலிப் அவர்களின் அரவனைப்பின் கீழ் இருந்தனர், அதனால் நிராகரிப்போர் ஒன்று கூடி ரகசிய சதித்திட்டம் தீட்டி ஓர் அறிவிப்பை அபூதாலிப் அவர்களுக்கு அறிவித்தனர், அத்துடன் அந்த அறிவிப்பை புனித ( கஃபா) ஆலயத்தின் கதவில் எழுதி தொங்க விட்டனர்.

முஹம்மதை எங்களிடம் ஒப்படைத்து விடவேண்டும், அல்லது எங்களுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதாகும்.; அண்ணல் நபி (ஸல்); அவர்களோடு இஸ்லாத்தின் மீது ஈமான் கொண்ட அனைவரையும் ஊர் நீக்கம் செய்து அவர்களின் மீது பொருளாதாரத் தடையை ஏவினார்கள், நெஞ்சுரமிக்க அபூதாலிப் அவர்கள் தங்களது அரவனைப்பில் வாழும் முஸ்லீம்களை நடாற்றில் விட்டு விடாமல் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான நகருக்கு வெளியே உள்ள கணவாய் (பள்ளத் தாக்கிற்கு ) அவர்களை அழைத்துக் கொண்டு இடம் பெயர்ந்தனர். அவ்விடப்பெயர்ச்சி என்பது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல மாறாக மூன்று வருடங்கள் குறைவில்லாமல் நீடித்தன. காய்ந்த இலைகளையும், சருகுகளையும் உண்டு உயிர் குரல்வளையை விட்டு வெளியேறாமல் பிடித்து வைத்திருந்தனர், வயிறுகளில் கல்லை கட்டிக் கொண்டிருந்தனர். பச்சிளங்குழந்தைகள் பாலுக்காக அழுத அழுகுரல் விண்ணை முட்டியது, அண்ணல் நபி (ஸல்); அவர்களின் அன்பு மணைவி கதீஜா (ரலி) அவர்கள் மக்காவின் பணக்காரர்களின் முதல் வரிசையில் இடம் பிடித்து செல்வ செழிப்புடன் வாழ்ந்தவர்கள், அவர்களும் அன்று அந்த பள்ளத்தாக்கில் காய்ந்த சருகுகளை உண்டு உயிர் வாழ்ந்தார்கள், இன்று நாம் செவியுறக்கூடிய பொருளாதாரத் தடை என்பதெல்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு அண்ணல் நபி (ஸல்); அவர்கள் மீது குறைஷிகள் ஏவிய பொருளாதாரத் தடைக்கு கால் தூசுக்கு சமமானதாகும்.

தாயிப் நகர வீதிகளில்:

ஒருவழியாக கணவாயிலிருந்து வெளியே வந்ததும், அதே வருடம் அபுதாலிப் அவர்களும், அவர்களது அருமை மணைவி ஹதீஜா(ரலி) அவர்களும் இறந்து விடுகின்றனர், முஸ்லிம்களுக்கென்று உலகில் இருந்த ஒரே ஆதரவும்; வீழ்ந்து விடுகின்றது, முஸ்லிம்கள் நிர்க்கதியாக விடுகின்றனர், எனினும் அல்லாஹ்வுடைய உதவியைத தவிற முஸ்லிம்களின் மீது குறைஷிகளின் தாக்குதல் எல்லை மீறுகிறது, இந்நிலையில் மக்காவை விட்டு வெளியில் இஸ்லாத்திற்கு ஆதரவாளர்கள் வருகிறார்களா ? எனும் நோக்கில் தாயிஃப் நகருக்கு தன்னந்தனியே செல்கிறார்கள். நகரத்தின் முக்கியஸ்தர்கள் குண்டர்களையும் தீயவர்களையும் அண்ணலாருக்கு எதிராகத் தூண்டிவிடுகிறார்கள். அவர்கள் மக்கள் நடமாட்டம் நிறைந்த கடைவீதியில் வைத்து அண்ணலாரைக் கேலியும் கிண்டலும் செய்தார்கள், கல்லால் அடித்தார்கள். இந்த நேரத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எந்த அளவிற்கு காயமுற்றார்கள் என்றால், அவர்களின் திருமேனியிலிருந்து வடிந்த இரத்தம் அவர்களின் காலணிகளை நனைத்து விட்டது. ஆனால் அந்தக் கொடியவர்களே தொடர்ந்து கல்லால் அடித்தக் கொண்டும் வசைமொழிகள் கூறிக்கொண்டும் இருந்தனர். இறுதியில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டதினுள் சென்று தஞ்சம் புகுந்தார்கள்.

இவ்வேளை ஓர் வானவர் ஜிப்ரயீல் தோன்றி தாயிப் நகரத்தை இருமலைகளுக்கிடையில் வைத்து நசுக்கி விடவா என்று கேட்கிறார்கள். காருண்ய நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் எனக் கூறி விடுகிறார்கள். அங்கிருந்து ஒருவழியாக தடுமாறி, தடுமாறி மக்கா வந்து சேர்ந்து விடுகிறார்கள், மேலும் மக்காவில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது,

ஈமான் கொண்டோர் மீது கொலைவெறித் தாக்குதல்

கப்பாப் (ரலி) அவர்கள் என்கிற நபித் தோழர், உம்மு அம்மார் என்பவரின் அடிமையாவார். ஒரு முறை தரையில் கரியைப் பரப்பி அதில் நெருப்பு மூட்டி, அதன் மீது அவர்களைப் படுக்க வைத்தனர். ஒருவன் அவர்களுக்கு மேலிருந்து நெஞ்சின் மீது கால்களை வைத்து அவர்கள் புரண்டு படுக்காத வண்ணம் அழுத்திக் கொண்டான். நெடுநாட்கள் கழித்து கப்பாப் (ரலி) அவர்கள் ஒருமுறை தமது எரிந்துபோன முதுகின் மீது உள்சதை வெள்ளையாகத் தெரிகின்ற வடுவைக் காட்டினார்கள்.

பிலால் (ரலி) அவர்கள் என்கிற நபித்தோழர், உமய்யா பின் கலஃப் என்பவனின் அடிமையாக இருந்தார்கள். ஓவ்வொரு நாள் நண்பகல் நேரத்தில் உமய்யா, பிலால் அவர்களைக் கொதிக்கும் மணலின் மீது படுக்கவைத்து கனமான பாறாங்கல்லை அவர்களுடைய நெஞ்சின்மீது வைத்து ''இஸ்லாத்தைத் துறந்துவிடு, இல்லையெனில் இப்படியே இறந்துவிடு!'' என்று கூறுவான். ஆனால் அந்த வேதனைமிக்க நிலையிலும்கூட பிலால் (ரலி) அவர்களின் நாவிலிருந்து 'அஹத் அஹத் ' (இறைவள் ஒருவனே, இறைவள் ஒருவனே ) எனும் சொற்களே வெளிப்படும். அவர்களுடைய எஜமான் அவர்களின் கழுத்தில் கயிற்றைக் கட்டி சிறுவர்களிடம் ஒப்படைத்து விடுவான். அச்சிறுவர்கள் பிலால் அவர்களை நகரின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிவரை இழுத்துக் கொண்டு திரிவார்கள்.

அம்மார் (ரலி) அவர்கள் குறைஷிகள் இவரைத் தரையில் கிடத்தி மூர்ச்சையாகும் அளவிற்கு பலமுறை அடித்துளார்கள், இறந்து விட்டார் என்று விட்டு விட்டு செல்வார்கள், அதன் பின் தடுமாறி தடுமாறி அண்ணல் நபியவர்களிடம் வந்து சொல்லி அழுவார்கள்.

சுபைரா (ரலி) அவர்கள் அபூ ஜஹ்ல் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தார்கள். அபூஜஹ்ல் கடைசி வரை இஸ்லாத்திற்கு மாபெரும் எதிரியாக திகழ்ந்தவனும்;, முதலாமவனுமாவான் அவனுடைய அடிமை முஸ்லிமானால் விடுவானா? கண்ணில் கானும் போதெல்லாம் அடித்தான் ஒருமுறை அவர்களின் கண்கள் குருடாகிவிடும் அளவிற்கு முகத்தில் அடித்து விட்டான், கண் கலங்கி விடும் அளவிற்கு அடித்தான் என்றால் அடி முகத்தில் எவ்வாறு விழுந்திருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும்.

சுமைய்யா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஓர் அடிமைப்பெண் கொடிய குறைஷிக் கூட்டம் இந்த தியாகச் செம்மலின் மர்ம ஸ்தானத்தில் அம்பெறிந்து கொலை செய்தனர்.

மேற்கத்தியவாதிகளால் தீவிரவாதியாக சித்தரித்து சித்திரம் வரைந்த அண்ணல் அவர்களுடைய செவிக்கு இவைகள் எல்லாம் வரும்போது அழுவார்கள், மனதை திடப்படுத்திக் கொள்வார்கள், முஸ்லிம்களின் மீதான கொலைவெறி தாக்குதல் எல்லை மீறிக் கொண்டே சென்றதால் ஒருசிலரை அபிசீனியாவை நோக்கி அனுப்பி விடுகிறார்கள். இஸ்லாம் மக்காவைக் கடந்து வெளிப்பிரதேசங்களுக்கும் செல்வதை அறிந்த குறைஷிகள் இறுதியில் அண்ணல் நபி (ஸல்); அவர்களையே கொலை செய்து விடுவது என்று முடிவு செய்து விடுகின்றனர், உள்ளங்களை பார்க்கக் கூடிய ரப்புல் ஆலமீன் குறைஷிகளுடைய ரகசிய திட்டத்தை அறிந்து அண்ணலாருக்கு நாடு துறக்கும் படி தனது உத்தரவை அனுப்புகிறான்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களை கொல்வதற்காக முடிவு செய்திருந்த இரவில், அண்ணல் நபி (ஸல்); அவர்கள் அலீ (ரலி) அவர்களை அழைத்து எனக்கு ஹிஜ்ரத் செய்யும்படி கட்டளை கிடைத்துள்ளது. நான் இன்றிரவு மதீனா நகர் நோக்கிப் புறப்பட்டு விடுவேன். என்னிடம் பலருடைய அமானிதப் பொருட்கள் உள்ளன. அவற்றை நீர் மக்களுக்கு நாளை காலை திருப்பி ஒப்படைத்து விடுவீராக! எதிரிகள் நான் வீட்டில்தான் இருக்கிறேன் என்று எண்ணிக் கொள்வதற்காக நீர் இன்றிரவு என் படுக்கையில் படுத்து உறங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

அந்தக் குறிப்பிட்ட இரவில் கொலைக் கும்பல் அண்ணலாரின் இல்லத்தைச் சூழ்ந்து கொண்டார்கள். நன்கு இருட்டியவுடன் அண்ணலார் அல்லாஹ்வின் அனுமதியுடன் தமது இல்லத்தைவிட்டு வெளியேறினார்கள். அப்போது அண்ணலார் திருக்குர்ஆனில் 36 ஆவது அத்தியாயமான யாஸீனின் வசனங்கள் ஓதிய வண்ணமிருந்தார்கள். கைநிறைய மண்ணை எடுத்து 'ஷாஹத்துல் உஜூஹ்' (முகங்கள் சேதமடையட்டும்) என்று கூறிய வண்ணம் இறைமறுப்பாளர்களை நோக்கி வீசினார்கள்.

காலை விடிந்தவுடன் அண்ணல் நபி (ஸல்); அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து விட்டிருந்ததைக் கண்ட இறைமறுப்பாளர்கள் மிகுந்த கவலைக்கும் திகைப்புக்கும் ஆளானார்கள்! அண்ணலாரைத் தேடிய வண்ணம் அங்கும் இங்கும் ஓடினார்கள். அண்ணல் நபி (ஸல்); அவர்களுடன் அபூபக்கர (ரலி) அவர்களும் ஒளிந்திருந்த தவ்ர் குகையின் வாயிலுக்கே வந்துவிட்டனர்! தேடிவந்த இறைமறுப்பாளர்களின் காலடி ஓசைகளைக் கேட்டு அபூபக்கர் (ரலி) அவர்கள் கவலைக்குள்ளானர்கள். தம் உயிருக்கு ஆபத்து ஏற்படுமே எனறெண்ணி அவர்கள் கவலைப்பட வில்லை, மாறாக, அல்லாஹ்வின் தூதருக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டுவிடக்கூடாதே என்பதற்காகத்தான் கவலையடைந்தார்கள். அண்ணல் நபி (ஸல்); அவர்கள் தம் அன்புத் தோழரின் கலக்கத்தைக் கண்டு மிகவும் அமைதியுடன் பின்வருமாறு ஆறுதலளித்தார்கள்.

'கவலைப்படாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் நம்முடன் இருக்கினறான்' (9:40) அல்லாஹ்வின் கட்டளையால் குகைவாயிலில் ஒருசில அடையாளங்கள் உருவாகி விட்டிருந்தன. அவற்றைக் கண்டு இந்தக் குகையில் எவரும் நுழையவில்லை என்று இறைமறுப்பாளர்கள் எண்ணிக் கொண்டனர். இத்துடன் அண்ணலாரை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துத் தருபவர்க்கு நூறு ஒட்டகங்கள் வெகுமதியளிக்கப்படும் என்று குறைஷிக் குல இறைமறுப்பாளர்கள் அறிவித்தனர். இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் பலரும் அண்ணலாரைத் தேடி பல்வேறு திசைகளிலும் புறப்படலாயினர்.

ஆனாலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களை மதீனா கொண்டு போய்ச்சேர்த்தான், மதீனாவில் தஞ்சம் புகுந்தவர்களை கொன்றொழித்து விடுவதாற்காக அங்கே புறப்படுகிறார்கள் இப்பொழுது தான் முதன் முதலாக எதிர்க்க முடிவு செய்கிறார்கள் அதுவும் இறை உத்தரவுடன், பத்ரு யுத்தம் உருவாகிறது வெறும் 313 பரம ஏழை முஸ்லீம்கள் மட்டும் நின்று கொண்டு குறைஷிகளுடைய பலம்பொருந்திய ரானுவத்தை எதிர்த்து போரிட்டு வெற்றி கொள்கிறார்கள், அதன் பிறகும் விடாமல் தொடர்ச்சியாக பலமுறை முஸ்லீம்களின் மீது போர் தொடுக்குறார்கள் இறுதியில் மக்காவை முஸ்லீம்கள் வென்றெடுக்கிறார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு முன்பு குறைஷிகள் கூட்டம் தலைகுனிந்து நிற்கிறது அவர்கள் அனைவரையும் அண்ணல் அவர்கள் மன்னித்து விடுகிறார்கள், யாரையும் பழி வாங்க வில்லை இந்த மன்னிக்கும் அவர்களுடைய மனப்பான்மையை வைத்தே அவர்களது சமகாலத்து இறை நிராகரிப்போர் ஏராளான பேர் இஸ்லாத்தை தழுவினார்கள். இன்றும் அரபுலகம் முழுவதும் இஸ்லாமிய நாடாக திகழ்வதற்கு அண்ணல் அவர்களுடைய சகிப்புத் தன்மையே மிகப் பெரும் உதாரணமாகும்.

டென்மார்கிகளால் தீவிரவாதியாக சித்திரித்து சித்திரம் வரைந்த அண்ணல் நபி (ஸல்); அவர்கள் தீவிரவாதியாக இருந்திருப்பார்களேயானால், பிலால் (ரலி) அவர்களை சுடுமணலில் கிடத்தி சித்ரவதை செய்த உமைய்யாவை பழி வாங்கி இருப்பார்கள், அவரும் அக்கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார்

கப்பாப் (ரலி) அவர்களை நெருப்பில் புரட்டி எடுத்தவர்களின் மீது தீவிரவாதத்தை ஏவியிருப்பார்கள். அவர்களும் அக்கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார்கள்

சுமைய்யா (ரலி) அவர்களை மர்மஸ்தானத்தில் அம்பெய்தி கொலை செய்தவர்களின் மீது தீவிரவாதத்தை ஏவி இருப்பார்கள். அவர்களும் அக்கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார்கள்

ஹம்ஜா (ரலி) அவர்களுடைய ஈரலை மென்று துப்பிய ஹிந்தாவின் மீது தீவிரவாதத்தை ஏவியிருப்பார்கள் . அவரும் அக்கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார்

தாயிஃப் நகரில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீது கடைவீதியில் கல்லால் அடித்தவர்களின் மீது, அதுவும் வானவர் வந்து கேட்கும் போது மறுத்து விடுகிறார்கள், தங்களிடம் வல்லரசை வீழ்த்தக் கூடிய வலிமையான ரானுவம் உருவானபோதும் அதை செய்யவில்லை மன்னித்து விடுகிறார்கள், உயிரோடு வாழ்ந்த காலத்தில் தங்களுக்கும், தங்கள் தோழர்களுக்கு சொல்லொனா துன்பங்களை, துயரங்களையும் தொடுத்தவர்ளை மன்னித்ததாக திறந்த வெளிப் புத்தகமாக வரலாறு இருக்கையில், இவர்கள் யாருடைய வரலாற்றை படித்து விட்டு அமைதியே உருவான அண்ணல் அவர்களை தீவிரவாதியாக சித்தரித்து சித்திரம் வரைந்தார்கள் என்பது தெரியவில்லை.

அன்புச் சகோதரர்களே !
அரபு நாட்டு எண்ணெயை அவர்கள் அதிகம் உறிஞ்சுவதால் அவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரித்து விட்டிருக்கலாம் என்று நாம் நினைக்கிறோம், கொலஸ்ட்ரால் அதிகரித்து விட்டாலே உடல்நலத்தில் கோளாறு ஏற்பட்டு விடுவது சகஜம் என்பதால் அவர்களிடத்தில் கொலஸ்ட்ரால் குறைய நம்மாலான முயற்சிகளை செய்தேயாக வேண்டும், குறைந்த பட்சம் நம்மிடமிருந்து அவர்களுக்கு செல்லும் இலாபத்தை நிருத்தி விட்டால் கொலஸ்ட்ரால் தாமாக குறைந்து விடும்.

அவர்களுடைய நாட்டில் தயாரிக்கப் பட்டு அரபுநாட்டு வணிகச் சந்தையில் விற்கப்படும் பொருட்களை முஸ்லிம்கள் வாங்குவதை நிருத்திக் கொண்டாலே கொலஸ்ட்ரால் தாமாகக் குறைந்து விடும், அது அவர்களுக்கும் மாபெரும் பாடமாக அமைந்து விடும், அவர்களுடைய வழித்தொட்டு நடப்பவர்களுக்கும் அமைந்து விடும்.

செய்ய வேண்டியதை செய்து விட்டு நினைக்க வேண்டியது சாதித்து விட்டு , இறுதியில் அவர்களுடைய உதட்டளவிலான ஓர் எக்ஸ்கியூஸ் நமக்கு தேவை இல்லை, அவர்களுடைய எக்ஸ்கியூஸையும் நாம் ஏற்றாக வேண்டுமெனில் போராட்டங்களை கைவிடுவோம், அவர்களுடைய உறவு இனி நமக்கு தேவை இல்லை,

அவர்கள் கேலிச் சித்திரம் வரைந்தது ஓர் அரசியல்வாதியை அல்ல, ஒரு தடகள வீரரை அல்ல , ஒரு தொழிலதிபரை அல்ல , ஒரு நடிகரை அல்ல மாறாக இறைத் தூதரையாகும்,

அழிவின் விளிம்பில் இருந்த மனித சமுதாயத்தை உயர்வான அந்தஸ்த்துக்கு கொண்டு சென்றவர்களில் நூரு பேரை தேர்வு செய்து அந்த நூரு பேரில் முதல் அந்தஸ்த்தை முஹம்மது நபியவர்களுக்கு வழங்கி கவுரவித்தார் மைக்கேல் ஹார்ட் என்கிற கிறிஸ்தவர். நூறு பேருடைய வரலாறையும் படித்து விட்டுத் தான் அப்புத்தகத்தை அவர் எழுதினார், அவர் படித்த வரலாற்றில் அவருக்கு தெரியவில்லை முஹம்மது நபி தீவிரவாதி என்று, இவர்களுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது ? எந்த வரலாற்றைப் புறட்டிப் பார்த்தார்கள்?

''வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள். (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டத்தாரின் மனோ இச்சைகளை நீ;ங்கள் பின்பற்றாதீர்கள்;. அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 5:77)

- அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

Monday, May 15, 2006

திருந்திய சல்மா?


தேர்தலில் போட்டியிட்டு தோற்ற சல்மா திருந்திவிட்டாரா இல்லையா என்பதைப் பற்றி இங்கு சகோதரர்கள் விவாதிப்பதை காண்கிறேன். ஜூனியர் விகடனில் வெளியான இப்புகைப்படத்தில் இருப்பவர் அதே சல்மாதானா என பாருங்கள்!

Saturday, May 13, 2006

தேர்தல் முடிவுகள் - மகிழ்ச்சியும், வருத்தமும்

பூங்கா நகர் தொகுதியில் ரகுமான் கான் தோற்றிருக்கிறார். இவர் இப்போது அமைச்சர்காளாகியுள்ள உபையதுல்லாஹ், மைதீன் கான் ஆகிய இருவரை விட அமைச்சரவை பொறுப்புக்கு ஏற்றவர். இவர் எம்.எல்.ஏவாகி இருந்தால் சட்டத்துறை அமைச்சர் ஆகி இருப்பார். மருங்காபுரி தொகுதியில் கவிஞர் சல்மா தோற்று இருக்கிறார். இவர் வென்றிருந்தால், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகி இருப்பார். இப்போது அமைச்சர்களாகியுள்ள பெண் எம்.எல்.ஏக்கள், பூங்கோதை, தமிழரசி, கீதா ஜீவன் ஆகியோரை விட கவிஞர் சல்மா அமைச்சராவதற்கு தகுதியானவர். உள்ளாட்சித்துறையில் அனுபவம் பெற்றவர். உள்ளாட்சித்துறை தொடர்பாக பாகிஸ்தானுக்கும் சுற்றுப் பயணம் சென்று வந்தவர். கலைஞர், ரகுமான் கானுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு தரலாம். அல்லது மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கலாம். அல்லது சட்ட மேலவை அமைக்கப் படும் போது இடம் தரலாம். அது போலவே, கவிஞர் சல்மாவுக்கு, கட்சி பொறுப்பு அல்லது ஆட்சியில் வாரியப் பொறுப்பு தரலாம். நான் விரும்பியது போல, குடந்தையில் கோ.சி. மணி வெற்றி பெற்று அமைச்சர் ஆகியுள்ளார். மைலாப்பூரில் நடிகர் நெப்போலியன் தோற்றதற்கு நான் வருத்தப்பட வில்லை. ஆனால், ஆர்.எஸ். எஸ் சிந்தனையுள்ள நடிகர் எஸ்.வி. சேகர் வென்றதற்கு நான் மிகவும் வருத்தப் படுகிறேன்.

Wednesday, May 10, 2006

த.மு.மு.க ஏற்க வேண்டுமா? மறுக்க வேண்டுமா?

ஏற்க வேண்டுமா? மறுக்க வேண்டுமா?
சகோ.ஃபழ்லுல் இலாஹிக்கு சில கேள்விகள்:


எழுத்தாளர் சல்மா பற்றிய முகவைத்தமிழனின் பதிவிற்காக சகோ.ஃபழ்லுல் இலாஹி விமர்சனம் செய்திருந்தார். கவிஞர் சல்மாவிற்காக ஜவாஹிருல்லாவும் ஹைதர் அலியும் ஓடி ஓடி பிரச்சாரம் செய்தார்கள் என்று எழுதியுள்ளது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் உண்மைக்குப் புறம்பான பொய்ச் செய்தி என்பதையும் தெரிவித்திருந்தார். இதற்கு முகவைத்தமிழன் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்.

அக்கடிதத்தில்,

//நான் திருந்தி விட்டேன். நான் முஸ்லிம் என்பதால்தான் எனக்கு சீட் கிடைத்துள்ளது. நமது சமுதாயத்தின் சார்பில்தான் எனக்கு சீட் கிடைத்துள்ளது. எனவே சமுதாயத்திற்காக பாடுபடுவேன். எங்கள் தலைவரும் (கருணாநிதி) சொன்னார். உன் சமுதாயத்தவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று. எனவே இனி நான் முழுமையாக அரசியல் பணிகளையே செய்வேன் என்றார் ருகையா மாலிக் என்ற சல்மா.

ஏற்க வேண்டுமா மறுக்க வேண்டுமா?//

என்று சகோ. பழ்லுல் இலாஹி குறிப்பிட்டிருந்தார்.

பொதுவாக ஒரு அரசியல்வாதி, கவிஞர், போலி பெண்ணுரிமை பேசுபவர் தன்னுடைய முன்னால் செயல்களுக்கு சமுதாய நலன் கருதும் த.மு.மு.க. போன்ற முஸ்லிம் இயக்கத்திற்கு வருத்தம் தெரிவித்ததை ஏற்க வேண்டுமா? மறுக்க வேண்டுமா? என்ற அடிப்படையில் மட்டுமே இந்த விமர்சனப் பதிவு. இப்பதிவின் ஊடே பல விமர்சன குரல்கள் எழலாம். அதையெல்லாம் தவிர்த்துவிட்டு என்னுடைய விமர்சனத்திற்கு பதிலை தனியாக சகோ.ஃபழ்லுல் இலாஹி வெளியிடுவார் என்று நம்புகிறேன். அப்படியான பதிலை முத்துப்பேட்டை சகோதரர்கள் தனது வலைப்பதிவில் பதிந்தாலும் சரியே.

ஒரு முஃமின் ஒரு பொந்துக்குள் இரண்டு தடவை குட்டுப்படமாட்டான் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு.

த.மு.மு.க.வின் வாழ்வுரிமை மாநாட்டில் ஜெயலலிதா தான் பி.ஜே.பி.யுடன் கூட்டு சேர்ந்ததை சொல்லி அதற்குப் பிரயாசித்தமாக பி.ஜே.பி அரசை கவிழ்த்தேன் என்று சொன்னதை த.மு.மு.க.வின் முன்னாள் அமைப்பாளர் ஜெயலலிதா தவ்பா செய்துவிட்டார் என்றார்.

பிறகு அதே பி.ஜே.பியுடன் அவர் கூட்டணி சேர்ந்ததை அனைவரும் அறிவோம்.

அரசியல்வாதிகள் ஓட்டுக்காக கொடுத்த வாக்குறுதி குட்டுகளாக இருந்துவிடக் கூடாது அல்லவா?

சல்மாவின் வருத்தத்தை பெற்றுக்கொள்வதா இல்லையா?
இந்த போலி பெண்ணுரிமை எழுத்தாளருக்கு பலமும் பலவீனமும் இவரது எழுத்துக்களேயாகும். இவர் மனித சமுதாயத்திற்கு தூவிய விஷ வித்துக்கள் ஏராளம். அப்படிப்பட்டவர் தன் எழுத்துமூலம் தன்னுடைய படைப்புகள் வெளிவந்த இணைய இதழ்கள், பத்திரிகைகள் போன்றவற்றின் மூலம் பகிரங்கமாக, தான் செய்தது தவறு என்று ஒத்துக்கொண்டிருந்தால் அவரது வருத்தத்தை ஏற்றுக்கொள்ளலாம்.

ஜெயலலிதா ஆணையம் புதுப்பித்ததைப் பற்றி அல்லது முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பார் என்பது பற்றி ஏன் அவரது தொலைக்காட்சியில் சொல்லவில்லை?, ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை? என்ற பல கேள்விகளை அடுக்கிய த.மு.மு.க.நிர்வாகத்தினர், ஒரு கவிஞர் அதுவும் அரசியல்வாதி நான் குறிப்பிட்டவாறு பொதுவில் சொல்லாத வருத்தத்தை ஏற்பதா? மறுப்பதா?

ஓரினச்சேர்க்கை, திருமணமாகாத உறவு, மாற்றானுடன் உடலுறவு போன்றவற்றில்தான் பெண்ணுரிமை இருக்கிறது என்று நம்பும் சல்மாவுக்கு த.மு.மு.க. ஆதரவு தெரிவிப்பதை ஏற்க வேண்டுமா? மறுக்க வேண்டுமா? என்பதை சகோ.ஃபழ்லுல் இலாஹிதான் சொல்லவேண்டும்.

//நமது சமுதாயத்தின் சார்பில்தான் எனக்கு சீட் கிடைத்துள்ளது.//
கருணாநிதிக்கு முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதியாக வேறு யாரையும் தெரியவில்லையா? தி.மு.க. கட்சியினருக்கு எதிரான கருத்துகளை பரப்பும் ஒருவரை தி.மு.க.வின் பிரதிநிதியாக கலைஞர் தேர்ந்தெடுப்பாரா?

//எங்கள் தலைவரும் (கருணாநிதி) சொன்னார். உன் சமுதாயத்தவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று.//

தேர்தலில் தோற்றாலோ அல்லது வெற்றிக்கு பின்வரும் 5 ஆண்டு ஆட்சிக்குப் பிறகு என்ன செய்ய போகிறாராம். பொதுவில் வருத்தம் தெரிவித்திருந்தால் மட்டுமே அவரின் பேனா சமுதாயத்திற்கு எதிராக மீண்டும் எழுதுவதை தவிர்க்க வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படியே எழுதினாலும் மக்கள் கேள்வி கேட்பார்கள் அல்லவா?

//எனவே இனி நான் முழுமையாக அரசியல் பணிகளையே செய்வேன் என்றார் ருகையா மாலிக் என்ற சல்மா.//

இனி இதுபோன்ற சமுதாயத்திற்கு எதிரான தீய வித்துக்களை பரப்புவதில் எந்த வகையிலும் ஈடுபட மாட்டேன் என்று சொல்வதை மிக கவனமாக தவிர்த்திருக்கிறார்.

குடம் நிறைந்த விஷத்தில் ஒரு துளி பாலை நம் கண்முன்னால் கலந்துவிட்டு அது தன்மை மாறிவிடும் என்று நினைப்பது முட்டாள்தனம் அல்லவா?. விஷம் முழுவதும் வெளியே கொட்டப்பட்டு வெற்றுக்குடமாக சமுதாயத்திற்கு கிடைத்தால்கூட அதனை ஏற்றுக்கொள்ளலாம். நன்மை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தீமை வேண்டாமே.

நமது சொந்த விஷயத்தில் தவறுகள் நடந்தது என்றால் நாம் யாரிடத்தும் கேட்காமலேயே மன்னித்துவிடலாம். அவர் செய்த தவறுகள் சமுதாய விஷயத்தில் என்பதை கோடிட்டுக் காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

//ருகையா மாலிக் என்ற சல்மாவை விட மோசமானவர்களும் இன்றைய அரசியலில் இருக்கிறார்கள். அதுவும் முஸ்லிம் சமுதாய அமைப்பில் இருக்கிறார்கள். அதன் சார்பில் எம்.எல்.ஏ.வாகவும் ஆகி இருக்கிறார்கள். சல்மா பற்றிய செய்தி வெளி வந்து விட்டது. அவர்களைப் பற்றிய செய்தி வெளியே வரவில்லை அவ்வளவுதான்.//


"சமுதாய நலனே தனது உயிர் மூச்சு" என்று சொல்கின்ற த.மு.மு.க.விடம் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மேற்கண்டவை விடையாகிவிடாது.

//ஏற்க வேண்டுமா மறுக்க வேண்டுமா? இஸ்லாத்தின் நிலை என்ன?//

சல்மா பற்றிய பொதுவான விஷயங்களில் இத்தனை பிரச்னைகள் இருக்கும்போது, சமுதாய நலனுக்கு எதிராக இஸ்லாம் இருக்குமா என்ற கேள்வியை உங்களுக்கு வைப்பதோடு. இதே விஷயத்தில் இஸ்லாத்தின் நிலை என்னவென்பதைப் பற்றி விளக்கமாக ஆதாரங்களுடன் எழுதுவதற்கு, மதுரையில் நடந்த மாபெரும் தவ்ஹீத் மாநாட்டை தலைமையேற்று நடத்திவைத்த நீங்களே தகுதியானவர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

த.மு.மு.க. ஒரு சமுதாய இயக்கம் என்பதால் சல்மா விஷயத்தில் சமுதாயத்திற்கு என்ன பிரச்னை காத்திருக்கிறது என்பதை அலசினாலே போதுமானது என்பது எனது கருத்து. காரணம் த.மு.மு.க.வின் ஆதரவு சல்மாவிற்கா? என்பதுதான் பிரச்னையின் மைய கருத்தாக நான் புரிந்து வைத்துள்ளேன்.

Sunday, May 07, 2006

நம் தலைவர்கள்???

தமிழ்முஸ்லிம் யாஹு மடலாற்குழுவில் தொடங்கி பல இடங்களில் பதியப்பட்ட சகோ. சுலைமான் அவர்களின் கட்டுரை. தமிழ்முஸ்லிம் கூட்டு வலைப்பதிவு உறுப்பினர்களின் விமர்சனத்திற்காக மீள்பதிவு செய்கிறேன் -வாசகன்


என் அன்புக்குறிய சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்,

இறைவனைப் புகழ்ந்தவனாக துவங்குகிறேன்..

ஒரு சாதாரண தமிழ் நாட்டின் முஸ்லீம் குடிமகனாக தற்போது நம் சமுதாயத்தில் உள்ள ஒற்றுமை நிலை குறித்து என் மனதில் தோன்றுபவைகளை கொட்டி வைத்திருக்கிறேன். தவறுகள் இருப்பின் இறையோனுக்காய் மனம் பொறுக்கவும்.

நம்முடைய சங்கங்கள்:

இந்த தலைவர்களும், அவர்களுடைய சங்கங்களும் நம் சமுதாயத்திற்காக எதையாவது செய்யாதா என்ற ஏக்கத்தில், எதிர் காலம் எம் சமுதாயத்திற்கு எதையாவது ஒரு நல்ல பாகாப்புத் தன்மையை அளிக்காதா என்ற நோக்கில் நானும் ஒவ்வொரு நாளும் இந்த அமைப்புகளையும் அதன் தலைவர்களையும் கூர்ந்து நோக்கி கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன். என்னால் முடிந்த அளவில் உடலாளும், உழைப்பாலும், பணத்தாலும் ஒரு சாதாரண தொண்டனாக இந்த சங்கங்களுக்கு, அமைப்புகளுக்கும் உழைத்தும் என்னுடைய சிறப்பான பங்களிப்பை தந்தும் என்னுடைய கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் இந்த கழகங்களுக்காக நன்கொடையும், நிதியுதவியும் செய்து அவர்களின் புத்தக, ஆடியோ, வீடியோ, சி.டி போன்றவைகளையும் நானும் வாங்கியும், பிறருக்கு விற்பனை செய்தும் அதன் மூலமாகவும் இந்த சங்கங்களின், அமைப்புகளின் நிதி நிலையை கூட்டி இருக்கிறேன். ஆனால் இந்த சங்கங்களும், தலைவர்களும் நமக்காக இதுவரை என்ன சாதித்திருக்கிறார்கள் என்று ஒரு தொலைநோக்கு பார்வையில் பார்த்தால் எஞ்சி நிற்பது பூஜ்யம்தான்;. இந்த சங்கங்களையும், அமைப்புகளையும் அதன் தலைவர்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் இந்த அமைப்புகளுக்குள் நடக்கும் கோஷ்டி பூசல்கள் சண்டைகளையும் நினைத்தால் சலிப்பும், வெறுப்பும்தான் மிஞ்சுகிறது. நம்முடைய ஓற்றுமை மற்றும் நம் சமூக மக்களின் பாதுகாப்பு என்பது இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

இந்த சங்கங்கள் அமைப்புகள் என்ன செய்தார்கள் நமக்காக:

நம் சமுதாயத்திற்காக இந்த அமைப்புகள் ஓன்றுமே செய்யவில்லை பூஜ்யம்தான் என்று நாம் சொல்லும் போது, தான் என்ற கர்வம் பிடித்து உழலும், தாம் சொல்வதே சிறந்தது, தாம் நடத்தும் அமைப்பே சிறந்தது என்று மார்தட்டிக் கொள்ளும் நம் தலைவர்களுக்கு கோபம் வரலாம். சிலவைகளை செய்கிறார்கள். அவைகளை பற்றியும் காண்போம்.

கூட்டங்கள், மாநாடுகள் போடுகிறார்கள்:

நாங்கள் கூட்டங்கள் போடுகிறோம், மாநாடு போடுகிறோம் என்று சொல்வார்கள் அதில் கூட மார்க்க அறிஞர்களைப் போல யாரும் உரைகளை நிகழ்த்துவதில்லை. மற்ற அமைப்பினரை சாடுவதற்காகத்தான் அதிக நேரம் வாய் கிழிய பேசுகிறார்கள். மற்றவர்களை திட்டுவதற்காகவே எம் மக்களிடம் வசூல் செய்து மாநாடு போட்டு மார்தட்டி பேசி பிற அமைப்புகளை குறை கூறுவதிலேயே விரயம் செய்கிறார்கள். தம் அமைப்புக்கு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள், வேறு எதாவது உபயோகமான விளைவுகள் அந்த மாநாடுகளால் நிகழ்ந்தது என்று இந்த தலைவர்கள் சொல்வார்களா. கூட்டத்தை கூட்டி நம் மக்களின் நேரத்தையும், செல்வத்தையும் செலவழித்ததை தவிர எதையாவது உருப்படியாக இந்த அமைப்புகள் செய்திருக்குமா என்று இந்த தலைவர்கள் சொல்லட்டும்.

பத்திரிக்கைகள், புத்தக வெளியீடுகள்:

பத்திரிக்கைகள், புத்தக வெளியீடுகள் செய்கின்றார்கள், இதில் இறைமறை தமிழில், மற்றும் பயனள்ள ஹதீஸ் தொகுப்புகளை வெளியிட்டவர்களுக்காக நம் சமுதாயம் கடமைப்பட்டுள்ளது. அவர்களுக்காக நாம் எப்பவும் நம் ஆதரவை தெரிவித்துக் கொண்டும் இருக்கிறோம். அவர்கள் உழைப்பும், பணியும் பாராட்டத்தக்கது. இவைகளை தவிர்த்து குப்பைகளாக வெளிவந்து கொண்டிருக்கும் மற்ற அமைப்புகளின் பத்திரிக்கை வெளியீடுகள் பற்றிப் பார்ப்போம்.

இந்த பத்திரிக்கைகளின் தரம் கூட அதை பார்த்தால் தெரிந்துவிடும். ஏதோ பெயருக்கு சங்க நிதிக்கு வலு சேர்க்க வேண்டும் என்பதற்காகவும், தம் அமைப்பின் கொள்கை விளக்க வெளியீடாகவும் வெளியிடப்படும் சஞ்சிகைகளாகவும், மற்ற அணியினரை தாக்கி அறிக்கைப் போர் நடத்தவும்தான் அவைகள் உதவி இருக்கின்றனவே தவிர அவைகள் நம் இளைஞர்களுக்குள் ஒரு எழுச்சியையோ, எம் பெண்களுக்கு உள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதையோ புரிந்து கொள்ள முடியாத அளவில்தான் இருக்கிறது. அதில் வெளிவரும் கட்டுரைகள் மிக பழைய செய்திகளை தாங்கியிருக்கும். அது கூட எதாவது இணையத்தில், அல்லது ஆங்கில பதிப்பின் தழுவல்களை சுட்டு எழுதியிருப்பார்கள். கூடுவாஞ்சேரியில் பள்ளியில் நடந்த கலவரத்தை பற்றி தெரியாத அந்த ஊர்க்கார இளைஞரின் கையில் தவழும் நம் சங்க கொள்கை முழக்க பத்திரிக்கையில் ஈராக்கையும், பாலஸ்தீனையும், அமெரிக்காவையும் பற்றிய கட்டுரைகள். ஈராக், பாலஸ்தீனம் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் முதலில் நம் ஊர் அரசியல், சமூக சதிகளை இளைஞர்கள், பெண்கள் மத்தியில் பரப்ப வேண்டும். மற்ற பத்திரிக்கைளை பார்த்தாவது நமது பத்திரிக்கைகளின் தரத்தை கூட்ட எந்த தலைவராவது தாம் நடத்தும் பத்திரிக்கைகளில் முயன்றதுண்டா... ?

ஏற்கனவே படிப்பறிவிலும், பொது அறிவு, அரசியல், சமூக சிந்தனைகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நம் சமுதாய மக்களை இன்னும் அதள பாதாளத்தில் தள்ளும் முயற்சியாகவே இந்த பத்திரிக்கைகள் விளங்கி வருகின்றன. நாமும் இந்த குப்பைகளை வாங்கி நம் காசை கரியாக்கிக் கொண்டிருக்கிறோம். மக்களிடம் விழிப்புணர்வையும், ஒற்றுமையையும் வளர்க்க எந்த பத்திரிக்கையாவது முயன்றதுண்டா என்று சிந்தித்துப் பார்க்கவும்.

இணையத்தளங்கள், மற்றும் மிண்ணணு ஊடகங்கள்:

நம்முடைய அமைப்புகள், சங்கங்களிடையே இணையத்தளங்களுக்கு குறைவில்லை, ஆனால் அவைகள் இதுவரை என்ன பணியாற்றிருக்கிறது என்று காண்போம்.

அந்த இணையத்தளங்களை திறந்தாலே முதல் பக்கத்தில், தலைப்பு செய்தியாக, குண்டர்கள், ரவுடிகள் என்று மற்ற நம் அணியினரை தாக்கியே செய்திகள் அனுதினம் வந்து கொண்டிருக்கிறது. மற்ற அணியினரை சாடியே அதிக பக்கங்களை செலவிடுகிறார்கள் இன்டர்நெட் என்பது இன்றைக்கு எத்தனை வலிமையான ஊடகம் அவற்றை எப்படி பயன்படுத்தி பயன்பெறலாம் என்று என்றைக்காவது இந்த சங்கங்களும் அதன் நிர்வாகிகளும் ஒரு நொடியேனும் சிந்தித்திருப்பார்களா. ?

சின்ன சின்ன குழுக்களாகவும். தனி நபர்களின் ஆர்வத்தாலும் நம் சமுதாய சகோதரர்களால் நடத்தப்படும் இனையத்தளங்கள் எத்தனை வலிமையாக நடை போடுகிறது என்பதையாவது இவர்கள் உணர்ந்திருப்பார்களா ? அழைப்புப்பணி மற்றும் குர்ஆன், சுன்னாவையும் பரப்புவதில் தனிநபர் இணையத்தளங்கள் எத்தனை நன்றாக இயங்குகிறது என்பதை ஏற்றுக் கொள்வதற்கு கூட முடியாத நிலையில்தான் இன்று நம் சங்கங்களும் அதன் நிர்வாகிகளும் தான் என்ற அகந்தையில் உழல்கின்றார்கள். எப்போதாவது நம்மிடம் இருக்கும் சிறிய ஊடகங்களை வலிமையாக்க, ஆக்கபூர்வமாக உபயோகிக்க எந்த சுயநல தலைவர்களாவது சிந்தித்திருப்பார்களா ?

ஆடியோ, வீடியோ, சி.டி வெளியீடுகள்:

நம் அமைப்புகளின் மற்ற அணியினரை தாக்கியும், சுய நிலை விளக்கம் என்று வரும் ஆடியோ, வீடியோ சீ.டி வெளியீடுகளை மாற்று மதத்தினர் பார்த்தால் உங்களுக்குள்ளே இவ்வளவு குழுக்களும், குழப்பங்களும் பிரச்னைகளும் இருக்கிறதா என்று ஓடியே போய்விடுவான். அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து மற்றவரை தாக்கி வரும் வெளியீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உபயோகமான வெளியீடுகள் பற்றி மட்டும் இனி யோசிப்பார்களா இந்த தலைவர்கள்.

பாதிக்கப்பட்ட நம் சமுதாய மக்களுக்கு உதவிகள்:

கலவரங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்கின்றனர், ஆனால் கலவரம் வருவதற்கு முன்பாக என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை, நமக்குள் ஒற்றுமை நிலையை ஏற்படுத்தி வைத்தீர்கள் என்பதுதான் நம் கேள்வி. அதில் கூட பொது வசூல் செய்த பணத்தை பொதுவாக உதவிகள் செய்வது கிடையாது. பாதிக்கப்பட்ட எல்லோரையும் ஒன்றாக பார்ப்பது கிடையாது. தம் அமைப்பை சார்ந்தவர்களுக்கு மட்டுமே உதவிகள் செய்வது என்ற பாகுபாட்டையும், பிரிவினையையும் இந்த தலைவர்கள் என்றாவது களைய முயற்சித்து இருப்பார்களா ?

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

இனக் கலவரங்களால் நம் மக்கள் பாதிக்கப் படுவதற்கு முன் இந்த அமைப்புகள் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து வைத்தார்கள்;. பாதிக்கப் படும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு எதிரிகளிடம் அடி வாங்கியும், வெறித்தனமாக எம் பெண்களை சூறையாடி மானபங்கம் செய்தும், எம் குழந்தைகளையும், இளைஞர்களையும், வெட்டி நெருப்பில் வீசி எறிந்தும், நம் சமுதாய மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தும், அழித்தும் எல்லாம் முடிந்த பின்னர் அவர்களுக்காக பொது வசூல் செய்து நாடோடி கேம்ப்களில் வீடு, வாசல், சொத்து உறவினர்களை இழந்து நிற்கும் அவர்களுக்கு எதாவது உதவியை செய்து விட்டு அவர்களுக்காக பரிதாபப்படும் ஏஜெண்டுகளாகதான் நம் சங்கங்கள் இதுவரை இருந்து வந்திருக்கிறது. இத்தனை அடிபட்டும், உதைபட்டும் நம்மில் ஒற்றுமை வேண்டும் என்றும், நம் எதிரிகளை சந்திக்க அவர்களின் சதிகளை முறியடிக்க நாம் ஒன்றுபட்ட சமுதாயமாக இருக்க வேண்டும் என்று எந்த தலைவராவது அதற்காக பாடுபட்டார்களா.

ஈகோ மற்றும் தான் என்ற கர்வம் பிடித்த தலைவர்கள்:

ஏதேதோ பெரிய லாஜிக்கெல்லாம் பேசும் தலைவர்கள், கூட்டங்களில் சவால் விடும் தலைவர்கள் மிக சாதாரண விஷயமாக '' நீங்கள் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் '' என்று எம் தலைவர் நபி (ஸல் ) அவர்கள் போதித்ததை மட்டும் காதில் போட்டுக் கொள்ள யாரும் தயாராக இல்லை. இதைப்பற்றி நினைத்தாவது பார்த்திருப்பார்களா.

எல்லா தலைவர்களும் ஈகோவால், தான் என்ற மமதையால். தான் சொல்வதே சிறந்தது, தன் கட்சியே உயர்ந்தது என்றும். வறட்டு பிடிவாதம் பிடிக்கின்றார்களே ஒழிய நம் சமுதாயத்திற்கும் அதிலும் குறிப்பாக நம் பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பை ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம் நாம் என்ன நிலையில் இன்று இருக்கின்றோம் என்று இந்த தலைவர்கள் உணர்வார்களா. அநேக குடும்பங்களில் ஆண்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருக்க பெண்களும், குழந்தைகளும், முதியவர்களுமே இருக்கும் நம் சமுதாய மக்களின் பாதுகாப்பு நிலை என்ன என்று உணர்வார்களா இந்த தலைவர்கள்.

பம்பாய், குஜராத், பாபரி மஸ்ஜித், கோவை (இன்னும் எத்தனையோ) சம்பவங்கள் நடந்து நடு ரோட்டில் எம் பெண்களை மானபங்கப்படுத்தி, எம் குழந்தைகளை கொன்று தீயில் போட்டு எரித்த பின்னர் எஞ்சி அறைகுறையாக செத்து ஏதாவது ஒரு அகதிகள் கேம்பில் இருப்பவர்களுக்கு பொது வசூல் செய்து உதவி செய்வதுதான் நம் கழகங்கள் செய்யும் பணியா ? அதற்காகத்தான் இவர்கள் கழகம் நடத்துகிறார்களா ?

இந்த சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னர் எல்லாம் கூடி ஆர்பாட்டம் செய்ததில் என்ன நன்மையை இதுவரை கண்டோம் என்று நம் எல்லோரும் அறிந்ததே. அதையேனும் இந்த தலைவர்கள் உணர்வார்களா.?

போர்களமாய் பிற அணியினருடன்:

இவை எல்லாவற்றையம் விட அசிங்கமான செயல் இப்பபோது நம்மிடையே பிரிந்து கிடக்கும் கழகங்களிடையே காண முடிகிறது. நமக்குள்ளாகவே அடித்துக் கொள்வதும். ஒருவர் மற்றவரை தாக்கி அறிக்கைப் போர் என்று எல்லா ஊடகங்களிலும் எவரையாவது திட்டியும், புறம் பேசியும் வசை பாடியும் போர்களமாகதான் காட்சியளிக்கிறது. காவல் நிலையங்களுக்கு கூட சென்று மற்ற அணியினர் மீது புகார்கள் தந்தும். வழக்குகள் தொடர்ந்தும் தங்கள் தரத்தையும் தாழ்த்திக் கொள்ள இந்த மார்க்க அறிஞர்களும், இந்த அமைப்புகளும், தலைவர்களும் தயங்குவதில்லை.

இந்த தலைவர்களுக்கு:

இந்த தலைவர்களுக்கு ஒன்று நாம் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். நம் எதிரிகள், அந்நிய சக்திகள் நம்மை வேறறுக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள், அதற்கு முன்னால் நீங்களாகவே நமக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு பலவீனப்பட்டுப் போகாதீர்கள் அவர்களிடமும் கொஞ்சம் உதை வாங்குவதற்காக பிரிந்து கிடந்து பலவீனப்பட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் சக்தியை கொஞ்சம் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். நம் எதிரிகள் எல்லோரும் ஓரணியில் நின்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தக்க தருணம் பார்த்து நம் மீது பாயவும் காத்திருக்கிறார்கள் என்பதை எப்பவும் மனதில் வைத்து செயல்படுங்கள்.

நம் அரசியல் நிலை:

அரசியலில் மிக சாதுர்யமாக காய்களை நகர்த்தித்தான் நம் எதிரிகள் நம்மை பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே நாமும் பல்வேறு மதங்கள் வாழும் இந்த சமுதாயத்தில் நம் குரல் பாராளுமன்றத்திலும், நாடாளு மன்றத்திலும் ஒலிக்க வேண்டும், நமக்கென்று நம்முடைய குறைகளை எடுத்து வைக்க நம் பிரதிநிதிகள் அரசியலில் பங்கு வகிக்க வேண்டும் என்ற எண்ணமாவது தோன்றியிருக்கிறதா இதுவரை அதற்கான எந்த முன்னேற்பாடுகளை செய்து வைத்திருக்கின்றீர்கள். அரசியலே வேண்டாம் என்று நாம் ஒதுங்கி விலகிப் போய்விட முடியாது.

என்ன நிலையை தேர்வு செய்வது:

அரசியலையும், ஆண்மீகத்தையும் ஒன்றாக போட்டு நாம் குழப்பிக் கொள்ளவும் வேண்டாம்.

இரண்டையும் ஒன்றாக போட்டு குழப்புவதால்தான் பிரச்னைகள் அதிகம் வருகிறது. ஆகவே இரண்டு பிரிவுகளாக பிரித்து செயல்படுவதில் எந்த பிரச்னையும் இருக்காது.

மதம் சார்ந்த பிரச்னைகளை அணுக தனிப் பிரிவும், அரசியல், சமூக பிரச்னைகளை அணுக அரசியல் பிரிவும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குர்ஆன், சுன்னா, தொளஹீத் இப்படி எந்த விதமான பிரச்னைகளையும், தீர்வையும் தருவதற்காக அதற்கான அறிஞர்களைக் கொண்ட பிரிவை ஏற்படுத்தி அவர்கள் முற்றிலும் மதம் சார்ந்த பிரச்னைகளுக்கும் தொப்பி போட்டு தொழலாமா, வேண்டாமா, விரலசைத்து தொழலாமா வேண்டாமா என்ற பிரச்னைகளை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். அது போலவே ஒரே அமைப்பாக, ஒரே தலைவர், ஒரே குடையின் கீழ் ஒரு அரசியலமைப்பில், நம்மிடம் உள்ள அரசியல், சமூக சிந்தனைகள் அதிகம் நிறைந்தவர்கள், படித்தவர்கள், அரசியலில் முதிர்ச்சி உள்ளவர்கள், சமூக அரசியல் ஞானம் அதிகம் உள்ளவர்களை அரசியல் பிரிவில் ஏற்படுத்தி தேர்தல் காலங்களில், மற்றும் சமூக, அரசியல், சட்ட பிரச்னைகள் நமக்கு வரும்போது அவர்கள் பாடுபடும் வகைக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். நிச்சயமாக நம்மிடம் அரசியல் பிரிவு வேண்டும். நாமும் அரசியலில் பங்காற்றித்தான் நம் உரிமைகளையும், பாதுகாப்பையும் பெற முடியும் என்பது மிக தெளிவானது. இதில் எந்த குழப்பமும் இல்லை. இதில் மார்க்க விஷயங்களை நுழைத்து குழம்பிக் கொள்ள வேண்டாம்.

இன்று நம் நிலை:

நம் எதிரிகள் அவர்கள் செய்ய துடிப்பதை நாமே செய்து கொள்கிறோம் சிறிய சிறிய குழுக்களாக பிரிந்து கிடக்கிறோம். நம் எதிரிகள் நம்மை பகடைக் காய்களாக ஆக்கி அரசியல் களத்தில் நம்மை பந்தாடி விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். பெண்களை, முதியவர்களை, குழந்தைகளை மட்டும் வீட்டில் விட்டு விட்டு வெளிநாட்டில் வாழும் ஆண்கள் எல்லோரும் இந்த அமைப்புகள் எல்லோரும் ஒன்று கூடி ஒரு நல்ல தீர்வையும், நம் மக்களுக்கு நல்ல பாதுகாப்புத் தன்மையையும் தராதா என்று காத்திருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் புதிய அமைப்புகள் தோன்றுவதும், நான்தான் தலைவர் என்று புதிய தலைவர் வருவதும் தினசெய்திகளாக இருக்கிறது. ஒன்றாக பலமாக இருந்த அமைப்புகள் தனிப்பட்ட தொலைநோக்கு பார்வையில்லாத தலைவர்களின் அகம்பாவத்தால், தான் என்ற கர்வத்தால் நாளுக்கொரு அமைப்பாக உடைந்து மக்கள் மத்தியில் பலவீணப்பட்டு கிடக்கிறார்கள். சில நேரங்களில் இவர்கள் ஒருவேளை நம் எதிரிகளின் கைக்கூலிகளோ என்று சந்தேகப்படும் அளவிற்கு இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. ஒருவர் மற்ற சகோதரரையும், மற்ற அணியினரையும் அப்படித்தான் நடத்திக் கொள்கிறார்கள். நம் சமுதாயத்தின் முன்னேற்றம், பாதுகாப்புத் தன்மை என்பது இன்னும் ஒரு பெரிய கேள்விக் குறியாகத்தான் தொக்கி நிற்கிறது.

இளைஞர்களுக்கு:

கண் மூடித்தனமாக தலைவர்களின் பின்னால் போகும் இளைஞர்களே...செத்த நாயிலும் கேவலமான நம் வாழ்க்கை எந்த உரிமையும் இல்லாத நமக்கு, ஒற்றுமைக்காக பாடுபடாத இந்த தான் என்ற ஈகோ பிடித்த தலைவர்களின் பின்னால் உங்கள் மாபெரும் சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கின்றீர்கள் எப்போதாவது உங்களை நோக்கி கேள்விக் கேட்டிருக்கின்றீர்களா. அல்லது உங்கள் தலைர்களை நோக்கி இந்த கேள்விகளை கேட்டு இருக்கின்றீர்களா. இந்த வாழ்கையை எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறீர்கள். எப்போதாவது ஒற்றுமையைப் பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா. செத்த பிணம் போல, ஆட்டு மந்தைகளைப் போல சுயமாக சிந்திக்காமல் எத்தனை நாளைக்கு இந்த தலைவர்களின் பின்னால் ஓடி உழைக்கப் போகிறீர்கள். எத்தனை நாளைக்கு இந்த தலைவர்களின் பின்னால் கொடி பிடித்துக் கொண்டு இருக்கப் போகிறீர்கள். சுயமாக சிந்தியுங்கள், உங்களுக்குள்ளே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள், தலைவர்களையும் கேள்வி கேளுங்கள். நாளை நம் சமுதாயம் ஒற்றுமையாய் ஓரே அணியின் கீழ் ஒரே குடையின் கீழ் நிற்க பாடுபடும் தலைவரை இனம் காணும் வரை எந்த தலைவரின் பின்னாலும் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

தலைவர்களுக்கு:

அரசியலையும் மதத்தையும் போட்டு மக்களை குழப்பாதீர்கள், அரசில் பிரிவு, மதம் சார்ந்த பிரிவுகளை ஏற்படுத்தி அந்தந்த பிரச்னைகளை அந்தந்த துறைகளில் நிபுணத்துவம், முதிர்ச்சியும் பெற்ற நம் பெரியார்களை, அறிஞர்களை கொண்டு தீர்வுகாண முயலுங்கள், எல்லாம் எனக்கு தெரியும், நான்தான் தலைவர் என்ற அகந்தையில், தலைவர்கள் தான் என்ற கர்வத்தில், சுயமாக மமதையில் உழலாதீர்கள்.

தலைவர்களே நாங்கள் நன்றாக உங்கள் முகம் நோக்கி கேள்வி கேட்போம்தான். பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால். மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று மக்களின் உழைத்த பணங்களில் சந்தா, நன்கொடை, புத்தக விற்பனை செய்து உங்கள் கழகத்தை மட்டும் பலப்படுத்த அல்ல எங்கள் சமுதாயத்திற்கும் பாதுகாப்பும், சமூக உரிமையையும் பெற்றுத் தரத்தான். நம்மிடையே ஒற்றுமையை வளர்க்கத்தான். இதையெல்லாம் செய்ய இயலாது என்றால் நல்ல ஒரு பர்தாவை போர்த்திக் கொண்டு உங்கள் வீட்டிலேயே முடங்கிப்போங்கள், உங்களை எவனும் கேள்வி கேட்க மாட்டான். நீங்கள் முடங்கிப் போவதால் எம் சமுதாயம் ஒன்றும் அழிந்து விடாது. ஒரு புரட்சியையும், ஒற்றுமையையும் எங்களுக்குள் கொண்டு வர எம்மில் ஒருவன் பிறந்திருப்பான் அல்லது இறைவன் பிறக்க வைப்பான் இன்ஷா அல்லாஹ்...

ஒற்றுமையாய் வாழ கற்றுக்கொள்ளுங்கள், எங்களுக்கும் கற்றுக் கொடுங்கள் இல்லையேல் புதியவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி ஓடிப்போய் வீட்டோடு ஒளிந்து கொள்ளுங்கள்.

எம் சமுதாயத்தில் எல்லோரும் ஓற்றுமையாக ஒரே குடையின் கீழ் ஓரே அணியாக எல்லோரும் சகோதரர்களாக நின்று குரல் கொடுக்கும் நாளை (இன்ஷா அல்லாஹ்) மிக ஆதங்கத்துடன், ஆவலுடன் எதிர் பார்த்தவனாக இறைவனிடம் கையேந்தியவனாய்.

- சுலைமான்
sulai_sa@yahoo.com

Saturday, May 06, 2006

தேர்தல் விடு..கதை

அரசியல் அந்தர் பல்டிகள் முடிந்துவிட்டன. பிரச்சாரப் புயலும் ஓய்ந்து விட்டது, ஓட்டுகளை எலெக்ட்ரானிக் பெட்டியின் பட்டன்களில் தட்டிவிட்டு, விரலிலே மை தடவிக்கொண்டு, பத்திரிக்கைக் கருத்துக்கணிப்புக்களை நினைத்து வெற்றி பெறுவது அ.இ.அ.தி.மு.க-வா அல்லது தி.மு.க-வா என்று மனக்கணக்கு போடுபவர்களுக்கு ஒரு மனக்கணக்கு...

அ.இ.அ.தி.மு.க வெற்றி பெறக்கூடிய இடங்கள் மற்றும் தி.மு.க வெல்லக்கூடிய இடங்கள் இரண்டையும் சேர்த்தால் மொத்தமே 130 இடங்கள்தான் வரும்.

இதில் தி.மு.க-வை விட அ.இ.அ.தி.மு.க 17 இடங்களை அதிகம் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

அப்படியானால் தி.மு.க எத்தனை இடங்களை வெல்லும்.
அ.இ.அ.தி.மு.க எத்தனை இடங்களை வெல்லும்.

எங்கே உங்கள் விடைகளைச் சொல்லுங்கள் பார்ப்போம்.

எலெக்ஷன் ரிசல்ட் வருவதற்கு முன் இந்த மனக்கணக்கிற்கு ரிசல்ட் கண்டுபிடித்து பின்னூட்டம் இடுபவர்கள்-தங்களுக்குத் தாங்களே ஷபாஷ் போட்டுக் கொள்ளுங்கள்.

-மணவை அஜீஸ்

குடந்தைப் பேரணியும் இயக்கவாதிகளும்

உலக முஸ்லிம்களின் மாநாடு என்று வர்ணிக்கப்படுகிற ஹஜ் தினத்தில் உலகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 25 லட்சம் பேர் கூடுகிறார்கள். கருப்பர் வெள்ளையர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமை பாராது குழுமுவதை நேரில் பார்த்தவர்களுக்கு புதிய அதிசயமாக தோன்றும். அதனைப்பற்றி அறியாதவர்களுக்கு இது ஏதோ ஒரு மகாமகம் அல்லது பேரணி நிகழ்ச்சிகளின் இரண்டு அல்லது மும்மடங்கு என்று தோன்றும். அதனால்தான் என்னவோ, ஜமராத்திற்கு கல்லெறியப்போகும்போது வரிசையில் போகவேண்டும் என்றும், நாடு வாரியாக பிரித்து அனுப்பவேண்டும் என்றும் உணர்வு வாரஇதழில் கேட்டுக்கொண்டார்கள்.



ஹஜ் செய்வதற்கு முறையாக முத்தவிஃப் முறையில் பணம் செலுத்தி வந்தவர்கள் முத்தவிஃப் ஏற்பாடு செய்து தரும் வாகனங்களில் மினாவிலிருந்து அரஃபாவிற்கு பயணிக்கிறார்கள். (சிலரைத் தவிர). மற்றவர்கள் நடைபயணமாக, காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு (பிறை 9) அரஃபாவை நோக்கி கிளம்புகிறார்கள். நடந்து செல்லும் ஹாஜிகளின் வரிசை மதியம் 12 மணிவரை தொடருகிறது. அதே போல் முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்கு திரும்பும் நாளிலும் (பிறை 10) இதே கூட்டத்தை பார்க்கலாம். (பார்க்க படம்) படத்தில் மக்கள் கூட்டத்தையும் வாகன நெரிசல்களின் ஒரு பகுதியையும் பார்க்கலாம்.

அரஃபா என்பது ஹஜ் நாட்களில் அதுவும் குறிப்பாக துல்ஹஜ் பிறை 9 ல் மட்டும் கூடும் திறந்த வெளி மாபெரும் திடலாகும். திடல் என்றால் நம்ம ஊர் மைதானத்தை போல் என்று எண்ணிவிடவேண்டாம். பல கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட ஒரு திடலாகும்.

நடந்து செல்வதற்கு பல வழிகளை ஏற்படுத்தியிருப்பதுபோல், வாகனங்கள் செல்வதற்கும் அவ்வாறே பல சாலைகளை ஏற்பாடு செய்துள்ளார்கள். இதில் எமர்ஜென்ஸிக்காக ஒரு சாலையை ஒதுக்கி அதில் போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் செல்வதற்காக பயன்படுத்தப்படுகிறது.

மினாவில் நுழைய வாகனங்களுக்கும் ஹஜ் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். அப்படி அனுமதி வாங்காத வாகனங்கள் மக்காவில் உள்ள மாபெரும் 2 வாகன நிறுத்தங்களிலே விட்டுவிட வேண்டியதுதான்.

இதுபோக, ஹஜ் நாட்களில் மினா, அரஃபா மற்றும் முஸ்தலிஃபா ஆகிய இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் முறையே பல ட்ரிப்கள் அடிப்பதாலும் பல சாலை வழிகள் இருப்பதாலும் வாகன நெரிசல்கள் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்படுகிறது. அப்படி இருந்தும் அந்த நேரத்தில் வாகனங்கள் நெரிசல்களில் மாட்டிக்கொள்வதை பார்த்தால் நமக்கே முழிப்பிதுங்கிவிடும்.

ஹஜ்ஜில் எத்தனை பேர் கூடுகிறார்கள் என்று கணக்கெடுப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது சவுதி அரசாங்கம். ஹாஜிகளுக்கு உரிய வசதிகள் செய்யவேண்டும் என்பதும் வருகிற காலங்களில் புதிய எண்ணிக்கைக்கு தகுந்தமாதிரி வழிவகைகளை செய்ய வேண்டும் என்பதும் இதன் காரணமாகும்.

கீழ்கண்ட முறையில் இக்கணக்கெடுப்பு முறைப்படுத்தப்பட்டு உறுதி செய்யப்படுகிறது.

1) ஹஜ் செய்ய வரும் வெளிநாட்டினர்
2) முறையாக ஹஜ் அனுமதி பெற்றுவரும் உள்நாட்டினர்
3) மினாவில் ஹாஜிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் டெண்ட்களின் எண்ணிக்கை.
4) துல்ஹஜ் மாதம் பிறை 1-லிருந்து 9 வரை மக்காவின் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கணக்கர்கள் மூலமாக.

த.த.ஜ.வின் கும்பகோணம் பேரணி/மாநாடு

கீழே உள்ள படங்களில் நீங்கள் பார்ப்பது த.த.ஜ.வின் கும்பகோணம் பேரணி. நாள் ஜனவரி 29, 2006.

1. பேரணி துவக்கத்தில் மூன்று பேர் கொண்ட வரிசையாக சென்ற போது..


2. நேரம் செல்லச் செல்ல ஐந்து ஆறு பேர் கொண்ட வரிசையாக ஆன போது..


3. பின்னர், சாலையையே அடைத்துக் கொண்டு சென்ற போது..



கீழ்கண்ட படம், மினாவில் துல்ஹஜ் பிறை 12-ல் எடுக்கப்பட்டதாகும். படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யுங்கள்.



25 லட்சம் என்ற (ஹஜ்)ஸ்கேலுக்கு பக்கத்தில் இவர்களால் சொல்லப்படும் 10 லட்சம் என்ற ஸ்கேலை வைத்துள்ளேன். இவர்களின் கூற்றில் உண்மை உள்ளதா? என்பதை நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள்.

கும்பகோணத்தில் எத்தனை பேர் கூடினார்கள் என்று கணக்கெடுப்பது நமது நோக்கமல்ல. "பொய் சொல்வதற்கு வெட்கப்படாத ஒரு கூட்டம்" உருவாகிவிட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு மார்க்கத்தை மக்களுக்கு சொல்ல வந்ததாக கூறிக்கொள்ளும் இந்த கூட்டத்தினரின் மத்தியில் பொய்கள் கணக்கு வழக்கு இல்லாமல் ஆறாக பாய்ந்தோடுகின்றன. இதனை மக்கள் மத்தியில் வைப்பது மட்டுமே நமது நோக்கம்.

குலுங்கியது கும்பகோணம் மற்றும் தஞ்சையும் குடந்தையும் ஓர் ஒப்பீடு ஆகிய த.த.ஜ. தளத்தில் பதியப்பட்ட இரண்டு கட்டுரைகளையும் எனது விமர்சனத்திற்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டுள்ளேன்.

கடந்த காலங்களில் நமது மாநாடுகளில் கலந்து கொண்டதை விட 6 மடங்கு அதிகமான வாகனங்கள் கலந்து கொண்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.


சுருங்கச் சொன்னால் தஞ்சையில் திரண்ட மக்கள் திரளை விட ஐந்து முதல் ஆறு மடங்கு மக்கள் குடந்தையில் திரண்டனர் என்பதை யாரும் மறுக்க முடியாது
என்று த.த.ஜ.வின் இணைய கட்டுரைகள் சொல்கின்றன.

(படத்தில் உள்ளது த.மு.மு.க.வின் தஞ்சை பேரணி - நாள் மார்ச் 21, 2004) முன்பு த.மு.மு.க. மாநாடுகளில் வருகை தந்ததாகச் சொல்லப்பட்ட எண்ணிக்கைகளும் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். இறைவனே அறிந்தவன்.

த.த.ஜ.வினரே உங்களின் நோக்கம் ஆள்வோரிடம் உரிமையை கேட்பதா? அல்லது த.மு.மு.க.வை விட நீங்கள்தான் பெரிய இயக்கம் என்று காட்டவேண்டும் என்பதா?

நேரடியாக 10 லட்சத்திற்கு கணக்கு சொல்ல முடியாது என்பதால் நீங்கள் ஒன்றாக இருக்கும்போது சேர்ந்து சொன்ன பொய்யைப் போல ஆறு மடங்கு என்று சொல்கிறீர்களா?

உரிமையை கேட்க ஜனநாயக அடிப்படையில் பேரணி நடத்துவதை அனைவரும் வரவேற்போம். அதே நாளில் இராமநாதபுரத்தில் போட்டி மாநாடு வைத்த த.மு.மு.க.வை கண்டிப்போம். ஆனால் கும்பகோணம் பேரணிக்கு வந்தவர்கள் என்று இவர்கள் சொன்ன பொய் எண்ணிக்கைகள் இவர்களின் சுயரூபத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. உலக விஷயத்திலேயே இவ்வளவு பொய்களை சொல்லும் இவர்களை மார்க்க விஷயத்தில் அப்படியே நம்பும் சகோதரர்களே சற்று சிந்தியுங்கள்!

இதுபோன்ற பொய்கள், உண்மையான வெற்றியைத் தராது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டாமா!

மாநாடு/பேரணிக்கு வந்தவர்களின் எண்ணிக்கை
1) உளவுத்துறை மூலம் எடுக்கப்பட்ட கணக்கு. இது ஆட்சியாளர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

2) எதிரி இயக்கங்களை கலங்கிடச் செய்ய சொல்லப்படும் கற்பனைக் கணக்கு. (10, 12, 14, 18 லட்சம் என்று சொல்லி பிறகு 10 லட்சம் என்றும் எதிர்ப்பு அதிகமாகவே சில நேரத்தில் சில இடங்களில் சுருதி குறைத்து லட்சக்கணக்கான என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்)

3) மனம்போனபடி சொல்லப்பட்ட பத்திரிக்கைளின் கணக்கு. (சன் டீ.வி. போன்ற சேனல்களாக இருந்தால் அதையும் கண்டுக்கொள்ள மாட்டார்கள்).

4) போட்டி இயக்கங்களால் சொல்லப்படும் பொறாமை கணக்கு.

5) எத்தனை ஊர்களிலிருந்து எத்தணை பேர்கள் வந்தார்கள் என்று பேரணி/மாநாடு நடத்தும் இயக்க நிர்வாகிகளால் எடுக்கப்பட்ட உண்மை கணக்கு. (இதனை யாரும் வெளியிடுவதில்லை).

எந்த ஒரு விஷயத்தையும் அளக்க வேண்டுமானால் அளவுகோல் முக்கியமானதாகும். அது பொருளுக்கு தகுந்தார் போல மாறுகிறது. தலைவர்கள்/அரசியல்வாதிகள் தன் இஷ்டத்துக்கு கணக்கு சொன்னால் புத்தியுள்ள மனிதனுக்கு கீழ்கண்ட சிந்தனைகள் தோன்றவேண்டும்.

1) 10 லட்சம் பேர் கூடுவதற்கு கும்பகோணம் டவுன் போதுமானதா?

கும்பகோணம் என்பது மிகப்பெரிய மக்கள் எண்ணிக்கையை தாங்கக்கூடிய நகரமல்ல. சாதாரண திருமண முகூர்த்த தினங்களில் கும்பகோணத்தை கடந்து செல்லும் வாகனங்கள் நீந்திக்கொண்டுதான் போகவேண்டும். அப்படிப்பட்ட டவுனில் 10 லட்சம் மக்கள் கலந்துக்கொண்ட பேரணியா? என்பதுதான் நமது கேள்வி.

2) 10 லட்சம் பேர் கூடினார்கள் என்று சொன்னால் ஒரு வாகனத்திற்கு அதிப்படியாக 100 பேர் என்று கணக்கிட்டு 10லட்சத்தில் வகுத்தால் கூட 10 ஆயிரம் வாகனங்கள் வந்திருக்க வேண்டாமா?

கும்பகோணத்தில் 29ந் தேதி அதிகாலை 6 மணிக்கே வெளியூர் வாகனங்கள் வரத் துவங்கியதால் காலையிலேயே கும்பகோணம் 'களை' கட்டியது.


பேரணி துவங்கும் இடமான அசூர் பைபாஸ் ரோட்டில் காலை 11 மணிக்கே வாகனங்கள் வரத் துவங்கியது. மதியம் 2 மணி அளவில் சென்னை பைபாஸ், மயிலாடுதுறை பைபாஸ், தஞ்சாவூர் பைபாஸ் ஆகிய வழித்தடங்களில் வாகனங்கள் வரத் துவங்கின.


மேலும் த.த.ஜ.வின் இணைய கட்டுரை கீழ்கண்டவாறு சொல்கிறது.

3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மாநாட்டில் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.


மேற்கண்ட வாசகம் த.த.ஜ.வின் கும்பகோணம் குலுங்கியது கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட சாட்சியம். ஆகவே நமது ஊகங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு அவர்கள் சொன்ன வாக்குமூலத்தையே ஆதாரமாக எடுத்துக்கொள்வோம்.

3000 வாகனங்கள் X சராசரியாக 100 பேர்கள்
விடை 3,00,000 (3 லட்சம் பேர்கள்)

ஆக மொத்தத்தில் எப்படி தோராயமாக கணக்கிட்டாலும் 10 லட்சம் வரவில்லை. நான் கும்பகோணத்திற்கு வந்து த.த.ஜ.வினரை கணக்கெடுக்கவில்லை. ஒவ்வொருவராக கணக்கெடுத்து உள்ளே விடவில்லை. த.த.ஜ.வினர் குறிப்பிட்ட வாசகங்களில் இருந்துதான் ஆதாரத்தை எடுக்கிறேன். எனது மதிப்பீடு தவறு என்றால், இவர்கள் குறிப்பிட்டுள்ள 3000 வாகனங்கள் என்ற வாசகத்தில் இருந்து 10 லட்சத்திற்கு கணக்கு கொடுக்கட்டும். "கணக்கில்லா மக்கள் கூட்டம்" என்று சொல்லி 10 லட்சம் என்ற மடைமையை மீண்டும் வெளிப்படுத்த வேண்டாம்.

சகோதரர்களே சிந்தியுங்கள். சிந்திக்கக்கூடிய ஆற்றலைக்கொண்டு மனிதனை படைத்திருக்கிறான். தலைவர்களின் முன்னால் ஆட்டுமந்தையாக செல்வதை விட்டும் திருந்துங்கள்.

يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், "ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!" என்று கூறுவார்கள்

وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءنَا فَأَضَلُّونَا السَّبِيلَا

"எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்" என்றும் அவர்கள் கூறுவார்கள்.

رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا

"எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக" (என்பர்). (அல்குர்ஆன் 33:66-68)


சிந்திக்காமல் அப்படியே சென்றீர்களென்றால், உங்களை நாளைக்கு வேறொரு தவறுக்கும் உடன்படுத்துவார்கள். அப்பொழுது எதிர்த்தால், அன்று இனித்தது இன்று கசக்கிறதோ? கேட்க மாட்டார்களா?

நடுநிலையாளர்கள் கவனத்திற்கு:
ஏகத்துவம் முழக்கம் தமிழ்நாட்டில் தொடங்கியதிலிருந்து ஏகப்பட்ட பிரச்னைகள், குழப்பங்கள், குடும்பத்தில் பிளவுகள் வந்திருக்கின்றன. அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு உண்மை என்னவென்பதை ஆராய்ந்து மற்றும் விளக்கம் கேட்டு புரிந்துக்கொண்ட அந்த நெஞ்சங்கள் இன்று அதே இயக்கம் சொல்லும் பொய்களை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டும்போது "குழப்பம்! குழப்பம்!" என்று கூச்சல்போடும் நோக்கமென்ன?

கண்ணை மூடிக்கொண்டு யாரையும் எதிர்க்கவில்லை. ஆதாரத்துடன்தான் எதிர்க்கிறேன் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். எனது கட்டுரைகளில் தவறுகள் இருந்தால், அதனை பின்னூட்டங்களில் சுட்டிக்காட்டுங்கள். நானும் மனிதன்தான் என்பதால் தவறிழைக்க வாய்ப்புண்டு. ஆகவே, என்னை திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறேன்.

த.த.ஜ. சகோதரர்களுக்கு:
த.மு.மு.க. தவறே செய்யவில்லையா? என்று கேட்கும் த.த.ஜ.வினரே! ஆமாம் தவறு செய்கிறது. எனக்கு தெரிந்த விஷயங்களை தட்டிக்கேட்கிறேன். உங்களுக்கு தெரிந்த விஷயங்களை என்னைவிட அதிகமாக தட்டிக்கேட்கிறீர்கள். அதனை வரவேற்கிறேன். உங்களுக்கும் எனக்கும் மறுப்பு தெரிவிக்க முடியாததற்கு வாய்பொத்தி நிற்கிறார்கள். ஆனால் "மார்க்கம் மார்க்கம்" என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூறும் உங்களின் பொய்யை தோலுரித்துக்காட்டியதற்காக ஃபித்னா செய்கிறாயா என்பதும், ரசிகர்மன்றங்களாக "என்ன அரிப்போ" என்று கேட்பதும்தான் நீங்கள் செய்யும் அழைப்புப் பணியா?

த.மு.மு.க. பாதைமாறி போகும்போது அது புதிய முஸ்லிம்லீக்-ஆக போகலாம். ஆனால் நீங்கள் வழிகெட்டுப் போனால், புதிய மதம் உருவாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

த.மு.மு.க. சகோதரர்களுக்கு!
உங்களின் எதிரியை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் என்னுடைய கட்டுரையை பயன்படுத்திகொள்ளாதீர்கள். உங்களை நோக்கியும் என்னுடைய கேள்விகள் வந்துள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள்.

த.த.ஜ. மற்றும் த.மு.மு.க. தலைமைகளுக்கு எனது வேண்டுகோள்:
நீங்கள் 8 அடிகள் பாய்ந்தால் உங்கள் உறுப்பினர்கள் 16 அடி பாய்கிறார்கள். நீங்கள் ஒரு தவறு செய்தால் உங்கள் உறுப்பினர்கள் உங்கள் தவறுகளை மறைக்க தஃப்ஸீர் செய்கிறார்கள். நீங்கள் என்ன சொன்னாலும் உங்களுக்கு ஜால்ரா போடும் கூட்டம் உருவாகி வருகிறது.

உமர்(ரலி) அவர்கள் தனது மக்களிடம் "நான் தவறு செய்தால் என்ன செய்வீர்கள்" என்று கேட்ட போது, கூட்டத்தில் உள்ள ஒரு சாதாரண மனிதர் எழுந்து "உமரே இந்த வாள் உன்னை நேர்வழி படுத்தும்" என்கிறார். உடனே உமர்(ரலி) அவர்கள், "எனக்கு இனி கவலையில்லை, எனது தவறினை எனக்கு சுட்டிக்காட்ட ஆட்கள் இருக்கிறார்கள்" என்று சொன்னதாக வரலாறு கூறுகிறது.

ஆனால், உங்களுக்கு ஜால்ரா போடும் கூட்டத்தை இப்படியே நீங்கள் கண்டிக்காமல் விட்டுவிட்டால், உங்கள் இயக்க தலைவர்களின் மரணத்திற்கு கூட இவர்கள் தீ குளிப்பார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இயக்கம் சாராதவர்களே:
உங்களை இந்த இயக்கவாதிகள் ஆள்பிடிப்பதற்காக ஓடோடி வருவார்கள். பையத் செய்யும் விடியல் கூட்டம் முதல் த.மு.மு.க., த.த.ஜ. ஆகிய எந்த கூட்டத்திலும் சேர்ந்துவிடாதீர்கள். இயக்கத்தில் சேர்ந்தால்தான் தஃவா பணி செய்ய முடியும் என்று பலர் நினைத்து ஏமாந்து நிற்கிறார்கள். தஃவா பணி செய்ய எத்தனையோ வழிகள் உண்டு. இயக்கம் சாராமல் பலர் அருமையாக தஃவா பணி செய்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த இயக்கங்களில் மூழ்கி காணாமல் போய்விடாதீர்கள்.

அதே நேரத்தில் இந்த இயக்கவாதிகள் தவறு செய்யும்போது ஆதாரத்தின் அடிப்படையில் தட்டி கேளுங்கள். நன்மையான உபதேசம் உங்களிடம் வேண்டி நின்றால் சொல்லிக் கொடுங்கள். நல்ல விஷயங்களுக்கு தோள் கொடுங்கள். கெட்ட விஷயங்களில் தூர நில்லுங்கள்.

சிந்தனைவாதிகளே! இயக்கங்களை விட்டும் வெளியே வாருங்கள்!
ஒவ்வொரு இயக்கமும் நல்ல சிந்தனைவாதிகளுக்கு சில பொறுப்புகளை தலையில் சுமத்தி அவர்களின் கைகளை கட்டிப்போட்டுள்ளார்கள். ஆகவே இந்த சிந்தனைவாதிகள் இயக்கத் தவறுகளுக்கும் தஃப்ஸீர் கொடுத்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

ஜமாத்தே இஸ்லாமி, அபூ அப்துல்லாஹ்வின் ஜமாத்துல் முஸ்லிமீன், ஜாக், விடியல், த.மு.மு.க., த.த.ஜ. ஆகிய எல்லா இயக்கங்களிலும் நல்ல சிந்தனைவாதிகள் உண்டு. ஆனால் அவர்களின் சிந்தனைகளெல்லாம் போட்டி இயக்கத்தினருக்கு எதிராக மட்டுமே கூர் தீட்டப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சிந்தனைவாதிகளே! இயக்கத்தைவிட்டு வெளியே வாருங்கள்!.

ஏன் இயக்கத்தில் இருந்துக்கொண்டே தவறுகளை சுட்டிக்காட்டக்கூடாதா என்கிறீர்களா? ஆம், அவ்வாறு சுட்டிக்காட்டினால் நீங்கள் திருட்டுப்பட்டம் சுமந்தவர்களாக துரத்தப்படுவீர்கள் என்பதைத்தான் கடந்த கால பலருடைய படிப்பினைகளில் இருந்து அறிய முடிகிறது.

என்னருமை இஸ்லாமிய சகோதரர்களே!
திடமான ஈமான், தெளிந்த அறிவு, நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளை (மார்க்க விஷயத்தில்) அப்படியே பின்பற்றுதல் ஆகிய இந்த மூன்றில் மட்டுமே வெற்றி இருக்கிறது என்பதை உணருங்கள்.

மார்க்கத்தை அறிந்தவர்களாக த.த.ஜ.வினர் இருந்தால் எனது விமர்சனத்தை இறைவனை பயந்து கண்ணியமாக எதிர்கொள்வார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். (இன்ஷா அல்லாஹ்)

எனக்கும் உங்களுக்கும் இறைவன் நேர்வழி காட்டுவானாக. ஆமீன்.