Saturday, June 11, 2005

கிறிஸ்தவ பிரச்சாரம்

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நியூஸ் வீக் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சமீபத்தில் ஒகாஸ் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி:

1970ல் ஆசியா கண்டத்தில் உள்ள மொத்த கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை சுமார் 100 மில்லியன், 2000ல் அது 300 மில்லியனை எட்டியது. ஆப்ரிக்காவில் 1970ல் 100 மில்லியனாக இருந்த அவர்களின் எண்ணிக்கை 2000ல் 300 மில்லியனையும் தாண்டியது.

1966 வாக்கில் 23,300 கிறிஸ்தவ பிரச்சார அமைப்புகள் ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் இயங்கி வந்தன. அவைகளின் பணியில் உதவி செய்ய 193 பில்லியன் டாலர் பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருந்தது. அவைகளின் அன்றாட பணியில் 3,600 வானொலி மற்றும் டிவி நிலையங்களிலிருந்து 447 மில்லியன் மணி நேர ஒலி, ஒளி பரப்புக்கள் ஒரு வருடந்தோறும் நடைபெறுகின்றன. 10 மில்லியன் பைபிள் பிரதிகளை அவர்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிட்டனர். 1,130 உலக மொழிகளில் அவர்கள் பைபிளை மொழிபெயர்த்து வினியோகித்தனர்.

உலகெங்கிலும் உள்ள சர்ச்சுகள் 500 பல்கலைகழகங்கள், 104,000 பள்ளிக்கூடங்கள் மற்றும் பயிற்சி மையங்களுக்கு பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளன. மேலும் 10,677 துவக்கப்பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் இவற்றின் நிர்வாகத்தில் இயங்கி வருகின்றன. இவை அத்தனையிலும் சுமார் 6 மில்லியன் முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவை மட்டுமல்லாது 1,500 மருத்துவ நிலையங்களும் சேவையில் உள்ளன. கிறிஸ்துவ பிரச்சாரக் குழுக்கள் மூலம் 3,100 சஞ்சிகைகள், சுற்றறிக்கைகள் மற்றும் மாத இதழ்கள் அச்சிட்டு வினியோகிக்கப்படுகின்றன. இவர்களின் பணியில் மொத்தம் 340 மில்லியன் கம்ப்யூட்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த கம்ப்யூட்டர் மயமாக்களுக்காக மட்டும் 1970 வரை 200 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

மேலே தரப்பட்டுள்ள தகவலுக்கு முற்றிலும் மாற்றமாக இஸ்லாமிய அழைப்பு மற்றும் நிவாரண அமைப்புகளால் மேற்படி கிறிஸ்தவ குழுக்கள் செலவிடும் தொகையில் ஒரே ஒரு சதவீதம் மட்டும்தான் கல்விக்காகவும் மற்றொரு சதவீதம் மட்டும் நிவாரணப் பணிகளுக்காகவும் செலவிட முடிகிறது. கிறிஸ்தவ பிரச்சாரம் வறுமையிலும் நோயிலும் வாடும் முஸ்லிம்களை குறி வைத்து செயல்படுகிறது. இஸ்லாமிய அமைப்புகளின் பெரும்பாலான பொருளாதாரமும், நேரமும் போர்களினாலும், ஆக்ரமிப்புகளினாலும், சீரழிந்து வருகின்ற முஸ்லிம்களின் நிவாரணப் பணிகளிலேயே செலவிடப்படுகிறது. இது போதாதென்று, இஸ்லாமிய அமைப்புகளின் நிதி பற்றாக்குறை வேறு அவைகளின் பட்ஜெட்டை வெகுவாக பாதிக்கிறது. அமெரிக்க பாராளுமன்ற அறிக்கையில் இந்த நிதி பற்றாக்குறை 14 லிருந்து 17 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை எல்லாம் விட அதிர்ச்சி தரும் தகவல் என்ன தெரியுமா? உலகின் மொத்த அகதிகள் எண்ணிக்கையில் 75 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் என்பதுதான்.

1970 லேயே 200 பில்லியன் டாலர்கள் கிறிஸ்தவ பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது என்றால் 2001ல் அது எத்தனை மடங்கு பெருகி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. இஸ்லாமிய அமைப்புகளின் நிலைமையோ அந்தோ பரிதாபம்.. சமீபத்திய தீவிரவாத மற்றும் போர் நடவடிக்கைகளினால் பாரபட்சமின்றி அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் நிதி நடவடிக்கைளும் வல்லரசினால் முடக்கப்பட்டுள்ள நிலையில் ஏகத்துவ பிரச்சாரமும், நிவாரணப் பணிகளும் வரலாறு காணாத அளவுக்கு பின்னடைவை சந்தித்துள்ளது.

முஹம்மது ஸலாஹூதீன்
அல்-மதீனா

தகவல்: அப்துல்அலீம் சித்தீக்

No comments: