Tuesday, November 28, 2006

பாபரி மஸ்ஜிதும், இடது சாரிகளும்

டிசம்பர் 6 . அயோத்தியில் இருந்த முஸ்லிம்களின் பாபர் மஸ்ஜித், சங் பரிவார் பயங்கரவாதிகளாலும், தேச விரோதிகளாலும் ஷஹீதாக்கப்பட்ட கருப்பு நாள்.
மறக்க முடியுமா அந்த நாளை?
இழக்க முடியுமா நம் இறையில்லத்தை?

இந்தியாவில் உள்ள இடதுசாரி சக்திகளில் பெருமாண்மையினர், பாபர் மஸ்ஜித் நிலம் முஸ்லிம்களுக்கும் இல்லாமல், இந்துக்களுக்கும் இல்லாமல் அருங்காட்சியகமாக்கப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றனர். அப்படி ஒரு வேளை நடந்தால், அது சங்பரிவாரங்களுக்கு பாதி வெற்றியே. இந்திய இடது சாரிகள் அந்த கருத்தை மாற்றிக் கொண்டு பாபர் மஸ்ஜித் நிலம் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கருத்துக்கு வர வேண்டும். த.மு.மு.க முஸ்லிமல்லாத நடுநிலைச் சக்திகளை இணைத்துக் கொண்டு போராடுவது பாராட்டத் தக்கது. எனினும், ஒவ்வொரு ஊரிலும் உள்ள முஸ்லிம் ஜமாஅத் தலைவரின் தலைமையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றிணைந்து போராடினால் அது இன்னும் வலுவாக இருக்கும். நான் நினைப்பது ஒருவேளை பேராசையாக இருக்கக் கூடும்.

No comments: