Tuesday, November 11, 2008

ஓபாமா ஆலோசகரின் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு


ஓபாமா ஆலோசகரின் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு - இந்திய அமைப்பு அதிருப்தி

நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஓபாமாவின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்தியப் பெண்மணி சோனால் சிங்குக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் இருப்பதாக, 3 இந்திய அமெரிக்க அமைப்புகள் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளன.
சோனால் ஷாவின் குடும்பம் குஜராத்தைச் சேர்ந்ததாகும். இவரது குடும்பத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் நல்ல தொடர்புண்டு.
இந் நிலையில் அமெரிக்காவின் இனப்படுகொலைக்கு எதிரான இந்திய கூட்டமைப்பு, இந்திய-அமெரிக்க பல் சமூக கூட்டமைப்பு, மதச்சார்பற்ற மற்றும் ஒற்றுமைக்கான இந்திய அமைப்பு ஆகிய 3 அமைப்புகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓபாமாவின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள சோனால் ஷா, தீவிர ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை ஊக்குவிக்கும், தூண்டி விடும் அமைப்பாகும்.
எனவே இந்த நியமனம் எங்களுக்கு அதிருப்தியை அளிக்கிறது. இதுகுறித்து பிற இந்திய அமெரிக்க அமைப்புகளுடன் நாங்கள் ஆலோசனை நடத்தவுள்ளோம்.
தனக்கு வி.எச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுடன் உள்ள தொடர்புகள் குறித்து சோனால் ஷா தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
அமெரிக்க அதிகார வட்டத்திற்குள் இந்துத்வா சக்திகள் ஊடுறுவ முயற்சிப்பது குறித்து அமெரிக்க அரசியல்வாதிகளிடமும், பொருளாதார நிபுணர்களிடமும் எடுத்துக் கூறவுள்ளோம். இதற்கான பிரசாரத்திலும் நாங்கள் ஈடுபடவுள்ளோம்.
தீவிரவாத, மதவாத போக்குடைய அமைப்புகளுடன் தொடர்புடைய இந்தியர்கள் அமெரிக்க அதிகார வட்டத்திற்குள் வந்து விடாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு சக இந்திய - அமெரிக்க அமைப்புகளை கேட்டுக் கொள்கிறோம்.
சோனால் ஷாவை நியமித்தது ஓபாமாவின் தவறல்ல. மாறாக நாம் சரியான முறையில் விழிப்புணர்வுடன் இல்லாததே அதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப் படுகொலைக்கு எதிரான இந்தியக் கூட்டமைப்பு கொடுத்த எதிர்ப்புக் குரலைத் தொடர்ந்துதான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு கடந்த 2005ம் ஆண்டு விசா வழங்க மறுத்தது என்பது நினைவிருக்கலாம்.
புஷ் நிர்வாகத்திடமிருந்து ஓபாமாவிடம் நிர்வாகப் பொறுப்புகளை மாற்றுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவில், சோனால் சிங்கும் இடம் பெற்றுள்ளார் என்பது குறி்ப்பிடத்தக்கது.
புஷ்- ஓபாமா முதல் சந்திப்பு:
இதற்கிடையே தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பாரக் ஓபாமா, முதல் முறையாக தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஓபாமா அபார வெற்றி பெற்றுளளார். இதையடுத்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் அவர் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அவர் முதல் முறையாக அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார். பாரக் ஓபாமா, அவரது மனைவி மிச்சல் ஓபாமா ஆகியோரை, புஷ் தம்பதியினர் வாசலி்ல நின்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.
பின்னர் புஷ்ஷும், ஓபாமாவும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தினர்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் புஷ்ஷை, ஓபாமா சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
Source: Oneindia நன்றி: AOL செய்திகள்

Saturday, April 12, 2008

குர் ஆன் தமிழாக்கம்


சவூதி அரேபியாவின் மதீனாவில் உள்ள King Fahd Quran Printing Complex வெளியிட்டுள்ள குர் ஆன் - அரபி மூலமும், தமிழ் மொழியாக்கமும் கொண்ட நூலின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.


Wednesday, December 26, 2007

தற்கால இஸ்லாமியச் சிந்தனை

தற்கால இஸ்லாமியச் சிந்தனை - எம். எஸ். எம். அனஸ்


நூல் அறிமுகம்

நூல்: தற்கால இஸ்லாமியச் சிந்னை
(முதன்மையான செல்நெறிகள் பற்றிய அறிமுகமும் விமர்சனமும்)
ஆசிரியர்: எம்.எஸ்.எம். அனஸ்
வெளியீடு: அடையாளம்
முகவரி: 1205/1 கருப்பூர் சலை
புத்தாநத்தம் - 621 310
தமிழ் நாடு
இந்தியா
தொலைப்பேசி: 04332 273444
மின் அஞ்சல்: info@adaiyalam.com
பக்கங்கள்: 400 விலை: ரூ. 275
பின்னட்டைக் குறிப்பு:
இஸ்லாத்தின் நவீனத்துவ சிந்தனையின் தாக்கம் இஸ்லாமியச் சிந்தனை மரபிலும், பண்பாட்டிலும் நிகழ்ந்த திருப்புமுனையின் வரலாறாகும்.
ஒரு கட்டளைப் படிமநிலை நகர்வு இங்கு நடந்தேறியுள்ளது. புரட்சிகர சிந்தனைகளை அது வெளிப்படுத்தியது. அது கருத்து மோதல்களின் களமாக இருந்தது. இம்மாற்றங்களையும் அதற்குக் காரணமான அடித்தளச் சிந்தனைகளையும் அக்கால வரலாற்றினூடாக இந்நூல் ஆராய்கின்றது. மறுபுறமாக புத்துயிர்ப்புவாதம் எழுச்சி பெறுகின்றது. நவீனத்துவத்திற்கு அது சவாலாக இருப்பதுடன் தீவிர கருத்தியலின் ஊற்றுக்கண்களையும் அது திறக்கிறது. தற்கால அரசியல் இஸ்லாத்தின் தோற்றத்தினை ஆராய்வதனூடாக புத்துயிர்ப்புவாதத்தின் மையக் கருத்துகளும் இந்நூலில் பரிசீலிக்கப்படுகின்றன. தற்கால இஸ்லாமியச் சிந்தனையின் பிரதான செல்நெறி இவ்விரு சிந்தனை இயக்கங்களின் சமய, சமூக, அரசியல், கருத்தியல்களின் விளக்கங்களையும் மோதல்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை விளக்குகிறது இந்நூல்.
நூலாசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் (1949): இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் மற்றும் உளவியல் துறையின் தலைவர். 'பல்கலை', 'ஆய்வு', ஆகிய இதழ்களின் ஆசிரியர். பல ஆய்வுக் கட்டுரைகளையும் 'மெய்யியல்-கிரேக்க மெய்யியல் முதல் தற்காலம் வரை இஸ்லாத்தின் தோற்றம், சமூக அறிவியல் - ஒரு முறையியல் நோக்கு' ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

இந்நூலில் ஆராயப்படும் இஸ்லாமியச் சிந்தனையாளர்கள்:

1. இப்னு தைமிய்யா
2. முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்
3. ஷாஹ் வலியுல்லாஹ்
4. சர் செய்யித் அக்மத்கான்
5. ஜமாலுத்தீன் அல்-ஆஃப்கானி
6. ஷெய்க் முஹம்மத் அப்து
7. அல்லாமா முஹம்மத் இக்பால்
8. அபுல் கலாம் ஆஸாத்
9. அபுல் அஃலா மௌதூதி
10. ஹசன் அல்-பன்னா
11. குலாம் அக்மத் பர்வேஸ்
12. அலி ஷரீஅத்தி

இலங்கை

13. அஹ்மத் ஒறாபி பாஷா
14. எம்.சி. சித்திலெப்பை
15. எ.எம்.ஏ. அஸீஸ்
16. அப்துல் ஹமீத் அல்-பக்றி

Tuesday, December 18, 2007

மலேசிய அரசுக்கு நன்றி!

31 இந்தியர்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டை திரும்பப் பெற்ற மலேசிய அரசுக்கு நன்றி!