Sunday, July 23, 2006

சகோதர வலைப்பதிவரின் சிந்தனைக்காக

முத்துப்பேட்டை வலைப்பதிவில் "டான் டிவியில் ததஜவின் பொய்யான அறிவிப்பு" என்ற தலைப்பில் வெளிவந்த பதிவைப் படித்தேன். எனவே, சகோதர வலைப்பதிவர் என்ற முறையில் முத்துப்பேட்டை வலைப்பதிவருக்கு சில விஷயங்களை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

//.. ததஜ எனும் அரசியல் கட்சி டான் தொலைக்காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. வளைகுடா ஐரோப்பாவில் வசிக்கும் மக்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் நடுவே ததஜவின் நிர்வாகிகளுள் ஒருவரான நாகூர் ஏ.எஸ்.அலாவுதீன் தோன்றி இராப்பிச்சை எடுத்து வருகிறார்.//

மேற்கண்ட விஷயத்தை சொல்லிவிட்டு, கடைசியில் தமுமுகவுக்கு கீழ்கண்டவாறு நன்கொடைகளை கேட்கிறார் இப்னு ஃபாத்திமா அவர்கள்..

//தமுமுக நடத்தும் நிகழ்ச்சியில் பாவம்! எந்த விதமான நன்கொடை கேட்டு விளம்பரம் ஏதும் இடம் பெறுவதில்லை. ஆனால் எமது ஆலோசனை என்னவென்றால், பிச்சை கேட்காத தமுமுகவிற்கு தான் உங்கள் நன்கொடைகள் சென்று சேர வேண்டும். //

ஒருவரை ஒரு காரணத்தினால் இராப்பிச்சை என்று சொன்னவர், மற்றவருக்கு அதே விஷயத்தை செய்யச் சொல்வது நல்ல ஆலோசனையாக இருக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.

//அதற்கும் முன்பாக வரக்கூடிய அரை மணிநேர நிகழ்ச்சி தமுமுக நடத்தும் 'பிளாக் அன்ட் ஒயிட் கம்யூனிகேஷன்' நிகழ்ச்சியில் நான்கே விளம்பரங்கள் மட்டும் தான். அவர்களால் அந்த நிகழ்ச்சியை நடத்த முடிகிறது. ஏராளமான விளம்பரங்கள் குவிந்துள்ள இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது என்ற கூப்பாடு வேறு.//

நான்கே விளம்பரங்களை வைத்து பிரச்னையில்லாமல் புரோக்ராம் செய்வதாக எழுதியதால் என்னுடைய கேள்வியில் உள்ள நியாயத்தை சகோதரர் இப்னு ஃபாத்திமா அவர்கள் புரிந்துக்கொள்வார் என்று நம்புகிறேன்.


சகோதரரின் சிந்தனைக்காக:

நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? (2:44)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (61-2-3)

..நான் எதை விட்டு உங்களை விலக்குகின்றேனோ, (அதையே நானும் செய்து உங்கள் நலனுக்கு) மாறு செய்ய நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன் இன்னும் அவன் பாலே மீளுகிறேன். (என்று ஷுஐப் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்). (11:88)

நான் நபி(ஸல்)அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன், கியாமத் நாளில் ஒரு மனிதனைக் கொண்டுவரப்படும். அவனை நரகில் போடப்படும். அப்பொழுது அவனது வயிற்றிலுள்ள குடல்கள் வெளியே வந்து விடும். அக்குடல்களுடன் அம்மனிதன், செக்கில் கழுதை சுற்றுவது போலச் சுற்றுவான், நரக வாசிகள் அவனிடம் ஒன்று சேருவார்கள். அவர்கள் அவனிடம் கேட்பார்கள்: நீர் நன்மையை ஏவித் தீமையை தடுத்துக் கொண்டிருப்பவராக இருக்கவில்லையா? ஏன்று. அதற்கு அம்மனிதன் கூறுவான்,(ஆம்) நான் நன்மையை ஏவிக் கொண்டிருந்தேன். அந்த நன்மையை நான் செய்யவில்லை. நான் தீமையைத் தடுப்பவனாக இருந்தேன். ஆனால் நான் அதனைவிட்டு விலகவில்லை. (புகாரி, முஸ்லிம் : அபூ ஜைது உஸாமா பின் ஜைது பின் ஹாரிதா(ரலி)

மற்ற சகோதரர்களின் சிந்தனைக்கு:

பொதுவில் வைக்கப்பட்ட செய்தியை சுட்டிக்காட்டி பொதுவில் எழுதுகிறேன். இப்பதிவிலிருந்து உங்களுக்கு ஏதாவது படிப்பினை கிடைக்கிறதா என்று பாருங்கள். அதுவே உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நீங்கள் செய்த நற்பயன்களாக இருக்கும்.

No comments: