Thursday, December 14, 2006

பங்க் குமாரும் பாட்டாளி மக்கள் கட்சியும்

சென்னையில் பங்க் குமார் என்ற வனிய சாதியைச் சேர்ந்த தாதா, போலீஸாரின் என்கௌண்டரால் கொல்லப்பட்டுள்ளான். இவன் ஆள் கடத்தல் பேர்வழி. சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி அதிக இடங்கள் பெற இவனது ரவுடித்தனமே காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சியினர் பெருமையுடன் ஜெயா டிவிக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்கள். அந்த பேட்டியில், இவன் சென்னை மாநகரத்தில் பா.ம.கவின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்ததாகவும், அதனைப் பொறுக்க முடியாமல் தி.மு.க ஆட்சியாளர்கள் அவனை கொன்று விட்டதாகவும் பாட்டாளி மக்கள் கட்சியினர் கூறுகின்றனர். இதற்காக, தி.மு.க ஆட்சியையே கவிழ்த்து விடப்போவதாக ஒரு வன்னிய சாதிவெறியன் பேட்டி கொடுக்கிறான்.

வெங்கடேசப் பண்ணையார் என்ற நாடார் சாதி ரவுடி ஜெயலலிதா அரசில் என்கௌண்டரில் கொல்லப்பட்டான். கருணாநிதி அவனை பெரிய தியாகி போல் சித்தரித்து, அந்த ரவுடியின் மனைவி ராதிகா செல்விக்கு எம்.பி சீட் கொடுத்தார். அந்த பெண்ணும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்று விட்டார். இது ஆலடி அருணா, ரகுமான் கான் போன்ற தகுதி வாய்ந்த தி.மு.க காரர்களைத் தாண்டி இவருக்கு வழங்கப்பட்ட எம்.பி பதவியாகும்.

டாக்டர் ராமதாஸும் பங்க் குமாரின் மறைவில் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார். வரும் தேர்தல்களில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் பா.ம.கவை கழட்டி விட்டால் தமிழ் நாட்டில் இருந்து துடைத்து குப்பைத் தொட்டியில் வீசி விடலாம். அந்தக் காலம் கனிந்து வருகிறது.

No comments: