Sunday, December 10, 2006

இந்து மக்கள் கட்சியை தடை செய்!

தமிழக அரசே!
இந்து மக்கள் கட்சியை தடை செய்!
இந்து மக்கள் கட்சி, அர்ஜுன் சம்பத் என்ற இந்து பயங்கரவாதியால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சி. இவர்கள் இந்து முன்னணியில் இருந்து பிரிந்து வந்தவர்கள். இந்து முன்னணியை விட பயங்கரவாதத்தில் விஞ்சியவர்கள். கோவையில் முஸ்லிம்களை உயிருடன் எரித்த மாபாவிகள் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான். அப்போது ஜிகாத் கமிட்டியையும், அல் உம்மாவையும் தடை செய்த தமிழக அரசு இந்து முன்னணியையும், இந்து மக்கள் கட்சியையும் தடை செய்ய வில்லை. இன்று தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரியாரின் சிலைகளை உடைத்தும் சேதப்படுத்தியும் வருகின்றனர். இதனால் பெரியார் தொண்டர்கள் சில இடங்களில் எதிர்வினையாற்றி உள்ளனர். சமூக பதட்டத்தை தோற்றுவித்துள்ள இந்து மக்கள் கட்சியை தமிழக அரசு உடனடியாக தடை செய்து, அக்கட்சியைச் சேர்ந்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அது போல, தமிழ் நாட்டில் இந்து முன்னணி, சிவ சேனா ஆகிய தேச விரோத செயல்களில் ஈடுபடும் வன்முறை அமைப்புகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். பல்வேறு அமைப்புகளில் உள்ள பெரியார் பற்றாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு நெருக்குதல் கொடுத்தால் இதனை எளிதாகச் சாதிக்கலாம்.

No comments: