Monday, June 13, 2005

வளைகுடா வாழ் இந்தியர்களுக்கு

அ) ரியாத்திலுள்ள இந்தியத் தூதரகத்தில் தொலைபேசி வழியாக உதவிக்கரம் நீட்டும் பணி துவங்கியுள்ளது. தொலைபேசி எண்: 01-4881982. இந்த எண் இருபத்துநான்கு மணிநேரமும் இயங்கும். இந்தியாவின் பல மொழிகளிலும் உரையாடக்கூடிய அதிகாரிகளை வைத்து இந்தச் சேவை செயல்படும்.

தூதரகத்துடன் தொடர்புள்ள அவசர அத்தியாவசியப் பிரச்சினைகளான விபத்து, இறப்பு தொடர்பானவை, கைது, பயணத் தஸ்தாவேஜுகள் தெலைந்து பேனது போன்றவைகளுக்குத் தேவையான உதவிகளை இந்த தொலைபேசிச் சேவை செய்துதரும்.

ஆ) ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வியாழனன்று இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரிகளை எந்தவிதமான முன்னறிவிப்புகளுமின்றி இந்தியர்கள் சந்தித்து தங்கள் குறைகளையும் பிரச்சினைகளையும் சொல்வதற்கு வசதியாக ரியாத்திலும் ஜித்தாவிலும் திறந்தவெறி அமைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இ) அனைத்து வளைகுடா நாடுகளிலும் மேற்படிப்புக்கான மையங்கள் அமைக்கப்படும். முதல் கட்டமாக ஓமான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் இம்மூன்று நாடுகளிலும் இந்த மையங்களைத் துவங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வளைகுடா வாழ் இந்தியர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக இந்தியக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இணை ஒதுக்கீடான பதினைந்து சதவீதத்தில் ஒன்று புள்ளி மூன்று சதவீதமாக இந்த இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இதற்கான குறிப்புகளை பல்கலைக் கழக மானியக் குழுவிற்கும், இந்தியத் தொழில் நுட்பக் கல்வியமைப்பிற்கும் அனுப்பியுள்ளது.


மேற்கண்ட தகவல்களை இந்திய வெளி விவகாரத்துறையின் இணை அமைச்சர் இ. அஹமது அவர்கள் 15.06.2004 அன்று ஜித்தா இந்தியத் தூதரக வளாகத்தில் நிகழ்த்திய உரையிலிருந்து சில பகுதிகள் என ஒரு சிற்றிதழில் படித்தேன். மேற்கண்ட விஷயங்கள் உண்மையில் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தெரிந்த நண்பர்கள் அறியத்தருக.

No comments: