Friday, February 13, 2009

நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லி: இலங்கையில் போரை நிறுத்த வேண்டும், இந்தியா ராணுவ உதவிகளைச் செய்யக் கூடாது என்று வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட், பாமக, மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை இனப்படுகொலையை இந்திய அரசு ஆதரிக்கக் கூடாது, இலங்கைக்கு ராணுவ உதவிகளைச் செய்யக் கூடாது, இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று எம்.பிக்கள் கோஷமிட்டனர்.
நன்றி: thatstamil.oneindia.in பிப்ரவரி 12, 2009

Sunday, February 08, 2009

மக்களுக்கு எதிரான வன்முறை - இலங்கைக்கு முதலிடம்

மக்களுக்கு எதிரான வன்முறை - இலங்கைக்கு முதலிடம்

கொழும்பு: உலக அளவில் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நடக்கும் நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள உலக வன்முறைகள் கண்காணிப்பு மையம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.அதில் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் நாடுகள் வரிசையில் இலங்கைக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது.இலங்கையின் வட பகுதியில், இலங்கைப் படைகள் மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையால், பல அப்பாவிப் பொதுமக்கள் தினசரி கொல்லப்படுகின்றனர். இவ்வாறு கொல்லப்பட்ட அல்லது காயமடந்த மக்களுக்கு உதவக்கூடிய பொது உதவி நிறுவனங்களுக்கும், ராணுவம் குந்தகம் விளைவித்து வருகிறது.இலங்கையின் ராணுவ நடவடிக்கைகள் வெற்றி தருவதாக அரசு கூறினாலும் கூட, ஜனவரி மாதம் பெருமளவில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை அங்கு மேலும் மோசமடைந்துள்ளது.உலகில் தற்போது நடைபெற்று வரும் மிக மோசமான போர் நடவடிக்கைகளில் மிக அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்படும் இடமாக இலங்கையின் வடபகுதி காணப்படுகிறது. இஸ்ரேலியப் படையினரின் முன்னெடுப்பால் பாதிப்படைந்த காசா நிலப்பரப்பு, அரசுக்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கள் தீவிரமடைந்துள்ள மடகஸ்கார் பகுதி, அரச படைகளுக்கெதிராகப் போர் புரியும் மாலி நாட்டின் டோடக் ஆகியவை வன்முறை அதிகம் நிறைந்த அடுத்த மூன்று பகுதிகள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி: ஏஓஎல் தமிழ்

Saturday, February 07, 2009

தமிழினத்தையே அழிக்கிறது இலங்கை: கருத்துக் கணிப்பு

புலிகளுடன் சண்டை என்ற பெயரில் தமிழினத்தையே அழிக்கிறது இலங்கை: கருத்துக் கணிப்பு


சென்னை: விடுதலைப் புலிகளுடன் சண்டை என்ற பெயரில் இலங்கையில் உள்ள தமிழ் இனத்தையே இலங்கை அரசு அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 86 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.பல்வேறு முக்கிய நாட்டு நடப்புகள் குறித்து அவ்வப்போது லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடுவது வழக்கம்.இந்த நிலையில் பற்றி எறிந்து கொண்டிருக்கும் இலங்கை விவகாரம் குறித்து லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.இதில் கலந்து கொண்டவர்களில் 86 சதவீதம் பேர், விடுதலைப் புலிகளுடன் சண்டை, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழினத்தையே இலங்கை அரசு ஒழித்து வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 90 சதவீதம் பேர் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் நடந்து வரும் பல்வேறு அரசியல் கட்சிகளின் போராட்டங்களால் ராஜபக்சே அரசு மீது எந்த விளைவையும் ஏற்படுத்த முடியவில்லை என்று 52 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.தனி ஈழமே தீர்வு - 68%தனி தமிழ் ஈழமே இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு என 68 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழக கட்சிகள் இலங்கை விவகாரத்தில் தேர்தல் அரசியலே செய்கின்றன. முதல்வர் கருணாநிதி தலைமையில் அவர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என 86 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு தமிழகத்தில் எந்தக் கட்சியும் உண்மையான அக்கறையுடன் செயல்படவில்லை எனவும் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈழத்தமிழர்களின் உயிரிழப்பை தடுங்கள்-‍ பான்கிமூன்


ராஜபக்சேவுடன் போனில் பான் கி மூன் பேச்சு

உயிரிழப்பைத் தடுக்க கோரிக்கை


டெல்லி: டெல்லி வந்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தொலைபேசியில் பேசி, அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதைத் தடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் நேற்று இந்தியா வந்தார். பின்னர் இரவு அவர் தொலைபேசியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கையின் வடக்குப்பகுதியில் நடந்து வரும் போர் குறித்து ராஜபக்சேயிடம் கேட்டறிந்தார்.மூனிடம், போர் நிலவரம் குறித்து ராஜபக்சே விளக்கினார். கால் மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்படுவது, மருத்துவமனைகள் மீது இலங்கைப் படைகள் தாக்குதல் நடத்துவது, பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் வரும் அப்பாவிகளையும் கண்மூடித்தனமாக தாக்குவது குறித்து பான் கி மூன் கேட்டார்.சரமாரியாக வீசப்படும் குண்டுகளால் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் கவலை தெரிவித்தார். ஆனால் பான் கி மூனின் இந்த கேள்விகளுக்கு ராஜபக்சே மழுப்பலான பதில்களையே அளித்ததாக கூறப்படுகிறது. உயிரிழப்பைத் தடுக்குமாறு அப்போது ராஜபக்சேவிடம் பான் கி மூன் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.பிரணாப் - சோனியாவுடன் ஆலோசனைஇதையடுத்து இன்று வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பான் கி மூன் ஆலோசனை நடத்தினார்.பின்னர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து, தெற்காசியாவில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதித்தார்.மூனுடனான சந்திப்புக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு இருக்கும் பங்கினை மூனிடம் தெளிவாக விளக்கினேன். தீவிரவாதிகள் 10 பேர் எப்படி கடல் வழியாக கராச்சியில் இருந்து இந்தியா வந்தனர். அதற்கு பாகிஸ்தான் எப்படி உதவியது போன்றவற்றையும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளேன்.தாக்குதல் சம்பவம் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டதையும், அதில் பாகிஸ்தானியர்கள் இடம்பெற்றிருப்பதற்கும் என அனைத்துக்கும் இந்தியாவிடம் வலுவான ஆதாரம் இருப்பதை அவரிடம் எடுத்துக் காட்டினேன். அந்த ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்திருப்பதை அவரிடம் தெரிவித்தேன்.தீவிரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் பாகிஸ்தானிடம் கேட்டிருப்பதையும், இவ்விஷயத்தில் பாகிஸ்தான் விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என எதிர்பாத்துள்ளதையும எடுத்துக் கூறினேன்.குற்றவாளிகளை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை அவர் பாகிஸ்தானிடம் வலியுறுத்த வேண்டும் என கேட்டு கொண்டேன் என்றார் பிரணாப்.

இலங்கையில் போர் நிறுத்தம் - போப் வேண்டுகோள்

இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் - போப் வேண்டுகோள்

வாடிகன் சிட்டி: இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அங்கு அமைதி திரும்ப அனைத்துத் தரப்பினரும் வகை செய்ய வேண்டும் என்று போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.வாடிகன் நகரில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் போப்பாண்டவர் பேசுகையில், சிறிலங்கா அரச படையினரும் விடுதலைப் புலிகளும் ஆயுதப் போரை நிறுத்தி சமாதானத்தை உருவாக்க முன்வர வேண்டும்.மோசமடைந்து செல்லும் மனித அவலங்களும், கொல்லப்படும் பொதுமக்களின் தொகையும், எம்மை இவ்வாறு கோருவதற்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இரு தரப்பும், மனிதத்தையும் மனிதாபிமான சட்ட விதிகளையும் கருத்தில் கொள்வதுடன் பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்தையும் உறுதி செய்வது அவசியம். பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் அவசிய உணவு மற்றும் மருத்துவ வசதிகளை அனுமதிப்பதும், இரு தரப்பினதும் கடமை.மிக அருமையான அந்த நாட்டில், அமைதியும் புரிந்துணர்வும் உருவாகுவதற்கு, கத்தோலிக்கர் உட்பட அனைத்து மதத்தினராலும் வணங்கப்படும் தூய மடு மாதா வழியமைக்க வேண்டும் என ஆசிர்வதிக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: ஏஓஎல் தமிழ்

Tuesday, February 03, 2009

இலங்கை தமிழர் நல உரிமை பேரவை


திமுக செயற்குழு முடிவு: இலங்கை தமிழர் நல உரிமை பேரவை!

இலங்கை பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு தொடங்கியது.
இச்செயற்குழுவில், ’இலங்கை தமிழர் நல உரிமை பேரவை’ சார்பில் இலங்கை பிரச்சனையில் அரசியல் தீர்வு காண கோரி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி வரும் 7ம் தேதி அன்று சென்னையிலும், பிப்ரவரி8,9ஆகிய தேதிகளில் மாவட்ட தலை நகரங்களில் பொதுக்கூட்டங்கள்,பிரச்சாரங்கள் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நன்றி: நக்கீரன் இணையத் தளம் 3 ஜனவரி 2009 படம்: தினத்தந்தி

Monday, January 12, 2009

இஸ்லாமிய நிறுவனத்தின் புதிய நூல்கள்

இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்டின்

புதிய நூல்கள் வெளியீடு

கி. வீரமணியின் பொங்கல் வாழ்த்து

திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி அவர்களின்

பொங்கல் வாழ்த்து

Saturday, January 10, 2009

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை



வெளிநாடு வாழ் இந்தியர்கள் 50 லட்சம் பேருக்கு வாக்குரிமை


மத்திய அரசு ஆலோசனை



சென்னை, ஜன. 10-

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டின் நிறைவு விழா நேற்று நடந்தது. மாநாட்டில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: எந்த நாட்டுக்குச் சென்றாலும் நமது கலாசாரம், பண்பாட்டை மறக்கக் கூடாது. வெளிநாடுகளுக்கு செல்வோரில் பலர், தங்கள் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்த பிறகு நமது கலாசாரத்தை இழந்து விடுமோ என்ற பயத்தில், தாய்நாடு திரும்புகின்றனர். இந்திய கலாசாரத்தை மேம்படுத்த திரைப்படங்கள், விழாக்கள், நடன நிகழ்ச்சிகள் போன்றவற்றை மத்திய கலாசார மேம்பாட்டு மையம் தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்வாறு கனிமொழி பேசினார். மத்திய அமைச்சர் வயலார் ரவி, நிருபர்களிடம் கூறியதாவது: மாநாட்டில் 40 நாடுகளில் இருந்து 1,500 பேர் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக மலேசியாவில் இருந்து 270 பேரும், அமெரிக்காவில் இருந்து 127 பேரும் பங்கேற்றனர். சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் பிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் 5 தலைமுறைகளாக வெளிநாட்டிலேயே வாழும் இந்தியர்களுக்கும், இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள 50 லட்சம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் ஓட்டுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்து, இந்தியாவில் வாக்குச் சீட்டில் பெயர் இருந்தால் அவர்கள் வாக்களிக்கலாம். ஆனால் தபால் மூலமாக வாக்களிக்க முடியாது. வேலைக்காக அரபு நாடுகளுக்கு செல்ல ஏஜென்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் நிலை இந்தியாவில் அதிகம் நடக்கிறது. இதுகுறித்து இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய ஏற்கனவே ஒருமுறை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வரும் பிப்ரவரியில் மீண்டும் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. தவறு செய்யும் ஏஜென்ட்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு வயலார் ரவி கூறினார்.

நன்றி: தமிழ் முரசு நாளிதழ் 10 ஜனவரி 2009

Thursday, January 08, 2009

புத்தகக் கண்காட்சியில் பொங்கல் திருவிழா


சென்னை சங்கமம் 2009


சென்னை: அனைவரையும் ஈர்த்துள்ள சென்னை சங்கமம் நிகழ்ச்சி தங்கு தடையின்றி நடைபெற முதல்வர் கருணாநிதி ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.

தமிழக கிராமிய கலைகளை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில்,குறிப்பாக சென்னை நகர மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், தமிழ் மையம் அமைப்பும், தமிழக சுற்றுலா துறையும் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக சென்னை சங்கமம் என்ற கலை நிகழ்ச்சியை சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி, ஜனவரி 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடத்தப்படுகிறது. சென்னை நகரில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள், அரங்கங்கள், பூங்காக்களில் நடைபெறவுள்ளது.

முதல்வர் கருணாநிதி சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கவுள்ளார்.

இதுகுறித்து கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்துவதற்காக விளம்பரதாரர்கள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. நிதி நெருக்கடியும் இருந்தது.

சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு முதல்வர் கருணாநிதி தொடக்கத்தில் இருந்தே எத்தனையோ உதவிகளை செய்திருக்கிறார். ஆனால், இந்த ஆண்டு ஏற்பட்ட நிலையை கருத்தில் கொண்டு, இந்நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் தடையின்றி நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தன் சொந்தப் பணத்தில் இருந்து, ரூ.1 கோடியை அவர் கொடுத்துள்ளார்.

ஆண்டுதோறும் இதில் இருந்து கிடைக்கும் வருவாய், சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சியை யாரையும் நம்பி நடத்தாமல், சுதந்திரமாக, எந்த தடையுமின்றி நடைபெற நிதி பிரச்சினை காரணமாக இருக்கக்கூடாது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

அதேபோல இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும் ரூ.1 கோடி நிதி அளித்துள்ளது. இவற்றையெல்லாம் வைத்து ஒரு நிரந்தர நிதி உருவாக்கப்படும்.

சங்ககால உணவுகள்:
இந்த ஆண்டில், சென்னை சங்கமம் மேலும் சிறப்புடன் நடத்தப்படுகிறது. ஜனவரி 10ம் தேதி நடக்கும் நிகழ்ச்சிக்கு மத்திய மந்திரிகள் அம்பிகா சோனி, வயலார் ரவி போன்றோர் வருகிறார்கள். இந்த ஆண்டில் உணவுத் திருவிழா சிறப்பாக நடத்தப்படும்.

இதில், சங்ககாலத்தில் சாப்பிடப்பட்ட கம்பு, சோளம் உள்ளிட்ட உணவு வகைகளும் கிடைக்கும். நெல்லை இருட்டுக் கடை அல்வா, கள்ளிடைக்குறிச்சி முறுக்கு போன்ற பல்வேறு பிரபல உணவு வகைகளும் கிடைக்கும்.

வரும் 13-ந் தேதி, தி.நகர் நைட் என்ற பெயரில் தியாகராயநகர் வெங்கட்நாராயணா சாலை நெடுகிலும் இரவு முழுவதும் கலை விழா நடக்கும். இதற்கு சவுத் உஸ்மான் சாலை வியாபாரிகள் உதவியுள்ளனர். அங்கு பழ விழாவும் முன்னதாக நடைபெறும்.

கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில், சென்னை சங்கமம் நடைபெறும் அனைத்து நாள்களிலும் வழுக்குமரம் ஏறுதல், உரி அடித்தல் போன்ற கிராமிய விளையாட்டுகள் நடைபெறும்.

இந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் 1,400 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இதில், தமிழகம் தவிர ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள் என்றார் கனிமொழி.

செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ் மையம் அமைப்பாளர் ஜகத் கஸ்பார், வரலாற்றறிஞர் ஸ்ரீராம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

கவிதை பாட வாருங்கள்....:
இதற்கிடையே நிகழ்ச்சி அமைப்பாளர் கவிஞர் யுகபாரதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில்:

இளங்கவிஞர்களை கண்டெடுத்து ஊக்கப்படுத்தும் வகையில் கவிதை பாட வாருங்கள் என்ற தலைப்பில் அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியருக்கான கவிதைப் போட்டியை கவிஞர் கனிமொழி அறிவித்துள்ளார்.

இதற்கு, கவிதைகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 13.1.2009 ஆகும். கவிதைகளை, தமிழ்சங்கமம், 31, பொன்னி, குமாரசாமி ராஜாசாலை, சென்னை-28 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

இதில் சிறந்த கவிதைகளை, கவிக்கோ அப்துல்ரகுமான் தலைமையில் பேராசிரியர்கள் அடங்கிய குழு தெரிவு செய்யும். அந்த கவிதைகளை தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் மாணவர்கள் வாசிக்க, முதல் பரிசு ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசு-ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசு-ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இத்துடன் மேலும் 10 கவிஞர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, January 07, 2009

நாங்கள் ஹமாஸுடன் இருக்கிறோம்!

ஹமாஸ் ஒரு போராளிக்குழு மட்டுமல்ல‌. பாலஸ்தீனத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தவர்கள். அவர்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் அங்கீகரிக்காததனால் அவர்கள் பாலஸ்தீன ஆட்சியாளர்கள் இல்லை என்று ஆகி விடாது. காஸா பகுதியை யூத இனவெறி இஸ்ரேல் படைகள் ஆக்கிரமிப்பதையும், அங்கு குழந்தைகள், பெண்கள் உட்பட அப்பாவிப் பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இறப்பதையும் தொலைக்காட்சியிலும், இணையத்திலும் பார்த்து நம் நெஞ்சு கொதிக்கிறது. பாலஸ்தீன மக்களே! நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். ஹாமாஸ் படைகளே! நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இறைவன் நமக்கு உதவுவான்.

Tuesday, January 06, 2009

கீழைக்காற்றுவின் புதிய நூல்கள் வெளியீடு

கீழைக்காற்றுவின் புதிய நூல்கள்

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு