Monday, August 22, 2005

பிரிவுகளின் பின்னணியில்

சட்டம் (விளக்கம்)
ஹதீஸ்கள் - நபிமொழிகள் ஆரம்பத்தில் எழுதப்படாததினால் நபிமொழிகளை தெரிந்து கொள்ள நபித்தோழர்களையும், அவர்களின் மாணவர்களையும் தேடிச்சென்று பல ஆண்டுகள் அவர்களுடனேயே இருந்து மார்க்கத்தை கற்றுக் கொள்ளும் நிலை இருந்தது. மார்க்கத்தைக் கற்க பல தியாகங்கனை செய்து (கஷ்ட்டப்பட்டு) கஷ்ட்டப்பட்டவர்களில் நான்கு இமாம்களும் அடங்குவர்.

இவ்வாறு பல வருடங்கள் கல்வியைக் கற்று(சொந்த) ஊர் திரும்பும் அவர்களிடம் மக்கள் தங்களுக்கு எழும் (மார்க்க) சந்தேகங்களை அவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளவார்கள் இதனடிப்படையில் அந்தந்த இமாம்களிடம் கல்வியைக் கற்பவர்கள் அவரவர்கல்வி கற்ற இமாமைச் சார்ந்தவர்கள் என்ற பொருள் பட ஷாஃபியி, மாலிகியி என்று கூறலாயினர்.

ஒவ்வொரு தீர்ப்புக்குப்பின்னும் நான்கு இமாம்களும் (ஒரு விஷயத்தில்) சரியான ஹதீஸ் எங்களுக்கு கிடைத்து விட்டால் அதுவே எங்களின் வழியாகும் என்ற பொருள்பட கூறினார்கள்.

இமாம்கள் தங்களுடைய வாழ்நாட்களை மார்க்கத்தை கற்கவும், போதிக்கவும் அரசர்கள் செய்யும் தவற்றை துணிந்து விமர்ச்சிக்கவும் அதனால் ஏற்படும் துன்பங்களை பொறுமையாக ஏற்றுக் கொண்டும் கழித்ததுடன், அவர்கள் பல நூல்களையும் எழுதியுள்ளார்கள்.
(உம்) இமாம் மாலிக் அவர்களின் "முஅத்தா"
இமாம் அஹ்மத் அவர்களின் "முஸ்னத் அஹ்மது"

இன்றைய மத்ஹபுகள்:
இன்று நம் சமுதாயத்தில் உள்ள மத்ஹபுகளுக்கும், இமாம்களின் வழிமுறைகளுக்கும் பெயரளவில் தவிர வேறு எந்தத் தொடர்பும் இல்லை.

இன்று மத்ஹபு நூல்களாக மதரசாக்களில் படித்துக்கொடுக்கப்படும் நூல்களுக்கும், இமாம்கள் கைப்பட எழுதிய நூல்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லாதது மட்டுமின்றி அவர்கள் எழுதிய சட்டத்திற்கு முரணான சட்டங்களே அதிகம் உள்ளன. இந்நூல்கள் எல்லாம் சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவையே. முகலாயர் ஆட்சிக்காலத்தில் அவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் ஹராமானவற்றை (மது அருந்துவது, பொது சொத்துக்களை அபகரிப்பது, விபச்சாரம், திருடுதல்) ஹலாலாக்குவதற்காக வேண்டி எழுதப்பட்டவைகளும் உண்டு.

உதாரணம்:
ஹனஃபி- துர்ருல் முக்தார், ஹிதாயா, ஆலம்கிரி
ஷாஃபி- ஃபத்ஹுல் முயீனா, இயானா, மகானி.

கொள்கை வேறுபாடுகள்:ஹிஜ்ரி 37 வரை அலி(ரலி) அவர்களின் ஆட்சியின் ஒருப்பகுதி, சமுதாயத்தில் கொள்கை ரீதியாக எந்த வேறுபாடும் வரவில்லை.

அலி(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியலை அடிப்படையாக வைத்து இரண்டு பிரிவினர்கள் உருவானார்கள் 1. ஷியா 2. கவாரிஜ்
கொள்கையை அடிப்படையாக வைத்து அ) கத்ரியா ஆ) முர்ஜியா என இருபிரிவாக பிரிந்தார்கள்.

காரிஜியாக்கள் (வெளியேறியவர்கள்) ஹிஜ்ரி 37

அலி(ரலி) அவர்கள் தங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்ப்பு கூற இரண்டு நீதிபதிகளை நியமித்தார்கள். அப்பொழுது (குர்ஆனை) அல்லாஹ்வின் சட்டங்களை விட்டுவிட்டு மனிதர்களின் சட்டங்களை ஏற்றுக் கொண்டுவிட்டார். அப்படி ஏற்றவர் காஃபிர் ஆவார். அவர் அல்குர்ஆனின் பக்கம் வரும் வரை அவருடன் போர் செய்ய வேண்டும் என்று கூறி அலி(ரலி) அவர்களை விட்டு வெளியேறியவர்களே காரிஜியாக்கள்.

காரிஜியாக்களின் கொள்கை
1. பெரும் பாவம் செய்பவர் காஃபிர் ஆவார், அவருடைய உயிரும், உடமையும் ஹலால் ஆகும்
2. முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான் (49:9)

ஷியா (ஆதரவாளர்கள்)அபூபக்ர்(ரலி), உமர்(ரலி) அவர்கள் காலத்தில் (பிரிவினை) தனிப்பட்ட ஆதரவாளர்கள் இல்லை. அவர்களுக்குப் பிறகு உஸ்மான்(ரலி) அவர்காலத்தில்தான் உஸ்மான்(ரலி), அலி(ரலி) இவர்களில் யார் ஆட்சிக்கு தகுதியானவர் என்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் தனித்தனி ஆதரவாளர்கள் தோன்றினார்கள். இவர்களில் யாரும் ஒருவரையொருவர் விமர்சிக்க, பழிக்க முன்வரவில்லை. ஆதரவைமட்டும் தான் தெரிவித்தார்கள். அலி(ரலி) அவர்களின் ஆதரவாளர்கள் வழிகெடுத்தவன் அப்துல்லாஹ் பின் ஷபா இவன் இராக்கைச்சேர்ந்த யூதனாவான். இவன் தான் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாகவும், நபி(ஸல்) அவர்கள் குடும்பத்தைச்சார்ந்தவர்களை மிகவும் நேசிக்கக்கூடியவனென்றும். நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு ஆட்சிக்கு தகுதியானவர் அலி(ரலி) தான் என தவ்ராத்தில் இருப்பதாகக் கூறி சமுதாயத்தில் பிளவை, குழப்பத்தை உண்டு பண்ணினான். பிறகு அலி(ரலி) அவர்களையே நபி என்றும் மேலும், அவர்களையே நாயன்(அல்லாஹ்) என்றும் கூறினான். இந்தக் கூட்டத்தில் தான் மறுபிறவி, மறைவானவற்றை அறிதல், கிலாபத்திற்காக வஸியத் செய்தல் ஆகிய கொள்கைகள் உருவாயின. இதேக்கூட்டம் பல தவறான கொள்கைகளுடன் 10-க்கும் அதிகமான பிரிவுகளாக பிரிந்தது.

கத்ரியாக்கள் (விதியை மறுப்பவர்கள்)
1. "சூசன்" இவர்களை வழிகெடுத்தவன்
2. ஒரு செயல் நடப்பதற்கு முன் அல்லாஹ் அதுபற்றி அறியமுடியாது. மனிதன் அனைத்து செயல்களையும் சுயமாகவே செய்கிறான்(விதி ஏதும் இல்லை).
3. இக்கொள்கையை முஸ்லீம் சமுதாயத்தில் நூழைத்தவன் மஃபத் அல் ஜஹ்னி. இவன் சூசன் என்ற கிருஸ்தவத்தில் இருந்து இஸ்லாத்திற்கு மாறி திரும்பவும் கிருஸ்த்தவத்திற்கே சென்றுவிட்டவனிடமிருந்து இக்கொள்கையை கற்றான். மஃபத்திடதிருந்து கைலான் இக்கொள்கையைக் கற்று பிரச்சாரம் செய்தான் விதியைப் பற்றி இஸ்லாமிய சமுதாயத்தில் தவறான விளக்கம் அளித்தவன் மஃபத்தே.

முர்ஜியா (தாமதப்படுத்தவர்கள்) கொள்கை:
ஈமான் என்பது அல்லாஹ்வை அறிவதுமட்டுமே. ஈமானுக்கும், செயல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
(உ.ம்) மார்க்கத்திற்கு முரணான செயலும்கூட ஈமானுக்கு எந்தபாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே, யாரையும் காஃபிர் என்று சொல்லுதல் கூடாது. இந்தக்கருத்தை முதலில் கூறியவர் ஹசன் பின் முஹம்மத் அல்ஹனபியா. இவர் கொள்கையை உருவாக்கக் காரணம் காரிஜியாக்கள் அலி(ரலி) அவர்களையும் அவர்களைச்சார்ந்தவர்களையும், நீதிபதிகளையும் காஃபிர்கள் என்று கூறி அவர்களோடு போர் செய்ய வேண்டும் என்று கூறியதை மறுக்கவே இவ்வாறு கூறினார். இவர் இறந்த வருடம் 99 ஹிஜ்ரி. இவர் இறப்பதற்கு முன் தவ்பா (பாவமன்னிப்பு) செய்துக் கொண்டார்.

ஹிஜ்ரி 100 முதல் 150 வரை:

1) வாஸில் பின் அதா
(கொள்கை)
முஃதஜிலா (நீங்கியவன்) பெரும்பாவம் செய்தவன் மூஃமினும் இல்லை, காஃபிரும் இல்லை. மாறாக நடு(நிலை)வில் இருக்கிறான். சஹபாக்களில் ஒரு பிரிவினர் பாவிகள் என்று கூறினான். இக்கொள்கையுடையவர்களின் ஹதீஸ் அறிவிப்பு ஏதும் ஏற்றுக்கொள்ளப்படாது.

2) ஜஅத் பின திர்ஹம்
(கொள்கை)
குர்ஆன் படைக்கப்பட்ட(பொருள்)து. குர்ஆனை அல்லாஹ்வுடைய வார்த்தை எனில் அது ஒரு நாள் அழிந்து விடும். (அல்லாஹ்வின் ஒரு தன்மை அழியுமானால் அல்லாஹ்வும் அழியக்கூடியவன் என்றாகிவிடும்). குர்ஆனும் நம்மைப் போன்று படைக்கப்பட்டதே என்பது அவனுடைய தவறான கருத்து.

3) ஜஹம் பின் ஸஃப்வான் (கொள்கை) அல்லாஹ்வின் தன்மைகளை நிராகரித்தான். (நமக்குள்ள நடத்தல் பார்த்தல் போன்ற பண்புநம்மிடம் உள்ளதால்) சொர்க்கம், நரகம் இரண்டுக்கும் அதற்குரியவர்கள் சென்றபின் சொர்க்கம், நரகம் இரண்டும் சிறிது காலத்திற்குபின் அழிந்துவிடும். ஏனெனில் அதற்கு பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கு மென்பதை (அவனுடைய) அறிவு ஏற்றுக் கொள்ளவில்லை.
4) முகாதில் பின் ஸுலைமான்: அல்லாஹ்வின் தன்மையை ஏற்றாலும் (நம்மைப்போன்றுதான் என்ற) உருவம் கொடுத்தவன். இக்கொள்கையை யூத, கிருஸ்தவர்களிடம் இருந்து பெற்றான்.

தற்கால கொள்கை வேறுபாடான காதியானிகள், மெய் வழி, பைஜி என இப்பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது.

Sunday, August 21, 2005

கிறிஸ்துவ பாதிரியார், இஸ்லாத்தைத் தழுவினார்!

மன்னர் பஹத் அவர்களின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை டிவி ஒளிபரப்பில் கண்ட இத்தாலிய நாட்டின் பிரபலமான கிறிஸ்துவ பாதிரியார், இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்.

உலகமே வியக்கும் வகையில் மிகச் சாதாரணமான முறையில் நடந்த மாமன்னர் பஹத் அவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளே தன்னை இஸ்லாத்தின் பால் ஈர்த்தது என்று கூறியுள்ளார் இவர்.

மேலும் படிக்க:

gulfnews.com

arabnews.com

Friday, August 19, 2005

கோடைகால ஜித்தா கடற்கரை நிகழ்ச்சி

இறைவனின் அருளால் ஆகஸ்ட் 19, 2005 அன்று மாலை 4 முதல் 7 மணிவரை கோடைகால இஸ்லாமிய தமிழ் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. நிகழ்ச்சியை ஷேக் இப்ராஹீம் மதனி தொகுத்து வழங்க, சகோதரர் முஜிபுர்ரஹ்மான் உமரி வரவேற்புரை வழங்கினார்.

தாயிஃப் இஸ்லாமிய அழைப்பாளர் இப்ராஹீம் காசிமி அவர்கள் 'இவனைத் தெரிந்துக்கொள்ளுங்கள்' என்ற தலைப்பிலும் ரியாத் இஸ்லாமிய அழைப்பாளர் மஃப்ஹூம் மதனீ அவர்கள் 'பணிவும் உயர்வும்' என்ற தலைப்பிலும் சிறப்புறையாற்றினார்கள்.

நிகழ்ச்சிக்கு முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியின் வீடியோ ஆடியோ இணையத்தின் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Monday, August 15, 2005

இதற்கு எவரும் விதிவிலக்கல்ல!

வஞ்சிக்கப்பட்ட பெரியார்கள் எனும் பதிவில் அபூ உமர், நபிகளாரின் வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமான, உயர்த்தப்பட்ட கல்லறைகளில் இறந்தவர்களிடம் கையேந்துவது பற்றி குறிப்பிட்டிருந்தார்.

ஒரு பக்கம் இப்படி இருக்க, நீண்ட நெடிய காலம், நீண்டதொரு நிலப்பரப்பை கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக அரை நூற்றாண்டுகளுக்கு மத்தியில் ஆட்சி செய்த மன்னர் ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் அவர்களின் இறுதிச் சடங்குகள் இங்கு புகைப்படமாக உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.


மன்னர் அவர்களுக்கான ஜனாஸா தொழுகை


மன்னர் அவர்களின் மிகச் சாதாரண மண்ணறை



இவ்வுலகில் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்த்துகளை வகித்தாலும், பதவி பட்டங்களை வாங்கிக் குவித்தாலும் இறுதியில் சென்று சேரும் இடம் மிகச் சாதாரணமானது. இதற்கு எவரும் விதிவிலக்கல்ல! எனும் அரிய தத்துவத்தை இஸ்லாம் எவ்வளவு எளிமையாக நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்துகிறது என்பதற்கு மேற்கண்ட புகைப்படங்களே சாட்சி.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஜனாஸாத் தொழுகை
தொழுவீர்களேயானால் இறந்தவருக்காக பிராத்தனையை உரித்தாக்குங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: அபூதாவூத், இப்னு ஹிப்பான்

நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு தொழுவிக்கும் போது பின்வருமாறு ஓதுபவர்களாக
இருந்தனர்:

அல்லாஹும்மக்ஃபிர் லிஹய்யினா
வமய்யிதினா வஷாஹிதினா
வகாயிபினா வஸம்ரின, வகபீரினா வதகரினா வவுன்ஸானா
அல்லாஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ஃபஅஹிஹு
அலல் இஸ்லாம் வமன் தவஃப்ஃபைதவு
மின்னா ஃபதவஃபவு அலல் ஈமான் அல்லாஹும்ம
லாதஹரிம்னா அஜ்ரவு வலாதுளில்லினா
பஅதஹு


பொருள்:
யா அல்லாஹ்! எங்களில்
உயிரோடிருப்பவர்களையும் மரணித்து விட்டவர்களையும் இங்கே வந்திருப்பவர்களையும்,
வராமலிப்பவர்களையும், எங்களில் சிறுவர்களையும், பெரியவர்களையும் எங்களில்
ஆண்களையும், பெண்களையும் மன்னித்துவிடுவாயாக! இறைவா! எங்களில் உயிரோடு இருப்பவர்களை
இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக!
எங்களில் மரணித்துவிடுபவர்களை ஈமானுடனே
மரணிக்க செய்வாயாக! இறைவா! இந்த மய்யத்தின் நற்செயல்களுக்குரிய கூலியை எங்களுக்கு
தடுத்துவிடாதே! இவருக்கு பிறகு எங்களை வழிதவறச் செய்து விடாதே!

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அபூதாவூத், திர்மிதி



புகைப்படம்: நன்றி

Sunday, August 07, 2005

ஹிரோஷிமாவில் அணுகுண்டுவீசிய 60-வது ஆண்டு நினைவு தினம்


ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்திய 60-வது ஆண்டு நினைவுதினம் சனிக்கிழமை (06-08-2005) அனுஷ்டிக்கப்பட்டது.

ஜப்பான் பிரதமர் ஜுனிசிரோ கொய்சுமி உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குண்டுவீச்சில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஆனால் இந்த ஆண்டு அமெரிக்கா சார்பில் எந்த பிரதிநிதியும் கலந்துகொள்ளாதது குறித்து ஜப்பான் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்து அமெரிக்க ராணுவத்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அழைப்பிதழ் அனுப்பியும் எவரும் கலந்துகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது என்று ஹிரோஷிமா குண்டுவீச்சு நினைவுதினக் குழு தலைவர் பிலிப் மெண்டியோலா லாங் தெரிவித்தார்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஹிரோஷிமா குண்டுவீச்சில் பலியானவர்கள் குடும்பத்தினர் மற்றும் உயிர்பிழைத்தவர்கள் குடும்பத்தினர் காலையில் 8-15 மணிக்கு அமைதி நினைவுப் பூங்கா முன்பு கூடி மௌன அஞ்சலி செலுத்தினர்.

அனைத்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் மணி ஒலித்தது. சாலையில் காரில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள் என அனைவரும் ஒரு நிமிடம் தங்கள் செயலை நிறுத்திவிட்டு தலை குனிந்து குண்டுவீச்சில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

60 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1945 ஆகஸ்ட் 6. காலை 8.15 மணிக்கு அமெரிக்காவின் பி-29 விமானம் ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவின் மீது உலகின் முதல் அணுகுண்டை வீசியது. இந்த அணுகுண்டுக்குச் சூட்டப்பட்ட பெயர் "குட்டிப் பையன்' (Little boy). நான்கு லட்சம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில் 580 மீட்டர் உயரத்தில் இந்த அணுகுண்டு வெடித்தது. 3 மீட்டர் நீளமும் 71 செ.மீ அகலமும் கொண்ட இந்தக் குண்டின் எடை 4 டன் ஆகும். 12,500 டன் எடை கொண்ட டி.என்.டி.க்கு (Trinitro tolune - TNT) இணையான வெடிதிறன் படைத்த இந்த அணுகுண்டு வெடித்ததும் கண்களைக் குருடாக்கும் வெளிச்சம் வான்வெளியில் நிறைந்தது. காற்றின் வெப்பநிலை 7,000 டிகிரி செல்சியசுக்கு உயர்ந்தது. மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் சூறாவளி ஊழித் தீயாய்ப் புறப்பட்டது. குண்டு வெடித்த 15 மணித்துளியில் 12,000 மீட்டர் உயரத்திற்கு ராட்சதக் காளானாகக் கதிர்வீச்சுப் புகைமண்டலம் எழுந்து நின்றது. மரங்கள் தீப்பந்தங்களாக எரிந்தன. இரும்புத்தூண்கள் உருகி ஓடின. ஹிரோஷிமாவில் இருந்த 76,000 கட்டடங்களில் 68 விழுக்காடு சாம்பலாகின. குண்டு வெடித்த ஒரே நிமிடத்தில் 80,000 மனிதர்கள் இறந்தனர். 70,000க்கு மேற்பட்டவர் காயம் அடைந்தனர். இவர்களில் 60,000 பேர் ஓராண்டு முடிவதற்குள்ளாகவே மரணமடைந்தனர்.

மீண்டும் இரண்டு நாள்கள் கழிந்த பின்னர் - ஆகஸ்ட் 9ஆம் நாள் முற்பகல் 11-02 மணிக்கு, "குண்டு மனிதன்' (Fat man) என்று பெயரிடப்பட்ட மற்றோர் அணுகுண்டு நாகசாகி நகரின் மீது வீசப்பட்டது. நகரின் மையப்பகுதியில் 500 மீட்டர் உயரத்தில் வெடித்த இந்தக் குண்டு 22,000 டன் TNT க்கு இணையான வெடிதிறன் படைத்தது. 3.25 மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் அகலமும் கொண்டிருந்த இந்தக் குண்டின் எடை 4.5 டன் ஆகும். 2,80,000 மக்கள் வாழ்ந்த நாகசாகியில் குண்டு வெடித்ததும் 40,000 மக்கள் உடனடியாக இறந்து போயினர். மேலும் 34,000 பேர் காயமுற்றதாலும், கதிர்வீச்சினாலும் ஓராண்டு முடிவதற்குள் உயிரிழந்தனர். ஹிரோஷிமாவில் 13 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், நாகசாகியில் 6.7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. அக்கினிச் சூறாவளியில் ஹிரோஷிமா தொடர்ந்து ஆறு மணி நேரம் எரிந்தது. தொடர்ந்து கடும் மழை தொடங்கியது. சாதாரண மழையல்ல; பெரும் கதிர்வீச்சு நிறைந்த, எண்ணெய்ப் பசையோடு கூடிய திரவ மழை ஊழித் தாண்டவம் ஆடியது. இதனை வரலாறு கருப்பு மழை (Black rain) என்று பதிவு செய்துள்ளது. இன்று வரையில் அந்தப் பகுதிகளில் புல்கூட முளைப்பதில்லை. பாயும் புனலும் பாழாய்ப் போனது; வீசும் காற்றும் விஷமாய்ப் போனது. பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாகவே பிறந்து வருகிறார்கள்.

நேச நாட்டுப் படைகளிடம் பிடிபட்டு விடுவோமோ என்று அஞ்சி, ஹிட்லர் 1945 ஏப்ரல் 30 அன்று தற்கொலை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து அவரது படைகளும் சரணடைந்தன. போர் முடிந்து இரு மாதங்களுக்கு மேலான நிலையில் ஜப்பான் மீது, அமெரிக்கா இந்தக் குண்டுகளை வீசியது. முதல் அணுகுண்டின் கோரத் தாண்டவத்தைச் சுழன்றடித்த நெருப்புச் சூறாவளியில் பல்லாயிரவர் கருகியதைக் கண்ட பின்னரும் மீண்டும் இரண்டு நாள்கள் கழித்து நாகசாகியின் மீது மற்றோர் அணுகுண்டை வீசிய கொடுமையினை என்னென்று சொல்ல?

புதியதாகக் கண்டுபிடித்த அழிவாயுதமாம் அணுவாயுதத்தைப் பரிசோதித்துப் பார்க்கவும், உலக நாடுகளை அச்சுறுத்தித் தனது மேலாண்மையை உறுதிப்படுத்தவும் அமெரிக்கா முற்பட்டது என்பதில் பெருமளவு உண்மை உள்ளது. குண்டு வீச்சில் தமது சொந்தங்களை இழந்து தனிமரமாகிப் போன "சான் கிச்சி டோகே' (San Kichi Toge, 1917 - 1953)என்ற கவிஞர் ""என் தந்தையைத் திருப்பிக் கொடு'' (Give me back my Father) என்ற கவிதையை எழுதியுள்ளார். காலத்தின் இருண்ட பள்ளத்தாக்குகளில் இருந்து கேட்கும் அவரது கவிதைக் கதறல் இதோ:

என் தந்தையைத் திருப்பிக் கொடு
என் அன்னையைத் திருப்பிக் கொடு
என் தாத்தாவை, பாட்டியைத் திருப்பிக் கொடு
என் பிள்ளைகளை, பெண்களைத் திருப்பிக் கொடு
என்னையே எனக்குத் திருப்பிக் கொடு
மனித குலத்தைத் திருப்பிக் கொடு
ஒவ்வொருவரையும் அவரவர்களிடம் திருப்பிக் கொடு
இந்த வாழ்க்கை நீடிக்கும் வரை அமைதியை எங்களுக்குத் திருப்பிக் கொடு நிரந்தரமான அமைதியைத் திருப்பிக் கொடு
'' ஹிரோஷிமா! ஓ! ஹிரோஷிமா!
உலகப் போரின் உச்சகட்டக் கொடுமையை மனிதகுலத்துக்கு என்றென்றும் நினைவூட்டும் வரலாற்றுச் சோகமே!
உனது சாம்பலில் இருந்து, ஃபீனிக்ஸ் பறவையாக,
நிரந்தரமான உலக அமைதி,
உறுதியாக ஒருநாள் எழுந்து வரும்.

நன்றி: தினமணி (06-08-2005)

Saturday, August 06, 2005

திருச்சி - கஸ்டமா? கஷ்டமா? (Follow-up)

திருச்சி - கஸ்டமா? கஷ்டமா? எனும் தலைப்பில் திருச்சி ஏர்போர்ட்டில் நடைபெறும் அக்கிரமங்களை குறிப்பிட்டு எழுதியிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக, சமீபத்திய எமது பயணத்தில் கண்ட(கண்கொள்ளாக்) காட்சி இதோ:




"சுங்க இலாகா அதிகாரிகள், விமான நிலைய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உங்களுக்கு ஏதேனும் சிரமங்களோ, துன்புறுத்தல்களோ கொடுத்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: " என்று ஆங்கிலம் மற்றும் தமிழில் (24 மணி நேர சேவையாக) உயர்அதிகாரிகளின் பெயர் குறிப்பிட்ட லோக்கல் மற்றும் செல்போன் நம்பர்களின் மிக நீண்ட பட்டியல் உள்ள தகவல் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.

தவிர இ-மெயில் மூலம் வரும் புகார்களை உடனுக்குடன் விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (இ-மெயில் முகவரி: trichycustoms@eth.net)

அது மட்டுமின்றி சுங்க இலாகா அதிகாரிகளிடையே பயணிகளை நடத்தும் விதத்தில் கண்கூடாகத் தெரிந்த மாறுதல் மனதிற்கு தெம்பை அளித்தது.
__________
பின்குறிப்பு: தமிழ்முஸ்லிம் வலைப்பதிவு வாசகர்களுக்கு ஆதாரம் அளிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் நம் கையிலிருந்த மொபைல் போன் மூலம் க்ளிக்கி புகைப்படம் எடுத்தும், பெயர்களும் எண்களும் தெளிவில்லாமல் போனதில் மனதிற்கு கொஞ்சம் வருத்தமே!

Friday, August 05, 2005

வஞ்சிக்கப்பட்ட பெரியார்கள்

அடக்கஸ்தளங்களை வணங்காதே என்ற பெரியவருக்கு
வணக்கஸ்தளத்தை ஏற்படுத்தி பழிவாங்கிவிட்டார்கள் எம்மவர்கள்.



கையேந்தப்படுவது ஹனஃபி மத்ஹபு இமாம்களில் ஒருவரான அபூ யூசுஃப் அவர்களின் அடக்கஸ்தளத்தில் (ஈராக்).

அபூ யூசுஃப் இவர்களை இரட்சிப்பாரா?
போர் விமான குண்டுகளிலிருந்து
மண்ணறையை காப்பாற்றுவாரா?

ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால்கூட
தனது கல்லறையை உடைக்காமல்
விட மாட்டார் என்று நம்புவோமாக