Wednesday, March 21, 2007

இந்திய மரபும் பார்ப்பன திரிபும்

நூல்: இந்திய மரபும் பார்ப்பன திரிபும்
பேராசிரியர் பெரியார் தாசன் உரையின் எழுத்து வடிவம்
வெளியீடு: கீழைக்காற்று வெளியீட்டகம்
10 அவுலியா தெரு
எல்லீசு சாலை
சென்னை - 600 002
40 பக்கங்கள்
விலை ரூ. 12

"இந்துத் தத்துவ மரபு என்பது பார்ப்பன மரபு. இந்தியத் தத்துவ மரபு தமிழர், தெலுங்கர், மராத்தி, குஜராத்தி... மக்களின் மரபு. இது பார்ப்பன மரபு அல்ல.

வாழ்க்கை நெறியாகவும், சிந்தனையின் தெளிவாகவும் விளங்குவதே தத்துவம். இது தான் இந்தியத் தத்துவ மரபு. இந்த அறிவே இல்லாமல் வாழ்வே மாயம்; மண்ணாவதே திண்ணம் என்று பிதற்றுகிறது இந்துத் தத்துவ மரபு"

இந்நூல் 2003ஆம் ஆண்டில் - தஞ்சாவூரில், மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய 'பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், "இந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை; இல்லை; இல்லவே இல்லை!" என்ற தலைப்பில் பேராசிரியர் பெரியார் தாசன் ஆற்றிய கருத்தரங்க உரை.

No comments: