மாண்புமிகு முதல்வர் அவர்களின் முக்கிய கவனத்திற்கு,
மும்பை தாஜ் ஓட்டல், ஒபராய் மற்றும் கஃபே லியோ போல்டு, சத்ரபதி சிவாஜி தொடர்வண்டி நிலையம் ஆகியவைகளில் நடைபெற்ற 60 மணி நேர பயங்கரவாதிகளை எதிர்த்த நடவடிக்கைகள் மீண்டும் தொடரா வண்ணமும், நடந்த நிகழ்வுகளின் சதித் திட்டத்தின் வேர்களைக் கண்டறிந்து அடியோடு ஒழிக்கவும் வேண்டியது கட்சி, ஜாதி, மத, அரசியல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு தேசப் பாதுகாப்பு, சமூகப் பொறுப்புணர்வு இவைகளை மனதிற் கொண்டு அணுக வேண்டிய அவசர அவசியப் பிரச்சினை.
இது நாட்டுக் கண்ணோட்டப் பிரச்சினை; ஓட்டுக் கண்ணோட்டப் பிரச்சினை அல்ல! ஆனால் இங்குள்ள பார்ப்பன, ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ கொள்கையாளர்கள், இந்த சம்பவங்களை ஊதிஊதி, தாங்கள் நடத்தி அம்பலத்துக்கு வந்த இராணுவ ஊடுருவல், மலோகான் மற்றும் பல குண்டு வெடிப்புகளை மக்களை மறக்கச் செய்யவும், மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்கு முன்னணி ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கவும், அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க., தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில் அமைந்து அன்றாடம் சாதனைமேல் சாதனை குவிக்கும் ஆட்சிக்கு எதிராகவும், இஸ்லாமியர்கள் மீது ஒரு நிரந்தர வெறுப்பினை இதர மக்களிடம் ஏற்படுத்திடவும் தங்கள் வசமுள்ள, ஊடகங்கள், இணையதளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், சங்கங்களில் பொது விவாதம் என்ற போர்வையில், ஆட்சிகளுக்கு எதிராக ஒரு பனிப்போர் (Cold War) நடத்திட திட்டமிட்டு வருகின்றனர்!
இவ்வாறு திட்டமிட்டு நடத்தப்பெறும் இதனைக் கண்காணிப்பது மத்திய, மாநில காவல்துறை, குறிப்பாக உளவுத் துறையின் அவசர அவசிய தலையாய முன்னுரிமைக் கடமையாகும்! மக்களிடையே பீதியைக் கிளப்புதல் தவறான பிரச்சாரம் - கூட்டங்கள் நடத்தி விஷமப் பிரச்சாரம் செய்தல் என்பவைகளும் இறையாண்மைக்கு விரோதமல்லவா?
நன்றி: விடுதலை 1 டிசம்பர் 2008
மும்பை தாஜ் ஓட்டல், ஒபராய் மற்றும் கஃபே லியோ போல்டு, சத்ரபதி சிவாஜி தொடர்வண்டி நிலையம் ஆகியவைகளில் நடைபெற்ற 60 மணி நேர பயங்கரவாதிகளை எதிர்த்த நடவடிக்கைகள் மீண்டும் தொடரா வண்ணமும், நடந்த நிகழ்வுகளின் சதித் திட்டத்தின் வேர்களைக் கண்டறிந்து அடியோடு ஒழிக்கவும் வேண்டியது கட்சி, ஜாதி, மத, அரசியல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு தேசப் பாதுகாப்பு, சமூகப் பொறுப்புணர்வு இவைகளை மனதிற் கொண்டு அணுக வேண்டிய அவசர அவசியப் பிரச்சினை.
இது நாட்டுக் கண்ணோட்டப் பிரச்சினை; ஓட்டுக் கண்ணோட்டப் பிரச்சினை அல்ல! ஆனால் இங்குள்ள பார்ப்பன, ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ கொள்கையாளர்கள், இந்த சம்பவங்களை ஊதிஊதி, தாங்கள் நடத்தி அம்பலத்துக்கு வந்த இராணுவ ஊடுருவல், மலோகான் மற்றும் பல குண்டு வெடிப்புகளை மக்களை மறக்கச் செய்யவும், மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்கு முன்னணி ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கவும், அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க., தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில் அமைந்து அன்றாடம் சாதனைமேல் சாதனை குவிக்கும் ஆட்சிக்கு எதிராகவும், இஸ்லாமியர்கள் மீது ஒரு நிரந்தர வெறுப்பினை இதர மக்களிடம் ஏற்படுத்திடவும் தங்கள் வசமுள்ள, ஊடகங்கள், இணையதளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், சங்கங்களில் பொது விவாதம் என்ற போர்வையில், ஆட்சிகளுக்கு எதிராக ஒரு பனிப்போர் (Cold War) நடத்திட திட்டமிட்டு வருகின்றனர்!
இவ்வாறு திட்டமிட்டு நடத்தப்பெறும் இதனைக் கண்காணிப்பது மத்திய, மாநில காவல்துறை, குறிப்பாக உளவுத் துறையின் அவசர அவசிய தலையாய முன்னுரிமைக் கடமையாகும்! மக்களிடையே பீதியைக் கிளப்புதல் தவறான பிரச்சாரம் - கூட்டங்கள் நடத்தி விஷமப் பிரச்சாரம் செய்தல் என்பவைகளும் இறையாண்மைக்கு விரோதமல்லவா?
நன்றி: விடுதலை 1 டிசம்பர் 2008

0 comments:
Post a Comment