Tuesday, January 17, 2006

மினாவில் மேம்படுத்தப்படும் ஜமராத் பாலம்!



இவ்வருட ஹஜ் நெரிசலில் நடந்த அசம்பாவிதத்தில் 345 பேர் பலியானதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றதும் அறிந்ததே!


ஹஜ் (குறிப்பாக மினாவில் கல்லெறியும்) கிரியைகளின் போது நெரிசலினால் ஏற்படும் உயிர் இழப்பு புதிதல்ல. ஏற்கனவே பல சம்பவங்கள் இங்கே நடந்திருந்தாலும் 16 வருங்களுக்குப்பிறகு ஏற்பட்ட அதிக இழப்பிலான சம்பவம் இதுதான்.

முந்தைய ஹஜ்ஜின்போது நடந்த சம்பவங்களின் பட்டியல்:
8 1979 மெக்காவின் புனித பள்ளியில் நடந்த இரண்டு வார முற்றுகைப் போராட்டத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட போர்வீரர்கள் கொல்லப்பட்டனர்
8 1987 நானூறுக்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் மேற்கத்தியர்களுக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்டனர்
8 1990 சுரங்கப்பாதையில் ஏற்பட்ட நெரிசலில் 1426 யாத்திரிகர்கள் மரணமடைந்தனர்
8 1994 மினாவின் ஜமராத் பாலத்தின் கூட்ட நெரிசலில் 343 யாத்திரிகர்கள் மரணமடைந்தனர்
8 1997 மினாவின் ஜமராத் பாலம் அருகில் யாத்திரிகர்கள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 119 பேர் இறந்தனர்
8 2001 மினாவின் ஜமராத் பாலத்தின் கூட்ட நெரிசலில் 35 யாத்திரிகர்கள் மரணமடைந்தனர்
8 2003 மினாவின் ஜமராத் பாலத்தின் அருகில் கூட்ட நெரிசலில் 14 யாத்திரிகர்கள் மரணமடைந்தனர்
8 2004 மினாவின் ஜமராத் பாலத்தின் அருகில் கூட்ட நெரிசலில் 251 யாத்திரிகர்கள் மரணமடைந்தனர்
8 2006 யாத்திரிகர்கள் தங்கியிருந்த கட்டிடம் இடிந்து 76 பேர் பலியாயினர்.
8 2006 மினாவின் ஜமராத் பாலத்தின் அருகில் கூட்ட நெரிசலில் 345 யாத்திரிகர்கள் மரணமடைந்தனர்

பெரும்பாலான இச்சம்பவங்களில் அசம்பாவிதம் நடைபெற்றதற்கு காரணம், யாத்திரிகர்களுக்கு ஹஜ் கிரியைகளின் அடிப்படை செய்முறைகளும், போதுமான பயிற்சியின்மையுமே என்று கூறப்படுகிறது.

இனிவரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக 4.2 பில்லியன் ரியால் பொருட்செலவில் உருவாக உள்ள, மேம்படுத்தப்பட்ட, அதி நவீன வசதிகளைக்கொண்ட ஜமராத் பாலத்திற்கான கட்டுமானப்பணி வரும் சனிக்கிழமை (21-01-2006) துவங்குகிறது.

புதிய நான்கு அடுக்கு மாடிகளையும், கீழ்த்தளமொன்றையும் கொண்ட இவ்வசதி மூலம் இதுவரை உள்ள குறைபாடுகள் நீங்கும். மூன்று வருட காலத்தில் கட்டி முடிக்கப்படவுள்ள இப்பணியின் முதல் கட்டம் அடுத்த ஹஜ்ஜின் போது தயாராகிவிடும் என்று சவூதி அரசாங்கம் அறிவித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.

மேலும் விபரங்களுக்கு:
மினா துயர சம்பவத்திற்கு பொறுப்பாளி யார்? (அபூஉமர் அவர்கள் எழுதிய கட்டுரைத்தொகுப்பு)

No comments: