திமுக செயற்குழு முடிவு: இலங்கை தமிழர் நல உரிமை பேரவை!
இலங்கை பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு தொடங்கியது.
இச்செயற்குழுவில், ’இலங்கை தமிழர் நல உரிமை பேரவை’ சார்பில் இலங்கை பிரச்சனையில் அரசியல் தீர்வு காண கோரி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி வரும் 7ம் தேதி அன்று சென்னையிலும், பிப்ரவரி8,9ஆகிய தேதிகளில் மாவட்ட தலை நகரங்களில் பொதுக்கூட்டங்கள்,பிரச்சாரங்கள் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நன்றி: நக்கீரன் இணையத் தளம் 3 ஜனவரி 2009 படம்: தினத்தந்தி
No comments:
Post a Comment