Saturday, February 07, 2009

ஈழத்தமிழர்களின் உயிரிழப்பை தடுங்கள்-‍ பான்கிமூன்


ராஜபக்சேவுடன் போனில் பான் கி மூன் பேச்சு

உயிரிழப்பைத் தடுக்க கோரிக்கை


டெல்லி: டெல்லி வந்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தொலைபேசியில் பேசி, அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதைத் தடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் நேற்று இந்தியா வந்தார். பின்னர் இரவு அவர் தொலைபேசியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கையின் வடக்குப்பகுதியில் நடந்து வரும் போர் குறித்து ராஜபக்சேயிடம் கேட்டறிந்தார்.மூனிடம், போர் நிலவரம் குறித்து ராஜபக்சே விளக்கினார். கால் மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்படுவது, மருத்துவமனைகள் மீது இலங்கைப் படைகள் தாக்குதல் நடத்துவது, பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் வரும் அப்பாவிகளையும் கண்மூடித்தனமாக தாக்குவது குறித்து பான் கி மூன் கேட்டார்.சரமாரியாக வீசப்படும் குண்டுகளால் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் கவலை தெரிவித்தார். ஆனால் பான் கி மூனின் இந்த கேள்விகளுக்கு ராஜபக்சே மழுப்பலான பதில்களையே அளித்ததாக கூறப்படுகிறது. உயிரிழப்பைத் தடுக்குமாறு அப்போது ராஜபக்சேவிடம் பான் கி மூன் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.பிரணாப் - சோனியாவுடன் ஆலோசனைஇதையடுத்து இன்று வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பான் கி மூன் ஆலோசனை நடத்தினார்.பின்னர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து, தெற்காசியாவில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதித்தார்.மூனுடனான சந்திப்புக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு இருக்கும் பங்கினை மூனிடம் தெளிவாக விளக்கினேன். தீவிரவாதிகள் 10 பேர் எப்படி கடல் வழியாக கராச்சியில் இருந்து இந்தியா வந்தனர். அதற்கு பாகிஸ்தான் எப்படி உதவியது போன்றவற்றையும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளேன்.தாக்குதல் சம்பவம் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டதையும், அதில் பாகிஸ்தானியர்கள் இடம்பெற்றிருப்பதற்கும் என அனைத்துக்கும் இந்தியாவிடம் வலுவான ஆதாரம் இருப்பதை அவரிடம் எடுத்துக் காட்டினேன். அந்த ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்திருப்பதை அவரிடம் தெரிவித்தேன்.தீவிரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் பாகிஸ்தானிடம் கேட்டிருப்பதையும், இவ்விஷயத்தில் பாகிஸ்தான் விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என எதிர்பாத்துள்ளதையும எடுத்துக் கூறினேன்.குற்றவாளிகளை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை அவர் பாகிஸ்தானிடம் வலியுறுத்த வேண்டும் என கேட்டு கொண்டேன் என்றார் பிரணாப்.

No comments: