Sunday, July 24, 2005

ஆர். எஸ். எஸ் காரர்கள் பயன்படுத்தும் சொல்

சமீபத்தில் எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. சில மாதங்களாக இரு தரப்பினருக்கு இடையே நடக்கும் கருத்து மோதலின் தொடர்ச்சியே இந்த மின் அஞ்சல். அந்த மின் அஞ்சலில் எதிர் தரப்பினரைக் குறிப்பிட 'மொட்டையன்' என்ற சொல்லை ஒருவர் பயன்படுத்தி உள்ளார். முஸ்லிம்கள் கத்னா செய்யப்பட்டதைக் குறிப்பிட ஆர். எஸ். எஸ் காரர்களும், தமிழ் நாட்டில் இந்து முன்னணியினரும் பயன்படுத்தும் சொல் அது. எனவே, அந்த சொல்லை தவிர்த்து கொள்ளுமாறு அந்த மின் அஞ்சலை எழுதியவரிடம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், சமூக ஒற்றுமையைக் கருதி இந்த கருத்து மோதலை உடனடியாக நிறுத்துமாறு இரு தரப்பினரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

1 comment:

Abu Umar said...

அன்பின் அருளடியான்

மொட்டையில் இவ்வளவு விஷயங்களா?

மின்னஞ்சல் மல்யுத்தக்காரர்கள் வலைப்பதிவுகளுக்கெல்லாம் வரவா போகிறார்கள் என்றில்லாமல் உங்கள் கருத்தை வைத்துள்ளீர்கள். தலைப்பை பார்த்தால் 'மொட்டைக்கு'த்தான் அதிக கண்டிப்பு போல் தெரிகிறது.

மொட்டைக்கும் ஒற்றுமைக்கும் முடிச்சுப்போடுவதால் பலன் கிடைத்துவிடுமா? பிரச்சினையின் மூல காரணம் என்னவென்று தெரிந்து நீக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.

மற்றபடி எந்த சண்டை, எந்த மின்னஞ்சல் என்று புரிந்துக்கொள்ள முடியவில்லை.