Tuesday, February 14, 2006

12 முஸ்லிம் அமைப்புகள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

முஸ்லிம் அமைப்புகள் ஆலோசனை கூட்டம் மைலாப்பூர் பிரசிடண்ட் ஓட்டலில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது தலைமை தாங்கினார்.


தமிழ்நாடு தவுகித் ஜமாத் பொதுச் செயலாளர் எஸ்.எம்.பாக்கர், பிரசிடண்ட் குரூப் தலைவர் பிரசிடண்ட் அபு, தமிழ்நாடு ஜமாத் துல் உலமா சபை தலைவர் அப்துல் காதர், ஜமாத் ஐ இஸ்லாமி மாநில செயலாளர் ஜமாலுதீன், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் உமர் பாரூக், ஜமாத்தே இஸ்லாமி செயலாளர் ஜமாலுதீன், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முகமது அலி, இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் முகமது கான், பொதுச்செயலாளர் தர்வேஷ் ரசாதி, மனித நீதிபாசறை குலாம் முகமது, தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் காஜா மஜித், காஜி சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு, தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இக்கோரிக்கையை ஜெயலலிதா ஏற்கும் பட்சத்தில் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய தேசிய லீக் தலைவர் அகமது தெரிவித்தார்.

நன்றி : மாலைமலர் (09-02-2006)

2 comments:

அபூ ஸாலிஹா said...

கடந்த 12ந்தேதி பதிந்த இதே செய்தி, தலைப்பின் நீளம் தாங்கமுடியாமல் காணாமல் போய் விட்டதால் மீண்டும் பதிந்துள்ளேன்.

சுட்டுவிரல் said...

த.மு.மு.க வைத் தவிர்த்துவிட்டோ, அல்லது த.மு.மு.க தவிர்ந்துக்கொண்டோ நடைப்பெற்ற கூட்டம் ஜெயலலிதாவை சந்திக்கவிருப்பதாக முடிவெடுத்துள்ள நிலையில், த.மு.மு.க வினரை விரும்பிச் சந்தித்த மு.கருணாநிதி தனி இட ஒதுக்கீட்டுக்கு தேவையான சட்டதிருத்தத்தை இப்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே கொண்டுவருவதன் பொருட்டு பிரதமருக்கு கோரிக்கை கடிதம் வரைந்துள்ளாராம்.

போட்டி போட்டுக்கொண்டு நல்லது நடந்தால் சரி தான்.