Wednesday, November 01, 2006

பிரித்து மேய்வதும் பின்னி பெடலெடுப்பதும்


இக்கட்டுரை, ரைசுதீன் தம்மை ஆழமான‌ சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வதற்கும் அவருடைய நேரத்தையும் திறமையையும் சரியான வழியில் ‍- அதாவது ‍- இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை சேர்த்துக் கொள்ளும் வழியில் செலவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எழுதப் பட்டதாகும்.

விடாது கருப்பு என்ற வலைப்பதிவில் "ரமலான் மாதத்தில் தவறு செய்யும் இஸ்லாமியர்கள்" என்ற தலைப்பில் அல்லாஹ் நமக்கு வழங்கிய ஐம்பெருங்கடமைகளில் ஒன்றான ரமளான் "நோன்பு" பற்றி எதிர்மறையாகவும் ரமலான் பற்றிய இஸ்லாமிய சட்டதிட்டங்களை தவறு என்றும் பெரியார்வாதி ஒருவர் வாதிட்டிருந்தார். அப்பதிவின் பின்னூட்டத்தில் அறிவுப்பூர்வமாக பல முஸ்லிம் சகோதரர்கள் பதில் அளித்திருந்தார்கள். அப்பதிவின் தலைப்புக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் குறுக்கே புகுந்த ரைசுதீன் என்ற முகவைத்தமிழன் "எச்சரிக்கை என்ற தொடரில் இவர் எழுதிவரும் விஷயங்களை தொடுப்புகளுடன் சுட்டிக்காட்டி "முதலில் தப்பு செய்யும் முஸ்லிம் பெயர் தாங்கிகளை கண்டியுங்கள். அப்புறம் கருப்பு போன்றவர்களுக்கு விளக்கம் தரலாம்" என்று எழுதினார்.

அதற்கு (சீனியர்) அழகு என்ற அழைக்கப்படும் அதிரையைச் சேர்ந்த "ஜமீல் காக்கா", கீழ்கண்டவாறு சுட்டிக்காட்டியிருந்தார்.


//இங்கு முகவைத் தமிழன் என்பவர் ஒரு நெடிய பின்னூட்டமிட்டிருக்கிறார். அது உங்களுடைய பதிவுக்கோ கருவுக்கோ எவ்விதத் தொடர்புமில்லாது மட்டுமின்றி, சுய விளம்பரத்திற்கான பின்னூட்டமாகும். மலிவான சுய விளம்பரத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு சிலர் சித்தமாகவேயுள்ளனர் ‍- நரமாமிசம் தின்பதுவரை. -அழகு//


இதற்குப் பதிலாக முகவைத் தமிழன் என்ற ரைசுதீன் சில கேள்விகளையும், அவதூறுகளையும், கொச்சையான வார்த்தைகளையும் மறுமொழியில் வைத்ததோடு அல்லாமல், (ஜூனியர்) அழகு என்ற கீழை ஜமீல் (ததஜ) என்பவரை எதிர்த்து "பிரித்து மேய்ந்துவிட்டேன்" என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

அதிரை ஜமீல் அவர்களை கீழை ஜமீல் என்று மாற்றிவிட்டால், இவர் எழுதியதெல்லாம் சரியாகிவிடுமா? என்பதுதான் சிந்திக்க வேண்டிய கேள்வி. அதிகமான எதிர்ப்புகள் கிளம்பியவுடன் அவைகளை நீக்கிவிட்டு மனம் திறந்த மடல் ஒன்றை (விடாது கருப்பு பதிவில்) எழுதியுள்ளார்.

ரைசுதீன் என்பவர் அவரின் மனக்குமுறலை "விடாது கருப்பு" என்ற பதிவோடு விட்டுவிடாமல் அவரின் வலைப்பதிவிலும் இணையத்தில் இஸ்லாத்திற்கு எதிராக எழுதும் நபர்களுக்கு பதில் கொடுக்கும் சகோதரர்களை சரமாரியாக விமர்ச்சித்திருந்தார். அதில் ஒரு பத்தி மட்டும் சேம்ப்பிளுக்காக:


//இன்டர்நெட்டில் இசுலாமியம் பேசும் முல்லாக்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் மிஸ்ட்டர் க்ளீன் ஆக வேஷமிடுவதை நிறுத்துங்கள்! அழுக்காக உள்ள உங்கள் சகோதரனை சுத்தப்படுத்துவது எப்படி என்று சிந்தியுங்கள் இவன் அழுக்கு இவனிலிருந்து நான் விலகிக் கொண்டேன் என்று உங்கள் சுற்றத்திடம் கூறி பெருமை கொள்ளலாம் ஆனால் இது உண்மையான பயனை ஏற்படுத்துமா? யாரை வாதத்தின் மூலம் மக்களை ஏமாற்றுகிறார் என்று கூறுகின்றீர்களோ அவருக்கு சற்றும் குறைவில்லாததாகவே உங்களது வாத பிரதிவாதங்கள் உள்ளன. இவற்றால் உங்களை நீங்களே திருப்தி படுத்த இயலுமே தவிற சாதிக்க இயலாது. தாவா அல்லது ஏகத்துவ பிரச்சாரம் என்பது நானும் எழுதினேன் மறுமொழி கொடுத்தேன் வாதம் செய்தேன் எனபதல்ல...உங்களின் எழுத்துக்களாலும் பிரச்சாரத்தாலும் மாற்றங்களை கொண்டுவர இயலவில்லை என்றால் அது உங்களுக்கு கிடைத்த தோல்வியாகவே கருதப்படும். தாவா என்பது நேசக்குமார்களையும், ஹெச்.ஜி. ரசூல்களையும் இஸ்லாத்திற்குள் கொண்டுவருவது உங்களைப்போன்ற இன்டர்நெட்டில் இசுலாம் வளர்க்கும் மார்க்க அறிஞர்களின் பொறுமையற்ற, அவசரத்தனமான, ஆனவம் மிக்க, தான் என்ற மமதையில் செய்யும் தோல்வியில் முடியும் தாவாக்கள் பல நேசக்குமார்களையும், ஹெச்.ஜி. ரசூல்களையும் உறுவாக்குமே தவிற அதனால் பயனொன்றும் இல்லை. இதை நீங்கள் உணர வேண்டும். உங்கள் மேல் இன்னும் எமக்கு நிறைய மறியாதை உண்டு. ஆனால் நீங்கள் மற்றவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். -ரைசுதீன்//


ஆக, ரைசுதீன் என்ற நபர் எழுதிய சம்பந்தப்பட்ட 3 பதிவுகளில் இருந்து குறிப்பிடத்தக்க சில விஷயங்கள்:

1) முதலில் தப்பு செய்யும் முஸ்லிம் பெயர் தாங்கிகளை கண்டியுங்கள். அப்புறம் கருப்பு போன்றவர்களுக்கு விளக்கம் தரலாம். (அதாவது தவறு செய்யும் முஸ்லிம்களை கண்டிக்காதவர்கள், இஸ்லாத்தினைப்பற்றி எந்த வகையில் விமர்சனம் செய்தாலும் அதனைக் கண்டுக்கொள்ளக் கூடாதாம்.)

2) இஸ்லாத்தின் சட்டத் திட்டங்களையும் முஹம்மது (ஸல்) அவர்களையும் மிக மோசமாக விமர்சிப்பவர்கள் உருவாக, இணையத்தில் இஸ்லாமிய எதிர்ப்புகளுக்கு பதில் கொடுக்கும் முஸ்லிம்களே காரணமாக உள்ளனராம். அதற்குக் காரணம் பொறுமையற்ற, அவசரத்தனமான, ஆணவம் மிக்க இன்டர்நெட் இசுலாமியர்களின் கருத்தற்ற வாதங்களும் தவறை நியாயப்படுத்த முயல்வதும் தானாம்.

3) தவறு செய்யும் முஸ்லிம் மவ்லவிகளை, முஸ்லிம் என்பதால் முஸ்லிம் எழுத்தாளர்கள் யாரும் தட்டிக் கேட்பதில்லையாம். இவர் மட்டும்தான் தட்டிக் கேட்கிறாராம். அவ்வாறு இவர் மட்டும் தட்டிக் கேட்கும்போது மற்ற முஸ்லிம்கள் நிறுத்தச் சொல்கிறார்களாம்.

4) இஸ்லாத்திற்கு எதிரானவர்களுக்குப் பதில் கொடுப்பவர்களில் சிலர் இவரின் அநாகரீகமான எழுத்துக்கள் அடங்கிய விமர்சனங்களை எதிர்ப்பதால், மாற்றுப் பெயரில் வந்து இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் பதிவில் முஸ்லிம்களுக்கு எதிராக களம் இறங்கத் தயாராக இருக்கிறாராம்.

5) ரைசுதீனுக்கு இருப்பது திராவிட உணர்வாம். விடாது கருப்புக்கு ஐஸ் வைப்பதுபோல் "முஸ்லிம் பார்ப்பனர்" போன்ற வார்த்தைகளில் முஸ்லிம் வலைப்பதிவர்களை நோக்கித் திட்டியுள்ளார். பார்ப்பனர் ஒருவர் இஸ்லாத்திற்கு வந்தால் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார் என்று சொல்வதற்கு பதில் திராவிடத்திற்கு மாறிவிட்டார் என்று சொல்வாரா? என்று தெரியவில்லை.


பிரித்து மேய்வது:

இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள் பலரால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. யுனிகோடு வசதியுடன் கூடிய வலைப்பதிவுகள் பரவலாக மக்கள் பயன்படுத்த தொடங்கிய அந்த கால கட்டத்தில் சில நபர்களால் (வலைப்பதிவுகள், யாஹூ மடலாடற்குழுக்கள், திண்ணை.காம் போன்றவற்றில்) இஸ்லாம் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டபோது, அதற்காக நேரத்தை ஒதுக்கிய சில சகோதரர்கள் அறிவுப் பூர்வமாக பதிலளித்து வந்தனர். வலைப்பதிவுகளில் இஸ்லாத்தைக் கடுமையாக விமர்சனம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்த அதே வேளையில் இஸ்லாத்தைக் கொச்சைப் படுத்தும் அவர்களுக்கு வெண்சாமரம் வீசும் ஒரு கூட்டமும் உருவாகியது. எனவே இதற்கு அறிவுப்பூர்வமாக பதிலளிக்கும் முயற்சியும் இஸ்லாமிய சகோதரர்களினால் முன்னெடுத்து வைக்கப்பட்டது.

படித்தவர்களும், எழுத்தாளர்களும் அதிகம் புழங்கும் தமிழ்மணம் போன்ற வலைப்பதிவு திரட்டிகளில் இஸ்லாம்பற்றி விவாதிக்கப்பட்டு இஸ்லாம் என்றால் என்ன? அதன் மேன்மையான சட்டத்திட்டங்கள் எவை? அதன் மீது புழுதிவாரித் தூற்றுபவர்களின் பொறாமைக்குக் காரணங்கள் எவை? போன்ற விளக்கங்கள் பரவலாக்கப்பட்டதற்கு இஸ்லாத்தின் எதிரிகளே அவர்களையும் அறியாமல் உதவி புரியலானார்கள். ஆனால், இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று புறப்பட்ட அதே சிலரின் நடவடிக்கைகளால், இஸ்லாம் வளர்ந்துவிடுமோ என்று பயந்த சிலர், இஸ்லாமியர்கள்தான் இஸ்லாம்பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை வைத்து, பிறகு அதற்கான பதிலையும் வைத்து இஸ்லாத்தைப் பரப்ப முயற்சி செய்கிறார்களோ என்ற கருத்தை முன்வைத்தார்கள். நபியவர்களை மரியாதை இல்லாமல் விமர்சனம் செய்தாலே பொறுக்க முடியாத முஸ்லிம்களால், இது போன்ற மட்ட ரகமான விமர்சனங்கள் வைக்கப்பட மாட்டாது என்பதை காலப்போக்கில் அவர்களே புரிந்துக்கொள்ளலானார்கள்.

நமது உயிரிலும் மேலான முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பெண் பித்தராகவும், இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை கேவலமாகவும், வாள் முனையில் இஸ்லாம் பரவியது என்றும் சித்திரிக்க பலர் இணையத்தில் தலையெடுத்த போதுதான் அதற்கு பதில் கொடுப்பதற்காக பலர் உருவானார்கள். தமிழோவியம் என்ற இணைய பத்திரிக்கையில் நபியவர்களை வலிப்பு நோய் உள்ளவராகச் சித்தரித்து ஒருவர் தொடர் எழுதிய போது, அதே தளத்தில் அதற்குப் பதில் தொடரை எழுதிய சகோதரர் போன்றோரை நோக்கிதான் பொத்தாம் பொதுவாக இவ்வாறு புழுதி வாரித் தூற்றுகிறார்.

தமிழ்முஸ்லிம்களின் அரசியல் மேடை என்ற கூட்டு வலைப்பதிவில் இடம்பெற்ற இவர் எழுதிய நாகரீகமற்ற எழுத்துக்களை உள்ளடக்கிய "எச்சரிக்கை" என்ற தொடரை ரமளான் மாதத்தில் கண்ணுற்ற சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதன் பிரதிபலிப்பாக எங்கே என்ன பேசுகிறோம் என்று கூட விளங்காமல், இஸ்லாத்தின் கொள்கைகளை கொச்சைப்படுத்தி எழுதப்பட்ட பதிவில் போய், இவரின் மனக்குமுறல்களுக்கு மருந்து தேடியது, கருப்பு என்ற நபரின் இஸ்லாத்திற்கு எதிரான விமர்சனத்தை ஆமோதிப்பது போல் உள்ளது.

உதாரணமாக:

//ஒன்றும் அறியாத எது காபிர் சகோதரன் கருப்பு இஸ்லாத்தை பற்றி சறியான புறிதல் இல்லாததால் தவறாக ஒரு சிறிய பதிவு இட்டுவிட்டால் ..ங்கொ...இன்னாங்கடா ....அத்தன பேரும் சேந்து வூடு கட்டுறீங்க? -ரைசுதீன்//


பின்னி பெடலெடுப்பது

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் அறிவு இருக்கும். நல்ல அனுபவம் இருக்கும். அவரவர் அவருக்கு தெரிந்த வகையில் எழுதுகிறார்கள். இஸ்லாம்பற்றி அறிவு உள்ளவர்கள், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பதிலளிக்கிறார்கள். இவருக்கு மவ்லவிகளின் தவறுகள் பற்றிய செய்திகள் கிடைத்ததென்றால் அது ஆதாரப்பூர்வமாக இருக்கும் பட்சத்தில் அதனைப்பற்றி அழகான முறையில் விமர்சனம் செய்வதில் தவறேதும் இல்லை. ஆனால், விமர்சனம் செய்வதற்கென்று ஒரு எழுத்து நாகரீகமும் எந்த வார்த்தைகள் பயன்படுத்துவது என்ற இஸ்லாமியக் கட்டுப்பாடும் இருக்கின்றது. இவர் எப்படி எழுதினார் என்று நான் சொல்வதைவிட, நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில் பெண்கள் விஷயத்தில் வழிதவறிப்போன மவ்லவிகளையும் தனது இயக்கத்தினர் என்பதால் அதனை கண்டும் காணாமல் இருப்பவர்களையும் நாசுக்காக சுட்டிக் காட்டிய பதிவுகள் இல்லாமலில்லை.

முஸ்லிம் சாமியார்களின் லீலைகளை எதிர்க்காதவர் இஸ்லாத்தைப் பற்றி பேசக்கூடாது என்றால், அல்கோஃபர் பகுதியில் இவர் தற்போது சேவைகள் செய்வதாக சொல்லும் இஸ்லாமிய மையங்கள் இவரின் பாணியில் முஸ்லிம் சாமியார்களின் காம லீலைகளுக்கு எதிராக வெகுண்டெழவில்லையே. ஆகையால் அவர்களும்தான் இஸ்லாமிய கொள்கைகளைக் கிண்டலடிக்கும் எதிரிகள் உருவாக காரணமாகிவிட்டார்களோ? அல்லது இவர் எழுதியதுபோல் அவர்களெல்லாம் முஸ்லிம் பார்ப்பனர்களோ?

பொறுமையற்ற, அவசரத்தனமான, ஆணவம் மிக்க என்று மற்றவர்களை தூற்றிய இவர்,


//"விடிய விடிய புளு பிலிம் பார்க்கலாம் காலையில் ஜாமானையும் கையையும் கழுவிட்டு டான் மியுசிக்கில் தலைசிறந்த தாயி பேசுகின்றார்" -ரைசுதீன்//


என்றும்


//ஒன்றும் அறியாத எது காபிர் சகோதரன் கருப்பு இஸ்லாத்தை பற்றி சறியான புறிதல் இல்லாததால் தவறாக ஒரு சிறிய பதிவு இட்டுவிட்டால் .. ங்கொ...இன்னாங்கடா ....அத்தன பேரும் சேந்து வூடு கட்டுறீங்க? -ரைசுதீன்//


என்று எழுதியிருந்தார்.

இவைகள்தானோ "நிதானமான, ஆணவம் இல்லாத, கருத்துள்ள" வாதங்கள். அதுவும் புனித ரமளான் மாதத்தில் இவரால் எழுதப்பட்டவை.


//நேசக்குமார்களும், ஹெச்.ஜி.ரசூல்களும், சல்மாக்களும் அவர்களாக உருவாகவில்லை இந்த சமுதாயத்தின் தோல்வியே இவர்கள் என்பதையும் சமுதாயத்தின் பேரில் ஏற்ப்பட்ட வெறுப்பாலும் இவர்கள் போன்ற ஆனவம் பிடித்த இன்டர்நெட் இசுலாமிய மார்க்க அறிஞர்களின் கருத்தற்ற வாதங்களாலும் தவறை நியாயப்படுத்த முயன்றதாலுமே இவர்கள் உருவாணார்கள் என்பதை இன்று இனையத்தில் என்னை எதிர்த்து கொண்டிருக்கும் இந்த இன்டர்நெட் இசுலாமிய மார்க்க அறிஞர்கள் உணரவில்லை. அதன் விளைவே இத்தனை குழப்பங்களும். -ரைசுதீன்//


என்று எழுதிய ரைசுதீனை நோக்கி நான் வைக்கும் கேள்விகள்:

மேற்கண்ட மூன்று நபர்களும் உருவாகக் காரணமாக இருந்த, ஆணவம் பிடித்த இண்டெர்நெட் இசுலாமிய அறிஞர்களின் கருத்தற்ற வாதம் எது? தவறை நியாயப்படுத்திய விஷயங்கள் எவை? என்று தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோடிட்டுக் காட்ட வசதியாக இருக்கும்.

புத்தியுள்ள ஒருவர், இஸ்லாமிய எதிரிகளின் ஆக்கங்களை படித்துவிட்டு, அதற்கு பதில் அளிக்கும் சகோதரர்களின் ஆக்கங்களை படித்தால், யார் யாரை உருவாக்கியவர்கள் என்பது விளங்கும்.

இவர் எழுதும்போது, "பிரித்து மேய்வது", "பின்னி பெடலெடுப்பது" போன்ற வார்த்தைகளை ஹீரோ-தனமாக பயன்படுத்தியிருப்பதால், அவைகளை பதிவின் தலைப்பாக சூட்டியுள்ளேன்.

- அபூ முஹம்மத்
http://tamilmuslimthoughts.blogspot.com

2 comments:

இப்னு அலிய் said...

இவருடைய எழுத்துக்கள் எப்பொழுதுமே வரம்பு மீறுபவைகளாகவே இருந்து வருகிறது. இன்று இவருக்குப் பின் தமுமுக ஆதரவாளர்கள் இருப்பதாகத் தெரிகிறது.

ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் தமுமுகவின் தலைவரை நோக்கி, 'தாயுடன் உறவு கொண்டவர் யார்?' என்றும், 'இவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்' என்ற பொருள்படவும் தன்னுடைய முதல் இரு பதிவுகளில் எழுதியிருந்தார். அதனைக் கண்டித்து அப்பொழுதே நாம் பதிவிட்டிருந்தோம். அதற்கு இவை ததஜவினரால் அனுப்பபட்ட மின்னஞ்சல்கள் என்று சமாதானம் சொன்னார்.

http://vidiyalvelli.blogspot.com/2006/04/blog-post_05.html

ஆனால் இன்று இதே தமுமுகவினர் இவரை ஆதரிக்கின்றனர். தமுமுகவினர் மற்றும் சமுதாய நலவிரும்பிகள் இவரின் சுயரரூபத்தை விளங்கி இவரைவிட்டு ஒதுங்க வேண்டும்.

அருளடியான் said...

அன்புள்ள சகோதரர் அபூ முஹம்மத் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த விவாதத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். சகோதரர் ரைசுதீனிடமும் இந்த விவாதத்தை நிறுத்தச் சொல்லி பின்னூட்டம் இட்டுள்ளேன்.

நன்றி! வஸ்ஸலாம்.
அருளடியான்