Thursday, November 27, 2008

முஸ்லிம் என்று சொல்லாதே!

மும்பை குண்டு வெடிப்புகளுக்கு ‘டெக்கான் முஜாஹிதீன்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இவர்கள் மும்பையில் மட்டும் குண்டு வைக்கவில்லை. இந்தியக் குடிமகன் ஒவ்வொருவனின் நெஞ்சத்திலும் குண்டு வைத்துள்ளனர். இவர்களது செயலால் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவமானம் தான். இவர்கள் முஸ்லிமாக இருக்க முடியுமா? என்பது இருக்கட்டும். இவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியாது. மும்பையில் சட்டம் ஒழுங்கு சீரழிய காரணமான நவநிர்மான் தலைவன் ராஜ் தாக்கரேயை மராட்டிய அரசு உடனடியாகக் கைது செய்ய வேண்டும். தமிழ் நாட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள், சட்டவிரோதமான அமைப்புகளை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள் ஒரு மாதத்துக்கு அனைத்து போராட்டங்களையும் கைவிட வேண்டும். காவல் துறைக்கு பொது மக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும்.

No comments: