Monday, December 19, 2005

அமெரிக்காவை அலட்சியபடுத்தி...

Image hosted by TinyPic.com


இந்தியாவும் பாகிஸ்தானும் உலகத்தின் இரண்டாவது இயற்கை எரிவாயு (LNG) வளத்தைக்கொண்ட ஈரானுடன் கைகோர்த்து ராட்சதகுழாய்கள் மூலம் எரிவாயுவை பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டத்தில் கையொப்பம் இட்டுள்ளது.


Image hosted by TinyPic.com


2600 கி.மீ நீளமுள்ள இந்த கட்டுமானபணி வரும் 2007 ல் துவங்கி 2010 ல் முடிவடைந்து, முதல் குழாய் எரிவாயு வினியோகம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளின் பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்புக்கான சூழலையும் பலப்படுத்துவதாக அமையும். மேலும் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லுறவையும் பரஸ்பர நெருக்கத்தையும் பலப்படுத்துவதாக அமையும் என்று நம்பப்படுகிறது.

40 பில்லியன் அமெரிக்க டாலருக்கான ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்ட இந்தியா, ஈரானுடனான தன் உறவை மீண்டும் பலப்படுத்தியுள்ளது.

உலக்காவலனாக தன்னைத்தானே அறிவித்துக்கொள்ளும் அமெரிக்கா, இந்த நடவடிக்கையை எதிர்த்து குரல் எழுப்பியுள்ளது.

இஸ்லாமாபாத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர ஐயர், அமெரிக்காவின் எச்சரிக்கையை இந்தியா அலட்சியபடுத்தி இத்திட்டத்தில் இறங்கும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கு எதிராக, அணுஆயுத நாடுகளான பாகிஸ்தானும், இந்தியாவும் ஈரானுடன் நட்புகொண்டு களமிறங்கியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

No comments: