Friday, December 30, 2005

கடவுள் -  இணையத் தளத்திற்கு எதிர்வினை

கடவுள் - இணையத் தளத்திற்கு எதிர்வினை

வழிகேடர்களில் ஒரு பிரிவினரான ரஷாத் கலீஃபா குழுவினர் 'கடவுள்' - என்ற பெயரில் தமிழில் ஓர் இணையத் தளம் நடத்துகின்றனர். ரஷாத் கலீஃபாவின் குர் ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பின் முதல் பதிப்பில் தாஹா அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களும் உள்ளன. ஆனால், அந்த மொழி பெயர்ப்புக்கு இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்ட போது அந்த இரு வசனங்களையும் நீக்கி விட்டார். 19 என்ற எண்ணை வைத்து அவர் போட்ட கணக்கிலும், முதல் பதிப்புக்கும், இரண்டாம் பதிப்புக்கும் வித்தியாசம் உள்ளதாகப் படித்துள்ளேன். அதனை மனிதக் குறைபாடு எனச் சொல்கிறார்கள். சராசரி மனிதனுக்கு அந்த தவறு நிகழலாம். ஆனால், இறைத்தூதராக தன்னைக் கூறிக்கொள்ளும் ஒருவருக்கு இது போன்ற தவறு நிகழலாமா? முஹமது நபி(ஸல்) அவர்களின் ஒழுக்கத்திலும், நேர்மையியிலும் அவரது சமகாலத்து முஸ்லிமல்லாதவர்கள் குறைகாணவில்லை. அவர் பிரச்சாரம் செய்த ஓரிறைக் கொள்கைக்காகவே முஹமது நபி(ஸல்) அவர்களை அக்கால குரைஷிகள் எதிர்த்தார்கள். ஆனால், இக்குழுவினரின் நிறுவனர் ரஷாத் கலீஃபா பேராசிரியராகப் பணியாற்றிய கல்லூரி ஆய்வகத்தில் ஒரு சிறுமியை பாலியில் ரீதியாக துன்புறுத்தியதாக காவல் துறையில் வழக்கு பதிவாகியுள்ளதை விக்கிபீடியாவில் வந்துள்ள அவரைப் பற்றிய கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். விண்வெளிப்பயணத்துக்கு தன் ஆன்மா பயணம் செய்ததாகவும், அங்கு தான், இறைவன் தன்னை தூதராக அறிவித்ததாகவும் ரஷாத் கலீஃபா கூறியுள்ளார். போலிச் சாமியார்கள், போலி அவுலியாக்கள் போன்றோர் கூறுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? மவ்லவி பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களோடு நமக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இக்குழுவினரோடு அவர் நேரடி விவாதம் செய்ததையும், தன் குர் ஆன் தமிழ் மொழிபெயர்ப்பின் அடிக்குறிப்புகளில் இக்குழுவினருக்கு உரிய பதில் அளித்துள்ளதையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

No comments: