Monday, July 10, 2006

தெரியுமா? தெரிந்துக்கொள்வோமா?

1.ஃபிர்அவ்னின் மனைவி பெயர் என்ன?
(அ) ஆசியா. (ஆ) பௌசியா (இ) பல்கீஸ் (ஈ) சாரா
(விடை. அ )

2. இறைவன் மூஸா நபியின் வணக்க நாளாக எந்த நாளை அருளினான்?
(அ) ஞாயிற்று கிழமை (ஆ) திங்கட்கிழமை (இ) சனிக்கிழமை (ஈ) வெள்ளிக்கிழமை
(விடை. இ )

3. முதலில் அருளப்பட்ட குர்ஆன் வசனங்கள் எந்த ஸூராவில் அமைந்துள்ளன?
(அ) ஸூரா அலக். (ஆ) ஸூரா பாத்திஹா (இ) ஸூரா நிஸா (ஈ) ஸூரா நாஸ்
(விடை. அ )

5. கஃபத்துல்லாஹ்வை முதன் முதலில் நிர்மாணிக்கும் பணி யாரிடம் விடப்பட்டது?
(அ) இப்ராஹீம் நபி (ஆ) முஹம்மது நபி (ஸல்) (இ) ஆதம் நபி (ஈ) சுலைமான் நபி
(விடை. அ )

10. நபி (ஸல்) அவர்கள் தனக்கு ஒதுக்கிய ஒரு நாளை ஆயிஷா (ரலி) அவர்களுக்காக விட்டுக் கொடுத்த நபி (ஸல்) மனைவி யார்?
(அ) ஜைனப் (ரலி) (ஆ) ஸவ்தா(ரலீ) (இ) கதீஜா(ரலி)
(விடை. ஆ)

11. ஓ இரட்சகா! எனக்கு கல்வி ஞானத்தை அதிகமாக்குவாயாக! எனப் பிரார்த்தித்தவர் யார்?
(அ) மூஸா (அலை) (ஆ) நூஹ்(அலை) (இ) முஹம்மது (ஸல்)
(விடை. 20.114)

12. நம்மில் பெரும்பாலோர் வீடுகளிலும் கடைகளிலும் ஹாதா மின் ஃபழ்லி ரப்பி (இது எனது இரட்சகனின் அருட்கொடையாகும்) என ஸ்டிக்கர் ஒட்டி வைத்திருப்பதைக்; காணலாம். இதனைக் கூறியவர் யார்.
(அ) முஹம்மது(ஸல்) (ஆ) சுலைமான்(அலை) (இ) இப்றாஹீம்(அலை)
(விடை.27.40)

12. உம்மி நபி ரசு10ல் எனச் சிறப்பிக்கப்பட்டவர் யார்?
(அ) முஹம்மது(ஸல்) (ஆ) யூசுப்(அலை) (இ) ஹூது(அலை)
( விடை. 7. 157 62. 2)

13. இறைவனுக்கு இணைவைப்பதைத் தவிர வேறு எந்தப் பாவத்தையும் ஏகன் அல்லாஹ் மன்னிப்பான் எனக் கூறும் இறை வசனங்கள் யாவை?
(அ) 46.28 (ஆ) 6.108 (இ) 4.48)
(விடை. 4.48 116)

14. முழு மனித சமூதாயத்திற்கும் தலைவராக (இமாமாக) இறைவனால் பிரகடனப் படுத்தப்பட்டவர் யார்?
(அ) யாகூப்(அலை) (ஆ) இப்றாஹீம்(அலை) (இ) இஸ்மாயீல்(அலை)
(விடை.21.24)

14. நீங்கள் இரு சாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? என்ற இறை வசனங்களில் கூறப்படும் இரு சாரார் யார் யார்?
(அ) ஆண் பெண் (ஆ) யூதர் கிருத்தவர் (இ) ஜின் மனிதன்.
(விடை. 55.16 33 34 )

15. சிலந்தியின் வீடு யாருக்கு ஒப்பிடப்படுகிறது?
(அ) முஸ்லீம் (ஆ) முஷ்ரிகீன் (இ) வேதம் கொடுக்கப்பட்டவர்.
(விடை. 29. 41)

16. தொட்டிலிலிருந்து பேசிய பாலகன் யார்? என்ன போசினார்?
(அ) மூஸா(அலை) (ஆ) ஈஸா(அலை) (இ) சாலிஹ்(அலை)
(விடை. 19.30)

17. மீனை வழியில் தவறவிட்டவர் யார்?
(அ) இஸ்மாயீல்(அலை) (ஆ) தாவூத்(அலை) (இ) மூஸா(அலை)
(விடை. 18.63)

18. தீய ஒழுக்க அவதூறில் ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்டுச் சிறைத் தண்டனை அனுபவித்தவர் யார்?
(அ) யூசுப்(அலை) (ஆ) ஈஸா(அலை) (இ) யாகூப்(அலை)
(விடை. 12.32 33)

19. இரும்புப் பாளங்களுக்கிடையில் செம்பை ஊற்றித்தடுப்புச் சுவர் எழுப்பியவர் யார்?
(அ) சுலைமான்(அலை) (ஆ) துல்கர்னைன்(அலை) (இ) எஹ்யா(அலை)
(விடை. 18.96)

20. நபி(ஸல்) அவர்களின் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன என இறைவனால் வாக்களிக்கப்பட்ட வசனம் எது?
(அ) 15.10 (ஆ) 5. 4 (இ) 48. 2
(விடை. 48.2)

21. இரு நல்லடியார்களின் துணைவியர்கள் கெட்டவர்கள். நரகவாசிகள் என்பது இறை வாக்கு அவர்கள் யார்? யார்?
(அ) மூஸா(அலை). ஹாரூன்(அலை) (ஆ) இப்றாஹீம்(அலை) . இஸ்மாயீல்(அலை) (இ) நூஹ்(அலை) . லூத்(அலை)
( விடை. 66.10)

22. இப்லீஸ் ஷைத்தானுக்குள்ள வேறு பெயர்களில் மூன்றினைக் குறிப்பிடுக?
(அ) வஸ்வாஸ் . கன்னாஸ். (ஆ) ரஜீம் . தாகூத். (இ) அதூஉ . குரூர்.
விடை. அனைத்தும் ஷைத்தான் பெயர்தான். (114.4) (15.34) (2.256) (9.114) (17.64)

23. குர்ஆனில் பெயர் இடம் பெற்றிருக்கும் ஒரு நபித்தோழர் யார்?
(அ) அபூபக்கர் (ஆ) ஹப்பாப் (இ) ஜைது இப்னு ஹாரிஸ்
(விடை. 33.37)

24. ஜகாத் பெறத் தகுதியுடையோர் எத்தனை வகையினர்?
(அ) ஆறு வகையினர் (ஆ) நான்கு வகையினர் (இ) எட்டு வகையினர்
(விடை. 6.90)

25. ஸகர் என்பது என்ன?
(அ) நரகம் (ஆ) செர்க்கம் (இ) கவ்ஸர் தடாகம்.
(விடை. 74.43 44)

26. பிறந்த குழந்தைகளுக்குரிய பால்குடிக் காலம் எவ்வளவு?
(அ) ஒரு வருடம் (ஆ) இரண்டு வருடம் (இ) மூன்று வருடம்
(விடை. 2.233 31.14)

27. அன்னை ஆயிஷா (ரலி) மீது கூறப்பட்ட வீண் அவதூறை அகற்றி அவரது பரிசுத்தத்தை வெளிப்படுத்திய இறைவாக்கு எது?
(அ) 3. 15 (ஆ) 2. 215 (இ) 24.12
(விடை. 24.12)

28. மாதவிடாய் நின்று விட்ட பெண்களுக்கான இத்தா காலம் எவ்வளவு?
(அ) நான்கு மாதம் (ஆ) ஒரு வருடம் (இ) மூன்று மாதம்
(விடை. 65.4)

29. எங்கள் இரட்சகா! நீ எங்களுக்கு இவ்வுலகில் நன்மையை நல்குவாயாக! மறுமையிலும் நன்மையை நல்குவாயாக! நரக நெருப்பிலிருந்து பாதுகாத்தருள்வாயாக! என்ற பிரார்த்தனை குர்ஆனில் எங்கு இடம் பெற்றுள்ளது?
(அ) 3.10 (ஆ) 7.92 (இ) 2.201
(விடை. 2.201)

30. தமது முஸ்லிம் சகோதருக்கும் விரும்பாத வரை ஒருவர் ஈமான் கொண்டவர் ஆகமாட்டார்கள் என்று நபிகளார் (ஸல்) குறிப்பிட்டது எதனை?
(அ) அல்லாஹ் ஹலால் ஆக்கியதை (ஆ) அனைத்திலும் சிறப்பானதை (இ) தான் வெறுக்ககாததை (ஈ) தனக்கென எதனை விரும்புவாரோ அதனை.
(விடை. ஈ )

(தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்)

நன்றி: தொகுத்தவருக்கு

No comments: