Sunday, July 16, 2006

மோடியை தடைவோம் - ஆஸ்மி.

மும்பை - குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி மும்பையில் நுழைவதை தடைவோம் என சமாஜ்வாடி கட்சி மஹாராஷ்டிரா மாநில தலைவர் அபூ அஸிம் ஆஸ்மி கூறினார். பிஜேபி மும்பையில் நடத்தவிருக்கின்ற "தீவிரவாத எதிர்ப்பு பேரணி"யில் பங்கெடுக்க திங்கள் கிழமை மோடி மும்பை வரவிருக்கிறார். மோடியின் மும்பை வருகைக்கு எதிராக களமிறங்குவோம் என்றும் மோடி மும்பை வந்தால் அவரை கெரோ செய்வோம் என்றும் ஆஸ்மி கூறினார்.
குஜராத் வதோதரா புகைவண்டி தீவைப்பு சம்பவத்திற்குப் பின் அங்கு நரேந்திரமோடி தலைமையில் நடந்த பேரணிக்குப் பிறகே முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரம் குஜராத்தில் நிகழ்ந்தது என்பதும் அதில் 3000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை ஹிந்துத்துவவாதிகள் இனசுத்தீகரிப்பு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற ஓர் சம்பவத்தை மும்பையிலும் நிகழ்த்த நரேந்திரமோடியின் மும்பை வரவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு ஏற்றாற் போன்றே சங்க்பரிவாரின் தலைமையான ஆர் எஸ் எஸ்ஸின் இந்திய தலைவர் சுதர்சன் ஆர் எஸ் எஸ்ஸின் இதழான பாஞ்சஜன்யாவில் மும்பை தொடர் குண்டு வெடிப்புகளைக் குறித்து எழுதியுள்ளார். நாட்டில் நடக்கும் எந்த அசம்பாவிதத்தையும் தங்களது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் கட்சிகளின் சீரழிந்த போக்கை பிஜேபியும் அதற்கு துணை போகும் ஆர் எஸ் எஸ்ஸும் இவ்விஷயத்திலும் தெளிவாக கடைபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. அதன் முதல்படியே பிஜேபி நடத்தப்போகும் மும்பை பேரணி.

இதனை எதிர்த்து தான் சமாஜ்வாடி மஹாராஷ்டிரா மாநில தலைவர் ஆஸ்மி களமிறங்கியுள்ளார். முஸ்லிம்களை மட்டும் குற்றவாளிகளாக கருதிக் கொண்டு நடத்தும் காவல்துறை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். "முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக கருதிக் கொண்டு நடத்தும் விசாரணைகளால் பலன் ஒன்றும் விளையப்போவதில்லை. 20 கோடி முஸ்லிம்கள் வீதியில் இறங்கினால் ஏற்படும் பின்விளைவுகளை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தமுடியாமல் போகும்." என மேலும் அவர் கூறினார்.

மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைக் குறித்தும், புகைவண்டி கலவரங்களைக்குறித்தும், பால்தாக்கரேயின் மனைவி சிலையை களங்கப்படுத்தியதை எதிர்த்து நடந்த சம்பவங்களைக் குறித்தும் மேல்மட்ட புலன்விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

No comments: