Thursday, May 26, 2005

பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா?

புனித பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா? - பழனி பாபா : நூல் விமர்சனம்



நூல்: புனித பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா?
ஆசிரியர்: பழனி பாபா
பக்கம்: 80
விலை: ரூ. 15
கிடைக்குமிடம்: சாஜிதா புக் சென்டர், 248 தம்புச் செட்டி தெரு, சென்னை - 600 001

பைபிளையும், குர் ஆனையும் ஒப்பிட்டு தமிழில் பல நூல்கள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டவை. மர்ஹும் பழனி பாபா, தன் விமானப் பயணத்தின் போது, அரபுக் கிறிஸ்தவ விமானப் பணிப்பெண்ணுடன் பைபிள் தொடர்பாக செய்த விவாதத்தை நூலாக வெளியிட்டு இருந்தார். இது அந்த நூலின் மறுபதிப்பு.

மறைந்த பழனிபாபாவின் அரசியல் அனுகுமுறையில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது. எனினும் அவரின் பைபிள் ஆய்வு இன்றைய தினம் உலக அளவில் புகழ் பெற்றுள்ள பல இஸ்லாமிய அழைப்பாளர்களின் ஆய்வுக்கு இணையானது. இந்த நூல், சோர்வடையச் செய்யாத நடையுடன், விறுவிறுப்பாக உள்ளது.

No comments: