Monday, August 22, 2005

பிரிவுகளின் பின்னணியில்

சட்டம் (விளக்கம்)
ஹதீஸ்கள் - நபிமொழிகள் ஆரம்பத்தில் எழுதப்படாததினால் நபிமொழிகளை தெரிந்து கொள்ள நபித்தோழர்களையும், அவர்களின் மாணவர்களையும் தேடிச்சென்று பல ஆண்டுகள் அவர்களுடனேயே இருந்து மார்க்கத்தை கற்றுக் கொள்ளும் நிலை இருந்தது. மார்க்கத்தைக் கற்க பல தியாகங்கனை செய்து (கஷ்ட்டப்பட்டு) கஷ்ட்டப்பட்டவர்களில் நான்கு இமாம்களும் அடங்குவர்.

இவ்வாறு பல வருடங்கள் கல்வியைக் கற்று(சொந்த) ஊர் திரும்பும் அவர்களிடம் மக்கள் தங்களுக்கு எழும் (மார்க்க) சந்தேகங்களை அவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளவார்கள் இதனடிப்படையில் அந்தந்த இமாம்களிடம் கல்வியைக் கற்பவர்கள் அவரவர்கல்வி கற்ற இமாமைச் சார்ந்தவர்கள் என்ற பொருள் பட ஷாஃபியி, மாலிகியி என்று கூறலாயினர்.

ஒவ்வொரு தீர்ப்புக்குப்பின்னும் நான்கு இமாம்களும் (ஒரு விஷயத்தில்) சரியான ஹதீஸ் எங்களுக்கு கிடைத்து விட்டால் அதுவே எங்களின் வழியாகும் என்ற பொருள்பட கூறினார்கள்.

இமாம்கள் தங்களுடைய வாழ்நாட்களை மார்க்கத்தை கற்கவும், போதிக்கவும் அரசர்கள் செய்யும் தவற்றை துணிந்து விமர்ச்சிக்கவும் அதனால் ஏற்படும் துன்பங்களை பொறுமையாக ஏற்றுக் கொண்டும் கழித்ததுடன், அவர்கள் பல நூல்களையும் எழுதியுள்ளார்கள்.
(உம்) இமாம் மாலிக் அவர்களின் "முஅத்தா"
இமாம் அஹ்மத் அவர்களின் "முஸ்னத் அஹ்மது"

இன்றைய மத்ஹபுகள்:
இன்று நம் சமுதாயத்தில் உள்ள மத்ஹபுகளுக்கும், இமாம்களின் வழிமுறைகளுக்கும் பெயரளவில் தவிர வேறு எந்தத் தொடர்பும் இல்லை.

இன்று மத்ஹபு நூல்களாக மதரசாக்களில் படித்துக்கொடுக்கப்படும் நூல்களுக்கும், இமாம்கள் கைப்பட எழுதிய நூல்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லாதது மட்டுமின்றி அவர்கள் எழுதிய சட்டத்திற்கு முரணான சட்டங்களே அதிகம் உள்ளன. இந்நூல்கள் எல்லாம் சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவையே. முகலாயர் ஆட்சிக்காலத்தில் அவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் ஹராமானவற்றை (மது அருந்துவது, பொது சொத்துக்களை அபகரிப்பது, விபச்சாரம், திருடுதல்) ஹலாலாக்குவதற்காக வேண்டி எழுதப்பட்டவைகளும் உண்டு.

உதாரணம்:
ஹனஃபி- துர்ருல் முக்தார், ஹிதாயா, ஆலம்கிரி
ஷாஃபி- ஃபத்ஹுல் முயீனா, இயானா, மகானி.

கொள்கை வேறுபாடுகள்:ஹிஜ்ரி 37 வரை அலி(ரலி) அவர்களின் ஆட்சியின் ஒருப்பகுதி, சமுதாயத்தில் கொள்கை ரீதியாக எந்த வேறுபாடும் வரவில்லை.

அலி(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியலை அடிப்படையாக வைத்து இரண்டு பிரிவினர்கள் உருவானார்கள் 1. ஷியா 2. கவாரிஜ்
கொள்கையை அடிப்படையாக வைத்து அ) கத்ரியா ஆ) முர்ஜியா என இருபிரிவாக பிரிந்தார்கள்.

காரிஜியாக்கள் (வெளியேறியவர்கள்) ஹிஜ்ரி 37

அலி(ரலி) அவர்கள் தங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்ப்பு கூற இரண்டு நீதிபதிகளை நியமித்தார்கள். அப்பொழுது (குர்ஆனை) அல்லாஹ்வின் சட்டங்களை விட்டுவிட்டு மனிதர்களின் சட்டங்களை ஏற்றுக் கொண்டுவிட்டார். அப்படி ஏற்றவர் காஃபிர் ஆவார். அவர் அல்குர்ஆனின் பக்கம் வரும் வரை அவருடன் போர் செய்ய வேண்டும் என்று கூறி அலி(ரலி) அவர்களை விட்டு வெளியேறியவர்களே காரிஜியாக்கள்.

காரிஜியாக்களின் கொள்கை
1. பெரும் பாவம் செய்பவர் காஃபிர் ஆவார், அவருடைய உயிரும், உடமையும் ஹலால் ஆகும்
2. முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான் (49:9)

ஷியா (ஆதரவாளர்கள்)அபூபக்ர்(ரலி), உமர்(ரலி) அவர்கள் காலத்தில் (பிரிவினை) தனிப்பட்ட ஆதரவாளர்கள் இல்லை. அவர்களுக்குப் பிறகு உஸ்மான்(ரலி) அவர்காலத்தில்தான் உஸ்மான்(ரலி), அலி(ரலி) இவர்களில் யார் ஆட்சிக்கு தகுதியானவர் என்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் தனித்தனி ஆதரவாளர்கள் தோன்றினார்கள். இவர்களில் யாரும் ஒருவரையொருவர் விமர்சிக்க, பழிக்க முன்வரவில்லை. ஆதரவைமட்டும் தான் தெரிவித்தார்கள். அலி(ரலி) அவர்களின் ஆதரவாளர்கள் வழிகெடுத்தவன் அப்துல்லாஹ் பின் ஷபா இவன் இராக்கைச்சேர்ந்த யூதனாவான். இவன் தான் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாகவும், நபி(ஸல்) அவர்கள் குடும்பத்தைச்சார்ந்தவர்களை மிகவும் நேசிக்கக்கூடியவனென்றும். நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு ஆட்சிக்கு தகுதியானவர் அலி(ரலி) தான் என தவ்ராத்தில் இருப்பதாகக் கூறி சமுதாயத்தில் பிளவை, குழப்பத்தை உண்டு பண்ணினான். பிறகு அலி(ரலி) அவர்களையே நபி என்றும் மேலும், அவர்களையே நாயன்(அல்லாஹ்) என்றும் கூறினான். இந்தக் கூட்டத்தில் தான் மறுபிறவி, மறைவானவற்றை அறிதல், கிலாபத்திற்காக வஸியத் செய்தல் ஆகிய கொள்கைகள் உருவாயின. இதேக்கூட்டம் பல தவறான கொள்கைகளுடன் 10-க்கும் அதிகமான பிரிவுகளாக பிரிந்தது.

கத்ரியாக்கள் (விதியை மறுப்பவர்கள்)
1. "சூசன்" இவர்களை வழிகெடுத்தவன்
2. ஒரு செயல் நடப்பதற்கு முன் அல்லாஹ் அதுபற்றி அறியமுடியாது. மனிதன் அனைத்து செயல்களையும் சுயமாகவே செய்கிறான்(விதி ஏதும் இல்லை).
3. இக்கொள்கையை முஸ்லீம் சமுதாயத்தில் நூழைத்தவன் மஃபத் அல் ஜஹ்னி. இவன் சூசன் என்ற கிருஸ்தவத்தில் இருந்து இஸ்லாத்திற்கு மாறி திரும்பவும் கிருஸ்த்தவத்திற்கே சென்றுவிட்டவனிடமிருந்து இக்கொள்கையை கற்றான். மஃபத்திடதிருந்து கைலான் இக்கொள்கையைக் கற்று பிரச்சாரம் செய்தான் விதியைப் பற்றி இஸ்லாமிய சமுதாயத்தில் தவறான விளக்கம் அளித்தவன் மஃபத்தே.

முர்ஜியா (தாமதப்படுத்தவர்கள்) கொள்கை:
ஈமான் என்பது அல்லாஹ்வை அறிவதுமட்டுமே. ஈமானுக்கும், செயல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
(உ.ம்) மார்க்கத்திற்கு முரணான செயலும்கூட ஈமானுக்கு எந்தபாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே, யாரையும் காஃபிர் என்று சொல்லுதல் கூடாது. இந்தக்கருத்தை முதலில் கூறியவர் ஹசன் பின் முஹம்மத் அல்ஹனபியா. இவர் கொள்கையை உருவாக்கக் காரணம் காரிஜியாக்கள் அலி(ரலி) அவர்களையும் அவர்களைச்சார்ந்தவர்களையும், நீதிபதிகளையும் காஃபிர்கள் என்று கூறி அவர்களோடு போர் செய்ய வேண்டும் என்று கூறியதை மறுக்கவே இவ்வாறு கூறினார். இவர் இறந்த வருடம் 99 ஹிஜ்ரி. இவர் இறப்பதற்கு முன் தவ்பா (பாவமன்னிப்பு) செய்துக் கொண்டார்.

ஹிஜ்ரி 100 முதல் 150 வரை:

1) வாஸில் பின் அதா
(கொள்கை)
முஃதஜிலா (நீங்கியவன்) பெரும்பாவம் செய்தவன் மூஃமினும் இல்லை, காஃபிரும் இல்லை. மாறாக நடு(நிலை)வில் இருக்கிறான். சஹபாக்களில் ஒரு பிரிவினர் பாவிகள் என்று கூறினான். இக்கொள்கையுடையவர்களின் ஹதீஸ் அறிவிப்பு ஏதும் ஏற்றுக்கொள்ளப்படாது.

2) ஜஅத் பின திர்ஹம்
(கொள்கை)
குர்ஆன் படைக்கப்பட்ட(பொருள்)து. குர்ஆனை அல்லாஹ்வுடைய வார்த்தை எனில் அது ஒரு நாள் அழிந்து விடும். (அல்லாஹ்வின் ஒரு தன்மை அழியுமானால் அல்லாஹ்வும் அழியக்கூடியவன் என்றாகிவிடும்). குர்ஆனும் நம்மைப் போன்று படைக்கப்பட்டதே என்பது அவனுடைய தவறான கருத்து.

3) ஜஹம் பின் ஸஃப்வான் (கொள்கை) அல்லாஹ்வின் தன்மைகளை நிராகரித்தான். (நமக்குள்ள நடத்தல் பார்த்தல் போன்ற பண்புநம்மிடம் உள்ளதால்) சொர்க்கம், நரகம் இரண்டுக்கும் அதற்குரியவர்கள் சென்றபின் சொர்க்கம், நரகம் இரண்டும் சிறிது காலத்திற்குபின் அழிந்துவிடும். ஏனெனில் அதற்கு பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கு மென்பதை (அவனுடைய) அறிவு ஏற்றுக் கொள்ளவில்லை.
4) முகாதில் பின் ஸுலைமான்: அல்லாஹ்வின் தன்மையை ஏற்றாலும் (நம்மைப்போன்றுதான் என்ற) உருவம் கொடுத்தவன். இக்கொள்கையை யூத, கிருஸ்தவர்களிடம் இருந்து பெற்றான்.

தற்கால கொள்கை வேறுபாடான காதியானிகள், மெய் வழி, பைஜி என இப்பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது.

No comments: