
Source: தினகரன் இ-பேப்பர் (28-06-2006)
முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்) செய்த சொற்பமானவற்றைப் பற்றி பெருமை கொண்டு செயல்பாட்டு பட்டியலை உலகறிய வாசிக்க வேண்டிய தேவையுமில்லை.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அனுப்பப்பட்ட நபிமார்களுடன் ஈமான் கொண்டவர்களை இணைத்து இஸ்லாத்தின் அடிப்படையில் உருவான சமூக அமைப்பே ஜமாஅத் (அல் முஸ்லிமீன்).
1419 வருடங்களுக்கு முன்னால் இஸ்லாத்தின் அடிப்படையில் உருவான இக்கூட்டமைப்பிற்கு தலைவராகவும் இருந்து வழி நடத்தி சென்றவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள்.
நபி(ஸல்) அவர்கள் மறைவிக்கு பின்னர் நான்கு கலிஃபாக்கள் இக்கூட்டமைப்பிற்கு தலைவராக இருந்து வழிநடத்தியதும் அதற்கு பின்னர் ஏற்பட்ட பிரிவினையும் நாம் அறிந்தவையே.
நபி(ஸல்) அவர்கள் மூலமாக இஸ்லாதின் அடிப்படையில் உருவாக்கிய அக்கூட்டமைப்பின் மூலமே சமூக அமைப்பினையும், சமூக ஒற்றுமையும் ஏற்படுத்திட இயலும்.
இஸ்லாத்தின் சமூக அமைப்பு என்பது உலகம் தழுவியது; ஓர் தலைமை கொண்டது; இதனை எந்த ஒரு தனி நபர் அல்லது குழுவின் முயச்சியாலும் உருவான எந்த ஒரு இயக்கத்தாலும் ஏற்படுத்திட இயலாது. இதுவே உண்மையாகும்.
இயக்கங்கள் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களில் சொற்பமானவர்களால் ஏற்றுக் கொள்ளபட்டு இருக்கும், எந்த ஒரு இயக்கமும், அந்த பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு அந்த இயக்கமே சமூக அமைப்பு என கூறிட முடியாது. எந்த ஊரை வேண்டுமானாலும் எடுத்து பரிசீலித்துப் பாருங்கள்.
இந்த ஊர் முழுக்க முழுக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சார்ந்தது.
இந்த ஊர் முழுக்க முழுக்க தேசிய லீக்கை சார்ந்தது.
இந்த ஊர் முழுக்க முழுக்க S.I.M சார்ந்தது.
இந்த ஊர் முழுக்க முழுக்க S.I.O சார்ந்தது.
இந்த ஊர் முழுக்க முழுக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சார்ந்தது.
இந்த ஊர் முழுக்க முழுக்க J.A.Q.H சார்ந்தது.
இந்த ஊர் முழுக்க முழுக்க T.M.M.K சார்ந்தது.
இந்த ஊர் முழுக்க முழுக்க தப்லீக் ஜமாஅத்தை சார்ந்தது என யாரவது கூறிவிட முடியுமா?
எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் அந்த ஊரில் உள்ள சொற்பமானவர்களை தன் பக்கம் ஒன்று சேர்க்க இயலாத இயக்கங்கள் எப்படி சமூக அமைப்பினை ஏற்படுத்திட இயலும்.?
எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் அந்த ஊரில் உள்ள சொற்பமானவர்களை தன் பக்கம் ஒன்று சேர்க்க இயலாத இயக்கங்கள் எப்படி சமூக அமைப்பினை ஏற்படுத்திட இயலும்.?
இஸ்லாத்தின் சமூக அமைப்பு என்பது உலகம் தழுவியது; ஓர் தலைமை கொண்டது; இதனை எந்த ஒரு தனி நபர் அல்லது குழுவின் முயச்சியாலும் உருவான எந்த ஒரு இயக்கத்தாலும் ஏற்படுத்திட இயலாது.
முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்) எந்த ஒரு தனி மனிதராலும் அன்று தோன்றிய அமைப்புமல்ல.
முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்) நேன்று சிலர் கூடி தோற்றுவித்த கழகமுமல்ல.
முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்) இன்று பலர் கூடி உருவாக்கிய இயக்கமுமல்ல.
முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்)பிறருக்கு தொல்லை கொடுக்கும் பேரணி கோசங்கள் எழுப்பி பத்திரிக்கையில் விளம்பரம் தேடாமல், விளம்பரத்திற்கு என தனி பத்திரிக்கை நடத்தாமல் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாத்தினை ஏற்று ஒன்றுபட்டு செயல்படுபவர்களையே குறிக்கும்.
உலகத்தேவையை உயர்வென கருதாமல்,
ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாதினை ஏற்றிருப்பவர்கள் இணைந்திருக்கும் கூட்டமைப்பே முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்)
இந்த கூட்டமைப்பு இல்லாத ஊர்களில்லை. ஒரே ஒரு தெரு கொண்ட ஊர்களிலும் இக்கூட்டமைப்பு இருக்கவே செய்கின்றது. எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் ஊர் பெயர் எழுதி, அதற்கப்பால் முஸ்லிம் ஜமாஅத் என்று எழுதுவதை நடைமுறையில் காணலாம். முஸ்லிம் மக்கள் மறந்து விட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட ஒரு மிகப் பெரும் சமூக அமைப்பே முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்).
முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்) செய்த சொற்பமானவற்றைப் பற்றி பெருமை கொண்டு செயல்பாட்டு பட்டியலை உலகறிய வாசிக்க வேண்டிய தேவையுமில்லை.
லோக்சபாவில் தங்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முஸ்லிம்கள் முனைப்புடன் முயற்சி செய்கின்றனர். அதை இந்துக்கள் முறியடிக்க முன்வர வேண்டும். இதற்காக
நக்சலைட்டுகளின் உதவியைக் கூட நாடலாம்.
இதிலிருந்து நாம் பெற வேன்டிய படிப்பினை : நாம் இயக்க
விரோதம், தனிநபர் விரோதம் ஆகியவற்றை நீக்கி ஒன்று பட்ட சமூகம் என்ற அடிப்படையில் அரசின் அனைத்து துறைகளிளும் நமது விகிதாச்சாரத்தை அதிகரிக்க முனைய வேன்டும். இதற்கு
நமது அனைத்து இயக்கங்களும் ஒத்துழைக்க வேன்டும்.
உள்குத்து : இவ்வளவு தூரம் தம் கட்டி உணர்வு வாரஇதழில் சட்டசபைக்கு சென்ற சகோதரி "ஜெ" யின் சாதனையை "நமது எம்ஜிஆர்" பத்திரிகையைவிட அதிகமாக கட்டம் கட்டி எழுதியும் கூட தன்னை "அண்ணன்" என்று அழைக்காததால் உண்மையான அண்ணன் பிஜேயும் சகாக்களும் கடுமையான கோபத்தில் இருப்பதாக செய்தி.
"ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?" என்பது கடந்த சில ஆண்டுகளாக தமிழக முஸ்லிம்களிடமும் உலக அளவில் வாழும் தமிழ் கூறும் முஸ்லிம்களிடமும் முக்கிய விவாதப் பொருளாக அமைந்துள்ளது. (ஏகத்துவம் செப் - 2005)
நபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்கள், நம்மை விட ஈமானில் சிறந்தவர்கள் என்றெல்லாம் வரக்கூடிய விஷயங்களில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. இதற்கு ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன.
(ஏகத்துவம் செப் - 2005)
குளிப்பு கடமையானவர் தண்ணீர் இல்லையானால் தயம்மும் செய்து விட்டுத் தொழலாம் என்பது தெரிந்திருந்தும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தயம்மும் செய்து தொழக் கூடாது என்று கூறுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மரணித்ததைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் உமர் (ரலி) உள்ளிட்ட பல்வேறு நபித்தோழர்கள் மறுத்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் லுஹா தொழுததாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இருந்தும், ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் லுஹா தொழுததேயில்லை என்று மறுத்துள்ளார்கள்.
குர்ஆனில் 114 சூராக்கள் உள்ளன என்பதில் உலகில் எந்த முஸ்லிமுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் 113, 114 ஆகிய சூராக்கள் குர்ஆனில் இல்லை என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மறுத்த செய்தி அஹ்மத் 20244, 20246 ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது. (ஏகத்துவம் - செப் 2005)
நீங்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு காஃபிர்களாகி விடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தும், உஸ்மான் (ரலி) கொலை, ஒட்டகப் போர், சிஃப்பீன் போர் என நபித் தோழர்கள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தூக்கியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, ''நீங்கள் அல்லாஹ்விடம் வெறுங்காலுடையவர்களாக, உடையணியாதவர்களாக, விருத்த சேதனம் செய்யபடாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்'' என்று கூறிவிட்டு, ''முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்'' என்ற (21:104) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு மறுமை நாளில் உடையணிவிக்கப்படும் முதல் மனிதர் இப்ராஹீம் (நபி) அவர்கள் தாம். அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய சமுதாயத்தாரில் சில பேர் கொண்டு வரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்திற்கு) கொண்டு செல்லப்படுவர். அப்போது நான், ''என் இறைவா, என் தோழர்கள்'' என்று சொல்வேன். அதற்கு, ''இவர்கள் உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று சொல்லப்படும். அப்போது நான் நல்லடியார் ஈஸா (அலை) அவர்கள் கூறியது போல், ''நான் அவர்களிடையே இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகி விட்டாய்'' என்று பதிலளிப்பேன். அதற்கு, ''இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டேயிருந்தார்கள்'' என்று கூறப்படும். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 4740, 6524.
(ஏகத்துவம் - செப் 2005)
(புரட்சிமின்னல் ஜூன் 1988 – ஆசிரியர் குழு : கெ. முஹம்மது இக்பால் மதனி, பி.ஜைனுல் ஆபிதீன் உலவி, S. கமாலுத்தீன் மதனி, K.S. ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, M.முஹம்மது யூசுப் மிஸ்பாஹி)
ஸஹாபாக்கள் எதைக் குர்ஆன் என்று அறிமுகப்படுத்தினார்களோ அதில் எதனையும் கூட்டவோ குறைக்கவோ நாம் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. ஹதீஸ்களைப் பொறுத்தவரை ஒரு நபித்தோழரோ பலரோ அதை நபிமொழி என்று அறிவித்திருப்பார்கள். ஆனால் ஒரு வசனத்தைக் குர்ஆனின் ஒரு பகுதி என்று கூற வேண்டுமானால் நபித்தோழர்கள் அனைவரும் அதனைக்குர்ஆன் என்று அறிமுகம் செய்திருக்க வேண்டும். அபூபக்ரு (ரழி) தொகுத்த குர்ஆனும் உஸ்மான் (ரழி) அவர்கள் அதிலிருந்து எடுத்த நகல்களும் ஸஹாபாக்களின் ஒருமித்த கருத்தைப் பெற்றிருந்தது. குர்ஆனில் இல்லாததைத் தவறாகச் சேர்த்திருந்தால் நபித்தோழர்களில் எவராவது அதனை ஆட்சேபனை செய்திருப்பார்கள். அதுபற்றி சர்ச்சைகள் நடந்திருக்கும். அப்படி எதுவும் நடந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. எனவே நபித்தோழர்கள் பெரும் சிரத்தையுடன் தொகுத்த குர்ஆனில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பது ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு பகுதி என்பதற்குப் போதுமான சான்றாகும். (ஜூன் 1988 புரட்சிமின்னல்)
நபி(ஸல்) அவர்கள் தவிர்க்க இயலாத நேரங்களில் நின்று கொண்டு அருந்தியதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். அவ்வாறு அருந்துவதை அலீ (ரழி) அவர்களும் பார்த்து பொதுவாக நின்று கொண்டு அருந்தலாம் என்று முடிவு செய்திருப்பார்கள். தடை செய்யப்பட்ட ஹதீஸ்கள் அவர்களுக்குக் கிடைக்காமல் இருந்திருக்கும். நபி (ஸல்) அவர்களின் தடை அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் ஒருபோதும் அதற்கு மாற்றமாக நபித்தோழர்கள் - குறிப்பாக அலீ (ரழி) போன்றவர்கள் செய்யமாட்டார்கள். (புரட்சிமின்னல் - ஜனவரி 1988 பக்கம் 10)