Wednesday, June 21, 2006

முஸ்லிம்களின் தந்திரம் எச்சரிக்கிறார் தாக்கரே

முஸ்லிம்களின் தந்திரம் எச்சரிக்கிறார் தாக்கரே

மும்பை : "லோக்சபாவில் தங்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முஸ்லிம்கள் முனைப்புடன் செயல்படுகின்றனர். அதை இந்துக்கள் முறியடிக்க வேண்டும்' என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே தெரிவித்தார்.

சிவசேனா கட்சி துவக்கப்பட்டு நேற்று முன்தினம் 40 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதை முன்னிட்டு நடைபெற்ற கட்சித் தொண்டர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு தலைவர் பால் தாக்கரே பேசியதாவது:

லோக்சபாவில் தங்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முஸ்லிம்கள் முனைப்புடன் முயற்சி செய்கின்றனர். அதை இந்துக்கள் முறியடிக்க முன்வர வேண்டும். இதற்காக
நக்சலைட்டுகளின் உதவியைக் கூட நாடலாம்.


நக்சலைட்டுகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு, அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மற்ற தீவிரவாதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் போது, நக்சலைட்டுகளுடன் ஏன் பேசக்கூடாது?
ஆயுதப் படையிலும் போலீஸ் பணியிலும் முஸ்லிம்களுக்கு, இடஒதுக்கீடு செய்யும் யோசனையைக் கூறிய சோனியாவை வன்மையாக கண்டிக்கிறோம். மும்பை மற்றும் தானே மாநகராட்சியில் நமது காவி கொடி தொடர்ந்து பறப்பதற்கு, தொண்டர்கள் பாடுபட வேண்டும்.இவ்வாறு பால் தாக்கரே தெரிவித்தார்.

நன்றி : தினமலர்

இதிலிருந்து நாம் பெற வேன்டிய படிப்பினை : நாம் இயக்க
விரோதம், தனிநபர் விரோதம் ஆகியவற்றை நீக்கி ஒன்று பட்ட சமூகம் என்ற அடிப்படையில் அரசின் அனைத்து துறைகளிளும் நமது விகிதாச்சாரத்தை அதிகரிக்க முனைய வேன்டும். இதற்கு
நமது அனைத்து இயக்கங்களும் ஒத்துழைக்க வேன்டும்.

No comments: