Thursday, December 14, 2006

இராஜாஜியும் மன்மோகன் சிங்கும்

இராஜாஜி, இந்திய விடுதலைக்கு முன் சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்துள்ளார். அப்போது, முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உரிய இடம் கிடைக்க வழிவகுத்தார். முஸ்லிம்களின் கூட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாகவும் பேசினார். ஒரு கட்டத்தில் பள்ளிகளில் 'வந்தே மாதரம்' பாடல் பாடுவதற்கு முஸ்லிம்களிடம் இருந்து எதிர்ப்பு வந்த போது, அப்பாடல் பாடுவதற்கான அரசு உத்திரவை திரும்பப் பெற்றார். (நூல் ஆதாரம்: முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி தமிழ் நாடு மற்றும் சென்னை 1930 - 1947 ஜெ.பி.பி. மோரே, வெளியீடு: அடையாளம்)

இன்று இந்திய பிரதமர், தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில், தேசிய வளர்ச்சிப் பணிகளில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனப் பேசியதற்காக, பா.ஜ.க உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கூச்சல் எழுப்புகின்றனர். 'நாட்டின் வளங்கள் அந்நிய நாட்டு நிறுவனங்களின் வேட்டைக்கு திறந்து விடப்படலாம். ஆனால், இந்நாட்டின் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய பங்கு அளிக்கப் படக்கூடாது' என்பது தான் வந்தேறிகளான சங்பரிவாரங்களின் தேசபக்தியா? ச்சீ! ச்சீ! வெட்கக் கேடு!

No comments: