Saturday, September 10, 2005

நன்மையின் வழிமுறைகள்.. (தொழுகையில்)

ஜமாஅத்தோடு தொழும் தொழுகையின் சிறப்பு

1. நபி (ஸல்) அவர்களிடம் கண்தெரியாத ஒரு மனிதர் வந்து , அல்லாஹுவின் தூதரே! என்னை பள்ளிக்கு அழைத்து வருவதற்கு யாருமில்லை (என்று சொல்லி) வீட்டில்(தனிமையில்) தொழுவதற்கு அனுமதி கேட்டார்கள், நபியவர்களும் அனுமதி கொடுத்து விட்டார்கள். அந்த மனிதர் திரும்பி செல்லும் போது அவரை அழைத்து பாங்கு சப்தம் கேட்கின்றதா? என வினவினார்கள், அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானால் தொழுகைக்கு (பள்ளிக்கு) வந்தேயாகவேண்டுமென்றார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா (ரலி) - ஆதாரம் :-முஸ்லிம்

2. ஜமாஅத்தோடு தொழும் தொழுகை தனிமையில் தொழும் தொழுகையை விட இருபத்தி ஏழு மடங்கு சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்


ஆரம்ப வரிசையில் தொழுவதின் சிறப்பு
பாங்கு சொல்வதிலும், முந்திய வரிசையில் (தொழுவதிலும்) கிடைக்கும் நன்மையை மனிதர்கள் அறிந்து கொண்டால், சீட்டுப்போட்டுத்தான் முதல் வரிசையில் இடம் கிடைக்குமென்றிருப்பினும் சீட்டுப்போட்டாவது அதை அடைந்து கொள்ள முயற்சிப்பார்கள் என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :-ஜாபிர் (ரலி) - ஆதாரம் :- முஸ்லிம்

சுன்னத்து தொழுகைகளின் சிறப்பு
ஒவ்வொரு நாளைக்கும் யார் 12 ரக்அத் சுன்னத்து தொழுகை தொழுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை கட்டுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன் என்று உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம் :-முஸ்லிம்

12 ரக்அத்துக்களின் விபரங்கள் பின்வருமாறு

ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத், லுஹருக்கு முன் நான்கு ரக்அத், லுஹருக்கு பின் இரண்டு ரக்அத், மஃரிபுக்கு பின் இரண்டு ரக்அத், இஷாவுக்கு பின் இரண்டு ரக்அத்

குறிப்பு :- இவைகளுக்கு சுன்னத்துல் முஅக்கதா என்று சொல்லப்படும், அதாவது நபியவர்கள் விடாமல் தொழுது வந்த சுன்னத்து தொழுகைகள். இன்னும் இது அல்லாத முன் பின் சுன்னத்துக்கள் உள்ளன என்பதை கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் தொழுகையை பேணி நடக்க வாய்ப்பளிப்பானாக,

No comments: