Monday, September 12, 2005

முழு நேரப் பணி மார்க்கப்படி சரியா?

வேறு தொழில் எதுவும் செய்யாமல் மார்க்க அறிஞராக இருந்து மாதச்சம்பளம், ஜகாத், நன்கொடையால் மட்டும் வாழ்வது சரி தானா? இதனை தவறு என்று சொல்பவர்கள் கூட ஓர் இயக்கத்தில் முழு நேர ஊழியராக இருப்பதை சரிகாண்கின்றனர். அவ்வாறு ஒருவர் முழு நேர ஊழியராக இருந்தால், அவரது செலவுகளை அவரது தந்தையோ, சகோதரரோ, வேறு உறவினரோ, நண்பரோ, ஏற்க வேண்டியிருக்கும். இது சரி தானா? அல்லது இயக்கமே அவருக்கு ஊதியம் கொடுக்கலாம். அல்லது, இயக்கத்தின் சில ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ளலாம். இது சரிதானா? ஒரு மனிதன் அதிகபட்சம் ஓர் இயக்கத்தில் ஈராண்டுகளுக்கு முழு நேர ஊழியனாய் இருக்கலாம். அதற்கு மேல், இருந்தால் அவன், இஸ்லாமியப் பிரச்சாராப் பணியே செய்தாலும், அவனது வாழ்க்கை இஸ்லாமிய வழிமுறைப்படி சரிதானா? இறை நேசர்கள் என்று அழைக்கப் படுபவர்களை விமர்சிப்பவர்கள், இந்த முறையை எப்படி நியாயப் படுத்துகிறார்கள்?

No comments: