Monday, September 12, 2005

வற்புறுத்த வேண்டாமே?

சில சகோதரர்கள், தங்கள் அமைப்புக்கு நன்கொடை வசூலிக்கும் போதும், அல்லது வேறு சில சகோதரர்கள் மதர்சாக்களுக்கு சந்தா, நன்கொடை வசூலிக்கும் போதும் கட்டயப் படுத்துகின்றனர். நடுத்தரமக்கள் என்றால், அவர்களிடம் ஆயிரக்க கணக்கிலும், சற்று வசதியானவர்கள் என்றால் அவர்களிடம் இலட்சக்கணக்கிலும் கேட்கின்றனர். ஒரே நேரத்தில், பல அமைப்புகளுக்கும், பல மதர்சாக்களுக்கும் நன்கொடை கொடுக்க வேண்டியுள்ள சூழலில் வசதியானவர்களே ஆனாலும் ஒவ்வொருக்கும் எப்படி இலட்சக் கணக்கில் நன்கொடை கொடுக்க முடியும். தவிரவும், ஒவ்வொருவரும் ஜகாத் நிதியில் இருந்து உறவினரில் தேவையுடையோருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளது. பல்வேறு காரணங்களால் குறைவான தொகையை ஜகாத்தாகவோ, நன்கொடையாகவோ கொடுத்தால் வசூலிப்பவர்கள் வாங்க மறுக்கின்றனர். இது கொடுப்பவரை அவமதிப்பதாய் உள்ளது. இப்படி வற்புறுத்தி நன்கொடை வசூலிப்பது நபி வழிப்படி சரிதானா? தெரிந்தவர்கள் விளக்குங்கள். இப்பழக்கம் உங்கள் உறவினரிடமோ, நண்பரிடமோ இருந்தால் திருத்துங்கள்.

No comments: