Thursday, January 27, 2005

அதிசயம்???

நண்பர்கள் சிலர் "அதிசயம்" என தலைப்பிட்டு இந்தோனேசியாவில் சுனாமியால் அகோரமாக பாதிக்கப்பட்ட இடத்தில் எந்த பாதிப்பும் இல்லாத ஒரு பள்ளிவாசலின் படத்தை அனுப்பியிருந்தார்கள். இறைவனின் நாட்டம் அப்படிதான் என்றால் பள்ளிவாசல் என்ன, கோயிலோ அல்லது சர்ச்சோ இருந்தாலும் இறைவன் அதை காப்பாற்றியிருப்பான்.

ஒரு செய்தி மின்னஞ்சலில் வந்துவிட்டால் அதை அப்படியே மற்றவருக்கு தட்டிவிடுவது நம்மில் பலருக்கு மகிழ்ச்சி. இஸ்லாம் அதிசயத்தை வைத்து வளர்ந்ததாக சரித்திரம் இல்லை. இஸ்லாம் போற்றப்படுவதற்கு காரணம் அது தரும் நல்லொழுக்க பயிற்சியே காரணம். நம்மிடம் அவை குறைவதனாலோ என்னவோ இத்தகைய அதிசயங்களை ஈடு செய்யத் தேடுகிறோம்.

இந்த காலகட்டத்தில் நம்முடைய அறியாமையின் காரணமாக இஸ்லாத்திற்கு பல அவப்பெயரை எடுத்துத்தந்திருக்கிறோம். மற்றவர்களும் முஸ்லிம்கள் செய்வதெல்லாம் இஸ்லாம் என நம்பி இஸ்லாத்தின் மீது தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். இதுபற்றி பிறகு விரிவாக எழுதலாம் என நினைக்கிறேன்.

முஸ்லிம்கள் மதத்தையும் மீறி மற்றவர்களுக்கு உதவிசெய்தது மட்டுமே மேன்¨மாக எனக்கு பட்டது. முளர் கோத்திரம் என்னும் இஸ்லாமல்லாத கோத்திரத்திற்காக உதவிசெய்ய தூண்டி மதினா பள்ளிவாசலில் நபியவர்கள் சொறிபொழிவு நடத்தியது ஞாபகத்திற்கு வருகிறது.

No comments: