Tuesday, March 28, 2006

ம.தி.மு.க


வைகோ, பொடாவில் கைது செய்யப் பட்ட போது, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவில் அ.இ.அ.தி.முவைத் தவிர அனைத்து கட்சிகளும் கையெழுத்து போட்டன. அவர் ஜாமீனில் வெளிவர வேண்டும் என கலைஞர் உண்மையிலேயே விரும்பினார். இந்நிலையில், வைகோ தன்னை கைது செய்த அ.இ.அ.தி.மு.க அணியில் இடம் பெற்றது அரசியல் சந்தர்ப்பவாதமே. ம.தி.மு.க எம்.பிக்களையும் கணக்கு காட்டி தி.மு.க அதிக மத்திய அமைச்சர்களைப் பெற்றதாக இப்போது வைகோ குற்றம் சாட்டுகிறார். இது உண்மையென்றால், தி.மு.க செய்தது ஒரு மோசடி என்பதில் சந்தேகமில்லை. இவரது புலி ஆதரவு நிலைப்பாடு கூட பொருளாதார ஆதாயத்துக்கானது என இவரிடம் நெருங்கியிருந்து விலகிய நெல்லை இலக்குமணன் குற்றம் சாட்டியுள்ளார். அ.இ.அ.தி.மு.கவுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்க கூட்டிக் கொடுத்தவர் வைகோ. இனி இவரது தேசிய அரசியல் பா.ஜ.கவை நோக்கியே நகரும். இவர் கட்சியின் முன்னணி பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஒரு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி. இக்கட்சி, தி.மு.கவுடன் மோதும் இடங்களில், தி.மு.கவிற்கும், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் மோதும் இடங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும், பா.ம.கவுடன் மோதும் இடங்களில் மட்டும் ம.தி.மு.கவுக்கும் தமிழ் நாட்டின் முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்பது என் கருத்து.

No comments: