Friday, March 31, 2006

தமிழ் மாநில முஸ்லிம் லீக்

சென்னை, 31 மார்ச் 2006

தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷேக் தாவூத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எல்லோரும் எள்ளி நகையாடும் விதத்தில் அமைந்துள்ளது. இது போன்ற தேர்தல் நேர அறிவிப்புகளின் மூலம் தி.மு.க.வின் படுதோல்வி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டிற்கும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, எரிவாயு அடுப்பு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க. கூறி இருப்பது முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றும் வேலையாகும். நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்து வாக்காளர்களை திசை திருப்பி வெற்றி பெற முயற்சிப்பது தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஒன்றும் புதிய விஷயமல்ல.
அதேபோல் முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறும்பான்மையின மக்களுக்கு இட ஒதுக்கீடு தருவோம் என்று கூறியுள் ளார். இது சிறும்பான்மையின மக்களை அவர் கறிவேப்பிலை யாகத் தான் நினைக்கிறார் என்பதை தெளிவுபடுத்தி உள் ளது. தி.மு.க. இப்போதுதான் புதிதாக ஆட்சிக்கு வருகிறதாப அல்லது சிறுபான்மையின மக்கள் இப்போதுதான் இட ஒதுக்கீடு கேட்கிறார்களா? கடந்த கால தி.மு.க. ஆட்சியின் போதே சிறும்பான்மையின மக்களுக்கு கருணாநிதி இட ஒதுக்கீடு வழங்காதது ஏன்?

முஸ்லிம் சமுதாய மக்களுக்கு கருணாநிதி செய்த துரோகங்கள் எல்லாம், எங்கள் சமுதாய மக்கள் மனங்களில் ஆறாத காயங்களாக இன்று வரை வேதனை அளித்து வருகின்றன.

கோவை குண்டுவெடிப்பின்போது, பதவியிலிருந்த கருணாநிதி, இஸ்லாமிய மக்கள் மீது போலீசாரை ஏவி விட்டு, சோதனை என்னும் பெயரில் வீடுகளில் புகுந்து பெண்களை கேவலப்படுத்தி, முஸ்லிம் மக்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தினார்.

குஜராத் கலவரத்தின்போது, இஸ்லாமியர்கள் மீது பா.ஜ.க. அரசால் கட்ட விழ்த்து விடப்பட்ட கொடுமைகளை கண்டுக் கொள்ளாமல் மத்திய அரசில் பதவி சுகத்தை அனுபவித்து கொண்டு இருந்த தி.மு.க.தான் இன்று இஸ்லாமிய சமுதாயத்தின் மீது பாசம் பொங்க பேசுகிறது.

தமிழக முதல்வர் தலைமையிலான அ.இ.அ.தி.முக.வின் 5 ஆண்டு கால பொற்கால ஆட்சியில் எல்லா மதத்தின ரும் ஒன்றுபட்டு அமைதியான வாழ்வை அனுபவித்து உள் ளார்கள். இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே முஸ்லிம் மக்கள் அ.இ.அ.தி.மு.க.வை ஆதரிப்பார்கள். இந்த தேர்தலோடு தி.மு.க.வின் சகாப்தம் முடிந்து விடும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நன்றி: மாலை மலர் 31 மார்ச் 2006

No comments: