Sunday, March 19, 2006

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தில் இருக்கும் ஒவ்வொரு கட்சியைப் பற்றியும் என் விமர்சனத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழ் நாட்டில் பேராசிரியர் கே.எம். காதர் மொகைதீன், எம். பியின் தலைமையில் செயல் படும் தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைப் பற்றிய என் விமர்சனத்தை முதலில் பதிவு செய்கிறேன். தி.மு.க கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளில் இக்கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடும் போது, இக்கட்சி மட்டும் தி.மு.க சின்னத்தில் போட்டியிட சம்மதித்து உள்ளது. வருங்காலத்தில் தி.மு.க, பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தால் தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்ற முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் பதவி விலக வேண்டி வரும். இவ்வாறு தான் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன், தி.மு.க கூட்டணியில் இருந்து விலகிய போது, தன் எம்.எல்.ஏ பதவியை துறந்தார். முஸ்லிம் லீக்கின் மறைந்த தலைவர் ஏகேஏ அப்துல் சமது, காங்கிரஸ் சின்னத்தில் மக்களவைக்கு வெற்றி பெற்று மக்களவைக்குச் சென்றார். அவர், வி.பி. சிங்கிற்கு ஆதரவாக வாக்களித்த போது, தமிழ் நாட்டின் வாழப்பாடி கூ. ராமமூர்த்தி, அப்துல் சமதின் பதவியை பறிக்க வேண்டும் என்று கூறினார். இவையெல்லாம் முஸ்லிம் லீக்கிற்கு தேவையா? மூன்று இடங்களில் தி.மு.க சின்னத்தில் போட்டியிடுவதை விட இரண்டு இடங்களில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதே மேல்.

No comments: