Wednesday, March 29, 2006

யார் அப்பன் வீட்டுக் காசு?


தி.மு.க, தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், டிவி இல்லாத வீடுகளுக்கு இலவச கலர் டிவி தருவோம் என அறிவித்துள்ளனர். இது மிகவும் தவறான முடிவு. ஏற்கனவே, கலைஞர் குடும்பம் ஊடகத் துறையில் ஏகாதிபத்தியம் செலுத்துவதை வைகோ போன்ற பல அரசியல்வாதிகளும், எழுத்தாளர் ஞாநி போன்ற அறிவுஜீவிகளும் கடுமையாக விமர்சித்து வரும் வேளையில், அரசுப் பணத்தில் டிவிப் பெட்டி வழங்கி, மக்களை தனக்கு அடிமையாக்கும் கலைஞரின் தந்திரம் நரித்தனமானது. 'இலாபம் வரும் வழிகள் எல்லாம் தனக்கும் தன் குடும்பத்துக்கும். நட்டம் வரும் வழிகள் எல்லாம் தன் கட்சிக்கும் அரசுக்கும்' என்பது தானே கலைஞரின் கொள்கை. யார் அப்பன் வீட்டுப் பணத்தில் இவர் டிவி கொடுக்கிறார். முரசொலி மாறன் குடும்பத்துக்கு இலங்கையில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளதாமே? அதை விற்று தமிழ் நாட்டில் டிவி இல்லாத வீடுகளுக்கு நீ டிவிப்பெட்டி கொடுப்பாயா? மக்களின் வரிப்பணத்தில் நீ இலவச டிவிப்பெட்டி கொடுப்பதால் நாட்டுக்கு என்ன நன்மை? நாட்டு மக்களுக்கு என்ன நன்மை? இதனால் நாட்டின் பொருளாதாரம் உயருமா? உற்பத்தி உயருமா? சன் டிவிக்கு இணைப்பு கொடுப்பதால், உன் வருமானம் உயரும். உன் குடும்பத்தின் வருமானம் உயரும்.

1 comment:

அருளடியான் said...

கலர் டி.வி.இலவசமாகத் தரப்போவதாக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே?

லெனின் பாரதி, புனிததோமையர்மலை

சன் டி.வி. நலனைத் தவிர கலைஞருக்கு வேறு பார்வை இல்லாமல் போய்விட்டது என்பதற்கு இது இன்னொரு அடையாளம். எதற்காக இலவச டி.வி. தெரியுமா? “பெண்களின் பொது அறிவை வளர்ப்பதற்காக” என்கிறது தி.மு.க. அறிக்கை. அவமானம்! பொது அறிவை சன் டி.வி.யும் தமிழ் முரசும் வளர்த்து வரும் லட்சணம் நமக்குத் தெரியுமே!

நன்றி: தீம்தரிகிட - ஏப்ரல் 2006
http://www.keetru.com/dheemtharikida/index.html