Sunday, February 06, 2005

செய்தி குறிப்புகள்

லாப்-டாப் கம்ப்யூட்டர் உபபோகிப்பவர்களுக்கு

ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது விதைப்பை வெப்பநிலை. சமீப காலமாக விதைப்பை வெப்பநிலை உயர்வினால் கணிசமான சதவீத ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாவதாக ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. சூடான வெந்நீர் குளியல், இறுக்கமான உள்ளாடைகள் , வெப்பமான சூழ்நிலை, இரவு நேரப் பணி ஆகியவையும் விதைப்பை வெப்பநிலை உயருவதற்கான காரணங்களில் சில. இந்நிலையில் இந்த வாpசையில் லாப்-டாப் கம்ப்யூட்டர்களும் அடங்கும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. லாப்-டாப் கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும் ஆண்கள் பெரும்பாலும் வசதி கருதி மடியில் வைத்து பயன்படுத்துவதால் விதைப்பை வெப்பநிலை உயர்ந்து விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் என்றும் அத்தகைய உயிரணுக்களால் கருவை உண்டாக்க முடியாது என்று அந்த செய்தி கூறுகிறது.

நியூயார்க் பல்கலைக்கழகத்தின் சிறுநீரகவியல் துறை பேராசிரியர்கள் லாப்-டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஒரு ஆய்வு நடத்தினர். அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆண்களை அறை வெப்பநிலை உள்ள ஒரு அறையில் வைத்தனர். பிறகு அவர்களில் கொஞ்சம் பேருக்கு இயங்கும் லாப்-டாப் கம்ப்யூட்டர்களும், மீதிப் பேருக்கு இணைப்பு எதுவும் இல்லாத வெறும் லாப்-டாப் கம்ப்யூட்டரும் தரப்பட்டன. இதன்பின்னர் ஒவ்வொரு 3 நிமிடத்துக்கு ஒருமுறை விதைப்பையின் வெப்பநிலையை குறித்துக் கொண்டனர்.

பின்னர் குறிப்பிட்ட நேரம்; கழித்து இரு பிரிவு ஆண்களின் விதைப்பை வெப்ப நிலையை சோதனை செய்து பார்த்த போது லாப்-டாப் கம்ப்யூட்டர்களை மடியில் வைத்து இயக்கிய ஆண்களுக்கு வெப்பநிலை கணிசமாக உயர்ந்து இருந்தது. இதற்கு லாப்-டாப் கம்ப்யூட்டரை மட்டும் குறை சொல்ல முடியாது. லாப்-டாப் கம்ப்யூட்டர் தவறி விழுந்து விடாமல் இருக்க இரண்டு தொடைகளையும் இறுக்கமாக வைத்துக் கொள்ளும் போது, அவற்றின் வெப்பம் அப்படியே விதைப்பைக்கும் பரவுகிறது. இதுதான் இங்கு முக்கிய விஷயம். அடுத்து, லாப்-டாப் கம்ப்யூட்டர்கள் மூலம் உண்டாகும் வெப்பம், விதைப்பை வெப்பத்தை மேலும் அதிகாpக்கிறது.

இந்த வெப்பநிலை உயர்வு ஒரு ஆணை மலட்டுத்தன்மை வாய்ந்தவராக மாற்றுமா? என்று கேட்டால், ஆராய்ச்சியாளர்கள் எதையும் உறுதியாக சொல்ல மறுக்கிறhர்கள். இருப்பினும் விதைப்பை வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் கூடும் போது அந்த இடத்தில் விதைப்பையில் உற்பத்தி ஆகும் உயிரணுக்களின் எண்ணிக்கை 40 சதவீதம் வரை குறைகிறதாம்.

லாப்-டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது 6 கோடி லாப் கம்ப்யூட்டர்கள் பயன்பட்டு வரும் நிலையில் அடுத்த 2005-ம் ஆண்டு வாக்கில் மேலும் 9 கோடி லாப்-கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப் படும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் லாப்- கம்ப்யூட்டர்களால் ஏற்படும் பாதிப்பு பற்றி ஆராய்ச்சி நடத்த வேண்டியது அவசியம் ஆகிறது. இருப்பினும் தற்போது லாப்-டாப் பயன்படுத்துபவர்கள் முடிந்தவரை அவைகளை மடியில் வைத்து பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

நிமோனியாவை உண்டு பண்ணும் பற்சிதைவு
பல் சிதைவு மற்றும் காரை ஆகியவற்றில் காணப்படும் நுண் கிருமிகள் நுரையீரலுக்குள் சென்று மிகக் கடுமையான நிமோனியா நோயை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக அமொpக்க ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவர்கள் நடத்திய ஒரு ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட 49 நோயாளிகளை பரிசோதனை செய்து பார்த்த போது, அவர்களில் சாpப் பாதி பேருக்கு பல்சிதைவு மற்றும் காரையில் காணப்படும் நுண் கிருமிகளே நிமோனியா பிரச்சினைக்கு காரணமாக இருந்தது தெரிய வந்தது. மீதிப் பேருக்கு வேறு காரணங்களால் நிமோனியா வந்திருந்தது.

நிமோனியா எப்படி வருகிறது? என்று கூர்ந்து கவனித்த போது பல்நோய்களுக்கு காரணமான நுண் கிருமிகள் மெல்ல மெல்ல நுரையீரலுக்குள் புகுந்து பிரச்சினையை உண்டு பண்ணுவது கண்டுபிடிக்கப்பட்டது. பல்சிதைவுகளில் காணப்படும் நுண் கிருமிகள் இதய நோய்களுக்கும் காரணமாக இருப்பதாக ஏற்கனவே நிரூபிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: