Saturday, February 26, 2005

தொழுகையில் கவனம் என்பது..

http://tamilmuslim.blogspot.com/2005/02/1.html

"ஆமாம் நீங்கள் அல்லாஹ்-வை வணங்கியதாக சொன்னீர்களே அப்படியானால் நான் குறுக்கே சென்றது உங்களுக்கு எப்படி தெரிந்தது..." என்று.

இதில் கவனிக்க வேண்டிய ஒன்றுண்டு.. அதாவது நாம் இறைவனை முறையாக தொழ வில்லை என்பது தான் அது.

தொழுகையில் இருக்கும் போது மணி எத்தனையென்று நேரம் பார்ப்பது, தலையை அண்ணாத்தி பார்ப்பது போன்ற செயல்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

அதே நேரத்தில், தன்னை மறந்து (அதாவது குறுக்கே யாராவது சென்றாலும் தெரியாத அளவுக்கு) தொழும்படி இஸ்லாம் காட்டித் தரவில்லை.

கீழே சொன்ன மூன்றும் ஹதீஸ்களின் கருத்துக்கள் மட்டுமே. ஆதாரத்துடன் கேட்டால் தேடி எடுத்து தர கடமைப்பட்டுள்ளேன்.

1. தொழுகையில் தடுப்பு (சுத்ரா) வைத்து தொழச்சொன்ன நபியவர்கள், அதனையும்
மீறி குறுக்கே செல்பவர்களை கைநீட்டி தடுக்க சொன்னார்கள்.

2. நபியவர்கள் ஜமாஅத் தொழுகையில் இருக்கும்போது குழுந்தையின் அழுகுரல்
கேட்டு தொழுகையை நீட்டாமல் சுருக்கிக்கொண்ட நிகழ்ச்சி.

3. தொழுகையிடத்தில் விஷ ஜந்துக்கள் வந்தால் அதனை அடித்துவிட்டு தொழவேண்டும் என்று நமக்கு ஏவியது.

இது போன்ற விஷயங்கள் நீங்கள் சொன்னவைகளுக்கு எதிரானதாகவே இருக்கிறது. காரணம் தன்னை மறந்து தொழுதால், குறுக்கே செல்பவனை கைநீட்டி தடுக்க முடியாது, குழந்தை அழுவது தெரியாது, சஜ்தா செய்யுமிடத்தில் பாம்பு படமெடுத்தாலும் தெரிய வாய்ப்பு இல்லை.

நான்கு வருடத்திற்கு முன்பு திருமணமான புதிதில், (புதிய லைலாவினால்) மஜ்னூனாக மாறியிருந்த சமயம், டவுன் பள்ளிக்கு தொழுகைக்கு போயிருந்த போது, ஒரு ஆள் திடீரென எனக்கு முன்னால் தோன்றி கோபமாக, "நான் தொழுதுக்கொண்டிருப்பது உனக்கு கண்ணு தெரியலையா", என்றார். அதாவது அவர் தொழுது கொண்டிருக்கும்போது நான் குறுக்கே சென்றுவிட்டேனாம்.

"நீங்கள் ஏன் கைநீட்டி தடுக்கவில்லை", என்று நான் கேட்டதற்கு, "யாராவது தொழும்போது கைநீட்டி தடுப்பார்களா?", என்றார்.

தொழுகையில் குறுக்கே செல்வது தவறு என்று தெரிந்தவருக்கு, கைநீட்டி தடுக்கவேண்டும் என்று தெரியவில்லை.

முறையாக, கவனத்துடன் அல்லது அக்கறையுடன் தொழுதால் மட்டுமே ஒருவருக்கு யாராவது குறுக்கே சென்றால் புரிந்துக்கொள்ள முடியும். இஸ்லாம் சொல்லும் தொழுகை பல நிலைகளை உள்ளடக்கியது. அதில் தக்பீர் உண்டு, ருக்ஹு உண்டு, சுஜுது உண்டு. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு தொழுகைக்கும் ரக்அத் மாறுபடும். இதில் குறுக்கே செல்பவரை அறியாதவண்ணம் தொழுவதற்கு சாத்தியமில்லை.

No comments: