Thursday, April 06, 2006

வெளியேற இ.யூ.மு.லீக் தீர்மானம்

தி.மு.க, கூட்டணியில் இருந்து வெளியேற இ.யூ.மு.லீக் தீர்மானம்

திருச்சி: "தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்' என தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி திருச்சி மாநகர நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருச்சி மாவட்ட தலைவர் மன்னான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சையது ஜாபர் வரவேற்றார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஹாசீம், மாவட்ட துணைத்தலைவர் பாரூக் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் நீடிக்கும் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு முதலில் பாளையங்கோட்டை, வாணியம்பாடி, அரவக்குறிச்சி தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது பாளையங்கோட்டையில் தி.மு.க., வேட்பாளரை அறிவித்திருப்பது தொகுதி உடன்பாட்டை மீறியதாகும்.

முஸ்லிம் சமுதாயத்துக்கு பெரும் ஏமாற்றம் ஏற்படுத்துவதாக உள்ளது. கூட்டணி ஒப்பந்தத்தை நிறைவேற்றாத தி.மு.க., தலைவர் கருணாநிதி, முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று கூறியதை எப்படி நம்ப முடியும். தி.மு.க., கூட்டணியில் இருந்து முஸ்லிம் லீக் கட்சி வெளியே வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைச் செயலாளர் சலீம் நன்றி கூறினார்.

Courtesy: www.dinamalar.com

No comments: