Saturday, April 08, 2006

விஜயகாந்தின் குலக்கல்வி திட்டம்

நடிகர் விஜயகாந்த், தன் கட்சியான, தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், 'காலையில் பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியாத மாணவ-மாணவிகளுக்கு மாலை நேர பள்ளிக்கூடங்களை இயக்குவது மூலம் அவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.' என்று கூறியுள்ளார். இது வர்ணாசிரமத்தை தமிழ் நாட்டில் நிலை நிறுத்த ஆட்சி செய்த, இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பு அல்லவோ? எட்டாம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வி என்றும், குழந்தைகளை வேலைக்கு வைக்கும் தொழிற்சாலைகளின் லைசன்ஸ் பறிப்பு என்றும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோரின் ரேஷன் கார்டு பறிப்பு என்றும் அல்லவா அவர் அறிவித்து இருக்க வேண்டும்.

No comments: