Wednesday, April 05, 2006

அளவு கடந்து கேள்வி கேட்பதென்றால்..

ஈமான் கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (அவசியமில்லாமல் - அளவு கடந்து) கேட்டுக் கொண்டிராதீர்கள். (அவை) உங்களுக்கு வெளிப்படுத்தப் படுமானால், உங்களுக்கு (அது) தீங்காக இருக்கும். மேலும், குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில் அவை பற்றி நீங்கள் கேட்பீர்களானால் - அவை உங்களுக்குத் தெளிவாக்கப்படும்;. (அவசியமில்லாமல் நீங்கள் விசாரித்ததை) அல்லாஹ் மன்னித்து விட்டான். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், மிக்க பொறுமை உடையோனுமாவான்.

உங்களுக்கு முன்னிருந்தோரில் ஒரு கூட்டத்தார், (இவ்வாறுதான் அவர்களுடைய நபிமார்களிடம்) கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பின்னர் அவர்கள் அவற்றை (நிறைவேற்றாமல்) நிராகரிப்பவர்களாகி விட்டார்கள்.

(அல்குர்ஆன் - 5:101,102 - சூரதுல் மாயிதா)

அளவு கடந்து கேள்வி கேட்பதென்றால் என்ன..?
இதோ ஓர் உதாரணம்..

இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;) மூஸா தம் சமூகத்தாரிடம்,

'நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்' என்று சொன்னபோது, அவர்கள்;

'(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?' என்று கூறினர்;.

(அப்பொழுது) அவர், '(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல், அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார்.

'அது எத்தகையது..? என்பதை எங்களுக்கு விளக்கும்படி, உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!' என்றார்கள்.

'அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட தாகும். எனவே 'உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்' என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக' (மூஸா) கூறினார்.

'அதன் நிறம் யாது..? என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!'
என அவர்கள் கூறினார்கள்;. அவர் கூறினார்;

'திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு;. கெட்டியான நிறம்;. பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்' என்று மூஸா கூறினார்.

'உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப்பட்டது..? என்பதை எங்களுக்கு தெளிவுபடுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன, அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்'
என்று அவர்கள் கூறினார்கள்.

அவர்(மூஸா)'நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது, ஆரோக்கியமானது, எவ்விதத்திலும் வடு இல்லாதது - என்று இறைவன் கூறுகிறான்' எனக் கூறினார்.

'இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்'
என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.

(அல்குர்ஆன் - 2:67-71 - சூரதுல் பகரா)

- தொகுப்பு : முஹம்மது மஸாஹிம்

No comments: