Tuesday, April 25, 2006

பா.ஜ.க கூட்டணி





தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கட்சி, சுப்ரமணிய சாமி என்ற ஃபாசிச வக்கிரக் கோமாளி நடத்தும் ஜனதா கட்சி, தேவர் சாதி வெறியர் டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பிழைப்புவாத தலித் தலைவர் வை. பாலசுந்தரத்தின் அம்பேத்கர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட சில சாதிக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தமிழ் நாடு பா.ஜ.கவுக்கு தனி இணையத் தளம் உள்ளது. இது தமிழில் இல்லை. ஆங்கிலத்தில் உள்ளது. இஸ்ரேல் தரகன் சுப்ரமணிய சாமியின் கட்சி இணையத் தளத்துக்கும் தமிழ் பதிப்பு இல்லை. இதுவும் ஆங்கிலத்தில் தான் உள்ளது. இவர்கள் தமிழின விரோதிகள் என்பது மட்டுமல்ல. பொது மக்களிடம் இருந்து அன்னியமானவர்கள். சுப்ரமணியசாமி, தன் கட்சி தேர்தல் அறிக்கையில் சிறுபாண்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க கூடாது என்றும், மதமாற்றத் தடைச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்றும், ராமர் கோயிலை பாபர் மசூதி நிலத்தில் கட்ட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு வெளிப்படையாக முஸ்லிம் விரோதமாகச் செயல்படும் இவர் பல பத்து ஆண்டுகள் செக்குலர் முகமூடி மாட்டி அரசியல் நாடகமாடியது வியப்பாய் உள்ளது. இவரது கட்சிக்கு திருவாரூர் மாவட்டச் செயலாளராக பஷீர் என்ற முஸ்லிம் பெயர் தாங்கி இருப்பதாக இவரது இணையத் தளம் தெரிவிக்கிறது. இக்கூட்டணியை முஸ்லிம் விரோதிகள் என்ற அடிப்படையில் மட்டும் நாம் எதிர்க்க வில்லை. இவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களுக்கே விரோதிகள். இவர்கள் ஓர் இடத்தில் கூட வெற்றிபெறாமல் தோற்கடிக்கப் பட, சில தொகுதிகளில் நம் வாக்கை அறிவுபூர்வமாகச் செலுத்த வேண்டும். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம்கள் அனைவரும் வலுவான பா.ஜ.க எதிர்ப்பு அணிக்கு தங்கள் வாக்கை செலுத்த வேண்டும்.

No comments: