Sunday, April 16, 2006

குடந்தையில் கோ.சி.மணியை ஆதரிப்போம்!


அ.இ.அ.தி.மு.கவின் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றவர்களில் இருவர் பார்ப்பனர் சங்க உறுப்பினர்கள். ஒருவர் மயிலாப்பூர் தொகுதியின் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் நடிகர் எஸ்.வி.சேகர். மற்றவர் கும்பகோணம் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் பூசாரி இராம.இராமநாதன். எஸ்.வி. சேகரைப் பற்றி ஏற்கனவே நான் எழுதி விட்டேன். பூசாரி இராம. இராமநாதன் காஞ்சி சங்கராச்சாரியிடம் நெருக்கமாக இருந்தவர். கும்பகோணம் மகாமகத்தின் போது ஜெயலலிதாவின் ஆடம்பரக் குளியலால் நூற்றுக்கணக்கானவர்கள் நெரிசலில் இறந்த போது, அவர்கள் சொர்க்கம் செல்வர் எனத் திருவாய் மலர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ், இந்து முண்ணனி, பா.ஜ.க போன்ற அமைப்புகளோடும், இந்து முண்ணனி தலைவர் வீர(?) துறவி இராமகோபாலனோடும் நெருங்கிய தொடர்புடையவர். இவரை நாம் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.

இவரை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க வேட்பாளரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கோ.சி. மணி நூற்றுக்கணக்கான முஸ்லிம் குடும்பங்களுக்கு நெருங்கிய நண்பர். தி.மு.க ஆட்சியமைத்தால் அமைச்சராக வாய்ப்புள்ளவர். தி.மு.க எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தாலும், சட்டமன்றத்தில் தன் தொகுதிக்காக வாதிடுவார். முஸ்லிம்கள் இவரை தங்கள் கோரிக்கைக்காக எளிதில் அனுகலாம்.

கும்பகோணம் தொகுதியில் வசிக்கும், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தேசிய லீக் ஆகிய இரு முஸ்லிம அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்:

என் அன்புச் சகோதரர்களே! தயவு செய்து கும்பகோணம் தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் இராம. இராமநாதனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யாதீர்கள். அவருக்கு வாக்களிக்காதீர்கள். இத்தொகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை ஒட்டு மொத்தமாக தி.மு.க வேட்பாளர் கோ.சி. மணிக்கு அளித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைப்போம்.

2 comments:

முகவைத்தமிழன் said...

அது எப்படி வாக்களிக்காமலே பிரச்சாரம் செய்யாமலோ இருக்க முடியும் ?? ஒரு முஸ்லிம் எந்த ஒரு நிலையிலும் வாக்கு மாற கூடாதல்லவா ? அண்ணன் பி,ஜே அவர்கள் புரட்சி தலைவிக்கு வெற்றியை அருள்வாக்காக கூறிவிட்டார் ஆகவே முஸ்லிம்களாகிய நாம் வாக்கு மாறினால் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேன்டும் ஆதலால் ஆர்.எஸ்.எஸ் ஆனாலும் இந்து முன்னனி ஆனாலும் அம்மாவின் சார்பில் நிறுத்தபட்டதால் அண்ணனும் அருள்வாக்கு கூ றி விட்டதால் அவர்கிள் வெற்றிக்கே ஜமாத்தினர் அயராது உளைப்பார்கள். அண்ணன் டான் டிவி யில் எழுந்தருளி திருவாய் மலர்ந்தது போல் அண்னையின் வெற்றிக்கு இந்த அண்ணனின் தொன்டர்கள் அயராதுளைப்பார்கள். - முகவைத்தமிழன்

கடல் கடந்த தமுமுக said...

இராமநாதன் பார்ப்பனர் தான் ஆனால் இந்து இயக்கங்களோடு தொடர்புடையவர் அல்ல கோ.சி. மணியை விட முஸ்லிம் குடும்பங்களுக்கு நெருங்கிய நண்பர் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு